Snapjudge

Posts Tagged ‘reviews’

2018 – Top 12 Hindi Movies

In India, Movies on திசெம்பர் 23, 2018 at 2:59 முப

  • What are the most notable Bollywood films from this year?
  • Which Hindi movies made lot of buzz and made it big in Social Media?
  • Is your pick in here?
Top Hindi Movies of 2018 - Best Bollywood Films: Must Watch of Indian Cinema
  1. Parmanu: The Story Of Pokhran
  2. Hichki
  3. Aiyaary
  4. Padmavat (Padmaavati)
  5. Gold
  6. Andhadhun
  7. Padman
  8. Satyameva Jayate
  9. Manto
  10. Raid
  11. Sanju
  12. (Robot) 2.0

Bala’s Paradesi: How he should have taken the movie?

In Movies, Tamilnadu on மார்ச் 23, 2013 at 4:02 முப

பரதேசி திரைப்படம் எடுத்த இயக்குநர் பாலா, இப்படி செய்திருக்க வேண்டும், அப்படி உருவாக்கியிருக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளும் ஆலோசனைகளும் இணையத்தில் வெளியாகிறது. நானும் உள்ளேன் அய்யா…

  1. இடைவேளைக்குப் பிந்திய இரண்டாவது பகுதியில் குத்தாட்டம் இல்லாதது மிகப் பெரிய குறை. ’காளை’ படத்தில் குட்டிப் பிசாசே என்று குத்தாட்டம் போட்ட மாதிரி அதர்வா கதாபாத்திரத்தின் கற்பனையோடு வேதிகாவின் கிளப் டான்ஸ் வைத்திருக்க வேண்டும்.
  2. தன்னுடைய நிறுவனத்திற்கு ‘B Studios’ என்று ஆங்கிலத்தில் வைத்ததற்கு பதிலாக ‘பா கலைக்கூடம்’ என தமிழ்ப்பறோடு பெயர் சூட்டியிருக்க வேண்டும்.
  3. இரு பெண்களுக்கு நடுவில் சண்டை வருவது போல் காட்சி அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதுவும் தேய்வழக்காக மணப்பெண்ணின் அம்மாவிற்கும் மாப்பிள்ளையின் பாட்டிக்கும் பிணக்கு வருமாறு அமைத்திருப்பதற்கு பதில் ஆங்கிலேயரை அடித்துத் துவைப்பது போல் காட்சி வைத்து, பார்வையாளருக்கு திருப்தி கொடுத்திருக்க வேண்டும்.
  4. தமிழகத்தில் 1939ல் ரொட்டி இருந்திருக்க வாய்ப்பேயில்லை. பொறையும் பன்னும் மட்டுமே கிடைக்கும் நாயர் கடை அமைத்திருக்க வேண்டும்.
  5. தெலுங்குப் படத்தில் இரண்டு ஹீரோயின் சர்வ சகஜம். அது போல் தன்ஷிகாவையும் அதர்வா உடன் சேர்த்து நினைக்க வைத்திருக்க வேண்டும்.
  6. படத்தின் துவக்கத்தில் டைட்டில் வருகிறது. இப்பொழுதெல்லாம் சடாரென்று படத்தை ஆரம்பிப்பதுதானே வழக்கம்?! கட்டாங்கடைசியில் மட்டுமே தலைப்பும் இன்ன பிற எழுத்துகளும் வந்திருக்க வேண்டும்.
  7. முன் பின்னாக காட்சியைக் கலைத்துப் போட்டு திரைக்கதை பின்னுவது இன்றைய சினிமா ஃபேஷன். அதன்படி, கொஞ்சம் தேயிலைத் தோட்டம், கொஞ்சம் மூங்கில் தோட்டம், கொஞ்சம் மாந்தோப்பு எல்லாம் அறுவடை செய்திருக்க வேண்டும்.
  8. தேயிலையை விட காபி இன்னும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. காபியை விட புகையிலை இன்னும் நோய் தரக் கூடியது. புகையிலையை விட கஞ்சா இன்னும் அடிமையாக்கி அழிக்கும் ஆபத்து நிறைந்தது. எனவே, அவற்றின் அட்டை போல் உறிஞ்சும் தன்மைகளைத்தான் திரைக்கதை ஆக்கியிருக்க வேண்டும்.
  9. ஓட்டுச் சுவடிகளில் எழுத்தே தெரியாமல் காட்சியாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன். அந்தக் கால எழுத்தாணிகளைக் கொண்டு ஓலைச்சுவடி எழுத்துகளைத் தெளிவாக திரையில் காண்பித்திருக்க வேண்டும்.
  10. இந்தியில் ஷாரூக் கான் நடித்த படமான ‘பர்தேஸ்’ படம் என்று தமிழரை ஏமாற்றும் விதமான தலைப்பை மாற்ற வேண்டும்.

நிறைவேற்றுவதற்கு பெட்டிஷன் போட்டிருக்கிறேன்.

‘Unnai Pol Oruvan’s lurking messages: What are the Hidden themes from Kamal?

In Movies, Tamilnadu on செப்ரெம்பர் 21, 2009 at 8:52 பிப

திரைப்பட அனுபவ, விமர்சன, நுண்ணரசியல், கமல் என்னும் நடிகன் vs பிரச்சாரகர், இன்ன பிற தொகுப்பு: உன்னைப் போல் ஒருவன்


இலவசக்கொத்தனார் கண்டுபிடித்தவை

  1. வெள்ளைக் கமல். வெள்ளை லட்சுமி. இருவரும் சேர்ந்து நிறம் மட்டாக இருக்கும் லாலை வதைப்பது – 6 minutes ago
  2. காய்கறி மட்டுமே வாங்கிச் செல்வதன் இவ்வளவு பெரிய காரியத்தை சாதிப்பதில் மாமிசம் உண்பவர்களை மட்டம் தட்டுவது – 10 minutes ago
  3. ரம்ஜான் மாதத்தில் வெளியான படத்தில் கமல் மதியம் சாப்பிடுவதைக் காண்பித்து அவர் ஹிந்து எனச் சொல்லாமல் சொல்வது – 11 minutes ago
  4. நடாஷா என்ற அன்னிய சக்திக்கு அல்லக்கையாக கரிகாலன் என்ற திராவிடன் – 14 minutes ago
  5. மாரார் என்னும் ஹிந்துவின் கீழ் ஆரிப், சக்காரியா என அனைவரும் அடங்கி இருப்பது – 16 minutes ago
  6. காந்தியை கரம்சந்த என்றே அழைப்பது. காந்தியைப் பற்றி பேசியவர் ஜின்னாவைப் பற்றிப் பேசாதது. – 16 minutes ago
  7. போலீஸ் ஸ்டேஷனில் பாம் வைத்துவிட்டு வெளியில் வரும் பொழுது கையைக் கழுவிக்கொண்டு வராத லாஜிக் பிழை – 24 minutes ago

samsudeen_ariff

கரிகாலனுக்கு ஒரு வார்த்தை கூட வசனம் கிடையாது, நடாஷா கேள்வி கேட்கும் போது கூட தலைய மட்டுமே ஆட்டுகிறார் வாய் திறக்கமாட்டேன்கிறார் – 15 minutes ago

dynobuoy

  1. கமலின் எல்லா படங்களிலும் நடிக்கும் நாசர் இந்த படத்தில் வராதது,மனுஷ்யபுத்திரனின் பாடலும்இருட்டடிப்பு – கண்டிப்பா -துவா! – less than 10 seconds ago
  2. மார்கெட்டில் தக்காளி மட்டுமே வாங்கும் சாமானியன் வெங்காயம் வாங்குவதில்லை… பெரியார் கொள்கை சாமனியனுக்கு தேவையில்லையா? – 7 minutes ago
  3. கமல் மோகன்லாலுடன் பேசும் முக்கிய காட்சியில் அவருக்கு பின்னே இரண்டு கம்பிகள் தெளிவாக இருக்கும் – ட்வின் டவர்ஸ்? – 11 minutes ago
  4. சாமானியன் கட்டியிருக்கற வாட்ச்ல ‘Made in Switzerland’னு இருக்கு… அப்ப ஜெனிவா ஒப்பந்தத்தை மறுக்கறதைதான் மறைமுகமா சொல்றாரா? – 23 minutes ago
  5. லென்சு வச்சு பார்த்தா பாமோட வலது மூலை பக்கத்துல“Made in P…”னு இருக்கே, என்ன சொல்லவர்றார்? – 25 minutes ago
  6. தமிழ்நாட்டு சாமானியன் கோவணம் கட்ட வழியில்லாம எலிக்கறி சாப்பிடறான், இவரு பிஸ்தா மாதிரி பேண்ட் சட்டை, அன்னிய மோகமா? – 27 minutes ago
  7. ”ராம் ஜானே”ன்னோ, “பீட்டர் ஜானே”ன்னோ பாட்டு வைக்கலையே ஏன்? அந்த சாமிகளுக்கு தெரியாதா? – 28 minutes ago
  8. முகம்மதுகுட்டி என்ற மம்முட்டியை நடிக்கவைக்காமல், மோகன்லால் என்ற நாயரை தேர்ந்தெடுத்த நுண்ணரசியல்னு :)) – about 1 hour ago
  9. ஒரு காட்சியில் கமல் கழுத்து சுளுக்கு எடுப்பதைப்போல தலையாட்டுவார், கவனித்தீர்கள்னா அது துஆ செய்யறதைபோலவே இருக்கும்! – 2 minutes ago
  10. கமல் கையை கோர்த்திருக்கும் ஸ்டைல் ஒரு கிருஸ்துவர் சர்ச்சில் ப்ரே செய்வதைபோலவே இருக்கும்.மற்ற கமல் படங்களில் அது இல்லை! – 19 minutes ago

2008: நம்பிக்கை தரும் இளம் படைப்பாளிகள்

In Books, Literature, Magazines, Tamilnadu on ஏப்ரல் 23, 2009 at 2:45 பிப

நன்றி: எஸ் ராமகிருஷ்ணன்

1. அஜயன்பாலா – சினிமா இலக்கியம் என்று தொடர்ந்து எழுதிவருபவர்

2. திருச்செந்தாழை – கவனத்துக்குரிய சிறுகதையாசிரியர். புதிய படைப்பாளி

3. வாமுகோமு – சிறுகதை நாவல் என்று தொடர்ந்து எழுதி வரும் கவனத்துகுரிய படைப்பாளி

4. சுந்தர புத்தன் – ஒவியம் சிற்பம் என்று நுண்கலை குறித்த தேடுதல் கொண்ட கட்டுரையாளர் பத்திரிக்கையாளர்.

5. லதா – சிங்கப்பூரில் வசிப்பவர். நவீன சிறுகதைகள், கவிதைகள் எழுதி வரும் இளம் படைபாளி.

6. தமிழ்மகன் – சிறுகதையாசிரியர், பாப்புலர் சினிமா பற்றி எழுதிவரக்கூடியவர். பத்திரிக்கையாளர்.

7. பாலமுருகன் – மலேசியாவில் வசிப்பவர். நவீன சிறுகதையாசிரியர். மலேசியாவில் நடைபெற்ற நாவல் போட்டியில் முதல்பரிசு பெற்றவர். நம்பிக்கை உரிய இளம்படைப்பாளி.

8. மலர்செல்வன் – கவனத்துக்குரிய ஈழத்து படைப்பாளி. பெரிய எழுத்து என்ற சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. மறுகா என்ற சிற்றிதழ் ஆசிரியர்.

9. திசேரா – புதிய சிறுகதையாசிரியர். ஈழத்து படைப்பாளி. சிறுகதை வடிவம் மற்றும் கதை சொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கிவருபவர்.

10. பஹீமாஜஹான்– நவீன பெண் கவிஞர். நம்பிக்கைக்கு உரிய ஈழத்து படைப்பாளி.

அந்தக் கால விகடன் விமர்சனம்: 9 சப்ஜெக்ட்

In Magazines, Movies on ஏப்ரல் 9, 2009 at 3:42 முப

திரைப்படம்: காற்றினிலே வரும் கீதம்

100க்கு

  1. டைரக்சன்: எஸ் பி முத்துராமன் –> 55
  2. கதை: பஞ்சு அருணாசலம் –> 35
  3. வசனம்: பஞ்சு அருணாசலம் –> 35
  4. நடிப்பு: கவிதா – 50 & முத்துராமன் – 40 –> 45
  5. காமிரா: பாபு –> 65
  6. இசை: இளையராஜா –> 40
  7. எடிட்டிங்: ஆர் விட்டல் –> 45
  8. வண்ணம்: ஜெமினி கலர் லாபரேட்டரி –> 60
  9. தயாரிப்பு: எஸ் பாஸ்கர் –> 50

மொத்தம் → 430

கதையோடு ஒத்துப் போகாத க்ளைமாக்ஸ் காட்சிக்காக (குறைப்பு) -25

ஆக மொத்தம்  → 405/900

காற்றினிலே வரும் கீதம் - அந்தக் கால ஆனந்த விகடன் திரை விமர்சனம் (1978)

காற்றினிலே வரும் கீதம் - அந்தக் கால ஆனந்த விகடன் திரை விமர்சனம் (1978)

Sujatha Story Analysis in Numbers by Jeyamohan

In Books, Literature on மார்ச் 13, 2009 at 9:44 பிப

ஜெயமோகன் :: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் சுஜாதா :: உயிர்மை பதிப்பகம்

சுஜாதாவின் நடை சிறுகதைக்கு உரியது. காரணம்:

  1. சுருக்கம்
  2. நேர்கோட்டில் வேகமாகத் தாவிச்செல்லும் இயல்பு

சிறுகதையின் செவ்வியல் [ஓ ஹென்றி பாணி] வடிவில் நம்பிக்கை கொண்டவர் சுஜாதா. இயல்புகள:

  1. சம்பவங்களை நம்பியே கதையை அமைத்தல்
  2. குறைவான கதைமாந்தர்
  3. சிறிய கால அளவு
  4. மையமுடிச்சு இறுதித் திருப்பத்தால் அவிழ்க்கப்படுதல்

அவரது கதைகளின் பலம்:

  1. வலுவான வடிவ உணர்வு
  2. நேர்த்தியான மொழியுடன் அமைக்கப்பட்டவை.

சுஜாதாவின் கதைகளின் பலவீனம்:

  1. பெரும்பாலான கதைகளில் அவரது கதைமுடிவுகள் இதழியல் எழுத்துக்கு உரிய எளிய உத்திவிளையாட்டாக உள்ளன. உதாரணமாக
    • ஒரே ஒரு மாலை
    • வழி தெரியவில்லை
    • சென்ற வாரம்
  2. பொதுவான நியாயம் சார்ந்த முடிவுகூறலாக உள்ளன. முதலிய கதைகளைச் சொல்லலாம்.  உதாரணமாக
    • அம்மா மண்டபம்
    • கள்ளுண்ணாமை
    • கால்கள்
    • கரைகண்ட ராமன்

சுஜாதாவின் தொடக்கம்

  1. ஆங்கிலத்தில் ஹெமிங்வே முதல் ரே பிராட்பரி வரை பலர்.
  2. ஜானகிராமனில் இருந்து அவர் பெற்றுக் கொண்டது நுட்பமான தகவல்களை அடுக்கி கதை சொல்லும் முறை.
  3. அசோகமித்திரனில் இருந்து கறாரான விலகலை.

அவரது கதைகளின் வகை.

  1. நம் நினைவுகளை நுட்பமான தகவல்கள் மூலம் தூண்டி நடுத்தர வற்கவாழ்வின் செறிவான சித்திரம் ஒன்றை அளிப்பவை. உதாரணம் :
    • மகன் தந்தைக்கு
    • வீடு
    • சிலவித்தியாசங்கள்
    • செல்வம்
    • எல்டொராடோ
    • ரேணுகா
  2. . நம் தர்க்கபுத்தியை புனைவாட்டம் மூலம் சற்றே அசைத்து மேலே கற்பனைசெய்ய வைப்பவை. ஒருவகையான விடையின்மையை உணரச்செய்பவை. இதை அவர் அறிவியல் சிறுகதைகளைச் சார்ந்து உருவாக்கிக் கொண்ட எழுத்துமுறை எனலாம்.  உதாரணமாக
    • பார்வை
    • ரஞ்சனி
    • நீர்
    • நிபந்தனை
    • நிதர்சனம்
    • சாரங்கன்.
  3. உற்சாகமான கதைசொல்லல் மூலம் நம்மை புன்னகைக்க வைக்கும் கதைகள். உதாரணமாக
    • சுஜாதாவின் தலைசிறந்த கதையாக நான் எண்ணும் ‘குதிரை ‘ இவ்வகையை சார்ந்தது.
    • மாமாவிஜயம்
    • சார் இந்த அக்கிரமத்தை
  4. ஒரு வகையான பகீரிடலை உருவாக்கும் கதைகள். கரிய நகைச்சுவை கொண்டவை. தார்மீக உணர்வை தொட்டு சீண்டுபவை. உதாரணமாக
    • நகரம்
    • முரண்
    • நிலம்
    • நொ ப்ரொப்ளாம்
    • எப்படியும் வாழலாம்
    • பாரீஸ் தமிழ்ப்பெண்

சுஜாதாவின் இக்கதைகளை விட மேலாக நான் புதுமைப் பித்தன், லா.ச.ராமாமிருதம், கு அழகிரிசாமி, தி ஜானகிராமன், அசோகமித்திரன் , ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி , கி ராஜநாராயணன் ஆகியோரின் ஆகங்களை முன்வைக்க காரணங்கள்

  1. சுஜாதா சிறுகதைக்குள் கவித்துவத்தை அடைவதே இல்லை . மேலான சிறுகதை ஒருவகை கவிதை – சுந்தர ராமசாமியின் பல்லக்குதூக்கிகள் போல.
  2. சுஜாதா தீவிரமான அறஎழுச்சியை அடைவதில்லை, உருவாக்குவதில்லை. மேலான கதைகள் காலத்தால் பழமைகொள்ளாத அறவேகம் கோண்டவை– அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் போல.
  3. சுஜாதா கதையில் ஒருபோதும் அவரை விலக்கிக் கொள்வதில்லை. மேலான கதைகள் எழுத்தாளனைவிட பெரியவை. அவனது அறிவையும் மனதையும் மீறி ஆழ்மனம் வெளிப்படுபவை. ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் போல.
  4. சுஜாதாவிடம் நம் மரபின் நேர் அல்லது எதிர் விளைவுகள் இல்லை. மேலான ஆக்கங்கள் மரபின் நீட்சியாக நின்று மரபை மறு ஆக்கம் செய்கின்றான. கி ராஜநாராயணனின் பேதை போல.

ஒரு ஷாட்டை வாசித்துப் பாருங்கள்

In Movies, Technology on ஜனவரி 26, 2009 at 3:03 முப

சினிமா பார்ப்பதென்பது ‘ஷாட்டை’ வாசிப்பது என்பதுதான். ப்ரஞ்சுக்காரர்களின் ‘Misc-en-scene’ எனும் கருத்தாக்கம் ஒரு ‘ஷாட்’டை reading செய்ய எளிதாக்குகிறது.

10 அம்சங்கள்:

1. ஷாட்: நிகழ்வுக்கும் கேமிராவுக்குமான் தூரம் எவ்வளவு?

2. கோணம் – Angle

3. ஒளியமைப்பு – Lighting

4. பிரதானமாக இருப்பது – Dominant: எவ்விதமாக ஈர்க்கிறது? நகர்விலா / ஒளியமைப்பிலா?

5. அடுத்ததாக கவனத்தை ஈர்ப்பது – Subsidiaries

6. ஒழுங்கமைவு – Composition

7. அமைப்பு – Form

8. செவ்வகவெளியைப் பயன்படுத்துதல் – Framing

9. அடுக்குகள் – Depth

10. பாத்திரங்கள் – பார்வையாளர் உறவு :: Staging Position

நன்றி: சினிமா: ஓர் அறிமுகம் இரா பிரபாகர் (கனவுப்பட்டறை வெளியீடு)