Snapjudge

Posts Tagged ‘Suggestions’

Bala’s Paradesi: How he should have taken the movie?

In Movies, Tamilnadu on மார்ச் 23, 2013 at 4:02 முப

பரதேசி திரைப்படம் எடுத்த இயக்குநர் பாலா, இப்படி செய்திருக்க வேண்டும், அப்படி உருவாக்கியிருக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளும் ஆலோசனைகளும் இணையத்தில் வெளியாகிறது. நானும் உள்ளேன் அய்யா…

  1. இடைவேளைக்குப் பிந்திய இரண்டாவது பகுதியில் குத்தாட்டம் இல்லாதது மிகப் பெரிய குறை. ’காளை’ படத்தில் குட்டிப் பிசாசே என்று குத்தாட்டம் போட்ட மாதிரி அதர்வா கதாபாத்திரத்தின் கற்பனையோடு வேதிகாவின் கிளப் டான்ஸ் வைத்திருக்க வேண்டும்.
  2. தன்னுடைய நிறுவனத்திற்கு ‘B Studios’ என்று ஆங்கிலத்தில் வைத்ததற்கு பதிலாக ‘பா கலைக்கூடம்’ என தமிழ்ப்பறோடு பெயர் சூட்டியிருக்க வேண்டும்.
  3. இரு பெண்களுக்கு நடுவில் சண்டை வருவது போல் காட்சி அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதுவும் தேய்வழக்காக மணப்பெண்ணின் அம்மாவிற்கும் மாப்பிள்ளையின் பாட்டிக்கும் பிணக்கு வருமாறு அமைத்திருப்பதற்கு பதில் ஆங்கிலேயரை அடித்துத் துவைப்பது போல் காட்சி வைத்து, பார்வையாளருக்கு திருப்தி கொடுத்திருக்க வேண்டும்.
  4. தமிழகத்தில் 1939ல் ரொட்டி இருந்திருக்க வாய்ப்பேயில்லை. பொறையும் பன்னும் மட்டுமே கிடைக்கும் நாயர் கடை அமைத்திருக்க வேண்டும்.
  5. தெலுங்குப் படத்தில் இரண்டு ஹீரோயின் சர்வ சகஜம். அது போல் தன்ஷிகாவையும் அதர்வா உடன் சேர்த்து நினைக்க வைத்திருக்க வேண்டும்.
  6. படத்தின் துவக்கத்தில் டைட்டில் வருகிறது. இப்பொழுதெல்லாம் சடாரென்று படத்தை ஆரம்பிப்பதுதானே வழக்கம்?! கட்டாங்கடைசியில் மட்டுமே தலைப்பும் இன்ன பிற எழுத்துகளும் வந்திருக்க வேண்டும்.
  7. முன் பின்னாக காட்சியைக் கலைத்துப் போட்டு திரைக்கதை பின்னுவது இன்றைய சினிமா ஃபேஷன். அதன்படி, கொஞ்சம் தேயிலைத் தோட்டம், கொஞ்சம் மூங்கில் தோட்டம், கொஞ்சம் மாந்தோப்பு எல்லாம் அறுவடை செய்திருக்க வேண்டும்.
  8. தேயிலையை விட காபி இன்னும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. காபியை விட புகையிலை இன்னும் நோய் தரக் கூடியது. புகையிலையை விட கஞ்சா இன்னும் அடிமையாக்கி அழிக்கும் ஆபத்து நிறைந்தது. எனவே, அவற்றின் அட்டை போல் உறிஞ்சும் தன்மைகளைத்தான் திரைக்கதை ஆக்கியிருக்க வேண்டும்.
  9. ஓட்டுச் சுவடிகளில் எழுத்தே தெரியாமல் காட்சியாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன். அந்தக் கால எழுத்தாணிகளைக் கொண்டு ஓலைச்சுவடி எழுத்துகளைத் தெளிவாக திரையில் காண்பித்திருக்க வேண்டும்.
  10. இந்தியில் ஷாரூக் கான் நடித்த படமான ‘பர்தேஸ்’ படம் என்று தமிழரை ஏமாற்றும் விதமான தலைப்பை மாற்ற வேண்டும்.

நிறைவேற்றுவதற்கு பெட்டிஷன் போட்டிருக்கிறேன்.

Jeyamohan: Best Tamil Kavidhai Collections: Notable Poems & Poet Books

In Books, Literature on செப்ரெம்பர் 1, 2009 at 5:50 பிப

Source: சமீபத்திய சிறந்த நூல்கள் ஒரு பட்டியல் :: ஜெயமோகன் (March 29, 2003)

கவிதைகள்

1] முகவீதி – ராஜசுந்தரராஜன் [தமிழினி பதிப்பகம்]

[எண்பதுகளில் முக்கிய கவனம் பெற்ற கவிஞர்களில் ஒருவரான ராஜசுந்தரராஜன் அதிகமாக எழுதவில்லை. செவ்வியல்கவிதைகளின் மொழியழகும் நவீனக்கவிதைகளின் வடிவமும் கொண்ட அவரது கவிதைகள் பரவலாக விரும்பப்பட்டவை. இது அவர்து முழுத்தொகுப்பு]

2] கலாப்ரியா கவிதைகள் [தமிழினி பதிப்பகம்]

[காட்சிச்சித்தரிப்பின் நுட்பம்மூலம் கவிதையில்புதிய எல்லைகளைஉருவாக்கிய கலாப்ரியாவின் அத்தனை கவிதைகளும் அடங்கிய தொகுப்பு]

3] விண்ணளவு பூமி — தேவதேவன்[தமிழினி பதிப்பகம்]

4]விரும்புவதெல்லாம் – தேவதேவன்[தமிழினி பதிப்பகம்]

[தேவதேவனின் கவிதைகள் வாழ்வின் சாரமாக உள்ள அழகையும் அன்பையும் மொழியை நெகிழவைத்து தொட்டுக்காட்டும் தமிழ் சாதனைகள்]

5]  மேய்வதும் மேய்க்கப்படுவதும் யாது – வி அமலன் ஸ்டேன்லி

[உணர்வுகளைஅடக்கமானமொழியில் கூறும் ஸ்டேன்லியின் கவிதைகள் பரவலாக கவனிக்கப்பட்டவை. இது மூன்றாவது தொகுப்பு. ஆனால் முழுகவிதைகளையும் உள்ளடக்கியது ]

6] இரவுகளின் நிழற்படம் — யூமாவாசுகி [தமிழினி பதிப்பகம்]

7] அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு — யூமாவாசுகி [தமிழினி பதிப்பகம்]

[யூமாவின் கவிதைகள் கட்டற்ற பரவசநிலையை மொழியில் அள்ள முயலும் அழகிய சொல்வடிவங்கள்]

8]  முலைகள் – குட்டிரேவதி [தமிழினி பதிப்பகம்]

[தற்போது அதிகமாக கவனிக்கப்படும் கவிஞர். உணர்வுகளை உருவகங்களாக தீவிரமாக வெளிப்படுத்தமுனைபவர்]

9] யாரோ ஒருத்தியின் நடனம் . மகுடேஸ்வரன் [காவ்யா பதிப்பகம்]

[நவீனக்கவிதையில் அருகிவரும் நகைச்சுவை அம்சம் உடைய கவிதைகளை எழுதுவதனால் மகுடேஸ்வரன் கவனத்துக்குரிய கவிஞர்]

10] வெறும் பொழுது . உமா மகேஸ்வரி தமிழினி பிரசுரம்

[சமீப காலத்தில் வந்த கவிதை தொகுப்புகளில் மிக அழகான தயாரிப்பு உள்ள நூல் இதுவே. கவிதைகள் அழகிய சொல்லாட்சிகள் நிரம்பியவை, நேர்மையான உக்கிரம் கொண்டவை. பெண் கவிஞர்கள் அதிர்ச்சிகள் மூலம் கவனம் கோரும் இந்தக் காலகட்டத்தில் கவனத்துக்குரிய அழகான கவிதைகளின் தொகுப்பு]

S Ramakrishnan: New Book Recommendations for 2009

In Books, Lists, Literature on ஓகஸ்ட் 30, 2009 at 4:53 பிப

Source: எஸ். ராமகிருஷ்ணன்: பார்க்க- படிக்க-இணையதளங்கள்

தீவிர வாசகர்களுக்காக நான் சிபாரிசு புதிய புத்தகங்கள்

1. Diary of a Bad Year by J. M. Coetzee – novel

2. Chicken with Plums – Marjane Satrapi – Graphic novel

3. 2666- Roberto Bolano -novel

4. The Poetry of Arab Women – Anthology – Nathalie Handal

5. The Sea by John Banville- Booker Prize Novel

6. Satyajit Ray : Essays (1970-2005)- Author: Gaston Roberge

7. E.E. CUMMINGS – A Biography By Christopher Sawyer-Laucanno.

8. THE BROTHERS KARAMAZOV Fyodor Dostoevsky. New Translation- by Richard Pevear and Larissa Volokhonsky. .2007

9. A Drifting Boat: An Anthology of Chinese Zen Poetry. Translated by Jerome P. Seaton

10. Cosmos – Witold Gombrowicz – novel

Paavannan picks his Favorite Short Stories in Tamil after 1995

In Books, Lists, Literature on ஓகஸ்ட் 30, 2009 at 4:49 பிப

  1. யூமா.வாசுகி – வேட்டை, ரத்த ஒளி
  2. சூத்ரதாரி – தேர், வலியின் நிறம்
  3. மனோஜ்குமார் – பால்
  4. பா.வெங்கடேசன் – மழையின் நிறம் தனிமை
  5. தளவாய்சுந்தரம் – ஹிம்சை
  6. கோகுலகண்ணன் – பாம்பும் பிற கனவுகளும்
  7. பவாசெல்லத்துரை – வேட்டை
  8. லட்சுமிமணிவண்ணன் – பூனை
  9. குமாரசெல்வா – உக்கிலு
  10. பாப்லோ அறிவுக்குயில் – இருள்தின்னி
  11. க.சீ.சிவக்குமார் – நாற்று
  12. சோ.தருமன் – வலைகள்

மிகச்சிறந்த தமிழ்ச்சிறுகதைத் தொகுப்பு என்று பொத்தாம்பொதுவாகக் குறிப்பிடுவது முடிவெடுப்பதில் சில நடைமுறைச் சிக்கல்களைத் தரும். மறைந்த மூத்த எழுத்தாளர்களை வைத்துக் கொள்வதா விட்டுவிடுவதா, வாழும் மூத்த எழுத்தாளர்களில் யார் யாரை எடுத்துக் கொள்வது என நிறைய பிரச்சனைகளில் அகப்பட்டுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

1995க்குப் பின் எழுதப்பட்ட இளம் எழுத்தாளர்கள் கதைகளில் முக்கியமானவர்களாகச் சிலரை நான் மனத்தில் வைத்திருக்கிறேன். இவர்கள் பெயர்களை மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

இவர்களில் பாதிப்பேருக்கு இன்னும் முதல்தொகுப்பே வரவில்லை. மீதிப்பேர் சமீபத்தில்தான் தம் முதல் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். மிகவும் புதியதான மொழி ஆளுமையும் படைப்புலகும் கொண்டவர்களாக இவர்கள் உள்ளார்கள். இந்த அடையாளத்தைத் தற்காலத்திய தமிழ்ப்படைப்புலகின் அடையாளமாகப் பார்க்கத் தடையில்லை.

Dec 11, 2004

சுஜாதா: எனக்குப் பிடித்த சிறுகதைகள்

In Books, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 27, 2009 at 10:17 பிப

Courtesy: ForumHub

  1. புதுமைப் பித்தன் – மனித இயந்திரம்
  2. கு.ப.ராஜகோபலன் – விடியுமா
  3. தி.ஜா. – சிலிர்ப்பு
  4. லா.ச.ரா. – கொட்டு மேளம்
  5. கு ழகிரிசாமி – அன்பளிப்பு
  6. சுந்தர ராமசாமி – பிரசாதம்
  7. அ மாதவன் – நாயனம்
  8. ஜெயகாந்தன் – அக்னி பிரவேசம்
  9. ஜெயமொகன் – பல்லக்கு
  10. வண்னதாசன் – நிலை
  11. கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு
  12. நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள்
  13. அசோகமித்திரன் – புலிக் கலைஞன்
  14. கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
  15. இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்
  16. இரா முருகன் – உத்தராயணம்
  17. சு சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு
  18. ரா கி ர – செய்தி
  19. தங்கர்பச்சான் – குடி முந்திரி
  20. சிவசங்கரி – செப்டிக்
  21. ராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்
  22. பிரபஞ்சன் – மீன்
  23. கி.ரா. – கதவு
  24. வண்ணநிலவன் – எஸ்தர்
  25. திலீப் குமார் – கடிதம்
  26. சோ தருமன் – நசுக்கம்
  27. நாகூர் ரூமி – குட்டியாப்பா
  28. ராமசந்தர வைத்தியநாதன் – நாடக காரர்கள்
  29. பாமா – அண்ணாச்சி
  30. சுஜாதா – மகாபலி

Venkat picks his Top 10 in Tamil Fiction

In Books, Literature, Tamilnadu on ஜூலை 9, 2009 at 11:30 பிப

Source: வெங்கட் (ஜூன் 2000)

என்முதல் பத்து (குறிப்பிட்ட முக்கியத்துவ வரிசையில் இல்லை) புனைகதைகள்

  1. சுந்தரராமசாமி ஜே.ஜே. சிலகுறிப்புகள்
  2. அசோகமித்திரன் – 18வது அட்சக்கோடு
  3. நீல.பத்மனாபன் பள்ளிகொண்டபுரம்
  4. ஜி.நாகராஜன் – நாளை மற்றுமொரு நாளே,
  5. நாஞ்சில்நாடன் என்பிலதனை வெயில்காயும்
  6. தி.ஜானகிராமன் – மோகமுள்
  7. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
  8. கி.ராஜநாராயணன் – கோபல்லபுரத்து மக்கள்
  9. இந்திரா பார்த்தசாரதி குருதிப்புனல்
  10. ஜெயகாந்தன் – சிலநேரங்களில் சிலமனிதர்கள்

Ramani’s Top Tamil Novels (based on India)

In Lists on ஜூலை 9, 2009 at 11:29 பிப

Source: இரமணி (ஜூன் 2000)

அண்மைக்காலங்களில் (என்பது முழுப்பொய்; கடந்த பத்து வருடங்களாக) புதினங்கள், சிறுகதைத்தொகுதிகள் படிக்கும் வாய்ப்பு பெருமளவிலே கைவசமாகக் காணேன்.

ஆகையினால், என்து பட்டியல் முன்னைப் பழமையின் புதினத்தொகுப்பே 😦 (இந்தியாவினைக் களமாகக் கொண்ட எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமே இங்கே தந்துள்ளேன்) (முதலாவதினைத் தவிர்த்து மிகுதி விருப்பின் ஒழுங்கிலே இல்லை)

1. காகிதமலர்கள் :- ஆதவன்

2. குருதிப்புனல்:- இந்திரா பார்த்தசாரதி

3. உயிர்த்தேன்:- தி. ஜானகிராமன்

4. நாளை மற்றுமொரு நாளே:- ஜி. நாகராஜன்*

5. தலைமுறைகள்: நீல பத்மநாபன்

6. புத்தம் வீடு: ஹெப்சிபா ஜேசுதாசன்.

7. சாய்வு நாற்காலி:- தோப்பில் மீரான்

8. கடலுக்கப்பால்:- ப. சிங்காரம்

9. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்:- ஜெயகாந்தன்#

10. கோபல்லபுரத்து மக்கள்:- கி. ராஜநாராயணன்

RV’s Top 11 Literary Tamil Books: Best of Fiction

In Books, Literature, Tamilnadu on ஜூலை 9, 2009 at 11:29 பிப

Source: தமிழில் டாப் டென் புத்தகங்கள், சிறந்த புத்தகங்கள் போல ரீடிங் லிஸ்ட்

நான் சிபாரிசு செய்யும் டாப் டென் நாவல்கள்: (வரிசைப்படி அல்ல)

1. பின் தொடரும் நிழலின் குரல்
2. விஷ்ணுபுரம்
3. பொன்னியின் செல்வன்
4. என் பெயர் ராமசேஷன்
5. கரைந்த நிழல்கள்
6. சாயாவனம்
7. கோபல்ல கிராமம்
8. பாற்கடல் (இதை நாவல் என்று சொல்வதுதான் சரி)
9. வெக்கை
10. ஜே ஜே சில குறிப்புகள்
11. மோக முள்

Gopal Rajaram: Best of Tamil Literature: Top Books

In Lists on ஜூலை 9, 2009 at 4:37 முப

Source: தமிழ் நாவல் பட்டியல் :: கோபால் ராஜாராம்

வரிசை முக்கியத்துவத்தைக் கொண்டு வரிசைப் படுத்தப் படவில்லை.

1. ஜெயகாந்தன் : ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

2. தி ஜானகிராமன் : அம்மா வந்தாள்.

3. லா ச ராமாமிர்தம் : புத்ர

4. பொன்னீலன் : ‘ புதிய தரிசனங்கள் ‘

5. ஆ மாதவன் : ‘கிருஷ்ணப் பருந்து ‘

6. தமிழவன் : ‘ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள் ‘

7. கிருத்திகா : ‘வாசவேஸ்வரம் ‘

8. பிரபஞ்சன் : ‘மானுடம் வெல்லும் ‘

9. வண்ண நிலவன் : ‘கடல் புரத்தில் ‘

10. அசோக மித்திரன் : ‘கரைந்த நிழல்கள் ‘

11. இந்திரா பார்த்தசாரதி : ‘கால வெள்ளம் ‘

12. நீல பத்ம நாபன் தலைமுறைகள் ‘

13. சுஜாதா : ‘என் இனிய இயந்திரா ‘

தொடர்வினை: சி மோகனின் பட்டியல்கள் – கோபால் ராஜாராம்

Era Murugan picks his Top 81 works in Tamil: Authors & Writers – Fiction & Poems

In Books, Literature, Tamilnadu on ஜூலை 8, 2009 at 6:53 பிப

Source: இரா முருகன் – அகத்தியர் யாஹு குழுமம் (ஜூலை 2001)

Related: S Ramakrishnan: 100 Best Books in Tamil Literature: Must Read Stuff « 10 Hot & Jeyamohan picks Top Tamil Novels: Best of Fiction Writing « 10 Hot

1.கு.ப.ராவின் ‘விடியுமா’,

2.அண்ணாவின் ‘ஓர் யிரவு’,

3.புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’,

4.தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’,

5.சுந்தரராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’,

6.விந்தனின்’பாலும் பாவையும்’,

7.கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கார்’,

8.கிருஷ்ணன் நம்பியின் ‘மாமியார் வாக்கு’,

9.ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’,

10.கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’,

11.க.நா.சுவின் ‘பொய்த்தேவு’,

12.கல்கியின் ‘தியாகபூமி’,

13.பா.ஜெயப்பிரகாசத்தின் ‘யின்னொரு ஜெருசலேம்’,

14.ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’,

15.நீல.பத்மனாமனின் ‘பள்ளி கொண்டபுரம்’,

16. மாதவனின் ‘சாலைக்கடைத் தெருக் கதைகள்’,

17.பொன்னீலனின் ‘உறவுகள்’,

18.கு.சின்னப்பபாரதியின் ‘தாகம்’,

19.சுஜாதாவின் ‘ஊஞ்சல்’,

20.சோ.தர்மனின் ‘நசுக்கம்’,

21. இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’,

22.பா.செல்வராஜின் ‘தேனீர்’,

23.பாமாவின் ‘கருக்கு’,

24.ராஜம் கிருஷ்ணனின் ‘அமுதமாகி வருக’,

25.கிருத்திகாவின் ‘வாசவேச்வரம்’,

26.அம்பையின் ‘சிறகுகள் முறியும்’,

27.பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’,

28.தோப்பில் முகம்மது மீரானின் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’,

29.சே.யோகநாதனின் ‘மீண்டும் வந்த சோளகம்’,

30.பெ.கருணாகரமூர்த்தியின் ‘அகதி உருவாகும் நேரம்’,

31.நகுலனின் ‘நிழல்கள்’,

32.அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக் கோடு’,

33. இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப் புனல்’,

34.ஜெயமோகனின் ‘ரப்பர்’,

35.மா.அரங்கநாதனின் ‘காடன் மலை’,

36.பாவண்ணனின் ‘பாய்மரக் கப்பல்’,

37.வண்ண நிலவனின் ‘எஸ்தர்’,

38.வண்ணதாசனின் ‘தனுமை’,

39.திலீப் குமாரின் ‘மூங்கில் குருத்து’,

40.எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’,

41.தஞ்சை பிரகாஷின் ‘கள்ளம்’,

42.குமார செல்வாவின் ‘உக்கிலு’,

43.பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’,

44.நரசய்யாவின் ‘கடலோடி’,

45.தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள்’,

46.லா.ச.ராவின் ‘அபிதா’,

47.சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’,.

48.நாகூர் ரூமியின் ‘குட்டியாப்பா’,

49.சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும்’,

50.பா.விசாலத்தின் ‘மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்’,

51.பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’,

52.ஜெயந்தனின் ‘நினைக்கப்படும்’,

53.கோமல் சாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’,

54.எஸ்.பொவின் ‘நனவிடைத் தோய்தல்’,

55.வல்லிக்கண்ணனின் ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’,

56.ந.பிச்சமூர்த்தியின் ‘காட்டு வாத்து’,

57.சி.மணியின் ‘வரும்,போகும்’,

58.கலாப்ரியாவின் ‘எட்டயபுரம்’,

59.ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை’,

60.மனுஷ்யபுத்திரனின் ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’,

61.மீராவின் ‘ஊசிகள்’,

62.சுதேசமித்திரனின் ‘அப்பா’,

63.யுகபாரதியின் ‘மனப்பத்தாயம்’,

64.சோ.வைத்தீசுவரனின் ‘நகரத்துச் சுவர்கள்’,

65.பிரம்மராஜனின் ‘கடல் பற்றிய கவிதைகள்’,

66.மஹாகவியின் ‘குறும்பா’,

67.மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள்’,

68.காமராசனின் கறுப்பு மலர்கள்’,

69.அ.சீனிவாசராகவனின் (’நாணல்’) ‘வெள்ளைப் பறவை’,

70.சுகுமாரனின் ‘பயணத்தின் சங்கீதம்’,

71.அப்துல் ரகுமானின் ‘பால்வீதி’,

72.அபியின் ‘மவுனத்தின் நாவுகள்’,

73.கல்யாண்ஜியின் ‘புலரி’,

74.பழமலயின் ‘சனங்களின் கதை’,

75.கலாந்தி கைலாசபதியின் ‘ஒப்பியல் யிலக்கியம்’,

76.எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கற்பின் கனலி’,

77.ஆர்.கே.கண்ணனின் ‘புதுயுகம் காட்டிய பாரதி’,

78. ஜானகிராமனின் ‘நடந்தாய் வாழி காவேரி’,

79.காஞ்சனா தாமோதரனின் ‘வரம்’,

80.கீல் கண்ணனின் சிறுகதைத் தொகுப்பு

81. சிட்டி