Snapjudge

Posts Tagged ‘Sujatha’

Kanagavel Kaakka: Top 10 Dialogues by Pa Raghavan

In Literature, Movies, Tamilnadu on ஜூலை 8, 2010 at 3:26 முப

சட்டம்… பட்டம் மாதிரி பறந்துருச்சு

சொட்டத்தலையன் பின்னாடி உஸ்ஸு… உஷ்ஷுன்னு சொல்லிட்டுப் போக மட்டும் நேரம் இருக்கா?

என்னோட கடவுள் நீங்கதானேப்பா!

எப்போதும் அடுத்தவன நம்புறதில்ல… மசிர எடுக்கறதா இருந்தாலும்! உசிர எடுக்கறதா இருந்தாலும்!!

சட்டத்தையே கவுனாக்கித் தச்சுப் போட்டுண்டவரோட அப்பா…

கொசு மருந்தடிக்கறவன் செய்யறது கொலையா?

நீ லாயர்… லீகல மட்டும் பாரு! நான் லீடர்… இல்லீகலப் பார்த்துக்கறேன்!

எந்தக் கோர்ட்லயாவது ஜஜ்கிட்டயோ, வக்கீல்கிட்டயோ… பகவத் கீதையக் கொடுத்து உறுதிமொழி எடுத்துக்கறாங்களா?

சாமியும் சட்டமும் ஒண்ணுன்னு சொல்லுறாங்க…

தி கிரேட், கிரேட், கிரேட்டஸ்ட் மேன்

சுஜாதா: எனக்குப் பிடித்த சிறுகதைகள்

In Books, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 27, 2009 at 10:17 பிப

Courtesy: ForumHub

  1. புதுமைப் பித்தன் – மனித இயந்திரம்
  2. கு.ப.ராஜகோபலன் – விடியுமா
  3. தி.ஜா. – சிலிர்ப்பு
  4. லா.ச.ரா. – கொட்டு மேளம்
  5. கு ழகிரிசாமி – அன்பளிப்பு
  6. சுந்தர ராமசாமி – பிரசாதம்
  7. அ மாதவன் – நாயனம்
  8. ஜெயகாந்தன் – அக்னி பிரவேசம்
  9. ஜெயமொகன் – பல்லக்கு
  10. வண்னதாசன் – நிலை
  11. கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு
  12. நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள்
  13. அசோகமித்திரன் – புலிக் கலைஞன்
  14. கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
  15. இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்
  16. இரா முருகன் – உத்தராயணம்
  17. சு சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு
  18. ரா கி ர – செய்தி
  19. தங்கர்பச்சான் – குடி முந்திரி
  20. சிவசங்கரி – செப்டிக்
  21. ராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்
  22. பிரபஞ்சன் – மீன்
  23. கி.ரா. – கதவு
  24. வண்ணநிலவன் – எஸ்தர்
  25. திலீப் குமார் – கடிதம்
  26. சோ தருமன் – நசுக்கம்
  27. நாகூர் ரூமி – குட்டியாப்பா
  28. ராமசந்தர வைத்தியநாதன் – நாடக காரர்கள்
  29. பாமா – அண்ணாச்சி
  30. சுஜாதா – மகாபலி

Sujatha’s tips for new Writers: How to write Fiction?

In Books, Literature on ஓகஸ்ட் 11, 2009 at 8:47 பிப

நன்றி: புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள்

Earlier post: 8 rules for writing fiction: Kurt Vonnegut

1. தப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். ‘துருவனும் குகனும்’ என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, ‘போலீஸ் செய்தி‘க்கு அனுப்பாதீர்கள்.

2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். ‘பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்’ என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.

3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி

4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.

5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். ‘உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.’ என்று சொல்வதை விட ‘துப்பினான்’ என்பது மேல்.

6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். ‘அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்… இத்தியாத்திக்குப் பதிலாக, ‘அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.

7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதைமாந்தர்களுக்குச் சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித்தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.

8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதைவிட ‘போனான்’ என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக ‘னான்’ என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.

9. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது. எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.

***

தோரணத்து மாவிலைகள். சுஜாதா. விசா பப்ளிகேஷன்ஸ்

8 rules for writing fiction: Kurt Vonnegut

In Books, Literature on ஓகஸ்ட் 11, 2009 at 8:39 பிப

1. Use the time of a total stranger in such a way that he or she will not feel the time was wasted.

2. Give the reader at least one character he or she can root for.

3. Every character should want something, even if it is only a glass of water.

4. Every sentence must do one of two things — reveal character or advance the action.

5. Start as close to the end as possible.

6. Be a sadist. Now matter how sweet and innocent your leading characters, make awful things happen to them — in order that the reader may see what they are made of.

7. Write to please just one person. If you open a window and make love to the world, so to speak, your story will get pneumonia.

8. Give your readers as much information as possible as soon as possible. To heck with suspense. Readers should have such complete understanding of what is going on, where and why, that they could finish the story themselves, should cockroaches eat the last few pages.

Vonnegut, Bagombo Snuff Box: Uncollected Short Fiction (New York: G.P. Putnam’s Sons 1999), 9-10.

தமிழில் வாசிக்க: சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்) – சேதுபதி அருணாசலம்

சிறுகதைப் படைப்பின் ரகசியங்களைச் சொல்லப் போகிறேன். உங்கள் காதுகளைத் தீட்டிக்கொள்ளுங்கள்:

1) உங்களைப் படிக்கப்போகும் அந்த முகம் தெரியாத அந்நியர், உங்களைப் படித்ததால் நேரம் வீணாகிவிட்டதாக வருத்தப்படாத அளவிற்கு எழுதுங்கள். வாசகரின் நேரத்தை நீங்கள் மதிப்பது மிக முக்கியம்!

2) கதையின் ஒரு பாத்திரத்துடனாவது வாசகர் தன்னைத் தொடர்பு படுத்திக்கொள்ள முடிவதாக இருக்க வேண்டும்.

3) ஒவ்வொரு கதாபாத்திரமும் எதையாவது ஒன்றை விரும்ப வேண்டும் – குறைந்தபட்சம் ஒரு கோப்பைத் தண்ணீரையாவது!

4) ஒவ்வொரு வாக்கியமும் பின்வரும் இரண்டில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் – பாத்திரத்தை வெளிப்படுத்துதல், கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துதல்!

5) முடிவிற்கு எவ்வளவு அருகில் முடியுமோ அவ்வளவு அருகில் கதையை ஆரம்பியுங்கள்!

6) குரூர மனப்பான்மை கொண்டவராக இருங்கள். உங்கள் கதாபாத்திரங்கள் எவ்வளவு இனிமையான அப்பாவிகளாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களுக்கு வாழ்வில் மிக மோசமான விஷயங்கள் நடைபெறட்டும்!

7) ஒருவரை மட்டுமே மகிழ்விப்பதற்காக எழுதுங்கள். உலகத்திலிருக்கும் அத்தனை பேரையும் திருப்திப் படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பினால் உங்கள் கதைக்கும் விஷக்காய்ச்சலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது!

8) உங்கள் வாசகர்களுக்கு எவ்வளவு விஷயத்தை எவ்வளவு சீக்கிரம் கொடுக்கமுடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுங்கள். சஸ்பென்ஸைத் தூக்கிக் குப்பையில் போடவும்! கதையைத் தாங்களே முடிக்குமளவிற்கு வாசகர்களுக்கு என்ன, எங்கே, எப்படி நடந்ததென்று கதை புரிந்திருக்க வேண்டும். கடைசிப் பக்கங்களை கரையான்கள் தின்னட்டும்!

என் தலைமுறையின் அமெரிக்காவின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஃப்ளானெரி ஓ-கானர் (Flannery O ‘Connor 1925-1964) என்னுடைய முதல் விதியைத் தவிர்த்து மற்ற அத்தனை விதிகளையும் உடைத்தெறிந்தார். மிகச்சிறந்த எழுத்தாளர்கள் அத்தனை பேருமே அப்படிச் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

ஒருவருக்காக எழுதப்படும் கதை, வாசகரைக் கதையில் நடைபெறுவதில் பங்குள்ள ஒருவராக நினைக்க வைக்கிறது. இது வாசகரைத் தனக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, ஹோட்டலில் அடுத்த மேசையில் இருவருக்கிடையே நடைபெறும் சுவாரசியமான உரையாடலை ஒட்டுக்கேட்பதுபோல் நினைக்க வைக்கிறது.

ஒருவருக்காக எழுதப்பட்ட கதை பல வாசகர்களை மகிழ்விப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. ஒருவருக்காக எழுதப்பட்ட கதைக்கென்று விளையாட்டு மைதானம் போல சில எல்லைக்கோடுகள் இருக்கின்றன. கதை தன் இஷ்டத்திற்கு எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியாது.

இது வாசகருக்கு எழுத்தாளரின் விளையாட்டை பக்கவாட்டிலிருந்து பார்ப்பது போல ஒரு உணர்வைத் தருகிறது. அடுத்து கதை எங்கே செல்லப் போகிறது ? எங்கே செல்ல வேண்டும் ? ஐயோ… அது நடக்கக் கூடாது! என்றெல்லாம் ஒரு விளையாட்டைப் பார்ப்பது போல வாசகரை நினைக்க வைக்கிறது!

10 Uyirmmai Cover Pages: Little Magazine Wrappers

In Magazines, Tamilnadu on ஜூலை 16, 2009 at 10:15 பிப

கற்றதும் பெற்றதும் ஹேங் ஓவர் குழுமம்

In Blogs, Lists, Magazines, Questions, Tamilnadu on மே 15, 2009 at 4:29 முப

சற்றேறக்குறைய பத்தாண்டுக்கு முந்தைய பழங்காலத்தில் ஆனந்த விகடனில் சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’, குமுதம்.காம்-இல் பா ராகவனின் ‘தெரிந்தது மட்டும்’, விகடன்.காம்-இல் சாரு நிவேதிதாவின் ‘கோணல் பக்கங்க’ளும் வெளிவந்தது.

இன்றைக்கு அப்படி சிதறல்களைத் தொகுத்து எழுதும் பெருமகனார் சில:

கருத்துக்கணிப்பு எக்ஸிட் போல் பத்து கேள்விகள்:

  1. நாலு பதிவுக்கான விஷயங்களை ஒரே பதிவாக்குவது பிடித்திருக்கிறதா?
  2. ஒவ்வொரு அனுபவத்தையும், ஒவ்வொன்றாக சொல்லி, அதற்குறிய குறிச்சொல் இன்னபிற வலைப்பூச்சு இடவேண்டுமா?
  3. இப்படி ஆளுக்கொரு ப்ரான்ட் வைப்பது வலைப்பதிவை சந்தைமயமாக்குமா?
  4. அவரவரின் ‘குறிச்சொல்’ மெய்யாலுமே மனதில் பதிந்து, அவரைச் சொல்வதற்கு பதில் இந்த அடைமொழி நிழலாட வைக்கிறதா?
  5. பதிவின் தலைப்புக்கும், இந்தத் தொடர் இடுகை தலைப்புக்கும் வித்தியாசம் தேவையா?
  6. குட்டியாக இருக்கிறது என்னும் அவச்சொல்லை நீக்கத்தான், இப்படி தொகுக்கிறார்களா?
  7. இந்த மாதிரி துணுக்குத் தோரணத்திற்கு பதில் ட்விட்டர் தோரணம் தேவலாமா?
  8. கூகிள் தேடல் முடிவுகளில் தலைப்புக்கு அதிமுக்கியத்துவம் கிடைக்கும் காலத்தில், உபதலைப்பு கூட கிட்டாத இந்தப் பதிவுகளுக்கு போதிய ரீச் நிலைக்குமா?
  9. கடைசியாக: தனித் தனி இடுகை அல்லது மொத்த குவிப்பு – எது உங்கள் தேர்வு?
  10. இதற்கெல்லாம் கருத்துக் கணிப்பு தேவையா?

கனவுத் தொழிற்சாலை: சுஜாதா

In Lists, Literature, Magazines on ஏப்ரல் 27, 2009 at 10:36 முப

குமுதம் இதழில் தொடர்கதையாக வெளியான சினிமா குறித்த சுஜாதா நாவலின் அத்தியாயங்களுக்கு முன் இடம்பெற்றதில் காணக்கிடைத்த பத்து மேற்கோள்:

1. My days are darker than your nights.
ஹாஸன் பிரதர்ஸ் ராஜ பார்வை‘ அழைப்பிதழ்

2. All those books barely read, those friends barely loved, those cities barely visited, those women barely possessed…
Albert CamusThe Fall.

3. “படத்தைத் தாக்கு தாக்கு என்று தாக்கி எழுதினீர்கள். என்னவாயிற்று உங்கள் விமரிசனம்? உங்கள் எழுத்தால் அந்தப் படம் ஓடுவதைத் தடுத்து நிறுத்த முடிந்ததா? பிரமாதமாக ஓடியதே!”
எம். ஏ. காஜா: ‘குங்குமம்‘ இதழில்

4. The writers want to be directors. The producers want to be writers. The actors want to be producers. The wives want to be painters. Nobody is satisfied.
Gottfried Reinhardt

5. வானத்துப் பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதுமில்லை. அறுப்பதுமில்லை. களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் வானகத் தந்தை அவறுக்கும் உணவளிக்கிறார்.
மத்தேயு ஆறாம் அதிகாரம். (6.26)

6. “Include me out.” – Sam Goldwyn

7. துத்திப்பூ மாலை – எனக்குத்
தோளிலிட்ட நாள் முதலா
தும்பம் ஒருபுறமே – இப்போ
துயரம் இருபுறமே
ஒப்பாரிப் பாடல், திருவாட்டி சின்னத்தாய் பாடியது

8. ‘No picture shall be certified for public exhibition which will lower the moral standards of those who see it.’
Ministry of I & B: Directions to the Board of Film Censors

9. பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கூடி இருக்கலாம். – ஔவையார்

10. இரத்தினங்கள் வைத்து இழைத்து
இராவைப் பகலாக்கும்
சித்திரங்கள் வகை வகையாய்
செய்வேன் மனோன்மணியே
குணங்குடி மஸ்தான் சாஹிப்

கொசுறு: “இதைத் தவிர ‘இந்தியர்கள் நம்மவர்களுள் வீண் சண்டை’, ‘ராட்டினமாம் காந்தி கை பாணம்’ என்ற பாட்டுக்களையும் இனிய குரலுடன் பாடுகிறாள். வார்த்தைகள் தெளிவாக இருப்பது படத்தின் மேன்மையை அதிகரிக்கிறது. மிஸ் ஜான்ஸிபாயும் மிஸ்டர் ஆர்டியும் செய்த கொறத்தி நடனமும் இதில் அடங்கியிருக்கிறது. அவசியம் காணத் தகுந்தது.”
– 29-01-1931 சுதேசமித்திரனில் வெளியான ‘காளிதாஸ்‘ படத்தின் விமரிசனத்திலிருந்து பிலிம் நியூஸ் ஆனந்தன்

Best of 1989: Sujatha Selections

In India, Life, Lists, Misc on ஏப்ரல் 15, 2009 at 10:22 முப

சிறந்த கவிதை: ‘வருத்தம் – சுந்தர ராமசாமி :: காலச்சுவடு ஜூலை இதழ்

சிறந்த சிறுகதை: ‘நாயனம் – ஆ மாதவன் (நான் 1989ல் படித்தது)

சிறந்த நகைச்சுவை: பாக்கியம் ராமசாமி – ‘அப்புலால் ஜிந்தாபாத்’ – முதல் அத்தியாயத்தில் சீதாப்பாட்டியின் வர்ணனை

பத்திரிகைக் கதைக்கு சிறந்த படம்: மருது

சிறந்த கார்ட்டூன்: மதன் – ‘வாழ்க’; ஆர் கே லட்சுமணன் – எச் கே எல் பகத் ‘சுவற்றில் ராஜீவ் படம்’

சிறந்த கட்டுரைத் தொடர்: ‘தமிழண்ணல்‘ – தினமணி

சிறந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை:’ஜோல்னாப் பையர்கள்’ – இந்தியா டுடே

சிறந்த அட்டைப்படம்: ‘உடுமலைப் பேட்டை இரட்டையர்’ – குமுதம்

சிறந்த திரைக்கதை: ‘சந்தியா ராகம்’ – பாலு மகேந்திரா

சிறந்த ஏமாற்றி: எஸ் கோபாலகிருஷ்ணன் ‘கூந்தல் தைலம்’

சிறந்த ஆட்டக்காரர்: சஞ்சய் மஞ்சரேக்கர்

சிறந்த ஏமாற்றம்: ஸ்ரீகாந்த்

சிறந்த திரைப்படம்: ‘கரகாட்டக்காரன்‘ – இதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் முழு வருஷமும் ஓடியதற்கு

சிறந்த சிறுபத்திரிகை: காலச்சுவடு

பெரிய பத்திரிகை: இந்தியா டுடே

நடுவாந்தரப் பத்திரிகை: பொன்மலர்

புதுப் பத்திரிகை: கனவு

சிறந்த கேள்வி பதில்: ராஜீவ் காந்தி ask Ram

சிறந்த (சம்பந்தமில்லாத) டிவி விளம்பரம்: போரோலின்

சிறந்த டிவி தொடர்: ஃபவுஜ்

சிறந்த டிவி நகைச்சுவை: ஜஸ்பால் பட்டி

சிறந்த குழந்தை நிகழ்ச்சி: நேரு நூற்றாண்டு தினம் – ஆயிரக்கணக்கான குழந்தைகள் நடனம்

சிறந்த பொருள்: டிஜிட்டல் டயரி – காஸியோ

சிறந்த விபத்து: பாலம் (Palam) ஏர்ஷோ

சிறந்த இறந்தவர்: சீனத்து இளைஞர்கள்
முந்தைய கணையாழி கடைசிப் பக்கங்கள் (நன்றி: உயிர்மை பதிப்பக வெளியீடு): 1992: சிறந்த 10 – சுஜாதா (கணையாழி கடைசிப் பக்கம்)

Sujatha Story Analysis in Numbers by Jeyamohan

In Books, Literature on மார்ச் 13, 2009 at 9:44 பிப

ஜெயமோகன் :: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் சுஜாதா :: உயிர்மை பதிப்பகம்

சுஜாதாவின் நடை சிறுகதைக்கு உரியது. காரணம்:

  1. சுருக்கம்
  2. நேர்கோட்டில் வேகமாகத் தாவிச்செல்லும் இயல்பு

சிறுகதையின் செவ்வியல் [ஓ ஹென்றி பாணி] வடிவில் நம்பிக்கை கொண்டவர் சுஜாதா. இயல்புகள:

  1. சம்பவங்களை நம்பியே கதையை அமைத்தல்
  2. குறைவான கதைமாந்தர்
  3. சிறிய கால அளவு
  4. மையமுடிச்சு இறுதித் திருப்பத்தால் அவிழ்க்கப்படுதல்

அவரது கதைகளின் பலம்:

  1. வலுவான வடிவ உணர்வு
  2. நேர்த்தியான மொழியுடன் அமைக்கப்பட்டவை.

சுஜாதாவின் கதைகளின் பலவீனம்:

  1. பெரும்பாலான கதைகளில் அவரது கதைமுடிவுகள் இதழியல் எழுத்துக்கு உரிய எளிய உத்திவிளையாட்டாக உள்ளன. உதாரணமாக
    • ஒரே ஒரு மாலை
    • வழி தெரியவில்லை
    • சென்ற வாரம்
  2. பொதுவான நியாயம் சார்ந்த முடிவுகூறலாக உள்ளன. முதலிய கதைகளைச் சொல்லலாம்.  உதாரணமாக
    • அம்மா மண்டபம்
    • கள்ளுண்ணாமை
    • கால்கள்
    • கரைகண்ட ராமன்

சுஜாதாவின் தொடக்கம்

  1. ஆங்கிலத்தில் ஹெமிங்வே முதல் ரே பிராட்பரி வரை பலர்.
  2. ஜானகிராமனில் இருந்து அவர் பெற்றுக் கொண்டது நுட்பமான தகவல்களை அடுக்கி கதை சொல்லும் முறை.
  3. அசோகமித்திரனில் இருந்து கறாரான விலகலை.

அவரது கதைகளின் வகை.

  1. நம் நினைவுகளை நுட்பமான தகவல்கள் மூலம் தூண்டி நடுத்தர வற்கவாழ்வின் செறிவான சித்திரம் ஒன்றை அளிப்பவை. உதாரணம் :
    • மகன் தந்தைக்கு
    • வீடு
    • சிலவித்தியாசங்கள்
    • செல்வம்
    • எல்டொராடோ
    • ரேணுகா
  2. . நம் தர்க்கபுத்தியை புனைவாட்டம் மூலம் சற்றே அசைத்து மேலே கற்பனைசெய்ய வைப்பவை. ஒருவகையான விடையின்மையை உணரச்செய்பவை. இதை அவர் அறிவியல் சிறுகதைகளைச் சார்ந்து உருவாக்கிக் கொண்ட எழுத்துமுறை எனலாம்.  உதாரணமாக
    • பார்வை
    • ரஞ்சனி
    • நீர்
    • நிபந்தனை
    • நிதர்சனம்
    • சாரங்கன்.
  3. உற்சாகமான கதைசொல்லல் மூலம் நம்மை புன்னகைக்க வைக்கும் கதைகள். உதாரணமாக
    • சுஜாதாவின் தலைசிறந்த கதையாக நான் எண்ணும் ‘குதிரை ‘ இவ்வகையை சார்ந்தது.
    • மாமாவிஜயம்
    • சார் இந்த அக்கிரமத்தை
  4. ஒரு வகையான பகீரிடலை உருவாக்கும் கதைகள். கரிய நகைச்சுவை கொண்டவை. தார்மீக உணர்வை தொட்டு சீண்டுபவை. உதாரணமாக
    • நகரம்
    • முரண்
    • நிலம்
    • நொ ப்ரொப்ளாம்
    • எப்படியும் வாழலாம்
    • பாரீஸ் தமிழ்ப்பெண்

சுஜாதாவின் இக்கதைகளை விட மேலாக நான் புதுமைப் பித்தன், லா.ச.ராமாமிருதம், கு அழகிரிசாமி, தி ஜானகிராமன், அசோகமித்திரன் , ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி , கி ராஜநாராயணன் ஆகியோரின் ஆகங்களை முன்வைக்க காரணங்கள்

  1. சுஜாதா சிறுகதைக்குள் கவித்துவத்தை அடைவதே இல்லை . மேலான சிறுகதை ஒருவகை கவிதை – சுந்தர ராமசாமியின் பல்லக்குதூக்கிகள் போல.
  2. சுஜாதா தீவிரமான அறஎழுச்சியை அடைவதில்லை, உருவாக்குவதில்லை. மேலான கதைகள் காலத்தால் பழமைகொள்ளாத அறவேகம் கோண்டவை– அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் போல.
  3. சுஜாதா கதையில் ஒருபோதும் அவரை விலக்கிக் கொள்வதில்லை. மேலான கதைகள் எழுத்தாளனைவிட பெரியவை. அவனது அறிவையும் மனதையும் மீறி ஆழ்மனம் வெளிப்படுபவை. ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் போல.
  4. சுஜாதாவிடம் நம் மரபின் நேர் அல்லது எதிர் விளைவுகள் இல்லை. மேலான ஆக்கங்கள் மரபின் நீட்சியாக நின்று மரபை மறு ஆக்கம் செய்கின்றான. கி ராஜநாராயணனின் பேதை போல.

மதம், நம்பிக்கை, கடவுள்: சுஜாதா (சக்தி விகடன்)

In Books, Religions on மார்ச் 11, 2009 at 1:28 பிப

1. Buddhism Varieties by Sujatha: ஷிந்தோ (ஷிண்டோ)

2. Art of Zen & Buddha by Sujata: “ஜென்

3. Is there an Artificial God :: God does not play dice?: “monotheistic/anthropomorphic”

4. Sufism by Sujatha: “சூஃபிஸம்

5. Sujatha on Mohammed the Prophet: “நபிகள் நாயகம்

6. Sujatha on Nirvaana: “நிர்வாணம்

7. Sujatha on Buddhism: “புத்தர்

8. Sujatha on Sikhism: “சீக்கிய மதம்

9. Vanakkam Iraivaa (Jainism) Samanargal: “சமணம் (ஜைனம்)”

10. Sujatha on Tao, Lao Tse: “தாவ்

கொசுறு:
Questions: Sujatha Answers on God, Art movies (Kumudam): உங்களின் கடவுள் பக்தி பற்றி எங்கேயும் தெளிவாகக் கூறாமல் நாமம் போடுகிறீர்களே… முதலில் நம்பி, பிறகு நம்பாமல் விட்டீர்களா? முதலில் நம்பாமல் இருந்து பிறகு நம்பினீர்களா? நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் இருக்கிறீர்களா?