Posts Tagged ‘Sujata’
கனகவேல் காக்க, கரண், கவின் பாலா, பா ரகவன், பாரா, ராகவன், Cinema, Dialogs, Films, Kanagavel Kaakka, karan, Kavinbala, Movies, Paa Ragavan, Para, Raghavan, Sankar, Shankar, Sujata, Sujatha, Tamil, TN
In Literature, Movies, Tamilnadu on ஜூலை 8, 2010 at 3:26 முப
♦ சட்டம்… பட்டம் மாதிரி பறந்துருச்சு
♦ சொட்டத்தலையன் பின்னாடி உஸ்ஸு… உஷ்ஷுன்னு சொல்லிட்டுப் போக மட்டும் நேரம் இருக்கா?
♦ என்னோட கடவுள் நீங்கதானேப்பா!
♦ எப்போதும் அடுத்தவன நம்புறதில்ல… மசிர எடுக்கறதா இருந்தாலும்! உசிர எடுக்கறதா இருந்தாலும்!!
♦ சட்டத்தையே கவுனாக்கித் தச்சுப் போட்டுண்டவரோட அப்பா…
♦ கொசு மருந்தடிக்கறவன் செய்யறது கொலையா?
♦ நீ லாயர்… லீகல மட்டும் பாரு! நான் லீடர்… இல்லீகலப் பார்த்துக்கறேன்!
♦ எந்தக் கோர்ட்லயாவது ஜஜ்கிட்டயோ, வக்கீல்கிட்டயோ… பகவத் கீதையக் கொடுத்து உறுதிமொழி எடுத்துக்கறாங்களா?
♦ சாமியும் சட்டமும் ஒண்ணுன்னு சொல்லுறாங்க…
♦ தி கிரேட், கிரேட், கிரேட்டஸ்ட் மேன்
Anandha Vikadan, Authors, AV, இலக்கியம், எழுத்தாளர், கதை, கற்றதும் பெற்றதும், சஞ்சிகை, சிறுகதை, சிறுபத்திரிகை, சுஜாதா, தொகுப்பு, நாவல், படைப்பு, பட்டியல், புனைவு, Best, Books, Collections, Cool, Faces, Fiction, Hot, Kathai, Lib, Library, Lit, Literary, Literature, Must, Names, Non-Fiction, Notable, Notables, People, Picks, Poems, Read, Refer, Referrals, Shorts, Story, Suggestions, Sujata, Sujatha, Tamil, Top, Vikadan, Vikatan, Writers
In Books, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 27, 2009 at 10:17 பிப
Courtesy: ForumHub
- புதுமைப் பித்தன் – மனித இயந்திரம்
- கு.ப.ராஜகோபலன் – விடியுமா
- தி.ஜா. – சிலிர்ப்பு
- லா.ச.ரா. – கொட்டு மேளம்
- கு ழகிரிசாமி – அன்பளிப்பு
- சுந்தர ராமசாமி – பிரசாதம்
- அ மாதவன் – நாயனம்
- ஜெயகாந்தன் – அக்னி பிரவேசம்
- ஜெயமொகன் – பல்லக்கு
- வண்னதாசன் – நிலை
- கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு
- நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள்
- அசோகமித்திரன் – புலிக் கலைஞன்
- கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
- இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்
- இரா முருகன் – உத்தராயணம்
- சு சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு
- ரா கி ர – செய்தி
- தங்கர்பச்சான் – குடி முந்திரி
- சிவசங்கரி – செப்டிக்
- ராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்
- பிரபஞ்சன் – மீன்
- கி.ரா. – கதவு
- வண்ணநிலவன் – எஸ்தர்
- திலீப் குமார் – கடிதம்
- சோ தருமன் – நசுக்கம்
- நாகூர் ரூமி – குட்டியாப்பா
- ராமசந்தர வைத்தியநாதன் – நாடக காரர்கள்
- பாமா – அண்ணாச்சி
- சுஜாதா – மகாபலி
10, உயிர், சஞ்சிகை, ட்டப்படம், பத்திரிகை, மனுஷ்யபுத்திரன், மனுஷ்யபுத்ரன், மாதாந்தரி, Covers, Little Magz, Magazines, Manushya Puthiran, Manushyaputhiran, Manusyaputiran, MP, Pages, Sujata, Sujatha, Uyirmai, Uyirmmai, Wrappers
In Magazines, Tamilnadu on ஜூலை 16, 2009 at 10:15 பிப
குமுதம், சினிமா, சுஜாதா, தொடர்கதை, மேற்கோள், Cinema, Cool, Fiction, Films, Hassan, Kamal, Kumudam, Kumudham, Kumutham, Movies, Novel, Quotes, Rajaparavai, Story, Sujata, Sujatha
In Lists, Literature, Magazines on ஏப்ரல் 27, 2009 at 10:36 முப
குமுதம் இதழில் தொடர்கதையாக வெளியான சினிமா குறித்த சுஜாதா நாவலின் அத்தியாயங்களுக்கு முன் இடம்பெற்றதில் காணக்கிடைத்த பத்து மேற்கோள்:
1. My days are darker than your nights.
– ஹாஸன் பிரதர்ஸ் ‘ராஜ பார்வை‘ அழைப்பிதழ்
2. All those books barely read, those friends barely loved, those cities barely visited, those women barely possessed…
– Albert Camus — The Fall.
3. “படத்தைத் தாக்கு தாக்கு என்று தாக்கி எழுதினீர்கள். என்னவாயிற்று உங்கள் விமரிசனம்? உங்கள் எழுத்தால் அந்தப் படம் ஓடுவதைத் தடுத்து நிறுத்த முடிந்ததா? பிரமாதமாக ஓடியதே!”
— எம். ஏ. காஜா: ‘குங்குமம்‘ இதழில்
4. The writers want to be directors. The producers want to be writers. The actors want to be producers. The wives want to be painters. Nobody is satisfied.
– Gottfried Reinhardt
5. வானத்துப் பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதுமில்லை. அறுப்பதுமில்லை. களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் வானகத் தந்தை அவறுக்கும் உணவளிக்கிறார்.
– மத்தேயு ஆறாம் அதிகாரம். (6.26)
6. “Include me out.” – Sam Goldwyn
7. துத்திப்பூ மாலை – எனக்குத்
தோளிலிட்ட நாள் முதலா
தும்பம் ஒருபுறமே – இப்போ
துயரம் இருபுறமே
– ஒப்பாரிப் பாடல், திருவாட்டி சின்னத்தாய் பாடியது
8. ‘No picture shall be certified for public exhibition which will lower the moral standards of those who see it.’
– Ministry of I & B: Directions to the Board of Film Censors
9. பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கூடி இருக்கலாம். – ஔவையார்
10. இரத்தினங்கள் வைத்து இழைத்து
இராவைப் பகலாக்கும்
சித்திரங்கள் வகை வகையாய்
செய்வேன் மனோன்மணியே
– குணங்குடி மஸ்தான் சாஹிப்
கொசுறு: “இதைத் தவிர ‘இந்தியர்கள் நம்மவர்களுள் வீண் சண்டை’, ‘ராட்டினமாம் காந்தி கை பாணம்’ என்ற பாட்டுக்களையும் இனிய குரலுடன் பாடுகிறாள். வார்த்தைகள் தெளிவாக இருப்பது படத்தின் மேன்மையை அதிகரிக்கிறது. மிஸ் ஜான்ஸிபாயும் மிஸ்டர் ஆர்டியும் செய்த கொறத்தி நடனமும் இதில் அடங்கியிருக்கிறது. அவசியம் காணத் தகுந்தது.”
– 29-01-1931 சுதேசமித்திரனில் வெளியான ‘காளிதாஸ்‘ படத்தின் விமரிசனத்திலிருந்து பிலிம் நியூஸ் ஆனந்தன்
உயிர்மை, எழுத்தாளர், சுஜாதா, ஜெமோ, ஜெயமோகன், ஜெயமோஹன், புத்தகம், விமர்சனம், Books, Fiction, Jayamogan, Jayamohan, Jemo, Jeyamogan, Jeyamohan, reviews, Story, Sujata, Sujatha, Thinnai, Uyirmmai
In Books, Literature on மார்ச் 13, 2009 at 9:44 பிப
ஜெயமோகன் :: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா :: உயிர்மை பதிப்பகம்
சுஜாதாவின் நடை சிறுகதைக்கு உரியது. காரணம்:
- சுருக்கம்
- நேர்கோட்டில் வேகமாகத் தாவிச்செல்லும் இயல்பு
சிறுகதையின் செவ்வியல் [ஓ ஹென்றி பாணி] வடிவில் நம்பிக்கை கொண்டவர் சுஜாதா. இயல்புகள:
- சம்பவங்களை நம்பியே கதையை அமைத்தல்
- குறைவான கதைமாந்தர்
- சிறிய கால அளவு
- மையமுடிச்சு இறுதித் திருப்பத்தால் அவிழ்க்கப்படுதல்
அவரது கதைகளின் பலம்:
- வலுவான வடிவ உணர்வு
- நேர்த்தியான மொழியுடன் அமைக்கப்பட்டவை.
சுஜாதாவின் கதைகளின் பலவீனம்:
- பெரும்பாலான கதைகளில் அவரது கதைமுடிவுகள் இதழியல் எழுத்துக்கு உரிய எளிய உத்திவிளையாட்டாக உள்ளன. உதாரணமாக
- ஒரே ஒரு மாலை
- வழி தெரியவில்லை
- சென்ற வாரம்
- பொதுவான நியாயம் சார்ந்த முடிவுகூறலாக உள்ளன. முதலிய கதைகளைச் சொல்லலாம். உதாரணமாக
- அம்மா மண்டபம்
- கள்ளுண்ணாமை
- கால்கள்
- கரைகண்ட ராமன்
சுஜாதாவின் தொடக்கம்
- ஆங்கிலத்தில் ஹெமிங்வே முதல் ரே பிராட்பரி வரை பலர்.
- ஜானகிராமனில் இருந்து அவர் பெற்றுக் கொண்டது நுட்பமான தகவல்களை அடுக்கி கதை சொல்லும் முறை.
- அசோகமித்திரனில் இருந்து கறாரான விலகலை.
அவரது கதைகளின் வகை.
- நம் நினைவுகளை நுட்பமான தகவல்கள் மூலம் தூண்டி நடுத்தர வற்கவாழ்வின் செறிவான சித்திரம் ஒன்றை அளிப்பவை. உதாரணம் :
- மகன் தந்தைக்கு
- வீடு
- சிலவித்தியாசங்கள்
- செல்வம்
- எல்டொராடோ
- ரேணுகா
- . நம் தர்க்கபுத்தியை புனைவாட்டம் மூலம் சற்றே அசைத்து மேலே கற்பனைசெய்ய வைப்பவை. ஒருவகையான விடையின்மையை உணரச்செய்பவை. இதை அவர் அறிவியல் சிறுகதைகளைச் சார்ந்து உருவாக்கிக் கொண்ட எழுத்துமுறை எனலாம். உதாரணமாக
- பார்வை
- ரஞ்சனி
- நீர்
- நிபந்தனை
- நிதர்சனம்
- சாரங்கன்.
- உற்சாகமான கதைசொல்லல் மூலம் நம்மை புன்னகைக்க வைக்கும் கதைகள். உதாரணமாக
- சுஜாதாவின் தலைசிறந்த கதையாக நான் எண்ணும் ‘குதிரை ‘ இவ்வகையை சார்ந்தது.
- மாமாவிஜயம்
- சார் இந்த அக்கிரமத்தை
- ஒரு வகையான பகீரிடலை உருவாக்கும் கதைகள். கரிய நகைச்சுவை கொண்டவை. தார்மீக உணர்வை தொட்டு சீண்டுபவை. உதாரணமாக
- நகரம்
- முரண்
- நிலம்
- நொ ப்ரொப்ளாம்
- எப்படியும் வாழலாம்
- பாரீஸ் தமிழ்ப்பெண்
சுஜாதாவின் இக்கதைகளை விட மேலாக நான் புதுமைப் பித்தன், லா.ச.ராமாமிருதம், கு அழகிரிசாமி, தி ஜானகிராமன், அசோகமித்திரன் , ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி , கி ராஜநாராயணன் ஆகியோரின் ஆகங்களை முன்வைக்க காரணங்கள்
- சுஜாதா சிறுகதைக்குள் கவித்துவத்தை அடைவதே இல்லை . மேலான சிறுகதை ஒருவகை கவிதை – சுந்தர ராமசாமியின் பல்லக்குதூக்கிகள் போல.
- சுஜாதா தீவிரமான அறஎழுச்சியை அடைவதில்லை, உருவாக்குவதில்லை. மேலான கதைகள் காலத்தால் பழமைகொள்ளாத அறவேகம் கோண்டவை– அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் போல.
- சுஜாதா கதையில் ஒருபோதும் அவரை விலக்கிக் கொள்வதில்லை. மேலான கதைகள் எழுத்தாளனைவிட பெரியவை. அவனது அறிவையும் மனதையும் மீறி ஆழ்மனம் வெளிப்படுபவை. ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் போல.
- சுஜாதாவிடம் நம் மரபின் நேர் அல்லது எதிர் விளைவுகள் இல்லை. மேலான ஆக்கங்கள் மரபின் நீட்சியாக நின்று மரபை மறு ஆக்கம் செய்கின்றான. கி ராஜநாராயணனின் பேதை போல.
இஸ்லாம், கடவுள், சமணம், சீக்கியம், சீக்கியர், சுஜாதா, நம்பிக்கை, புத்தர், பௌத்தம், மதம், முஸ்லீம், விகடன், Sakthi, Sakthy, Sujata, Sujatha, SV, Vikadan, Vikatan
In Books, Religions on மார்ச் 11, 2009 at 1:28 பிப
1. Buddhism Varieties by Sujatha: ஷிந்தோ (ஷிண்டோ)
2. Art of Zen & Buddha by Sujata: “ஜென்”
3. Is there an Artificial God :: God does not play dice?: “monotheistic/anthropomorphic”
4. Sufism by Sujatha: “சூஃபிஸம்”
5. Sujatha on Mohammed the Prophet: “நபிகள் நாயகம்”
6. Sujatha on Nirvaana: “நிர்வாணம்”
7. Sujatha on Buddhism: “புத்தர்”
8. Sujatha on Sikhism: “சீக்கிய மதம்”
9. Vanakkam Iraivaa (Jainism) Samanargal: “சமணம் (ஜைனம்)”
10. Sujatha on Tao, Lao Tse: “தாவ்”
கொசுறு:
Questions: Sujatha Answers on God, Art movies (Kumudam): உங்களின் கடவுள் பக்தி பற்றி எங்கேயும் தெளிவாகக் கூறாமல் நாமம் போடுகிறீர்களே… முதலில் நம்பி, பிறகு நம்பாமல் விட்டீர்களா? முதலில் நம்பாமல் இருந்து பிறகு நம்பினீர்களா? நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் இருக்கிறீர்களா?
Anandha Vikatan, Authors, AV, ஆவி, கவிதை, காதல், சுஜாதா, விகடன், Collections, Kaadhal, Kaathal, Kadhal, Kathal, Kavidhai, Kavithai, KP, Lit, Love, Poems, Sujata, Sujatha, Vikadan, Writers
In Literature, Magazines on பிப்ரவரி 21, 2009 at 6:13 முப
1.
முன்னாள் :: முகுந்த் நாகராஜ்
தினம் சமைக்கும்போது
இந்தத் தண்ணீரில்தான்
நீந்திச் சாதனைகள் செய்தோம்
என்று நினைத்ததுண்டா
என்ற கேள்விக்கு சிரித்தாள்
குடும்பத் தலைவி ஆகி
கொஞ்சம் குண்டாகவும் ஆகிவிட்ட
அந்த முன்னாள் நீச்சல் வீராங்கனை!
~oOo~
2. ச.முகுந்தன்
‘வேட்டுக் கோதினைப் போல நிறத்தவள்
வெட்கத்தில் ‘பரா’ லைற்றாய் ஒளிர்பவள்
றோட்டுச் சோதனைச் சாவடி போலவென்
இரவுத் தூக்கப் பயணம் தடுப்பவள்
காட்டிக் காட்டி முகத்தை மறைப்பதில்
கண்ட தீர்வுப் பொதியினைப் போன்றவள்
வீட்டைத் தேடிப் பிடித்து என்னிலை
எஃகுக் கம்பியே சொல்லிவா சீக்கிரம்.’
– ‘20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்’ :: இலங்கை பூபாலசிங்கம் புத்தக சாலையின் வெளியீடு
வேட்டுக் கோது & உபயோகமற்றுப்போன துப்பாக்கி ரவை; ‘பரா’ லைற்றாய் & எதிரிகளைத் தேடத் தற்காலிகமாக விண்ணில் ஏவப்படும் பிரகாசமான விளக்கு போல; தீர்வுப் பொதி & இருவருக்கு இடையிலான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ஒரு ஒப்பந்தம் அல்லது ஏற்பாடு
~oOo~
3. பூமா ஈஸ்வரமூர்த்தி
ஒருதரம் காதல்
என்னை மீட்டுத் தந்தது
ஒருதரம் புல்லாங்குழல்
என்னை மீட்டுத் தந்தது
ஒரு வண்ணத்துப்பூச்சியும்
என்னை மீட்டுத் தந்தது
நான்தான் அடிக்கடி
தொலைந்துவிடுகிறேன்!
~oOo~
4. ‘என் வீடு’ (தொகுப்பு: ‘யாருமற்ற நிழல்’) :: தேவதச்சன்
என் வீடு மிகச் சிறிய வீடு
ஆனாலும்,
வீடு திரும்ப விரும்புகிறேன்!
***
ஒவ்வொரு வீடும் நிரந்தரச்
சூரியனை
ஜன்னல் வழியே அழைக்கிறது
அதை கைக்குழந்தையைப் போல்
படுக்கவைத்துக் கொள்கிறது
தினமும் படியில் ஏறியதும்
பயங்கள் மறையும்
என் சிறிய வீட்டின் பின்கதவைத் திறந்து
பார்க்கிறேன்
வீட்டிற்கு அப்பால்
வேறு எதுவும் இல்லை!
~oOo~
5. ‘நதிக் காட்சி’ (தொகுப்பு: ‘பூமியை வாசிக்கும் சிறுமி’) :: சுகுமாரன்
கரையதுக்கிக்
கட்டப்பட்ட
அசையும் தோணிக்குள்
மிஞ்சிய மழை நீர்
அதில்
சிலிர்த்துக்கொண்டு
இருக்கிறது
நிலவு
பூமிக்கு ஒளி பொழிந்த
கருணையில்!
~oOo~
6. மார்கன்
பிளாட்பாரத்தில்
பலூன் விற்பவனுடன்
ஒட்டிக்கொண்டு
பாடப் புத்தகம்
படிக்கும் சிறுமி!
~oOo~
7. ‘அமர் – நிகழ்ச்சி நிரல்’ :: விக்ரமாதித்யன்
கையில் காசு இருந்தால்
டாஸ்மாக் போவான்
இல்லையென்றால் செய்யது பீடி
பிடித்துக்கொண்டிருப்பான்
தோன்றினால் மட்டும்
கவிதை எழுதுவான்!
~oOo~
8. வில்லக விரலினார் (குறுந்தொகை 370) – வில்லும் விரலும்
பொய்கை ஆம்பல் அணிநிறக் கொழுமுகை
வண்டு வாய்திறக்கும் தண்துறை ஊரனோடு
இருப்பின் இருமருங்கினமே கிடப்பின்
வில்லக விரலின் பொருந்தி அவன்
நல்லகம் சேரின் ஒருமருங்கினமே
(பொய்கையில் ஆம்பல் மலர்மொட்டுகளை வண்டுகள் திறக்கும் துறையூர்க்காரனோடு உட்கார்ந்திருக்கும்போது இருவராக இருப்போம். படுத்துக்கொண்டால் வில்லைப் பிடித்த விரல்களைப் போல அவன் உடலைக் கட்டிக்கொண்டு ஒருவராவோம்.)
~oOo~
9. ஒற்றைச் சாட்சி (தொகுப்பு: அவளை மொழிபெயர்த்தல்) :: சுகிர்தராணி
சொல்லாமல் விடப்பட்ட காதலை
மரக்கன்று ஒன்றை நடுவதன் மூலம்
சொல்லிவிட முடியாதுதான் என்றாலும்
இதுநாள் வரை நீருற்றிக் காத்துவந்த
வாகைமரம் பூத்து உதிர்க்கும்
வெளிறிய பூக்களின் நெடி
உன்னை நோக்கி நீள
ஏதாவது விருட்சத்தின் அடியில்
நீயும் நின்றிருக்கலாம்
நிராகரிப்பின் ஒற்றை சாட்சியாய்!