Snapjudge

Archive for ஜூலை, 2012|Monthly archive page

Top 10 Action Items for FeTNA: அமெரிக்காவில் தமிழ் சங்கங்கள் என்ன செய்யலாம்?

In Business, Finance, USA on ஜூலை 13, 2012 at 10:01 பிப

1. நிதி திரட்டல் மூலம் தொண்டு நிறுவன பங்களிப்புகளை ஊக்குவித்தல்

2. மேடைப் பேச்சு அரசியல்வாதிகளுக்கு பதிலாக சிந்தனையாளர்களை, எழுத்தாளர்களை முன்னிறுத்துதல்

3. உள்ளூர் பல்கலைக்கழகங்களின் மூலம் வந்தவர்களை சொற்பொழிவாற்ற, விவாத மேடைகளில் பங்கு கொள்ள வைத்தல்

4. மொழிபெயர்த்தல்

5. தமிழ் கற்றுத் தருதல்

6. நூலகங்களை அணுக்கமாக ஆக்குதல் – யேல், ஹார்வார்ட் பல்கலை லைப்ரரியில் மட்டும் இல்லாமல், உள்ளூர் டவுன், கிராம, நகர நூலகங்களிலும் தமிழ்ப் புத்தகங்களை நுழைத்தல்

7. நாடு தழுவிய தமிழ்ப் போட்டிகளை நடத்துதல் – நார்த் சவுத் பவுண்டேஷன் போல், ஸ்பெல்லிங் பீ போல்

8. ஈழத்திற்கு பச்சாதாபம் மட்டும் காட்டாமல், செயலூக்கத்துடன் களப்பணிகளை, மறுகட்டமைப்புகளை முன்னெடுத்தல்

9. வைரமுத்து, தாமரை போன்ற சினிமா பாடலாசிரியர்களை அழைப்பதுடன் இளங்கவிஞர்களை அழைத்தல்

10. வெளிப்படையான கணக்கு வழக்குகளை காட்டுதல்; திறந்த வழியில் செயல்படுதல்

சில தொடர்புள்ள பதிவுகள்:

அ) பெட்னா விழா – செந்தழல் ரவி

ஆ) 25th FeTNA – Tamils Annual National Convention: Thamizhar Thiruvizhaa in July 2012

இ) FeTNA: Finances, Venues: Whitepaper on Federation of Tamil Sangams of North America

25th FeTNA – Tamils Annual National Convention: Thamizhar Thiruvizhaa in July 2012

In Life, Srilanka, Tamilnadu, USA on ஜூலை 12, 2012 at 9:17 பிப

குளிர் 100 டிகிரி

அகர முதல எழுத்தெல்லாம் அமலா 
பால் முதற்றே உலகு

(பெட்னா குறள் எண் : 1)

நீராருங் கடலுடுத்த

தமிழச்சி தங்கபாண்டியன் கையில் எத்தனை வளையல்? சரியாக சொல்பவருக்கு ஐ-பேடு பரிசு!!

Abercrombie to ‘Actor Bharath’ : Ditch our brand

நடிகர் பரத் அய்யா… ஜெர்சி ஷோர் மாதிரி ஆகிடப் போகுது! ஏபர்கோம்பி & ஃபிட்ச் காலில் விழாக்குறையாக காசு கொடுத்து மாடலிங்கை நிறுத்தச் சொல்லப் போறாங்க

மூன்று முடிச்சு

விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள்பாலா … தூய்மையானவள், மாசற்றவள், பரிசுத்தமானவள், இளமை உடையவள், பொன்னிறம் படைத்தவள், நல்ல பருவம் உடையவள், மயானத்தில் ஆடுபவள் ஆகியவளுடன் இல்லத்தர்சிகள்.

தொப்பி & திலகம்

நான் ஜெயலலிதா என்றால், நீ எம்.ஜி.ஆர்.

கம்யூனிஸ்ட் என்றால் சிவப்பு

எந்தக் கரை வேட்டி கட்டியிருக்கிறான் இவன்?

ஆட்டமா! தேரோட்டமா!!

நாம அரங்கில வந்தப்ப நாலு பேரு ஆடினாங்க… இப்ப என்னடான்னா குவிஞ்சுட்டாங்களே!

புள்ளி வைத்து கோலம் போடுவார்கள் – இங்கே ஆடை

’என்னோட நெஞ்சில் தமிழச்சி மாதிரி பதக்கம் இல்லாமல் இருக்கலாம்… ஆனால், என் இதய தெய்வங்களாகிய ரசிகர்கள் நீங்க இருக்கீங்க!’

என்னது பத்து லட்சமா?

அமலா பால்: உனக்கு அஞ்சு லட்சம்தானா? எனக்கு பத்தாக்கும்!

நடிகர் பரத்:நான் பாய்ஸ்; நீ தமிழுக்கு கிடைத்த நான்காம் பால்!!

அறிஞர் அண்ணாவும் யேல் பல்கலைக்கழகமும்



பிரபாகரன் பிசினெஸ்

இறந்தாலும் ஆயிரம் பொன்

பொழிப்புரை

கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு மொருவாழ்வே

காம கலக்கத்தினால் மலஞ்சோறும் இந்த உடம்பின் மிகுந்த நோய்களுக் காளாகித் தவிக்காமல், உன்னைக் கவிமாலையால் போற்றித் துதிக்கும் என்னை ஈடேறச் செய்கின்ற ஒப்பற்ற பெருவாழ்வுடையவனே!

உன்னைக் கண்டு நானாட

எ.கொ.இ.சா. (அ) ஒய் திஸ் கொலவெறி சூப்

Writer Jeyamohan on Author S Ramakrishnan

In Books, Literature on ஜூலை 6, 2012 at 7:39 பிப

1. விழித்திருப்பவனின் இரவு: உலக இலக்கியச்சிமிழ்

தமிழில் ஒரு சராசரி வாசகன் உலக இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் அறிவதற்கான சாளரமாக அவரது கட்டுரைகள் இருந்து வருகின்றன. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் அவர் எடுத்துப் பேசியிருக்கும் ஆசிரியர்களின், நூல்களின் பெயர்ப் பட்டியலே வியப்பூட்டுவதாக உள்ளது. இன்றைய தமிழ்ச்சூழலில் இத்தகைய பல குரல்கள் எழுந்தாக வேண்டியிருக்கிறது. நமக்கு இன்றைய இன்றியமையாத தேவை இலக்கிய இதழியல். அதற்கான மிகச்சிறந்த முன்மாதிரிகள் எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரைகள்.

2.

3. இதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்

அற்பமான, அன்றாட வாழ்வு சார்ந்த புற யதார்த்தங்களை ‘அப்படியே’ பதிவு செய்வதிலேயே திருப்தி காண்கிற இலக்கியப் போக்கிலிருந்து விலகி இலக்கிய ஆக்கம் குறித்தான மகத்தான கனவுடன் ஆக்கப்பட்ட உண்மையான தீவிரமுயற்சி இப்படைப்பு. ஒரு நாவல் உருவாக்குவது ஒரு புனைவு வெளியைத்தான் என்ற நவீனப்பிரக்ஞை இதில் உள்ளது. இதனுடன் பலவகையிலும் ஒப்பிடத்தக்க நவீன இலக்கிய ஆக்கம் என இடாலோ கால்வினோவின் ‘புலப்படா நகரங்கள்’ நாவலைச் சொல்லலாம்.

4. பாரதி மகாகவியே: விவாதம்- ஒரு கடிதம்

பாரதியைக் கொண்டாடுபவர்களில் இரு வகையினர் உண்டு. திரிலோகசீதாராம் போன்றவர்கள் பாரதியின் வேதாந்தநோக்கை முக்கியமாகக் கருதுபவர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அவன் நவீன ஜனநாயக சமூகத்தின் உருவாக்கத்துக்கு ஆற்றிய பங்களிப்பைப் பெரிதாக எண்ணுபவர்கள். அவை இரு தனி மரபுகளாக வளர்ந்தன

எஸ்.ராமகிருஷ்ணன் மரபே ஜீவானந்தம் முதல் இடதுசாரி ஜெயகாந்தன் வரை பாரதி பக்தர்களை உருவாக்கியது. கைலாசபதி முதல் ரகுநாதன் வரை இடதுசாரி பாரதி ஆய்வாளர்களை உருவாக்கியது.

5. இருவகை எழுத்து

எஸ்.ராமகிருஷ்ணன் வணிக எழுத்துக்கு மாற்றாக சிற்றிதழ்சார் இலக்கிய உலகம் உருவாக்கிய வகைமாதிரிக்குள் நிற்பவர். தன்னை வாசகன் என உணரும் ஒருவன் கவனித்துப் பொறுக்கிக்கொள்ளும் மொழிநுட்பங்களும், சித்தரிப்புநுட்பங்களும் நிறைந்தது அது. வாச்கானை உள்ளே ஈடுபடுத்தாதது. அந்நுட்பங்களின் எல்லையை வாசகன் கண்டுபிடிக்கும் வரை அவன் ஆர்வத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும்.

6. யாமம் : எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு

7. காமத்துக்கு ஆயிரம் உடைகள் : எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’

8. ஜெய்? மோகன்?

ஜேம்ஸ்பாண்டு உடையில் தோன்றி ஜெய்சங்கர் பரிமளிக்கும் படங்களை பார்க்கும் இவர் என்னய்யா நம்ம ஜெயமோகன் மாதிரியே நடிக்கிறதும், சாடி குதிக்கிறதும், நகத்தை கடிக்கிறதும். உணர்ச்சிவசப்படுறதும், எதுக்குனு தெரியாம சண்டை போடுறதுமா செய்றாரே என்று பல முறை சிரிப்பை அடக்க முடியாமல் திணறியிருக்கிறேன். உண்மையில் இப்போது தான் அவருக்கு ஜெய் என்ற பெயர் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.

& எஸ்ரா : ஆளுமை, நகைச்சுவை & பகிடி

எங்களூரின் ராமகிருஷ்ணனுக்கு வாசகர்கள் அதிகம். எங்கள் அக்கவுண்ட் கிளார்க் என்னிடம் ”சார் உங்களுக்கு நெஜம்மாவே ராமகிருஷ்ணனை தெரியுமா சார்?” என்றார்.

”தெரியுமே”

”உங்ககூட பேசுவாரா?”

”அப்பப்ப பேசுவார். சில சமயம் சிரிக்கக்கூட செய்வார்”

”பெரிய ரைட்டர் சார். பாத்து பேசணும். யூ ஆர் லக்கி” என்றார் ”அவரு ஒரு தேசாந்தரி சார்”

அந்த வார்த்தை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது போல. ”அந்தக்காலத்திலே ராணி வாராந்தரீண்ணு ஒண்ணு வந்ததே ”என்றேன்.

9. எஸ்ராவுடன் ஒரு உரையாடல் – கெ.பி.வினோத்

10. http://www.jeyamohan.in/?s=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&searchsubmit&paged=3

’கரிசலில் பிறப்பவர்கள் இயல்பிலே வெக்கை குடித்தவர்கள். வாழ்க்கை இவர்களுக்கு எவ்விதமான சுகபோகத்தையும் தந்துவிடவில்லை. தினப்பாடுகளைக் கடந்து போவதற்கே சமர் செய்து பழகிய மனிதர்கள். குறிப்பாக இங்குள்ள விவசாயிகள் வானத்தோடு பேசிப் பழகிப்போனவர்கள். மழையைக் கொண்டு செல்லும் மேகம் வேறு ஊரை நோக்கிப் போகிறதே என்று ஆத்திரப்பட்டு மேகங்களை விரட்டி மடக்கி இழுத்துவரப் பின் தொடர்பவர்கள்’ என எஸ்.ராமகிருஷ்ணன் கரிசலை ஒரு கட்டுரையில் விவரிக்கிறார்.

கொலையுண்ணப்பட்ட வயோதிகரின் திரேகத்தின் மீது அலையும் வஸ்திரத்தில் காற்றின் விரல்கள் அலைவு கொள்வதாக தெரிகிறது என்பதனால் கொலைவெளியில் மிதந்து கொண்டிருக்கும் பறவையின் மூன்றாவது கண்களின் அபூர்வ ஷணங்கள் காரணமாக அமையலாம் என தலைமறைவாக இருக்கும் அன்னியஸ்தனான கிழவர் சொல்லியிருக்கிறார் . [கொலை ஏற்கனவே கோயில்பட்டியை சேர்ந்த பெரிய ஒச்சாத்தேவர் என்பவரால் – — துரத்தித் துரத்தி, கதறக் கதற —செய்யப்பட்டு விட்டது . நாமெல்லாம் போஸ்ட்மார்ட்டம்தான் செய்யமுடியும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் ]

– எஸ்.ராமகிருஷ்ணன், விருதுநகர்

Actress Amala Paul at FeTNA: FAQ for Federation of Tamil Sangams of North America

In Lists on ஜூலை 6, 2012 at 3:35 முப

முந்தைய அழைப்பு: Actress Amala Paul invites you to FeTNA 2012: Movie Stars at Stage at 25 Tamils Festival

1. மேடையில் குத்தாட்டம் கிடைக்குமா: அமெரிக்க தமிழர்கள் ஆர்வம்


2. தமிழில் ‘வணக்கம்’ சொல்வார்: பெட்னா அமைப்பாளர்கள் உறுதி


3. பாலம் சில்க் பட்டுப் புடைவை கிடைக்குமா? – மாமிகள் யோசனை


4. அமலா பால் இத்தனை நகையுடன் வருவாரா? – திருடர் திட்டம்


5. அடுத்த பாடல் பதிவை முடித்து விடலாமா? – இயக்குநர் சிந்தனை


6. முல்லைப் பெரியாறு குறித்தும் பேசுவாரா? – மலையாளிகளும் சேரர்களே


7. FeTNAவிற்கு வர நாற்பது லட்சம்தான் ஆரம்பத்தில் கேட்டாரா? – வருமான வரி விசாரணை


8. அமலா பாலுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? பெட்னா ஆய்வு


9. நான் இருக்கும்; ஸ்டேஜ் இருக்கும்; ஸ்கோப் இருக்கும்

காவல் கோட்டம்: எஸ் ராமகிருஷ்ணன் விமர்சனப் பத்து

In Books, Literature on ஜூலை 5, 2012 at 9:18 பிப

நன்றி: காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் | பகுதி இரண்டு

1. வாசிப்பு சுவாரசியமோ கதைக்குள் புகவோ முடியாத நாவல்.

2. வெறும் ஒப்பனை மட்டுமே நிறைந்துள்ள புனைவு. கதாபாத்திரங்களுக்கு அழுத்தம் தந்து குணச்சித்திரங்கள் மனதில் நிலைக்குமாறு வடிவமைக்கவில்லை.

3. ஒரே புத்தகமாக இருந்தாலும் முதல் பகுதிக்கும், இரண்டாம் பகுதிக்கும் எந்தத் தொடர்ச்சியும் கிடைக்கவில்லை. கூடு விட்டு கூடு பாய்கிறது.

4. டாக்டர் ஆனந்த் பாண்டியன் என்ற தமிழகத்தை சேர்ந்த மானுடவியல் பேராசிரியர். கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். கள்ளர் பற்றிய ஆய்வினை தொடர்ந்து பல காலமாக மேற்கொண்டு வருகிறார். Securing the Rural Citizen: The Anti-Kallar Movement of 1896, “An Ode to an Engineer” in Waterlines: The Penguin Anthology of River Writing in India. Race, Nature, and the Politics of Difference போன்றவை கள்ளர் வாழ்வியல் ஆய்வில் மிக முக்கியமானவை.

வெங்கடேசனின் கள்ளர் விவரணைகளில் ஆனந்த் பாண்டியனின் பல ஆண்டுகால உழைப்பும் தனித்த பார்வைகளும் எவ்விதமாக நன்றி தெரிவித்தலும் இன்றி இந்த நாவலில் பல இடங்களில் அப்படியே பயன்படுத்தபட்டிருக்கிறது.

5. லூயிஸ் டுமாண்ட் என்ற பிரெஞ்சு மானுடவியல் ஆய்வாளர் (Louis Dumont – A south Indian subcaste, Social organization and religion of the Pramalai Kallar 1986:OUP) பிரன்மலை கள்ளர்களை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து எழுதிய நூலில் இருந்தும் பல தகவல்களை நாவலுக்காக எடுத்திருக்கிறார். அதற்கும் சிறு நன்றி கூட கிடையாது.

6. புத்தம்புதுசும் இல்லை; முதல் படைப்பு என்னும் புதிய பார்வையும் இல்லை: குற்றப்பரம்பரை எனப்படும் கள்ளர் பற்றி முதன்முதலாக எழுதப்பட்டதா என்றால் அதுவும் கிடையாது. கோணங்கி, தமிழ்செல்வன், வேல.ராமமூர்த்தி, எஸ் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் எழுதிய கதைக் களம்.

7. மாலிக் கபூர் போன்ற பள்ளிக்கூட புத்தக நாயகர்களுக்கு தேவையான கற்பனை விவரிப்பும் கொடுக்கவில்லை; பள்ளியின் பாடப் புத்தக சித்தரிப்பை எள்ளளவும் தாண்டியும் செல்லவில்லை. ஒன்று வரலாற்று பாடப் புத்தகத்தில் சொன்னதை அப்படியே வழிமொழிந்தால், அதில் வாசகரை ஒன்றச் செய்யும் விலாவாரியான ரசனை மிகுந்த பரபரப்பான காட்சிப்புலம் கண் முன்னே தோன்ற வைக்க வேண்டும்.

இல்லை… நம்மால் சுருக்கமாகத்தான் கற்பனை செய்ய இயலும் என்றால், அன்றைய வரலாற்று நாயகர்களின் துணை இயக்குநர்களையும், இணை கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து, சரித்திரத்தின் நிர்ப்பந்தங்களை வெளிச்சத்திற்கு வரவழைக்க வேண்டும்.

கற்பனையும் கிட்டவில்லை; உள்ளொளியும் கொடுக்கவில்லை.

8. பாளையப்பட்டு வம்சாவழி வரலாறு என்று கீழைத்தேய சுவடி வெளியீடுகளின் இரண்டு நூல்கள் உள்ளன. அந்த நூலில் உள்ள தகவல்கள் மற்றும் பத்திகள் அத்தியாயத்திற்கு ஏற்றார் போல இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

9.
அ) Edgar Thurston, ” The castes and Tribes of south India ,
ஆ) The Madura Country -A manual – J..H..Nelson .Asian Educational Services New Delhi, Madras.
இ) History Of The Nayaks Of Madura- R Sathianathaier,
உ) The History of Tinnevelly by Rev R Caldwell,
ஊ) History of Military transactions – R Orme

இந்த ஐந்திலும் உள்ள தகவல்கள் அப்படி அப்படியே காவல் கோட்டம் நாவலில் பிரதியெடுக்கபட்டிருக்கின்றன.

கொசுறு:
கோணங்கியின் மதுரைக்கு வந்த ஒப்பனைகாரன் சிறுகதையிலும் மதுரகவி பாஸ்கர தாஸ் நாட்குறிப்பிலும் மதுரையை பற்றிய எத்தனையோ செய்திகள் உள்ளன. சிங்காரமும், நாகராஜனும் கூட மதுரையின் தொல் நினைவுகளை சரியான இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தொ.பரமசிவத்தின் அழகர் கோவில் ஒரு ஆய்வு வெளிப்படுத்திய கடந்த காலச்சித்திரத்திற்கு இணையாக இதில் ஒருபக்கம் கூட இல்லை.

10. இவ்வளவு புத்தகங்களில் இருந்து சுடப்பட்டிருக்கிறதே… எதோ ஆய்வாளர், கியூரேட்டர் போல் தகவல் தொகுப்பாளராக செயல்பட்டிருக்கிறாரா?

அதுவும் இல்லை. திருமலை நாயக்கர் மகாலை கட்டினவன் இத்தாலியன் என்று ஒற்றை வரியில் நாயக்கர் வரலாறு முடிகிறது. ஏன், எதற்கு, எப்படி எல்லாம் ஸ்வாஹா.

Actress Amala Paul invites you to FeTNA 2012: Movie Stars at Stage at 25 Tamils Festival

In Movies, USA on ஜூலை 2, 2012 at 6:51 பிப

ஃபெட்னா உங்களை அமலா பாலுடன் வரவேற்கிறது:

அமலாவுடன் உணவருந்தலாம்.
அமலா பால் உடன் படகு சவாரி செல்லலாம்..
நடிகை அமலா உடன் புகைப்படம் எடுக்கலாம்…

வருக வருக!
பயன் பெருக!!
நலன் அடைக!!!