Snapjudge

Posts Tagged ‘Tricks’

பழைய கதையை விற்க எட்டு வழிகள்

In Books, Religions, Tamilnadu on நவம்பர் 9, 2013 at 10:51 பிப

மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு – முன்பதிவுத் திட்டம் பார்த்தேன். இணையத்தை விட நேரடியாக சென்று கேட்பதுதான் இப்போதைய டிரெண்ட்.

Scriptures_Fight_Sanskrit_Text-_Keesaka_and_Bheemaa_Old_Painting_from_Mahabharata_Series

என்னுடைய ஆலோசனைகள்:

1. பத்து தன்னார்வலர்களை சேர்க்கவேண்டும். அவர்கள் ஒவ்வொரு வாரயிறுதியும் மக்களைத் தொடர்பு கொள்வதில் முனைப்புடன் ஈடுபட வேண்டும். எப்படிப்பட்ட மக்களை அணுக வேண்டும்?

2. கோவில் வாசலில் சாம்பிள் புத்தகத்துடன் நிற்க வேண்டும். காலை ஆறரையில் இருந்து பத்து வரை இருவர்; பின் சாயங்காலம் இரண்டு ஷிஃப்ட். ஒவ்வொரு பக்தரையும் அணுகினால், நாளொன்றுக்கு பன்னிரெண்டாவது விற்கும்.

3. தொலைபேசி டைரக்டரியை எடுத்து ஐயங்கார்களையும் பெருமாள் பெயர் கொண்டவர்களையும் அழைக்க வேண்டும். விருப்பம் காண்பித்து பேசுபவர்களிடம் நேரடியாக சென்று தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்

4. நூற்றியெட்டு திருப்பதி பயணம் செல்லும் நிறுவனங்களோடு பேச வேண்டும். அவர்களிடம் கமிஷன் அடிப்படையில் புத்தகத்தை விற்றுத் தர சொல்ல வேண்டும். இந்த மாதிரி புத்தகங்களைப் படிப்போர் இணையத்தை விட பயணத்தை விரும்புவோராக இருப்பார்கள்.

5. நரசிம்மப்ரியா போன்ற இதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும். அல்லது அவர்களின் சந்தாதாரர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும். அஞ்சல் அனுப்பும்போது வெளியீட்டாளரின் புகைப்படம், வரலாறு எல்லாம் சேர்த்து கொஞ்சம் ரத்தமும் சதையுமாக அனுப்ப வேண்டும். தட்டச்சிற்கு பதிலாக கைப்பட எழுதிப் போட்டால் இன்னும் நல்லது.

6. அஹோபிலம் மடம் போன்ற இடங்களில் புத்தக விற்பனை மையத்தில் ஒருவரை வாயிலில் இருத்த வேண்டும். அங்கு நுழைவோரிடம் இந்தத் திட்டம் பற்றி எடுத்துரைத்து வாங்க வைக்க வேண்டும்.

7. பூஜை சரக்குகள் விற்கும் இடங்களின் வாயிலில் ஒருவர் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் flyerஆவது இருக்க வேண்டும். எந்தப் புத்தகம், எப்படி இருக்கும், எங்கே கிடைக்கும் என்பதெல்லாம் அச்சிட்டு விளம்பரத் தாளாக விநியோகிக்க வேண்டும்.

8. இன்றே, இப்பொழுதே வாங்கினால்தான் சலுகை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த க்‌ஷணமே வாங்குவதாக முன்பணம் கொடுத்தால்தான் இந்த விலை; நாளைக்கு வந்தால் ஆறாயிரம் ஆகி விடும் என்று மிரட்ட வேண்டும்.

வாழ்த்துகள்
Ramayana_Mahabharatha_Graph_Family_Tree_Chart_Sons_Pandavas_Lava_Kusa_Duriyodhana

Sujatha’s tips for new Writers: How to write Fiction?

In Books, Literature on ஓகஸ்ட் 11, 2009 at 8:47 பிப

நன்றி: புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள்

Earlier post: 8 rules for writing fiction: Kurt Vonnegut

1. தப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். ‘துருவனும் குகனும்’ என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, ‘போலீஸ் செய்தி‘க்கு அனுப்பாதீர்கள்.

2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். ‘பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்’ என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.

3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி

4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.

5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். ‘உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.’ என்று சொல்வதை விட ‘துப்பினான்’ என்பது மேல்.

6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். ‘அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்… இத்தியாத்திக்குப் பதிலாக, ‘அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.

7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதைமாந்தர்களுக்குச் சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித்தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.

8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதைவிட ‘போனான்’ என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக ‘னான்’ என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.

9. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது. எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.

***

தோரணத்து மாவிலைகள். சுஜாதா. விசா பப்ளிகேஷன்ஸ்

8 rules for writing fiction: Kurt Vonnegut

In Books, Literature on ஓகஸ்ட் 11, 2009 at 8:39 பிப

1. Use the time of a total stranger in such a way that he or she will not feel the time was wasted.

2. Give the reader at least one character he or she can root for.

3. Every character should want something, even if it is only a glass of water.

4. Every sentence must do one of two things — reveal character or advance the action.

5. Start as close to the end as possible.

6. Be a sadist. Now matter how sweet and innocent your leading characters, make awful things happen to them — in order that the reader may see what they are made of.

7. Write to please just one person. If you open a window and make love to the world, so to speak, your story will get pneumonia.

8. Give your readers as much information as possible as soon as possible. To heck with suspense. Readers should have such complete understanding of what is going on, where and why, that they could finish the story themselves, should cockroaches eat the last few pages.

Vonnegut, Bagombo Snuff Box: Uncollected Short Fiction (New York: G.P. Putnam’s Sons 1999), 9-10.

தமிழில் வாசிக்க: சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்) – சேதுபதி அருணாசலம்

சிறுகதைப் படைப்பின் ரகசியங்களைச் சொல்லப் போகிறேன். உங்கள் காதுகளைத் தீட்டிக்கொள்ளுங்கள்:

1) உங்களைப் படிக்கப்போகும் அந்த முகம் தெரியாத அந்நியர், உங்களைப் படித்ததால் நேரம் வீணாகிவிட்டதாக வருத்தப்படாத அளவிற்கு எழுதுங்கள். வாசகரின் நேரத்தை நீங்கள் மதிப்பது மிக முக்கியம்!

2) கதையின் ஒரு பாத்திரத்துடனாவது வாசகர் தன்னைத் தொடர்பு படுத்திக்கொள்ள முடிவதாக இருக்க வேண்டும்.

3) ஒவ்வொரு கதாபாத்திரமும் எதையாவது ஒன்றை விரும்ப வேண்டும் – குறைந்தபட்சம் ஒரு கோப்பைத் தண்ணீரையாவது!

4) ஒவ்வொரு வாக்கியமும் பின்வரும் இரண்டில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் – பாத்திரத்தை வெளிப்படுத்துதல், கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துதல்!

5) முடிவிற்கு எவ்வளவு அருகில் முடியுமோ அவ்வளவு அருகில் கதையை ஆரம்பியுங்கள்!

6) குரூர மனப்பான்மை கொண்டவராக இருங்கள். உங்கள் கதாபாத்திரங்கள் எவ்வளவு இனிமையான அப்பாவிகளாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களுக்கு வாழ்வில் மிக மோசமான விஷயங்கள் நடைபெறட்டும்!

7) ஒருவரை மட்டுமே மகிழ்விப்பதற்காக எழுதுங்கள். உலகத்திலிருக்கும் அத்தனை பேரையும் திருப்திப் படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பினால் உங்கள் கதைக்கும் விஷக்காய்ச்சலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது!

8) உங்கள் வாசகர்களுக்கு எவ்வளவு விஷயத்தை எவ்வளவு சீக்கிரம் கொடுக்கமுடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுங்கள். சஸ்பென்ஸைத் தூக்கிக் குப்பையில் போடவும்! கதையைத் தாங்களே முடிக்குமளவிற்கு வாசகர்களுக்கு என்ன, எங்கே, எப்படி நடந்ததென்று கதை புரிந்திருக்க வேண்டும். கடைசிப் பக்கங்களை கரையான்கள் தின்னட்டும்!

என் தலைமுறையின் அமெரிக்காவின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஃப்ளானெரி ஓ-கானர் (Flannery O ‘Connor 1925-1964) என்னுடைய முதல் விதியைத் தவிர்த்து மற்ற அத்தனை விதிகளையும் உடைத்தெறிந்தார். மிகச்சிறந்த எழுத்தாளர்கள் அத்தனை பேருமே அப்படிச் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

ஒருவருக்காக எழுதப்படும் கதை, வாசகரைக் கதையில் நடைபெறுவதில் பங்குள்ள ஒருவராக நினைக்க வைக்கிறது. இது வாசகரைத் தனக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, ஹோட்டலில் அடுத்த மேசையில் இருவருக்கிடையே நடைபெறும் சுவாரசியமான உரையாடலை ஒட்டுக்கேட்பதுபோல் நினைக்க வைக்கிறது.

ஒருவருக்காக எழுதப்பட்ட கதை பல வாசகர்களை மகிழ்விப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. ஒருவருக்காக எழுதப்பட்ட கதைக்கென்று விளையாட்டு மைதானம் போல சில எல்லைக்கோடுகள் இருக்கின்றன. கதை தன் இஷ்டத்திற்கு எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியாது.

இது வாசகருக்கு எழுத்தாளரின் விளையாட்டை பக்கவாட்டிலிருந்து பார்ப்பது போல ஒரு உணர்வைத் தருகிறது. அடுத்து கதை எங்கே செல்லப் போகிறது ? எங்கே செல்ல வேண்டும் ? ஐயோ… அது நடக்கக் கூடாது! என்றெல்லாம் ஒரு விளையாட்டைப் பார்ப்பது போல வாசகரை நினைக்க வைக்கிறது!

Top 10 SEO Advices to Tamil Hindu Website

In Blogs, Internet, Magazines, Technology on ஜூன் 24, 2009 at 3:50 முப

தமிழ் ஹிந்து & சொல்வனம்

1. No < title > →Tamil Hindu article page doesn’t have a title. Search engines use this information to determine, what the article is about.

2. The META (log in stuff) could be removed or moved down; especially the entries RSS could be renamed as ‘Subscribe to this website contents in your Reader’; Register could be renamed as ‘Become a Member of Thamil Hindu’ and transferred to a better area.

3. Add a ‘Subscribe by email‘ with a box for mail-id in each page – prominently; many would like get posts (at least summaries) in email in box

4. Tag (cloud) could be listed on the LHS (similar to Category listing)

5. List of Recent Posts on each page

6. ‘Kakkai parliament’ and all posts should have at least two images (like one of Bharathiyar and other one relevant to the page: The image names should be given descriptively; similar to ஷேக்)

7. Use ‘All in one SEO pack’ to get better mileage; pull more visitors from Google, Bing. More info @ தேடுபொறிகளுக்கு உகந்ததாகத் தளத்தை மாற்றுவது எப்படி? & வேர்ட்ப்ரெஸ் நீட்சிகள்

8. Automatically generated Related posts on each page.

9. Links are very very implicit; most of them without underline; could be difficult for elderly & visually challenged folks like me.

10. Finally, does TamilHindu have a Facebook and Twitter account?

How to avoid Allergy? Pollen Season Tips

In Life, Misc, USA on மே 5, 2009 at 4:34 பிப

நன்றி: வசந்த காலத் துன்பங்கள்

  1. வசந்த காலச் சுத்தம் (Spring Cleaning): குளிர் காலம் முடிந்ததும், வீட்டின் பல்வேறு இடங்களைச் சுத்தப்படுத்த வேண்டும். ஜன்னல், கதவு, புத்தக அறை, vent ஆகியவற்றை தூசுதட்டிச் சுத்தப்படுத்த வேண்டும்.
  2. வெளிவேலைகளைக் காலை 10 மணிக்குப் பின்னால் செய்ய முடிந்தால் நல்லது. குறிப்பாக காலை 5 மணிமுதல் 10 மணி வரை மகரந்தத் துகள்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.
  3. கூடுமானவரை ஜன்னல்களை திறக்காமல் இருப்பது நல்லது.
  4. வாகனத்தில் போகும்போது ஜன்னல்களை மூடிவைத்து, குளிர் சாதனத்தை உபயோகிப்பது நல்லது.
  5. புல்வெளியைச் சுத்தப்படுத்தும் போது முகமூடி அணிந்து கொள்ள வேண்டும்.
  6. துணிகளை வெளியில் உணர்த்தாமல் இருப்பது நல்லது. துணிகளில் மகரந்தம் ஒட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது.
  7. படுக்கை உறைகளை வாரம் தோறும் துவைப்பது நல்லது.
  8. தினமும் இரவில் தலைகுளிப்பதின் மூலம் உடலிலும், தலையிலும் ஒட்டியுள்ள மகரந்தத்தை அகற்றுவது நல்லது.
  9. வீட்டில் குறிப்பாக மிதியடி, தரைக் கம்பளம் ஆகியவற்றை அடிக்கடி தூசு தட்ட வேண்டும். பழைய மிதியடிகளை மாற்ற வேண்டும். மரத்தரை போடுவது உகந்தது.
  10. Antihistamine: இந்த மருந்துகள் Zyrtec, Claritin, Allegra வகையைச் சார்ந்தன.
  11. மூக்கில் செலுத்தப்படும் Steroid spray நல்ல தீர்வு தர வல்லது. இது Flonase, Nasonex என்ற பெயர்களில் கிடைக்கின்றது.
  12. ஒரு சிலர் வருடம் முழுதும் அவரவர் ஊரில் தயாராகும் தேன் உண்பதின் மூலம் ஒவ்வாமையின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

இந்த முறை எல்லாவற்றையும் பின்பற்றியும் இன்னும் ஒவ்வாமை குறைந்தபாடில்லை. மாற்றாக கீழ்க்கண்டவற்றையும் முயலலாம்:

தண்ணீர்: காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 500 மில்லி லிட்டர் குடிநீர் அருந்துவது.

Neti Pot: Really? – The Claim – Nasal Irrigation Can Ease Allergy Symptoms – Question – NYTimes.com: “Nasal irrigator that resembles a small teapot, has become an alternative remedy.”

உடற்பயிற்சி: தினமும் வியர்க்க விறுவிறுக்க அரை மணி நேரமாவது ஓடுவது.

ஒரு ஷாட்டை வாசித்துப் பாருங்கள்

In Movies, Technology on ஜனவரி 26, 2009 at 3:03 முப

சினிமா பார்ப்பதென்பது ‘ஷாட்டை’ வாசிப்பது என்பதுதான். ப்ரஞ்சுக்காரர்களின் ‘Misc-en-scene’ எனும் கருத்தாக்கம் ஒரு ‘ஷாட்’டை reading செய்ய எளிதாக்குகிறது.

10 அம்சங்கள்:

1. ஷாட்: நிகழ்வுக்கும் கேமிராவுக்குமான் தூரம் எவ்வளவு?

2. கோணம் – Angle

3. ஒளியமைப்பு – Lighting

4. பிரதானமாக இருப்பது – Dominant: எவ்விதமாக ஈர்க்கிறது? நகர்விலா / ஒளியமைப்பிலா?

5. அடுத்ததாக கவனத்தை ஈர்ப்பது – Subsidiaries

6. ஒழுங்கமைவு – Composition

7. அமைப்பு – Form

8. செவ்வகவெளியைப் பயன்படுத்துதல் – Framing

9. அடுக்குகள் – Depth

10. பாத்திரங்கள் – பார்வையாளர் உறவு :: Staging Position

நன்றி: சினிமா: ஓர் அறிமுகம் இரா பிரபாகர் (கனவுப்பட்டறை வெளியீடு)