Archive for the ‘Questions’ Category
Asia, Award, Benagli, Bhasha Samman Award, Communism, English language, Hindi, How, Judges, Jury, marxism, Panel, Prizes, Roy, Sahitya Akademi, Sahitya Akademi Award, Selection Committee, Socialism, Tamil Nadu, Tamils, Translation, Translations, WB, West Bengal, Who, Winners
In India, Lists, Literature, Questions on ஜூன் 1, 2012 at 8:08 பிப
Who were part of the jury in English Language?
How the last names could impact the choice of winner selection?
Does it have a good mix of different sexes or is it just males in the Judge pool?
What was the prefix like doctor, professor, miss for the decision makers?
From Sahitya Academy website:
The books were selected on the basis of recommendations made by a Jury of three members in the concerned languages in accordance with the procedure laid down for the purpose. According to the procedure, the Executive Board declared the Awards on the basis of unanimous selections made by the Jurors or selection made on the basis of majority vote. The Awards relate to books first published during the three years immediately preceding the year of Award
Some of the distinguished Jury members:
- Dr. Amitava Roy
- Dr. E.V. Ramakrishnan
- Dr. Lakshmi Kannan
- Dr. Lakshmi Kannan
- Dr. Poonam Trivedi
- Ms. C. T. Indira
- Ms. Mini Krishnan
- Prof. G.J.V. Prasad
- Prof. Manju Jain
- Prof. Manoj Das
- Smt. Prema Nandkumar
- Sri Bhaskar Ghosh
- Sri Jayanta Mahapatra
- Sri M.L. Raina
- Sri Tarun Saint
ADMK, சாரு, ஜெமோ, ஜெயமோகன், ஜெயமோஹன், நிவேதிதா, Charu, Charu Nivethitha, Eelam, Eezham, Elections, Jaya, Jayalalitha, Jayamogan, Jayamohan, Jemo, Jeya, Jeyalalitha, Jeyamogan, Jeyamohan, JJ, kalainjar, Karunanidhi, Magz, Manmohan, Media, Ministers, NDTV, Nivethitha, Sannasi, Sri Lanka, Tamils
In Blogs, Guest, Misc, Politics, Questions, Srilanka on ஜூன் 11, 2009 at 6:07 பிப
முழுவதும் வாசிக்க: வேதம் ஓதும் சாத்தான்கள்
1. புஷ்ஷின் கோவேறுகழுதைத்தனமான பிடிவாதத்தை, முட்டாள்தனத்தைத் தாண்டி இதுபோன்ற தருணங்களில் புஷ்ஷின் வினோதமான/பிரத்யேகமான ‘அற’வுணர்வு இத்தருணத்தில் சரியாக இயங்கியிருக்கக் கூடும் என்று பாமரத்தனமாக நினைக்க வைப்பதுதான் ஒருவிதத்தில் அந்த நபரின் வெற்றி போல.
2. மனித உரிமைகள் குறித்த அக்கறைதான் கிடையாது என்பது ஒருபுறம் இருக்க, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் ராஜதந்திர வெற்றி என்றுகொண்டு, அண்டை நாடுகளை இலங்கையில் அழுத்தமாகக் கால் பதிக்க வழிகோலிக் கொடுத்துவிட்டு தெற்கு ஆசியாவின் மத்தியில் காயடிக்கப்பட்ட மாடு மாதிரி நிற்கிறது இந்தியா – அதன் வீச்சு அவ்வளவு தான்.
3. ஊடகப் பொறுக்கிகள் கருணாநிதி போன்றவர்களை உள்ளூர் அரசியல் பொறுக்கிகள் மாதிரிச் சித்தரிப்பதைப் பார்க்கும்/கேட்கும்போது கொதித்திருக்கிறது – கருணாநிதி என்ற தனி நபர் மீதுள்ள ஆதுரத்தால் அல்ல – விரும்பியோ விரும்பாமலோ எனது அடையாளங்களிலொன்றை முன்னிறுத்தும் கருவிகளிலொன்றாக இந்த கருணாநிதி என்ற நபர் இருப்பதான தருணத்தின் மீதுள்ள ஒட்டுறவால். குறிப்பாக வட இந்திய ஆங்கில ஊடகங்களுக்கு கருணாநிதியின் வாரிசு அரசியல் குறித்த கிண்டல்களும், மத்திய அமைச்சரவையில் பங்குக்கு அடிக்கும் குரங்கு பல்டிகள் குறித்த கிண்டல்களும் கருணாநிதி-தி.மு.க என்ற எல்லை தாண்டி, ஜெயின் கமிஷன் மொத்தத் தமிழர்களையும் காட்டுமிராண்டிகள் என்று சித்தரித்தது போன்ற ஒரு ஒட்டுமொத்தச் சாணியடிப்பு உத்தி. இது அனைத்துக்கும் உருண்டையை உருட்டிக் கொடுப்பது கருணாநிதி என்றிருக்கும்போது யாரை நோக.
4. சாரு நிவேதிதா மாதிரியான eurosnobகளை/oreo cookie/தேங்காய்களை (உள்ளே வெளுப்பு வெளியே கறுப்பு) அமெரிக்காவில் பல்வேறு தளங்களில் பார்க்கலாம் – இந்தியாவிலிருந்து வந்த இந்தியர்கள், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சுத்த அமெரிக்கர்கள். பாலாடைக்கட்டி சரியில்லை, மார்ஜரின் சரியில்லை, ஒயின் சரியில்லை, கலாச்சார சுரணையேதுமற்ற அமெரிக்கக் குய்யான்கள் ஒற்றைக்கையால் ஃபோர்க்கால் வெட்டித் தின்கிறார்கள் என்பது மாதிரி.
5. சாரு நிவேதிதாவின் கலாச்சார மீறல்கள் பெரும்பாலும் இந்த ரகமானவை. வாழைப்பழக் குடியரசு டி-ஷர்ட் போடுவதையும் டீசல் ஜீன்ஸ் போடுவதையும் டாமி ஹில்ஃபிகர் ஜட்டி போடுவதையும் ஆட்டைச் சுட்டுத் தின்பதையும் சாராய பாட்டில்கள் முன்பு திரும்பி போஸ் கொடுப்பதை தனது வலைத்தளத்தில் போடுவதையும் அயர்ன் மெய்டன் மாதிரி கி.மு.267களின் ராக் குழுக்களை வைத்து தனது ‘*த்’ (யூத்)தை அளந்துகொள்வதையும் ஒரு ‘அ-தயிர்வடைக் கலாச்சாரமாகக்’ காட்ட முயல்வது மாதிரி. லீ, லீவைஸ் போன்றவற்றின் விற்பனைக்கடைகள் சென்னையில் வந்தபோது சம்பளத்தில் நாலில் ஒரு பங்கைக் கொடுத்தாவது ஒரு லீவைஸ் லீ ஜீன்ஸ் வாங்கி விடவேண்டுமென்று திரிந்துகொண்டிருந்த கும்பல் இருந்தது – சாருவைப் படிக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது.
6. ஜெயமோகனை விட சாரு மேல் ஏன் இவ்வளவு ஆத்திரம்? சாரு நிவேதிதாவுடையது முட்டாள்தனம் – முட்டாள்களுக்குத் திட்டினால் பெரும்பாலான நேரங்களில் உறைக்கும், திருத்திக் கொள்வார்கள்.
7. இயலாதவன் வலியை மற்றொரு இயலாதவனை முன்வைத்து இயன்றவன் தப்பித்துக்கொள்ளும் உத்தி எப்படிப்பட்டது?
8. ஆஷ்விட்ஸ், பெயௌஷெட்ஸ் (Belzec) நாஸி வதைமுகாம்களை/நினைவிடங்கள் சிலவற்றை நேரில் பார்த்திருக்கிறேன். இதுவரை இலங்கை போனதில்லை, ஊடகங்களில் படித்தவை சிலரிடம் உரையாடியது தவிர எதையும் நேரில் கண்டதில்லை – இதுதான் என்னைப் போன்றவர்களின் வாழ்வின் அவமானகரமான, குரூர நகைமுரண். அழிவுக்குப் பின்னான பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களைப் பார்ப்பது எப்படிப்பட்ட மனச்சிக்கலையளிக்கும் விஷயமென்பதை எளிதில் விளக்கிவிட முடியாது – கண்டதைப் பிறருக்கு விளக்கும் முனைப்பைவிட, கண்டது தன்னைநோக்கி தனக்குள் திரும்புகையில் நிகழும் சுயவதையைக் கையாள்வது சிக்கலான ஒன்று.
9. இன்னும் எனக்கு பதில் புரியாத கேள்வி:
நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒருபங்கு இதேபோன்ற உள்நாட்டுப்போர்களில் அழிந்துகொண்டிருக்கிறது என நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப்போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் என பேசுவதில்லை. அந்த போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான அந்த மனநிலையை, ஆயுதவெறியை, மீண்டும் நம் நாட்டு மக்கள் மனதில் ஊட்டிவளர்கக் முடியுமா என்றுதான் நம் அறிவுஜீவிகளில் ஒருசாரார் முயல்கிறார்கள். அவர்களே மானுடநேயம் பேசுபவர்களாகவும் இங்கே அறியப்படுகிறார்கள்.
– Jayamohan » வெறுப்புடன் உரையாடுதல்
Articles, இணையம், சிதறல், தமிழ்ப்பதிவுகள், துணுக்கு, தொகுப்பு, படித்தவை, வலை, வாசித்தவை, வாசிப்பு, Blogs, Brand, Category, Charu, Columns, Google, Headers, Headings, Identity, Journalism, Journals, Kumudam, Labels, Magz, Marketing, Media, Mktg, MSM, Nivethitha, Opinion, Para, Polls, Posts, Raghavan, Readers, Results, Search, SEO, Series, Subjects, Sujatha, Tags, Titles, Vikadan
In Blogs, Lists, Magazines, Questions, Tamilnadu on மே 15, 2009 at 4:29 முப
சற்றேறக்குறைய பத்தாண்டுக்கு முந்தைய பழங்காலத்தில் ஆனந்த விகடனில் சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’, குமுதம்.காம்-இல் பா ராகவனின் ‘தெரிந்தது மட்டும்’, விகடன்.காம்-இல் சாரு நிவேதிதாவின் ‘கோணல் பக்கங்க’ளும் வெளிவந்தது.
இன்றைக்கு அப்படி சிதறல்களைத் தொகுத்து எழுதும் பெருமகனார் சில:
கருத்துக்கணிப்பு எக்ஸிட் போல் பத்து கேள்விகள்:
- நாலு பதிவுக்கான விஷயங்களை ஒரே பதிவாக்குவது பிடித்திருக்கிறதா?
- ஒவ்வொரு அனுபவத்தையும், ஒவ்வொன்றாக சொல்லி, அதற்குறிய குறிச்சொல் இன்னபிற வலைப்பூச்சு இடவேண்டுமா?
- இப்படி ஆளுக்கொரு ப்ரான்ட் வைப்பது வலைப்பதிவை சந்தைமயமாக்குமா?
- அவரவரின் ‘குறிச்சொல்’ மெய்யாலுமே மனதில் பதிந்து, அவரைச் சொல்வதற்கு பதில் இந்த அடைமொழி நிழலாட வைக்கிறதா?
- பதிவின் தலைப்புக்கும், இந்தத் தொடர் இடுகை தலைப்புக்கும் வித்தியாசம் தேவையா?
- குட்டியாக இருக்கிறது என்னும் அவச்சொல்லை நீக்கத்தான், இப்படி தொகுக்கிறார்களா?
- இந்த மாதிரி துணுக்குத் தோரணத்திற்கு பதில் ட்விட்டர் தோரணம் தேவலாமா?
- கூகிள் தேடல் முடிவுகளில் தலைப்புக்கு அதிமுக்கியத்துவம் கிடைக்கும் காலத்தில், உபதலைப்பு கூட கிட்டாத இந்தப் பதிவுகளுக்கு போதிய ரீச் நிலைக்குமா?
- கடைசியாக: தனித் தனி இடுகை அல்லது மொத்த குவிப்பு – எது உங்கள் தேர்வு?
- இதற்கெல்லாம் கருத்துக் கணிப்பு தேவையா?
இரப்பு, கதை, கேள்வி, கொலை, தண்டனை, தற்கொலை, தூக்கு, நகுலன், நாவல், மரணம், வாக்குமூலம், வாழ்க்கை, வினா, Dead, Death, Fiction, Interrogation, Life, Nagulan, Nakulan, Novels, Questions, suicide, Vaakkumoolam, Vaakkumulam, Vakkumoolam, Vakkumulam
In Books, Life, Questions on மார்ச் 12, 2009 at 4:40 முப
- நீங்கள் ஏன் குடிக்கிறீர்கள்?
- நீங்கள் உங்களுடேனேயே பேசிக் கொள்வதுண்டா?
- நீங்கள் முன்கோபியரா அல்லது எதையும் சகித்துக் கொள்ளும் இயல்புடையவரா?
- உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு ஆட்கள் உங்களைச் சாமர்த்தியமாக ஏமாற்றியிருக்கிறார்கள்? நீங்கள் அவர்கள் மீது சட்டபூர்வமாக ஏதாவது நடவடிக்கை எடுத்ததுண்டா?
- ஊழலை அறவே ஒழிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
- உங்கள் பிள்ளை மருமகன்மார் இவர்களில் சிலர் உங்களை விடப் பதவியில் பொருளாதார வகையில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதால் அவர்களைக் காணும் போது தாழ்வுநிலை மனப்பானமை அடைகிறீர்களா?
- நீங்கள் எல்லோரரையும் நம்பி எளிதில் ஏமாந்திருக்கிறீர்களா? நீங்கள் எல்லோரையும் சந்தேகக் கண்கள் கொண்டே பார்க்கிறீர்களா? உலகில் நல்லவர்களே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா?
- நீங்கள் எப்பொழுதாவது ஒரு சிநேகபாவமான உறவு வைத்துக் கொள்ள முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றிருக்கிறீர்களா?
- வாழ்க்கையில் உங்களுக்கு மிகக் கசப்பான அனுபவம் எது?
- உங்களுக்கு உங்கள் தொழில், பணம் சம்பாதிப்பது இவைகளைத் தாண்டி ஏதாவது லஷியம் உண்டா?
நகுலன் எழுதிய ‘வாக்குமூலம்‘ நாவலில் இருந்து; தொடரும்
Asia, ஆசை, இந்தியா, உணர்வு, நேசம், பாசம், பாரத், மகிழ்ச்சி, முக்கியம், விருப்பம், Bharat, Cool, Cricket, Factors, India, Life, Passion, Proud, Reasons, Remember, Thoughts
In India, Questions on மார்ச் 10, 2009 at 8:49 பிப
- நிஜ வாழ்க்கை நாயகர்கள் (காட்டாக புத்தர், காந்தி)
- மத நல்லிணக்கம்
- இயற்கை அழகு, வனம், மலை
- மொகஞ்சதாரோ காலத்தில் துவங்கிய சரித்திரம்
- யானை, மயில்
- பூஜ்யம், வான சாஸ்திரம், ஆரோக்கிய வாழ்க்கையை ஒட்டிய அறிவியல் கலாச்சாரம், கட்டிடக் கலை போற்றும் கோவில்
- உணவு
- சினிமா, இசை
- படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம், விடாமுயற்சியில் நம்பிக்கை, உயரத் துடிக்கும் ஆர்வத்தின் மேல் பிடிப்பு தரும் குணாம்சங்கள்.
- இந்தியக் களையுடன் தென்பட்டால், ‘ஆர் யூ ஃப்ரம் இந்தியா’ என்று உரிமை கலந்த நட்போடு அறிமுகம் செய்து கொள்ளும் அன்னியோன்யம்.
AV, ஆவி, கேள்விகள், சுஜாதா, விகடன், விடை, வினா, Evaluations, Interrogation, KP, Life, Percentage, Q&A, Query, Questions, Vikadan, Vikatan
In Life, Questions on பிப்ரவரி 23, 2009 at 6:32 பிப
இன்றைய தினங்களில் எல்லாமே விழுக்காடு அல்லது எண்ணிக்கைதான். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து ஐ.ஐ.டி. அனுமதித் தேர்வு வரை வாழ்வில் உள்ள இலக்கங்களும் விழுக்காடுகளும் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள கீழ்க்காணும் கேள்விகளின் அருகில் ஒரு பென்சிலால் விடை எழுதிப் பாருங்கள் (பேனாவால் எழுதினால், அப்புறம் மாற்ற முடியாது).
நீங்கள் எத்தனை விழுக்காடு?
1. சம்பளத்தில் தர்ம காரியங்களுக்காக எவ்வளவு செலவழிக்கிறீர்கள்?
2. எத்தனைக் கடிதங்களுக்குப் பதில் எழுதுகிறீர்கள்?
3. எத்தனை மணி நேரம் வீட்டை ஒழித்து, சுத்தப்படுத்துகிறீர்கள்?
4. எத்தனை மணி நேரம் குடும்பத்துடன் செலவிடுகிறீர்கள்?
5. எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?
6. எத்தனை முறை ஓட்டுப் போட்டிருக்கிறீர்கள்?
7. அரட்டை அடிக்காமல் எத்தனை மணி நேரம் நிஜமாக வேலை செய்கிறீர்கள்?
8. உங்களுக்கு எத்தனை ஆப்த நண்பர்கள்?
9. தினம் எத்தனை மணி நேரம் வேண்டாத வேலைகளைச் செய்கிறீர்கள்?
10. எத்தனை மணி நேரம் புத்தகம் படிக்கிறீர்கள்?
11. எவ்வளவு நேரம் டி.வி. பார்க்கிறீர்கள்? என்ன பார்க்கிறீர்கள்?
12. பாட்டு மட்டும் எவ்வளவு நேரம் கேட்கிறீர்கள்?
13. போன வருஷம் எத்தனை பேருக்குப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து அனுப்பினீர்கள்?
14. தினம் எத்தனை மணி நேரம் செய்திப் பத்திரிகை படிக்கிறீர்கள்?
15. எத்தனை மணி நேரம் ஜஸ்ட் சும்மா இருக்கிறீர்கள்?
16. தினம் எத்தனை மணி நேரம் பஸ், ஸ்கூட்டர் அல்லது காரில் பயணிக்கிறீர்கள்?
17. பள்ளியில் உங்களுக்குப் பிடித்திருந்த பாடம் எது?
18. இப்போது பிடித்த நடிகர், நடிகை யார், யார்?
இந்த 18 கேள்விகளுக்கும் பதில் எழுதிவிட்டு… எனக்கு அனுப்பாதீர்கள்! ஒரு வாரம் கழித்து அவற்றைப் பாருங்கள். உங்களை நீங்களே அறிந்து கொள்வீர்கள். கீழ்க்கண்டவற்றில் ஒன்றை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.
நான் ஒரு…
1. சோம்பேறி
2. சாதாரண மனிதன்
3. நல்ல குடிமகன்
4. அறிவு ஜீவி
Ananda Vikatan, Anandha Vikadan, Anandha Vikatan, anantha Vikadan, Anantha Vikatan, AV, அழுகை, ஆனந்த விகடன், ஆவி, கேள்வி, சுயம், ஞாநி, ஞானி, Njaani, Vikadan, Vikatan
In Guest, Life, Questions on பிப்ரவரி 21, 2009 at 5:07 முப
அறிந்தும் அறியாமலும் :: ஞாநி
சில கேள்விகளுக்குப் பதில்களை எழுதிப் பார்த்துக் கொள்ளுங்கள்.
1. நினைவு தெரிந்து, என் முதல் அழுகை எப்போது?
2. அப்போது எதற்காக அழுதேன்?
3. இப்போதும் அதே காரணங்களுக்கு அழுவேனா?
4. மாட்டேன் என்றால், வேறு என்ன செய்வேன்?
5. இப்போதும் அழுவேன் என்றால், ஏன் அப்படி?
6. கடைசியாக நான் அழுதது எப்போது? எதற்காக?
7. நான் அழ விரும்பி, அழாமல் அடக்கிக் கொண்டது எப்போது?
8. இனி அழ நேரும் சந்தர்ப்பங்களில், நான் என்ன செய்ய விரும்புகிறேன்?
9. அழுகிற ஒருவரைப் பார்த்தால், நான் என்ன செய்கிறேன்? என்ன செய்ய விரும்புவேன்?
10. யாருடைய அழுகை என்னை பயப்படுத்துகிறது?
நன்றி: ஆனந்தவிகடன்