Snapjudge

Archive for பிப்ரவரி, 2011|Monthly archive page

Top 10 woes of Tamil Writers & Book Authors

In Life, Lists, Tamilnadu on பிப்ரவரி 15, 2011 at 3:23 முப

ஜெயமோகனின் அறம் சிறுகதை புனைவு; இது எழுத்தாளர்கள் படும் நிஜ சிரமங்கள்; அசல் கஷ்டங்கள்; கொஞ்சம் கூட கற்பனை கலக்காமல் படைப்பாளியின் பிரச்சினைகளும் புத்தக ஆசிரியரின் அசௌகரியங்களும்:

  1. ‘உரிமை பதிப்பகத்தாருக்கே’ என்று போட்டுக் கொள்வது
  2. கதையோ, புனைவோ கொடுத்தால், அதைத் தங்களின் ஸ்டார் எழுத்தாளரிடம் கொடுத்து, ரெண்டு ‘மானே/தேனே’ சேர்த்து, திருடி, அவர் பெயரில் வெளியிடுவது
  3. எழுதியவரின் பெயருக்கு பதில் விற்கக்கூடியவரின் பெயரை மாற்றிப் போட்டு பெஸ்ட்செல்லர் ஆக்கிக் கொள்வது (போன புல்லட்டில் பணம் கிடைக்காது; இதில் தொகை உண்டு)
  4. எழுத்துப் பிரதி பத்திரமாக பீரோவில் இருந்தாலும் ‘தொலைந்து போனது’ என்று சால்ஜாப்பு சொல்லிவிடுவது
  5. வெளியாகிய புத்தகத்திற்குரிய சன்மானம் கேட்டால், ‘விற்ற பின் தருவதாக’ பணம் தராமல் டபாய்ப்பது
  6. ‘எட்டாம் பதிப்பு’ வெளியாகி இருக்கிறதே என்று கொஞ்ச தசாப்தம் கழித்து கேட்டால், ‘சில்லறைப் பற்றாக்குறை’ என்று காரணம் உண்டாக்கித் தள்ளிப் போடுவது
  7. வீட்டிலோ, தெருமுக்குகளின் பிசிஓ போன் இல்லாத காலத்தில் அலைய விடுவது
  8. கிடுக்கிப் பிடியாக சத்தியாகிரகம் செய்தால், ‘உங்ககிட்ட இந்தப் பெரிய ப்ராஜெக்ட் கொடுக்கலாம்னு இருந்தேன்’னு தூண்டில் போட்டு உக்கிரத்தை இளக்குவது
  9. மெய்ப்பு (ப்ரூஃப்) பார்க்க செய்வது; (நீங்க சரி பார்த்தால்தான் ஒழுங்கா இருக்கு’ என்பது சங்கேத மொழி)
  10. இப்படி வெறும் எழுத்தை அச்சில் பார்க்குயம் மகிழ்ச்சியில் மட்டும் இருப்பவர்களை, Vanity publishing மூலமும் படைப்பாளியின் முன்னுரை முடக்கம், ஆசிரியரின் சிறுகுறிப்பு இருட்டடிப்பு மூலமும் கன்ட்ரோலில் வைத்திருப்பது

Aged 70+ and Rockin’ active: Tamil Writers

In Lists, Literature, Tamilnadu on பிப்ரவரி 11, 2011 at 7:23 பிப

இந்தப் பதிவுக்கு மூலகர்த்தா என் அம்மா (ஆர் பொன்னம்மாள்).

எழுபதைத் தாண்டியும் எந்தத் தமிழ் எழுத்தாளர் சுறுசுறுப்பாக இயங்குகிறார்? கண்ணி யுகத்தில் எவரெல்லாம் தட்டச்சு கற்றுக் கொண்டு வலைப்பதிவு, இணைய இதழ் என்று புழங்கினார்? இரண்டு தலைமுறை மூத்தவரானாலும் யூனிகோடில் மின்னஞ்சலும் இளைய பாரதத்துடனும் வலைய வந்தது எவர்?

  1. எஸ்.வி.ராமகிருஷ்ணன்
  2. பாரதிமணி
  3. வெங்கட் சாமிநாதன்
  4. இந்திரா பார்த்தசாரதி
  5. சுஜாதா
  6. அ முத்துலிங்கம்
  7. பி ஏ கிருஷ்ணன்
  8. இ. அண்ணாமலை

அப்படியே 50+ ஆனவர்கள் பட்டியலும் பார்க்கலாம்:

  1. மாலன் நாராயணன்
  2. இரா முருகன்
  3. ஞாநி
  4. ஜெயமோகன்
  5. எஸ் ராமகிருஷ்ணன்
  6. பாமரன்
  7. சாரு நிவேதிதா
  8. கலாப்ரியா