Snapjudge

Posts Tagged ‘Jeyamogan’

Writer Jeyamohan on Author S Ramakrishnan

In Books, Literature on ஜூலை 6, 2012 at 7:39 பிப

1. விழித்திருப்பவனின் இரவு: உலக இலக்கியச்சிமிழ்

தமிழில் ஒரு சராசரி வாசகன் உலக இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் அறிவதற்கான சாளரமாக அவரது கட்டுரைகள் இருந்து வருகின்றன. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் அவர் எடுத்துப் பேசியிருக்கும் ஆசிரியர்களின், நூல்களின் பெயர்ப் பட்டியலே வியப்பூட்டுவதாக உள்ளது. இன்றைய தமிழ்ச்சூழலில் இத்தகைய பல குரல்கள் எழுந்தாக வேண்டியிருக்கிறது. நமக்கு இன்றைய இன்றியமையாத தேவை இலக்கிய இதழியல். அதற்கான மிகச்சிறந்த முன்மாதிரிகள் எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரைகள்.

2.

3. இதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்

அற்பமான, அன்றாட வாழ்வு சார்ந்த புற யதார்த்தங்களை ‘அப்படியே’ பதிவு செய்வதிலேயே திருப்தி காண்கிற இலக்கியப் போக்கிலிருந்து விலகி இலக்கிய ஆக்கம் குறித்தான மகத்தான கனவுடன் ஆக்கப்பட்ட உண்மையான தீவிரமுயற்சி இப்படைப்பு. ஒரு நாவல் உருவாக்குவது ஒரு புனைவு வெளியைத்தான் என்ற நவீனப்பிரக்ஞை இதில் உள்ளது. இதனுடன் பலவகையிலும் ஒப்பிடத்தக்க நவீன இலக்கிய ஆக்கம் என இடாலோ கால்வினோவின் ‘புலப்படா நகரங்கள்’ நாவலைச் சொல்லலாம்.

4. பாரதி மகாகவியே: விவாதம்- ஒரு கடிதம்

பாரதியைக் கொண்டாடுபவர்களில் இரு வகையினர் உண்டு. திரிலோகசீதாராம் போன்றவர்கள் பாரதியின் வேதாந்தநோக்கை முக்கியமாகக் கருதுபவர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அவன் நவீன ஜனநாயக சமூகத்தின் உருவாக்கத்துக்கு ஆற்றிய பங்களிப்பைப் பெரிதாக எண்ணுபவர்கள். அவை இரு தனி மரபுகளாக வளர்ந்தன

எஸ்.ராமகிருஷ்ணன் மரபே ஜீவானந்தம் முதல் இடதுசாரி ஜெயகாந்தன் வரை பாரதி பக்தர்களை உருவாக்கியது. கைலாசபதி முதல் ரகுநாதன் வரை இடதுசாரி பாரதி ஆய்வாளர்களை உருவாக்கியது.

5. இருவகை எழுத்து

எஸ்.ராமகிருஷ்ணன் வணிக எழுத்துக்கு மாற்றாக சிற்றிதழ்சார் இலக்கிய உலகம் உருவாக்கிய வகைமாதிரிக்குள் நிற்பவர். தன்னை வாசகன் என உணரும் ஒருவன் கவனித்துப் பொறுக்கிக்கொள்ளும் மொழிநுட்பங்களும், சித்தரிப்புநுட்பங்களும் நிறைந்தது அது. வாச்கானை உள்ளே ஈடுபடுத்தாதது. அந்நுட்பங்களின் எல்லையை வாசகன் கண்டுபிடிக்கும் வரை அவன் ஆர்வத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும்.

6. யாமம் : எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு

7. காமத்துக்கு ஆயிரம் உடைகள் : எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’

8. ஜெய்? மோகன்?

ஜேம்ஸ்பாண்டு உடையில் தோன்றி ஜெய்சங்கர் பரிமளிக்கும் படங்களை பார்க்கும் இவர் என்னய்யா நம்ம ஜெயமோகன் மாதிரியே நடிக்கிறதும், சாடி குதிக்கிறதும், நகத்தை கடிக்கிறதும். உணர்ச்சிவசப்படுறதும், எதுக்குனு தெரியாம சண்டை போடுறதுமா செய்றாரே என்று பல முறை சிரிப்பை அடக்க முடியாமல் திணறியிருக்கிறேன். உண்மையில் இப்போது தான் அவருக்கு ஜெய் என்ற பெயர் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.

& எஸ்ரா : ஆளுமை, நகைச்சுவை & பகிடி

எங்களூரின் ராமகிருஷ்ணனுக்கு வாசகர்கள் அதிகம். எங்கள் அக்கவுண்ட் கிளார்க் என்னிடம் ”சார் உங்களுக்கு நெஜம்மாவே ராமகிருஷ்ணனை தெரியுமா சார்?” என்றார்.

”தெரியுமே”

”உங்ககூட பேசுவாரா?”

”அப்பப்ப பேசுவார். சில சமயம் சிரிக்கக்கூட செய்வார்”

”பெரிய ரைட்டர் சார். பாத்து பேசணும். யூ ஆர் லக்கி” என்றார் ”அவரு ஒரு தேசாந்தரி சார்”

அந்த வார்த்தை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது போல. ”அந்தக்காலத்திலே ராணி வாராந்தரீண்ணு ஒண்ணு வந்ததே ”என்றேன்.

9. எஸ்ராவுடன் ஒரு உரையாடல் – கெ.பி.வினோத்

10. http://www.jeyamohan.in/?s=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&searchsubmit&paged=3

’கரிசலில் பிறப்பவர்கள் இயல்பிலே வெக்கை குடித்தவர்கள். வாழ்க்கை இவர்களுக்கு எவ்விதமான சுகபோகத்தையும் தந்துவிடவில்லை. தினப்பாடுகளைக் கடந்து போவதற்கே சமர் செய்து பழகிய மனிதர்கள். குறிப்பாக இங்குள்ள விவசாயிகள் வானத்தோடு பேசிப் பழகிப்போனவர்கள். மழையைக் கொண்டு செல்லும் மேகம் வேறு ஊரை நோக்கிப் போகிறதே என்று ஆத்திரப்பட்டு மேகங்களை விரட்டி மடக்கி இழுத்துவரப் பின் தொடர்பவர்கள்’ என எஸ்.ராமகிருஷ்ணன் கரிசலை ஒரு கட்டுரையில் விவரிக்கிறார்.

கொலையுண்ணப்பட்ட வயோதிகரின் திரேகத்தின் மீது அலையும் வஸ்திரத்தில் காற்றின் விரல்கள் அலைவு கொள்வதாக தெரிகிறது என்பதனால் கொலைவெளியில் மிதந்து கொண்டிருக்கும் பறவையின் மூன்றாவது கண்களின் அபூர்வ ஷணங்கள் காரணமாக அமையலாம் என தலைமறைவாக இருக்கும் அன்னியஸ்தனான கிழவர் சொல்லியிருக்கிறார் . [கொலை ஏற்கனவே கோயில்பட்டியை சேர்ந்த பெரிய ஒச்சாத்தேவர் என்பவரால் – — துரத்தித் துரத்தி, கதறக் கதற —செய்யப்பட்டு விட்டது . நாமெல்லாம் போஸ்ட்மார்ட்டம்தான் செய்யமுடியும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் ]

– எஸ்.ராமகிருஷ்ணன், விருதுநகர்

NHM Badri Seshadri picks his 10 Best Buys for 2012 from 35th Chennai Book Fair

In Books, India, Tamilnadu on ஜனவரி 17, 2012 at 10:16 பிப

From புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்

  1. The Great Temple at Thanjavur, One Thousand Years, 1010-2010, George Mitchell and Indira Viswanathan Peterson, Photographs by Bharath Ramachandran, Rs. 2,500/- (Coffee table book)
  2. World History, Parragon, Rs. 250
  3. The Orient BlackSwan Primary School Atlas, Rs. 130
  4. Temples of India, Myths and Legends, Mathuram Boothalingam, Publications Division, Rs. 115
  5. Mahatma Gandhi, A Great Life in Brief, Vincent Sheean, Publications Division, Rs. 80
  6. Mahatma Gandhi, Romain Rolland, Publications Division, Rs. 60
  7. சங்கச் சித்திரங்கள், ஜெயமோகன், தமிழினி, ரூ. 110
  8. மாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும், சா. பாலுசாமி, காலச்சுவடு, ரூ. 140
  9. பாம்புத் தைலம், பேயோன், ஆழி, ரூ. 100
  10. Elements of Hindu Iconography, T.A. Gopinatha Rao, (2 volumes, in 4 books), Motilal Banarsidass, Rs. 2,500

12 Pics of Noted Tamil Author & Prolific Writer Jeyamohan in Canada

In Literature, Tamilnadu, USA on ஜூன் 23, 2011 at 9:24 பிப

கன்னியாகுமரி – ஜெயமோகன்

In Books on ஓகஸ்ட் 28, 2009 at 3:48 முப

நாவலில் என்னைக் கவர்ந்த சில இடங்கள், வரிகள், நிகழ்வுகள், கருத்துகள்:

  1. அவனது முதிரா இளமைக் கனவுகளில் பளிங்கு நிறமுள்ள, உருண்டு பெருகி ஒன்றோடொன்று நெருங்கி நிறைந்த பெரும் மார்பகங்கள் நிரம்பியிருந்தன. அவை இருதசை குமிழ்களன்றி வேறல்ல என்ற உண்மையை அவன் கற்பனை ஏற்க மறுத்தது.
  2. kanniyakumariசானலை மாற்றி மாற்றிச் சென்று ஃபாஷன் டிவியை அடைந்தான். தொலைக்காட்சித் திரையின் வெண்திரவ ஆழத்திலிருந்து வண்ணக்குமிழிகள் போலப் பெண்ணுருவங்கள் எழுந்து வந்து வெடித்தபடியே இருந்தன.
  3. நாராயணன் பேசாத நேரங்களில் தூங்கிக் கொண்டிருப்பார். ஒருமுறை வேடிக்கை பேச்சினூடாக பார்கவிச்சேச்சி “நானும் பார்த்திருக்கேன். அந்த சமயத்திலும் பேசிகிட்டிருக்கிற ஒரே ஆள் இவர்தான்”
  4. கோபக்கார புருஷனுக்கு சமையல் பண்ற பொண்டாட்டியோட மனநிலை
  5. ரொம்ப அந்தரங்கமான விஷயத்த வெளியே சொல்றப்ப எப்பவுமே ஒரு செயற்கைத் தன்மை வந்துடும்.
  6. விசித்திரமான ஓர் ஒலி கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். பலநூறு பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பது போன்ற ஒலி எதிர்ப்பக்க முட்கம்பி வேலியிலிருந்து கேட்டது. நெருங்கி உற்றுப் பார்த்தான். வேலியெங்கும் பாலிதீன் உறைக்கிழிசல்கள் காற்றில் வந்து சிக்கியிருந்து அதிர்ந்து படபடத்துக் கொண்டிருந்தன.
  7. அப்போதுதான் கொள்ளையடித்த கிராமத்துவீடு போலிருந்தாள் ஷைலஜா. எங்கே தொட்டாலும் பவுடரோ கிரீமோ கண்மையோ ஒட்டியது.
  8. அந்தச் செயல் போல அவனை இம்சை செய்வது வேறு ஏதுமில்லை.கல்லறை மீது பூக்களையும் சொற்களையும் வைப்பது போல.
  9. பெரிய அவமானம்னு ஒரு பிராயத்தில தோண்றது பிறகு ரொம்ப சாதாரணமா ஆகிடும். போய்ப் பேசுங்க. அவங்க சிரிப்பாங்க
  10. நடிப்புக்காகவென்றாலும் – கூட வருவதன் மூலம் உருவாகும் நிறைவு அது என்று புரிந்து கொண்டான். நம்பிக்கையூட்டக் கூடிய வலுவான ஆளுமை ஒன்றின் துணையைப் பெற்றுக் கொண்ட உணர்வா அது?
  11. அவள் மயிர்ச்சுருள்கள் ஆடின. பிணத்தின் மயிர்கள் காற்றிலாடுவது போல.
  12. சேற்றுப் பாதையில் இதமான வெப்பம் இருந்தது. தன் உடல் அச்சுவர்களில் உரசிய போதுதான் அவை வியர்த்த ஈரச் சருமப் பரப்புகள் என்று தெரிந்தது. நிர்வாணமான பெண்ணுடல்களினாலான சுவர். மென்முலைகள், வயிறுகள், தொடைகள்…
  13. சன்னலோரம் சென்று நின்று கடலைப் பார்த்தான். இருட்டில் மிதக்கும் படகு விளக்குகளே கடலாக மனதில் விரிந்து கொண்ட விந்தையை எண்ணிக் கொண்டான்.
  14. அவள் நடந்துபோய் சரக்கொன்றை மரத்தின் அடியில் அமர்ந்தாள். செம்மஞ்சள் மலர்கள் பூத்து நிரம்பிய, முதலைத் தோல் கொண்ட மரம்.
  15. ஒரு குறிப்பிட்டத் தோற்றத்தில் காட்சியளிக்க ஆரம்பித்தால் அதை நம்பும் பிறர் அத்தோற்றத்தை தன்மீது பதியவைத்து பிறகு அதிலிருந்து நினைத்தாலும் தப்ப முடியாத நிலையை உருவாக்கி விடுவார்கள் என்று அறிந்தான்.
  16. பெண் விரோதிகளில் ஒரு கணிசமான பங்கினர் மிகத் தீவிரமான பெண்பித்தர்கள்.
  17. எல்லா ஒழுக்கவிதிகளும் மத்தவங்களை சுரண்டக்கூடாதுங்கிற நீதியோட அடிப்படையில் உருவான விஷயங்கள்தான்னு எனக்குப் படுது. மத்தவங்களைப் பொருள் ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ ஏமாற்றாம இருந்தா எல்லாமே ஒழுக்கம்தான்
  18. மானுடக் கற்பனையின் அதிகபட்ச எல்லை மனக்கனவுகளில் உலவுகையில்தான் தெரிகிறது. அல்லது அது அகங்காரத்தின் எல்லையா? மனிதனுக்குத்தான் எத்தனை குறைவாகத் தேவைப்படுகிறது வாழ்க்கை! அகங்கார சமனத்தின் சில கணங்கள். அதை முடிவற்ற கண்ணாடிப் பரப்புகளில் பிரதிபலித்துப் பிரதிபலித்து பிரம்மாண்டமான வெளியாக மாற்றிக் கொள்கிறான்.
  19. பெண் என்றால் உடம்பு மட்டுமல்ல; தன்னிலையும் அகங்காரமும் கூட. அதை உடலால் தொட முடியாது. அதை அகங்காரத்தால் மட்டும்தான் தொட முடியும்.

9 more Meet the Author Jeyamohan Events: Listings

In Lists on ஓகஸ்ட் 3, 2009 at 6:39 பிப

Writer-Jeyamogan-Tamilஅமெரிக்காவில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு

  1. Los AngelesAug 6th: Los Angeles Ram :: ramnrom@yahoo.com
  2. St.Paul, Minneapolis – Aug 21st: Venugopal :: venu.biology@gmail.com
  3. Chicago, Illinois – Aug 22nd:Chandrasekar :: mcsekar@gmail.com
  4. Bloomington, Illinois – Aug 23rd: Kalaimani :: kalaimani1@yahoo.com
  5. Detroit, Michigan – Aug 24th: Arul Prasad :: arul_prasad@hotmail.com
  6. Houston, Texas – Sep 3rd: Shanmugam :: sammuvam@yahoo.com
  7. Sacramento, CA – Aug 16th: Sundar :: sundar23@yahoo.com
  8. Fremont, CA – Aug 30th: Rajan :: strajan123@gmail.com (510.825.2971) – Readers Meet at Indian Harvest, 4181 Cushing Pkwy, Fremont, CA 3 PM – 7 PM
  9. Bay Area ,CA – Sep 5th: Rajan :: strajan123@gmail.com (510.825.2971) – Speech by Jeyamohan at Milpitas Library Hall, Milpitas 2 – 5 PM

Please contact the organizers to know the exact date, time and venue of the meetings

ஜெயமோகனின் பன்னிரு முகங்கள்

In Lists on ஓகஸ்ட் 1, 2009 at 9:46 பிப

புகைப்படங்கள் எடுத்தவர்: வெட்டிப்பயல் | vettipaiyal (vettipaiyal) on Twitter

தொடர்புள்ள பதிவு:பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: ஏழு ஒளிப்படங்கள்: எழுத்தாளர் ஜெயமோகன்

பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழுத்தாளர் ஜெயமோகன்

In Blogs, Guest, USA on ஓகஸ்ட் 1, 2009 at 9:36 பிப

புகைப்படங்கள் எடுத்தவர்: வெட்டிப்பயல் | vettipaiyal (vettipaiyal) on Twitter

தொடர்புள்ள பதிவு: jeyamohan.in » வாக்களிக்கும் பூமி- 3, பாஸ்டன் நகரம்

முந்தைய பதிவு: 11 Jeyamohan photos from a Wednesday « 10 Hot

Top 10 Twits about Jeyamohan & A Muttulingam Meet by Ilavasam

In Lists on ஜூலை 20, 2009 at 5:14 பிப

நன்றி: இலவசக்கொத்தனார்

1. தமிழில் நோபல் பரிசு வாங்கக் கூடிய தகுதி உள்ள எழுத்தாளர் ஜெயமோகன் – முத்துலிங்கம்.
http://twitter.com/elavasam/status/2726689710

2. தமிழ் கதைகளை பெரிய அளவில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும். அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் – அ. முத்துலிங்கம்
http://twitter.com/elavasam/status/2726734228

3. சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதை விடக் கடினம். ஒவ்வொரு எழுத்தையும் செதுக்க வேண்டியதாக இருக்கும்.- அ. முத்துலிங்கம்
http://twitter.com/elavasam/status/2726919632

4. சுந்தர ராமசாமி satirist ஆக போய் இருக்க வேண்டிய தூரம் அதிகம். – ஜெயமோகன். ரொம்பவே சிலாகித்துப் பேசுகிறார்.
http://twitter.com/elavasam/status/2727145390

5. ஒரு காட்டை வருணிக்க 1 மரத்தைச் சொன்னால் போதும்.பெண்ணை வருணிக்கையில் அவள் கூந்தல் அசைவதில் அதனைச் சொல்ல வேண்டும்.முழு வர்ணனை தேவையில்லை –அ முத்துலிங்கம்
http://twitter.com/elavasam/status/2727388363

6. தமிழைக் காப்பாற்றப் போவது இந்திய அரசோ தமிழக அரசோ இல்லை கூகிள்தான் – துக்காராம்
http://twitter.com/elavasam/status/2727731826

7. மும்மொழித் திட்டத்தை எதிர்த்து இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவு தந்ததுதான் தமிழ் பின்னடையக் காரணம் – ராஜாராம்
http://twitter.com/elavasam/status/2727877577

8. சிந்துவின் ஒரு புறம், ஹிமாலயத்தின் கீழ்புறம். காமரூபம், சேதுவின் மேல் இருப்பது பாரதம் என்று ரிக் வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. கலாச்சாரப்படி இதுதான் பாரதம். ஆனால் பொருளாதாரப்படி பல தேசங்களாக இருந்தது. – ஜெமோ
http://twitter.com/elavasam/status/2728327180

9. அசோக வனம் என்ற தனது நாவலைப் பற்றி (எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்) முன்னோட்டம் தருகிறார் ஜெமோ. மூன்று பாகங்கள் – ஒவ்வொன்றும் மூன்று புத்தகங்கள் – ஒவ்வொரு புத்தகமும் கிட்டத்தட்ட 900 பக்கம். மொத்தமாக 8000 பக்கங்களுக்கும் மேல்!!!
http://twitter.com/elavasam/status/2728448554

10. ஜெமோ முன்பு பேசிய விவசாயம் பற்றிய கருத்துகள் மேல் விவாதம் நடக்கிறது. ரசாயன உரமின்றி விவசாயம் செய்திருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
http://twitter.com/elavasam/status/2728600648

11 Jeyamohan photos from a Wednesday

In Guest, Life, Misc, USA on ஜூலை 20, 2009 at 4:02 பிப

ஒளிப்படங்கள் எடுத்தவர்: வேல்முருகன்

Jeyamohan on Evaluating Philosophy: Top 10 Criteria

In Life, Misc on ஜூலை 10, 2009 at 8:28 பிப

Source: தத்துவத்தைக் கண்காணித்தல் :: ஜெயமோகன்

என் நோக்கில் தத்துவக் கருத்துக்களின் பெறுமதியை அறியும் மதிப்பீடுகள் சில உள்ளன. அவற்றை பத்து விதிகளாகவே சொல்கிறேன்.

1. தர்க்கபூர்வமாக சரியாக இருப்பதனாலேயே ஒரு கருத்து உண்மையாக இருக்கவேண்டும் என்பதில்லை. அது தருக்கபூர்வமான உண்மை மட்டுமே.

2 ஒரு சரியான கருத்து அதற்கு நேர் எதிரான கருத்தை தவறாக ஆக்க வேண்டும் என்பதில்லை. இரண்டுமே சரிகளாக இருக்கலாம். அவை வெவ்வேறு தளங்களைச் சேர்ந்தவையாக இருக்கலாம்

3. இலக்கியம் ஒருபோதும் தத்துவத்தை முன்வைப்பதில்லை. தத்துவத்தின் சாயலையே அது முன்வைக்கிறது. தத்துவ சிந்தனையை உருவாக்கும் மனநிலைகளை வாசகனில் அது எழுப்புகிறது

4 ஓர் இலட்சியவாதக் கருத்து நடைமுறைத்தளத்தில் ஓரளவேனும் செல்லுபடியாகவேண்டும். முற்றிலும் இலட்சியவாதத்தனமாக உள்ள கருத்து என்பது பெரும்பாலும் பயனற்றதே

5 ஒரு திட்டவட்டமான கருத்தை அருவமாக்கியும் ஓர் அருவமான கருத்தை திட்டவட்டமாக ஆக்கியும் அதன் உண்மைமதிப்பை ஊணர முடியும்

6 ஓர் நடைமுறைக்கருத்து ஒருபோதும் திட்டவட்டமாக – முடிவானதாக இருக்கலாகாது. அது சற்றேனும் ஐயத்துக்கும் மாறுதலுக்கும் இடமளிக்கும்போது மட்டுமே அது நேர்மையானதாக இருக்க முடியும்

7 ஒரு மீபொருண்மைக் [மெட·பிஸிகல் ] கருத்து கவித்துவம் மூலம் நிலைநாட்டப்படாமல் அதிகாரம் அல்லது நம்பிக்கை மூலம் நிலைநாட்டப்படுமென்றால் அதை முற்றாக நிராகரிப்பதே முறை.

8 தத்துவத்துடன் எப்போதுமே நேரடியான அதிகாரம் தொடர்புகொண்டுள்ளது. பெரும்பாலும் தத்துவ விவாதங்கள் அதிகாரங்கள் நடுவே உள்ள விவாதங்களே. ஆகவே நட்பான தளம் இல்லாவிட்டால் ஒருபோதும் தத்துவ விவாதம்செய்யலாகாது. அது உடனடியாக தத்துவத்தின் தளத்தை விட்டு வெளியே சென்றுவிடும்

9 அன்றாடவாழ்க்கைக்கு எவ்வகையிலேனும் பயனளிக்குமா என்ற கேள்வி தத்துவத்தின் பெறுமதியை புரிந்துகொள்ள மிகமிக உதவியானது