Snapjudge

Posts Tagged ‘Thinnai’

9 more Meet the Author Jeyamohan Events: Listings

In Lists on ஓகஸ்ட் 3, 2009 at 6:39 பிப

Writer-Jeyamogan-Tamilஅமெரிக்காவில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு

  1. Los AngelesAug 6th: Los Angeles Ram :: ramnrom@yahoo.com
  2. St.Paul, Minneapolis – Aug 21st: Venugopal :: venu.biology@gmail.com
  3. Chicago, Illinois – Aug 22nd:Chandrasekar :: mcsekar@gmail.com
  4. Bloomington, Illinois – Aug 23rd: Kalaimani :: kalaimani1@yahoo.com
  5. Detroit, Michigan – Aug 24th: Arul Prasad :: arul_prasad@hotmail.com
  6. Houston, Texas – Sep 3rd: Shanmugam :: sammuvam@yahoo.com
  7. Sacramento, CA – Aug 16th: Sundar :: sundar23@yahoo.com
  8. Fremont, CA – Aug 30th: Rajan :: strajan123@gmail.com (510.825.2971) – Readers Meet at Indian Harvest, 4181 Cushing Pkwy, Fremont, CA 3 PM – 7 PM
  9. Bay Area ,CA – Sep 5th: Rajan :: strajan123@gmail.com (510.825.2971) – Speech by Jeyamohan at Milpitas Library Hall, Milpitas 2 – 5 PM

Please contact the organizers to know the exact date, time and venue of the meetings

ஜெயமோகனின் பன்னிரு முகங்கள்

In Lists on ஓகஸ்ட் 1, 2009 at 9:46 பிப

புகைப்படங்கள் எடுத்தவர்: வெட்டிப்பயல் | vettipaiyal (vettipaiyal) on Twitter

தொடர்புள்ள பதிவு:பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: ஏழு ஒளிப்படங்கள்: எழுத்தாளர் ஜெயமோகன்

Top 10 Twits about Jeyamohan & A Muttulingam Meet by Ilavasam

In Lists on ஜூலை 20, 2009 at 5:14 பிப

நன்றி: இலவசக்கொத்தனார்

1. தமிழில் நோபல் பரிசு வாங்கக் கூடிய தகுதி உள்ள எழுத்தாளர் ஜெயமோகன் – முத்துலிங்கம்.
http://twitter.com/elavasam/status/2726689710

2. தமிழ் கதைகளை பெரிய அளவில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும். அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் – அ. முத்துலிங்கம்
http://twitter.com/elavasam/status/2726734228

3. சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதை விடக் கடினம். ஒவ்வொரு எழுத்தையும் செதுக்க வேண்டியதாக இருக்கும்.- அ. முத்துலிங்கம்
http://twitter.com/elavasam/status/2726919632

4. சுந்தர ராமசாமி satirist ஆக போய் இருக்க வேண்டிய தூரம் அதிகம். – ஜெயமோகன். ரொம்பவே சிலாகித்துப் பேசுகிறார்.
http://twitter.com/elavasam/status/2727145390

5. ஒரு காட்டை வருணிக்க 1 மரத்தைச் சொன்னால் போதும்.பெண்ணை வருணிக்கையில் அவள் கூந்தல் அசைவதில் அதனைச் சொல்ல வேண்டும்.முழு வர்ணனை தேவையில்லை –அ முத்துலிங்கம்
http://twitter.com/elavasam/status/2727388363

6. தமிழைக் காப்பாற்றப் போவது இந்திய அரசோ தமிழக அரசோ இல்லை கூகிள்தான் – துக்காராம்
http://twitter.com/elavasam/status/2727731826

7. மும்மொழித் திட்டத்தை எதிர்த்து இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவு தந்ததுதான் தமிழ் பின்னடையக் காரணம் – ராஜாராம்
http://twitter.com/elavasam/status/2727877577

8. சிந்துவின் ஒரு புறம், ஹிமாலயத்தின் கீழ்புறம். காமரூபம், சேதுவின் மேல் இருப்பது பாரதம் என்று ரிக் வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. கலாச்சாரப்படி இதுதான் பாரதம். ஆனால் பொருளாதாரப்படி பல தேசங்களாக இருந்தது. – ஜெமோ
http://twitter.com/elavasam/status/2728327180

9. அசோக வனம் என்ற தனது நாவலைப் பற்றி (எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்) முன்னோட்டம் தருகிறார் ஜெமோ. மூன்று பாகங்கள் – ஒவ்வொன்றும் மூன்று புத்தகங்கள் – ஒவ்வொரு புத்தகமும் கிட்டத்தட்ட 900 பக்கம். மொத்தமாக 8000 பக்கங்களுக்கும் மேல்!!!
http://twitter.com/elavasam/status/2728448554

10. ஜெமோ முன்பு பேசிய விவசாயம் பற்றிய கருத்துகள் மேல் விவாதம் நடக்கிறது. ரசாயன உரமின்றி விவசாயம் செய்திருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
http://twitter.com/elavasam/status/2728600648

Gopal Rajaram: Best of Tamil Literature: Top Books

In Lists on ஜூலை 9, 2009 at 4:37 முப

Source: தமிழ் நாவல் பட்டியல் :: கோபால் ராஜாராம்

வரிசை முக்கியத்துவத்தைக் கொண்டு வரிசைப் படுத்தப் படவில்லை.

1. ஜெயகாந்தன் : ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

2. தி ஜானகிராமன் : அம்மா வந்தாள்.

3. லா ச ராமாமிர்தம் : புத்ர

4. பொன்னீலன் : ‘ புதிய தரிசனங்கள் ‘

5. ஆ மாதவன் : ‘கிருஷ்ணப் பருந்து ‘

6. தமிழவன் : ‘ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள் ‘

7. கிருத்திகா : ‘வாசவேஸ்வரம் ‘

8. பிரபஞ்சன் : ‘மானுடம் வெல்லும் ‘

9. வண்ண நிலவன் : ‘கடல் புரத்தில் ‘

10. அசோக மித்திரன் : ‘கரைந்த நிழல்கள் ‘

11. இந்திரா பார்த்தசாரதி : ‘கால வெள்ளம் ‘

12. நீல பத்ம நாபன் தலைமுறைகள் ‘

13. சுஜாதா : ‘என் இனிய இயந்திரா ‘

தொடர்வினை: சி மோகனின் பட்டியல்கள் – கோபால் ராஜாராம்

Sujatha Story Analysis in Numbers by Jeyamohan

In Books, Literature on மார்ச் 13, 2009 at 9:44 பிப

ஜெயமோகன் :: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் சுஜாதா :: உயிர்மை பதிப்பகம்

சுஜாதாவின் நடை சிறுகதைக்கு உரியது. காரணம்:

  1. சுருக்கம்
  2. நேர்கோட்டில் வேகமாகத் தாவிச்செல்லும் இயல்பு

சிறுகதையின் செவ்வியல் [ஓ ஹென்றி பாணி] வடிவில் நம்பிக்கை கொண்டவர் சுஜாதா. இயல்புகள:

  1. சம்பவங்களை நம்பியே கதையை அமைத்தல்
  2. குறைவான கதைமாந்தர்
  3. சிறிய கால அளவு
  4. மையமுடிச்சு இறுதித் திருப்பத்தால் அவிழ்க்கப்படுதல்

அவரது கதைகளின் பலம்:

  1. வலுவான வடிவ உணர்வு
  2. நேர்த்தியான மொழியுடன் அமைக்கப்பட்டவை.

சுஜாதாவின் கதைகளின் பலவீனம்:

  1. பெரும்பாலான கதைகளில் அவரது கதைமுடிவுகள் இதழியல் எழுத்துக்கு உரிய எளிய உத்திவிளையாட்டாக உள்ளன. உதாரணமாக
    • ஒரே ஒரு மாலை
    • வழி தெரியவில்லை
    • சென்ற வாரம்
  2. பொதுவான நியாயம் சார்ந்த முடிவுகூறலாக உள்ளன. முதலிய கதைகளைச் சொல்லலாம்.  உதாரணமாக
    • அம்மா மண்டபம்
    • கள்ளுண்ணாமை
    • கால்கள்
    • கரைகண்ட ராமன்

சுஜாதாவின் தொடக்கம்

  1. ஆங்கிலத்தில் ஹெமிங்வே முதல் ரே பிராட்பரி வரை பலர்.
  2. ஜானகிராமனில் இருந்து அவர் பெற்றுக் கொண்டது நுட்பமான தகவல்களை அடுக்கி கதை சொல்லும் முறை.
  3. அசோகமித்திரனில் இருந்து கறாரான விலகலை.

அவரது கதைகளின் வகை.

  1. நம் நினைவுகளை நுட்பமான தகவல்கள் மூலம் தூண்டி நடுத்தர வற்கவாழ்வின் செறிவான சித்திரம் ஒன்றை அளிப்பவை. உதாரணம் :
    • மகன் தந்தைக்கு
    • வீடு
    • சிலவித்தியாசங்கள்
    • செல்வம்
    • எல்டொராடோ
    • ரேணுகா
  2. . நம் தர்க்கபுத்தியை புனைவாட்டம் மூலம் சற்றே அசைத்து மேலே கற்பனைசெய்ய வைப்பவை. ஒருவகையான விடையின்மையை உணரச்செய்பவை. இதை அவர் அறிவியல் சிறுகதைகளைச் சார்ந்து உருவாக்கிக் கொண்ட எழுத்துமுறை எனலாம்.  உதாரணமாக
    • பார்வை
    • ரஞ்சனி
    • நீர்
    • நிபந்தனை
    • நிதர்சனம்
    • சாரங்கன்.
  3. உற்சாகமான கதைசொல்லல் மூலம் நம்மை புன்னகைக்க வைக்கும் கதைகள். உதாரணமாக
    • சுஜாதாவின் தலைசிறந்த கதையாக நான் எண்ணும் ‘குதிரை ‘ இவ்வகையை சார்ந்தது.
    • மாமாவிஜயம்
    • சார் இந்த அக்கிரமத்தை
  4. ஒரு வகையான பகீரிடலை உருவாக்கும் கதைகள். கரிய நகைச்சுவை கொண்டவை. தார்மீக உணர்வை தொட்டு சீண்டுபவை. உதாரணமாக
    • நகரம்
    • முரண்
    • நிலம்
    • நொ ப்ரொப்ளாம்
    • எப்படியும் வாழலாம்
    • பாரீஸ் தமிழ்ப்பெண்

சுஜாதாவின் இக்கதைகளை விட மேலாக நான் புதுமைப் பித்தன், லா.ச.ராமாமிருதம், கு அழகிரிசாமி, தி ஜானகிராமன், அசோகமித்திரன் , ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி , கி ராஜநாராயணன் ஆகியோரின் ஆகங்களை முன்வைக்க காரணங்கள்

  1. சுஜாதா சிறுகதைக்குள் கவித்துவத்தை அடைவதே இல்லை . மேலான சிறுகதை ஒருவகை கவிதை – சுந்தர ராமசாமியின் பல்லக்குதூக்கிகள் போல.
  2. சுஜாதா தீவிரமான அறஎழுச்சியை அடைவதில்லை, உருவாக்குவதில்லை. மேலான கதைகள் காலத்தால் பழமைகொள்ளாத அறவேகம் கோண்டவை– அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் போல.
  3. சுஜாதா கதையில் ஒருபோதும் அவரை விலக்கிக் கொள்வதில்லை. மேலான கதைகள் எழுத்தாளனைவிட பெரியவை. அவனது அறிவையும் மனதையும் மீறி ஆழ்மனம் வெளிப்படுபவை. ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் போல.
  4. சுஜாதாவிடம் நம் மரபின் நேர் அல்லது எதிர் விளைவுகள் இல்லை. மேலான ஆக்கங்கள் மரபின் நீட்சியாக நின்று மரபை மறு ஆக்கம் செய்கின்றான. கி ராஜநாராயணனின் பேதை போல.