DMK + Congress + Thol Thiruma VCK | AIADMK, MDMK, PMK, CPI, Marxists | Vijayganth DMDK | |
Congress-2004 | 52 | 21 | 15 |
DMK 2004 | 71 | 10 | 7 |
PMK 2004 | 12 | 75 | 9 |
MDMK 2004 | 20 | 60 | 7 |
AIADMK 2004 | 11 | 65 | 5 |
Posts Tagged ‘Vijaykanth’
Tamil Nadu 2009 Elections: Large proportion of Congress voters shift to DMDK
In Lists on ஜூன் 8, 2009 at 6:33 பிபDMK-Congress alliance in Tamil Nadu: Social basis of voting
In India, Politics, Tamilnadu on ஜூன் 8, 2009 at 6:27 பிபCaste/communities | Vote share of DMK + Congress + Thol Thiruma VCK |
AIADMK, MDMK, PMK, CPI, Marxists |
Vijayganth DMDK |
Upper castes | 39 | 37 | 13 |
Thevars | 33 | 47 | 13 |
Vanniyars | 46 | 42 | 6 |
Mudaliars | 50 | 30 | 5 |
Lower OBCs | 34 | 44 | 12 |
Dalits | 43 | 28 | 11 |
Muslims | 38 | 17 | 6 |
Tamil Nadu Quotes: Elections 2009
In India, Politics, Tamilnadu on ஏப்ரல் 13, 2009 at 9:36 பிபEarlier Post: Therthal 2009: Top 10 Quotes
1. DMDK Vijaikanth: on PMK Ramadoss Alliance partnership with both ADMK & DMK
“டாக்டரய்யா ஐந்து வருடங்கள் வேட்டி துவைப்பார், ஐந்து வருடங்கள் சேலை துவைப்பார்.”
2. AIADMK Ramarajan: on Infrastructure issues with power grids, energy generation, electricity distribution.
“‘தொட்டால் பூ மலரும்’ படத்தில் வடிவேலு என்னத்த கண்னையாவிடம் கார் வாடகைக்கு வருமா என கேட்பார். என்னத்த கண்னையா உடனே ‘வரும் … ஆனா… வராது’ என்பார்.
தமிழ்நாடும் இப்போ அப்படித்தான் இருக்கு.. ‘வரும்… ஆனா வராது’, எது வரும்..? கரண்டு பில் வரும். ஆனால் மின்சாரம் வராது.”
3. தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ்:
“அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முகத்தைப் பார்த்தாலே, மக்கள் மிரண்டு போய், காங்கிரஸ் கட்சிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துவிடுவார்கள். ஜெயலலிதாவின் ஆதரவோடு பிரதமர் பதவியில் எவரும் நிம்மதியாக இருக்க முடியாது”
4. DMDK Vijaikanth: on Dravidian Politics
“கரையான் புற்று வைக்க கருநாகம் குடியிருந்தது என்பது போல அண்ணா, எம்.ஜி.ஆர். காமராஜர் போன்ற தலைவர்கள் உருவாக்கிய வீட்டில் கலைஞரும், ஜெயலலிதாவும் குடியிருந்து வருகின்றனர்.”
5. ஜெயலலிதாவின் உண்ணாவிரதப் பந்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:
“ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கும் நாளில் ‘சூரியன்’ வெளியே தலை காட்டாமல் மப்பும் மந்தாரமாக இருப்பது, தேர்தலில் தி.மு.க. தோற்றுவிடும் என்பதையே காட்டுகிறது. ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைக்கும் பெரும்பேறு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.”
6. மு. கண்ணப்பன் திமுகவில் இணைந்த விழாவில் கருணாநிதி:
“நாம் அனைவரும் இன்று அணி வகுத்து நிற்கிறோம்- நாடாளுமன்றத் தேர்தலுக்க்காக அல்ல. தேர்தல் இன்று வரும் நாளை போகும். ஆனால், பெரியாரிடம் கற்ற பகுத்தறிவு, அண்ணாவிடம் கற்ற மக்களாட்சி மாண்பு இந்த இரண்டையும் மக்களிடம் பரப்புவதற்காக நாம் நம்மை அர்பணித்துக் கொள்கிறோம். அதற்காகத்தான் இன்று அணி திரண்டிருக்கிறோம்.”
7. தமிழர்கள் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் என்.டி.ராமராவின் மகனும் நடிகருமான பாலகிருஷ்ணா:
“இளமை பருவத்தில் நான் தமிழ் தண்ணீர் குடித்து வளர்ந்தவன். படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். பலமுறை தமிழர்களின் உபசரிப்பில் நனைந்திருக்கிறேன். தமிழ் தண்ணீர் குடித்து வளர்ந்ததால், தமிழர்களுக்கு நான் என்றும் நன்றி உடையவனாக இருப்பேன். தமிழர்கள் ஒற்றுமையாக, ஒருமித்த மனப்பான்மையுடன் இருப்பது எனக்குப் பெருமையாக உள்ளது.”
8. திமுக மாணவரணி மாநில செயலாளர் புகழேந்தி
“சமுதாயத்தில் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை என்றால் அவர்களை திருநங்கைகள் என்று அழைக்குமாறு நமது முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம் மக்களோடு தான் கூட்டணி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறி வருகின்றார். அரசியல் கட்சிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருநங்கை போல் உள்ளார்.”
9. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நாராயணப்ப தெருவில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:
“இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும். அப்படி ஒரு நிலை வந்தால் இந்தியா என்ற தேசம், ஒரு தேசமாகவே இருக்கப் போவதில்லை.”
10. ஈழப் போரில் தமிழர்களை வீழ்த்த, அவர்களுக்கு துரோகம் செய்து வரும் இந்திய ‘அம்பி’ யார் என என்பதை தமிழக முதல்வர் கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா பாண்டியன் தெரிவித்ததற்கு முதல்வர் கருணாநிதி:
“ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவுக்கு துணை போய் இருப்பவர் தா.பாண்டியன். இப்போது கூட்டிக் கழித்துப் பாருங்கள். அந்த ‘அம்பி’ யார் என்பது தெளிவாகும்.”