Snapjudge

Posts Tagged ‘Tamil language’

85 இந்திய இலக்கியச் சிற்பிகள்: சாகித்திய அகாதெமி

In Lists, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 17, 2012 at 8:27 பிப

இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறைந்த இலக்கிய அறிஞர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை வெளியிட்டுள்ளோம்.

  1. வாணிதாசன்
  2. முடியரசன்
  3. ஜெகசிற்பியன்
  4. தமிழவேள் உமாமகேசுவரனார்
  5. கா. அப்துல்கபூர்
  6. தி.கோ.சீனிவாசன்
  7. கா. சுப்பிரமணிய பிள்ளை
  8. கெ.என். சிவராஜ பிள்ளை
  9. உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை
  10. ஆனந்தரங்கப்பிள்ளை
  11. புலவர் குழந்தை
  12. பா. வே. மாணிக்க நாயக்கர்
  13. ஆர். சண்முகசுந்தரம்
  14. சி. இலக்குவனார்
  15. கா. அப்பாத்துரை
  16. மா. இராசமாணிக்கனார்
  17. அ.சிதம்பரநாதச் செட்டியார்
  18. வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்
  19. டி.எஸ். சொக்கலிங்கம்
  20. சதாசிவ பண்டாரத்தார்
  21. சே.ப.நரசிம்மலு நாயுடு
  22. வ.சுப. மாணிக்கம் (தமிழ் அறிஞர்)
  23. த.நா. குமாரஸ்வாமி (தமிழ் கதாசிரியர்)
  24. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
  25. ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
  26. பி.ஸ்ரீ. ஆச்சார்யா (பி.ஸ்ரீ) (தமிழ் அறிஞர்)
  27. கி.வா. ஜகந்நாதன் (தமிழ் கதாசிரியர்)
  28. வெ. சாமிநாத சர்மா (தமிழ் கதாசிரியர்)
  29. தொல்காப்பியர்
  30. ஒளவையார்
  31. கம்பன் (தமிழ் மகாகவி)
  32. மாணிக்கவாசகர் (தமிழ் சைவ கவிஞானி)
  33. பெரியாழ்வார் (ஆழ்வார்களில் ஒருவர்)
  34. புதுமைப்பித்தன் (சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
  35. ரசிகமணி டி.கே. சிதம்பநாத முதலியார் (சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்)
  36. வேதநாயகம் பிள்ளை
  37. கு.பா. ராஜகோபாலன் (தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
  38. ஆண்டாள் (பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்)
  39. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
  40. மறைமலை அடிகள்
  41. திரு.வி.க. (தமிழ் அறிஞர்)
  42. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தமிழ் பாடலாசிரியர்)
  43. அ. மாதவையா
  44. ச.து.சு. யோகியார் (தமிழ்க் கவிஞர்)
  45. நாவலர் சோமசுந்தர பாரதியார் (தமிழ் ஆராய்ச்சியாளர்)
  46. நா. பார்த்தசாரதி (தமிழ்க் கதாசிரியர்)
  47. க.நா. சுப்ரமண்யம் (நாவலாசிரியர்.)
  48. ம.ப. பெரியசாமித் தூரன்
  49. அகிலன் (சிறந்த நாவலாசிரியர்)
  50. வ.வே. சு. ஐயர் (தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி)
  51. நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (காந்தியக் கவிஞர்)
  52. பாரதியார்
  53. தமிழ்த் தாத்தா (உ.வே. சாமிநாதஐயர்)
  54. அறிஞர் அண்ணா
  55. கல்கி
  56. மு.வ. (மு.வரதராசனார்) ( தமிழ்ப் பேரறிஞர்)
  57. விந்தன்
  58. நா.வானமாமலை
  59. சோமலெ
  60. உமறுப்புலவர் (இஸ்லாமியக் கம்பர் எனப் புகழப்படுவர்.)
  61. செய்குத் தம்பிப் பாவலர்
  62. வை.மு.கோதைநாயகி அம்மாள்
  63. தேவநேயப் பாவாணர்
  64. ந. பிச்சமூர்த்தி
  65. ஜீவ நாரண துரைக்கண்ணன்
  66. உடுமலை நாராயண கவி
  67. கோபாலகிருஷ்ண பாரதி
  68. குலசேகராழ்வார்
  69. தி. ஜானகிராமன்
  70. திரிகூடராசப்பக்கவிராயர்
  71. வ.உ. சிதம்பரனார்
  72. மா.பொ.சிவஞானம்
  73. பி. எஸ்.ராமையா
  74. பெரியார் ஈ.வெ.ரா
  75. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
  76. திருஞானசம்பந்தர்
  77. பரஞ்சோதி முனிவர்
  78. கு.அழகிரிசாமி
  79. க. அயோத்திதாச பண்டிதர்
  80. அழ. வள்ளியப்பா
  81. அருணகிரிநாதர்
  82. குமரகுருபரர்
  83. குன்றக்குடி அடிகளார்
  84. தேசிக விநாயகம் பிள்ளை
  85. காரைக்காலம்மையார்

Top 10 Hot Tamil Blogs

In Blogs, Lists, Tamilnadu on ஓகஸ்ட் 8, 2012 at 4:22 பிப

வலைப்பதிவுகளில் அனுபவமும் பட்டறிவும் பரிந்துரையும் தேடியதும் கொடுத்ததும் அந்தக் காலம். வம்பும் சினிமாவும் கிளுகிளுப்பும் புகழ்பெறுவது இக்காலம்.

அந்த மாதிரி பரபரப்பான ரசிகர்களின் அன்றாடத் தேவைக்கு பொழுதுபோக்கு தீனி போடுபவர் யார்?

இலக்கிய கிசுகிசு, திரைப்பட பார்வை, அரசியல் ஹேஷ்யம் போட்டுத் தாக்குபவர்கள் எவர்?

சூடான தலைப்பு, சுண்டியிழுக்கும் மேட்டர், ரங்கோலியான எழுத்து கொண்டு வரவழைப்பவர் பட்டியல்:

  1. வினவு – Vinavu – Tamil Forum – Revolutionary News
  2. IdlyVadai – இட்லிவடை
  3. adra saka – அட்ரா சக்க: CP Senthil Kumar
  4. kalakak kural: கலகக்குரல்
  5. true tamilans – உண்மைத்தமிழன்
  6. thamil nattu: நாற்று – புரட்சி எப்.எம்
  7. Cybersimman\’s Blog | இணைய உலகிற்கான உங்கள் சாளரம்
  8. வருண் – time for some love – ரிலாக்ஸ் ப்ளீஸ்
  9. suvanap piriyan – சுவனப்பிரியன்
  10. விமரிசனம்: vimarisanam – காவிரிமைந்தன் | இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?

Writer Jeyamohan on Author S Ramakrishnan

In Books, Literature on ஜூலை 6, 2012 at 7:39 பிப

1. விழித்திருப்பவனின் இரவு: உலக இலக்கியச்சிமிழ்

தமிழில் ஒரு சராசரி வாசகன் உலக இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் அறிவதற்கான சாளரமாக அவரது கட்டுரைகள் இருந்து வருகின்றன. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் அவர் எடுத்துப் பேசியிருக்கும் ஆசிரியர்களின், நூல்களின் பெயர்ப் பட்டியலே வியப்பூட்டுவதாக உள்ளது. இன்றைய தமிழ்ச்சூழலில் இத்தகைய பல குரல்கள் எழுந்தாக வேண்டியிருக்கிறது. நமக்கு இன்றைய இன்றியமையாத தேவை இலக்கிய இதழியல். அதற்கான மிகச்சிறந்த முன்மாதிரிகள் எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரைகள்.

2.

3. இதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்

அற்பமான, அன்றாட வாழ்வு சார்ந்த புற யதார்த்தங்களை ‘அப்படியே’ பதிவு செய்வதிலேயே திருப்தி காண்கிற இலக்கியப் போக்கிலிருந்து விலகி இலக்கிய ஆக்கம் குறித்தான மகத்தான கனவுடன் ஆக்கப்பட்ட உண்மையான தீவிரமுயற்சி இப்படைப்பு. ஒரு நாவல் உருவாக்குவது ஒரு புனைவு வெளியைத்தான் என்ற நவீனப்பிரக்ஞை இதில் உள்ளது. இதனுடன் பலவகையிலும் ஒப்பிடத்தக்க நவீன இலக்கிய ஆக்கம் என இடாலோ கால்வினோவின் ‘புலப்படா நகரங்கள்’ நாவலைச் சொல்லலாம்.

4. பாரதி மகாகவியே: விவாதம்- ஒரு கடிதம்

பாரதியைக் கொண்டாடுபவர்களில் இரு வகையினர் உண்டு. திரிலோகசீதாராம் போன்றவர்கள் பாரதியின் வேதாந்தநோக்கை முக்கியமாகக் கருதுபவர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அவன் நவீன ஜனநாயக சமூகத்தின் உருவாக்கத்துக்கு ஆற்றிய பங்களிப்பைப் பெரிதாக எண்ணுபவர்கள். அவை இரு தனி மரபுகளாக வளர்ந்தன

எஸ்.ராமகிருஷ்ணன் மரபே ஜீவானந்தம் முதல் இடதுசாரி ஜெயகாந்தன் வரை பாரதி பக்தர்களை உருவாக்கியது. கைலாசபதி முதல் ரகுநாதன் வரை இடதுசாரி பாரதி ஆய்வாளர்களை உருவாக்கியது.

5. இருவகை எழுத்து

எஸ்.ராமகிருஷ்ணன் வணிக எழுத்துக்கு மாற்றாக சிற்றிதழ்சார் இலக்கிய உலகம் உருவாக்கிய வகைமாதிரிக்குள் நிற்பவர். தன்னை வாசகன் என உணரும் ஒருவன் கவனித்துப் பொறுக்கிக்கொள்ளும் மொழிநுட்பங்களும், சித்தரிப்புநுட்பங்களும் நிறைந்தது அது. வாச்கானை உள்ளே ஈடுபடுத்தாதது. அந்நுட்பங்களின் எல்லையை வாசகன் கண்டுபிடிக்கும் வரை அவன் ஆர்வத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும்.

6. யாமம் : எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு

7. காமத்துக்கு ஆயிரம் உடைகள் : எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’

8. ஜெய்? மோகன்?

ஜேம்ஸ்பாண்டு உடையில் தோன்றி ஜெய்சங்கர் பரிமளிக்கும் படங்களை பார்க்கும் இவர் என்னய்யா நம்ம ஜெயமோகன் மாதிரியே நடிக்கிறதும், சாடி குதிக்கிறதும், நகத்தை கடிக்கிறதும். உணர்ச்சிவசப்படுறதும், எதுக்குனு தெரியாம சண்டை போடுறதுமா செய்றாரே என்று பல முறை சிரிப்பை அடக்க முடியாமல் திணறியிருக்கிறேன். உண்மையில் இப்போது தான் அவருக்கு ஜெய் என்ற பெயர் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.

& எஸ்ரா : ஆளுமை, நகைச்சுவை & பகிடி

எங்களூரின் ராமகிருஷ்ணனுக்கு வாசகர்கள் அதிகம். எங்கள் அக்கவுண்ட் கிளார்க் என்னிடம் ”சார் உங்களுக்கு நெஜம்மாவே ராமகிருஷ்ணனை தெரியுமா சார்?” என்றார்.

”தெரியுமே”

”உங்ககூட பேசுவாரா?”

”அப்பப்ப பேசுவார். சில சமயம் சிரிக்கக்கூட செய்வார்”

”பெரிய ரைட்டர் சார். பாத்து பேசணும். யூ ஆர் லக்கி” என்றார் ”அவரு ஒரு தேசாந்தரி சார்”

அந்த வார்த்தை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது போல. ”அந்தக்காலத்திலே ராணி வாராந்தரீண்ணு ஒண்ணு வந்ததே ”என்றேன்.

9. எஸ்ராவுடன் ஒரு உரையாடல் – கெ.பி.வினோத்

10. http://www.jeyamohan.in/?s=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&searchsubmit&paged=3

’கரிசலில் பிறப்பவர்கள் இயல்பிலே வெக்கை குடித்தவர்கள். வாழ்க்கை இவர்களுக்கு எவ்விதமான சுகபோகத்தையும் தந்துவிடவில்லை. தினப்பாடுகளைக் கடந்து போவதற்கே சமர் செய்து பழகிய மனிதர்கள். குறிப்பாக இங்குள்ள விவசாயிகள் வானத்தோடு பேசிப் பழகிப்போனவர்கள். மழையைக் கொண்டு செல்லும் மேகம் வேறு ஊரை நோக்கிப் போகிறதே என்று ஆத்திரப்பட்டு மேகங்களை விரட்டி மடக்கி இழுத்துவரப் பின் தொடர்பவர்கள்’ என எஸ்.ராமகிருஷ்ணன் கரிசலை ஒரு கட்டுரையில் விவரிக்கிறார்.

கொலையுண்ணப்பட்ட வயோதிகரின் திரேகத்தின் மீது அலையும் வஸ்திரத்தில் காற்றின் விரல்கள் அலைவு கொள்வதாக தெரிகிறது என்பதனால் கொலைவெளியில் மிதந்து கொண்டிருக்கும் பறவையின் மூன்றாவது கண்களின் அபூர்வ ஷணங்கள் காரணமாக அமையலாம் என தலைமறைவாக இருக்கும் அன்னியஸ்தனான கிழவர் சொல்லியிருக்கிறார் . [கொலை ஏற்கனவே கோயில்பட்டியை சேர்ந்த பெரிய ஒச்சாத்தேவர் என்பவரால் – — துரத்தித் துரத்தி, கதறக் கதற —செய்யப்பட்டு விட்டது . நாமெல்லாம் போஸ்ட்மார்ட்டம்தான் செய்யமுடியும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் ]

– எஸ்.ராமகிருஷ்ணன், விருதுநகர்

Writer S Ramakrishnan: 20 Links

In Lists, Literature, Tamilnadu on ஜூன் 26, 2012 at 6:29 பிப

1. Webulagam நேர்காணல்எஸ். ராமகிருஷ்ணன்

சன் டி.வி-யில் செய்திப் பிரிவில் வேலை செய்து வந்த இவர், எழுத்தில் கவனம் செலுத்த இயலாத காரணத்தால், வேலையை ராஜினாமா செய்தார்.

`கவிதைக்கும் இதுவரை இருக்கும் சிறுகதை வடிவங்களுக்கும் இடையே நான் ஒரு `கதைசொல்லல்’ முறையை – ஒரு `Fable’ போன்ற வடிவத்தைக் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறேன்’

`விஷ்ணுபுரம்’ நாவல் குறித்த உங்கள் `contention’ என்ன?

2. கால் முளைத்த கதைகள் – எஸ். ராமகிஷ்ணன்உயிர்மை பதிப்பகம்

நெல் எப்படி உருவானது?

நாய் ஏன் வாலை ஆட்டுகிறது?

பெண்களுக்கு ஏன் தாடி வளர்வதில்லை?

என்கிற ஒரு நைஜீரியா கதை உள்ளிட்ட 80 கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார்

3. எஸ்.ராமகிருஷ்ணன்: ‘கோடுகள் இல்லாத வரை படம்’ தொடர்

வாஸ்கோட காமா, மார்க்கோ போலோ, இபின் பதூதா (Ibn Battuta), அல்பெரூனி (Alberuni) – உள்ளிட்ட பயணிகளின் திரைகடலோடிய அநுபவங்களைப் பற்றிய சுவையான தொடர் இது.

4. Anandha Vikadan Interview with Noted Writer S Ramakrishnan on Eelam, Jeyamohan, Tamil Cinema

” ‘சண்டக்கோழி’ விவகாரத்துக்குப் பிறகு, உங்களுக்கும் பெண்ணியவாதி களுக்குமான உறவில் விழுந்த விரிசலை நீங்கள் உணர்கிறீர்களா?”

”ஏன் எல்லாம் தெரிந்தவர்கள்போல தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறீர்கள்? ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா?”

”சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்… யாருக்கு ரசிகர்கள் அதிகம்?”

5. உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தும் நூல்: செகாவின் மீது பனிபெய்கிறது

சிறுவயதில் சாலையில் கைவிடப்பட்ட குதிரை ஒன்று பனியில் நனைந்தபடி நிற்பதை பார்த்து தானும் பனியில் நிற்கிறார். நீண்ட இரவில் பனி கொட்டி அவரை நடுகங்கச் செய்கிறது. செகாவ் ஒரு நோயாளி. ஆனாலும் அவர் தன்னை வாட்டும் குளிரில் நிற்கிறார். குதிரை இவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. மனித வேதனைகளில் முக்கியமானது கைவிடப்படுதலும் நிராகரிப்புமே முக்கியமானது என்பதைத் தனது கதைகளில் உணர்த்துகிறார்.

6. மாற்று மருத்துவம்கால்களால் சிந்திக்கிறேன்

ஒட்டகம் மட்டுமே நடக்கும்போது வாயசைத்துக் கொண்டேயிருக்கும். அதுபோல நமது மனது எதையோ அசைபோட்டபடியே தானிருக்கிறது என்கிறார் தோரூ. ஒரு முறை வோர்ட்ஸ்வொர்த் வீட்டிற்கு சென்ற ஒரு வாசகர், கவிஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது பணிப் பெண்ணிடம் கேட்டார். அந்த பெண் கவிஞர் வீட்டு நூலகத்தினுள் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் ஜன்னலுக்கு வெளியில் உள்ள உலகை படித்துக் கொண்டிருக்கிறார் என்றாராம். நடைப்பயிற்சி அப்படியான ஒரு அனுபவத்தையே தரக்கூடியது. கண்களால் உலகை வாசிப்பதன் பெயரே நடைபயிற்சி.

7. வைரமுத்து, ரஜினிகாந்த் பேச்சுக்களும் விழியங்களும்: S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

8. ‘நெடுங்குருதிகுறித்து எஸ். ராமகிருஷ்ணன்

ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடும்போது அது விளைந்த மண்ணின், நீரின் ருசியையும் சேர்த்துதான் சாப்பிடுகிறோம். ஆனால், அதை தனித்து அறிவதில்லை. எனில் ஒரு ஊர் அங்கிருக்கும் காய்களில், கனிகளில், வீடுகளில், கனவுகளில் தன் ருசியை உருவாக்கிவிடுகிறது என்பது உண்மைதானே.

‘ஆரோக்ய நிகேதனம்’, ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ போன்ற சிறந்த இந்திய நாவல்கள் எழுப்பிய கனவைப் போல இந்த நாவலும் ஒரு சிதறடிக்கப்பட்ட கனவைக் கொண்டிருக்கிறது.

9. Tamil Writer S Ramakrishnan Interview in Thendral by Arvind Swaminathan: Literary Icons Series

வெகுஜன வாசகர்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்ததில் முக்கியமானவர். வாசகனை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் தனித்துவமான மொழிக்குச் சொந்தக்காரர். இலக்கியச் சிந்தனை விருது, இயல் விருது, விஸ்டம் விருது, கண்ணதாசன் விருது, நல்லி-திசையெட்டும் விருது, இலக்கியச் சுடர் விருது, தாகூர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர். உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் என உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர். இன்றும் தனது பல சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் வழியாக அப்பணியைத் தீவிரமாகச் செய்து கொண்டிருப்பவர். சமீபத்தில், ரஷ்ய கலாச்சார மையத்தில் உலக இலக்கியம் பற்றி இவர் ஆற்றியுள்ள சொற்பொழிவு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. இவருடைய நூல்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து பலர் எம்ஃபில், பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். இலக்கியம், பத்திரிக்கை, சினிமா, குறும்படம், நாடகம், ஆய்வு, பயிலரங்குகள், இணையம் என்று மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவரை தென்றலுக்காகச் சந்தித்தோம்.

10. பா.மு. ராமகிருஷ்ணனும் பா.பி. ராமகிருஷ்ணனும் :: அ. மார்க்ஸ் – அநிச்ச, நவம்பர் 2005

“நமக்கு மண்ட்டோ போன்ற பிறமொழி எழுத்தாளர்கள் ‘மாடல்’களாக இருக்க வேண்டியதில்லை. வீடு திரும்புதல்தான் இன்றைய எழுத்துக்களின் லட்சியமாக இருக்கிறது. லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் சாட்சி. பிரிவினைக் கலவரங்கள் பற்றி மண்ட்டோ எழுதியது உண்மைதான். ஆனால் பிரிவினைக் கலவரங்கள் நடந்து கொண்டிருந்தபோது அவர் நடிகை வீட்டில் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார். வேசிகளின் வீடுகளில் இருந்தார்”

11. சிறுகதை: உபதேசியார்: எஸ் ராமகிருஷ்ணன் – தி சன்டே இந்தியன்

12. Acceptance speech by EssRaa at Canada: Tamil Literary Garden Iyal Virudhu: Award Meeting for S Ramakrishnan

தன் சீடர் கூட்டத்துடன் இரவு தங்குவதற்கு இடம் தேடி ஜென் துறவி சத்திரத்திற்கு வருகிறார். அந்த இடத்தின் காப்பாளனோ, இவர்களைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை நிறைய பாலுடன் வருகிறான். அதைப் பார்த்த சன்னியாசி, சிரித்துவிட்டு, அந்த பாலின் மீது ஒரு இலையைப் போடுகிறார். இதைப் பார்த்து சத்திரத்து இன் சார்ஜ் இடம் கொடுத்து விடுகிறார்.

என்ன நடந்தது அங்கே?

13. Short Films based on S Ramakrishnan Stories: எஸ் ராமகிருஷ்ணன் குறும்படங்கள்

14. Interview of S Ramakrishnan: Question and Answer with Tamil Writers and Notable Thinkers

15. S Ramakrishnan Speech Snippets: நீயா நானா முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை

16. Tamil Author S Ramakrishnan on why we write Essays in Magazines and Fiction Novels?

தான் எதற்கு எழுதுகிறோம் என்றே தெரியாமலிருப்பவர்கள் தமிழில் ஏராளம். அது போன்ற ஒரு கேள்விளை சந்திக்கும் போது தான் இப்படியொரு கேள்வி இருப்பதே அவர்களுக்கு தெரியவரும். வாசகர்களை போலவே எழுத்தாளரும் பதிலை தேடிக்கொண்டே தானிருக்கிறார்கள்.

17. Kumudham Theeranadhy Interview with Writer Ess Ramakrishnan by Thalavaai Sundharam

ஒரு நேரத்தில் ஒரேயொரு பொருளை மட்டுமே யாவரும் வாங்க வேண்டும் என்று கட்டயாப்படுத்துவதற்கு தமிழ் இலக்கியம் என்ன ரேஷன் கடையா? மேலை இலக்கியங்களை படித்து விட்டு காப்பியடிக்கிறார்கள் என்று சொல்பவர் யார்.? அவர்கள் என்ன வாசித்திருக்கிறார்கள்.? வம்பு பேச்சுகளும் அவதுôறுகளும் தொடாத துறையிருக்கிறதா என்ன.? இல்லை என்றால் யதார்த்தவாத கதைகள் இவ்வளவு நாட்களுக்குள் எழுதி முடிக்கபட்டுவிடும் என்று ஏதாவது ரிடயர்ட்மண்ட் தேதி ஏதாவது இருக்கிறதா என்ன ?

18. வரல் ஆற்றின் திட்டுகள்

19. நள் எனும் சொல்

20. உலகசினிமா, நனையாத எனது மழைநாட்கள் & காணிக்காரர்கள்

More… இன்னும் வரலாம்

21. Kalachuvadu – காலச்சுவடு இதழ்களில்

22. Uyirmmai – உயிர்மை சஞ்சிகையில்

23. Atcharam – அட்சரம் எழுத்துகள் தொகுப்பு

 

Hot Blog Posts in Tamil Net from Tamilmanam

In Blogs, Srilanka, Tamilnadu on திசெம்பர் 15, 2011 at 3:12 முப

வலையில் வாசிப்போரை எது கவர்கிறது? எந்தத் தலைப்பு மக்களை ஈர்க்கிறது? எப்படி டைட்டில் போட்டால், நெட் தமிழர், க்ளிக்குவார்?

தமிழ்மணம் பக்கத்தில் இருந்து:

  1. முஸ்லிம் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் :: யோகராஜா சந்ரு
  2. ஆண்களுக்கு பாலியல் தொல்லை இல்லையா? :: shanmugavel
  3. ஒரு ஆணின் முனகல்… :: அனு
  4. 38வயதிற்கு உட்பட்ட “தாய்“மார்களுக்கு மட்டும் :: tamilwriter.saravanan saravanan
  5. கேரளாவில் தமிழ் பெண்கள் மானபங்கம்.. வெட்கம் கெட்ட மன்மோகன் அரசே.. :: !* வேடந்தாங்கல் – கருன் *!
  6. அய்யப்பன் இந்தியனா? மலையாளியா? :: பெரியார்தளம்
  7. தாம்பத்யம் தகிடுதத்தம் :: பாச மலர் / Paasa Malar
  8. யாழ்ப்பாணத்துப் பெண்களும், புலம்பெயர் அன்பரும்! – நம்மவர்! :: ஜீ…
  9. வாங்க சிரிக்கலாம்; நகைச்சுவை தொகுப்புகள், மொக்கை ஜோக்ஸ், அறுவை ஜோக்ஸ், … !. :: கருடன் !
  10. ஈரோடு – தமிழகம் தழுவிய பதிவர் சந்திப்பு ,ட்வீட்டர் , … :: சி.பி.செந்தில்குமார்

விக்கிப்பிடியா குறிப்பில் இருந்து:

வலைப்பதிவுகள் 1990 களின் இறுதியில் தோற்றம் கண்டன… தமிழில் வலைப்பதிவுகள் 2003 இல் முதலாவதாக எழுதப்படத் தொடங்கின.

நான் அறிந்த நெட் நாட்டாமைகள்

In Blogs, Tamilnadu on நவம்பர் 16, 2011 at 4:11 முப

இந்தப் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் எல்லோருமே சில காலம் முன்பு புகழ்பெற்றவர்கள். சச்சின் டெண்டுல்கர் போல் இப்பொழுதும் களத்தில் இருக்கலாம். காஜி கேட்கலாம். ஆனால், பதின்ம வயதின் சச்சின் போல் பத்தாண்டுகளுக்கு முன்பு ரவுண்டு கட்டியவர்கள்.

நெட் நாட்டாமையின் மாண்புகள் என்ன?

  • நிறைய வாசிக்க வேண்டும்; அவனப் பத்தியும் எவளப் பத்தியும் சுட்டத் தெரிய வேண்டும்.
  • எல்லோருக்கும் ஒன்பது துவாரம் இருக்கலாம். ஆனால், யூஸ் செய்வது முக்கியம். அனைவரும் எழுதலாம். காத்திரமான கருத்து வேண்டும்.
  • அச்சில், திரையில் கொடி பறக்ககூடாது.
  • மறுமொழி இடுவதற்கு அசரமாட்டார். வாக்குவாதத்தில் கெட்டி.
  • முசுடு கிடையாது. பெருங்கோபமிருக்கும் இடத்தில்தானே, நோ நான்சென்ஸ் குணம் இருக்கும்!?
  • நிர்வாகி. ஒருங்கிணைப்பாளர். பின்னணியில் செயல்படும் காரியவாதி.
புகழ்பெற்ற தமிழ்ப்பதிவர்களைப் பற்றி சொல்லும்போதே நாட்டாமையின் குணாதிசயங்களை அறியலாம்:
  1. பெயரிலி:
    பிள்ளையார் சுழி மாதிரி இவரைப் போடாவிட்டால் எந்தப் பட்டியலும் சரிப்படாது. புனிதப் பசுவாக இருக்கட்டும்; சுய எள்ளல் ஆகட்டும்; எல்லாவற்றிலும் பாயும் புலி.
  2. பாலபாரதி:
    நெட்டில் மட்டுமே அதிகாரம் செலுத்தியவர்களின் மேற்சென்று, ரியலிசத்திலும் நாட்டாமையாக முன்னின்று பஞ்சாயத்து செய்தவர். ட்ரைவ் இன் வுட்லண்ட்ஸ் தயிர் வடை கோஷ்டியைத் தாண்டி சென்னைப் பதிவர்களை பட்டறை போட்டவர்.
  3. பி கே சிவகுமார்:
    தனி மரம் தேர்தல் சின்னமாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், தோப்பாகாது. தனக்குப் பின்னே அன்பால் அமைந்த கூட்டணி கொண்டவர். பிரபாகரன் தொட்டு முதலியம் வரை பேசாப் பொருள்களுக்கு குத்து விளக்கேற்றியவர்.
  4. நேசகுமார்:
    மண்டனமிஸ்ரரின் மனைவியிடம் தோற்ற ஆதிசங்கரராக இஸ்லாம் கற்றுத் தேர்ந்தவர். முகமது சொன்னதை முல்லாக்களும் அறியாத காலத்தில், முஸ்லீம்களுக்கும் முகத்தை களைய நினைத்தவர்களுக்கும் மண்டை காய வைத்தவர்.
  5. மதி கந்தசாமி:
    தமிழ்மண நட்சத்திரமா? சிறுகதைப் போட்டியா? நுட்பக் கோளாறா? எல்லாவற்றுக்கும் விடையும் நேரமும் வைத்திருந்தவர். தீர்க்கமான தலைமை & தொலை நோக்கம் என்பதற்கு பாடமாக விளங்கியவர்.
  6. முகமூடி:
    சிலருக்கு இவர் புழு – நசுக்க நினைத்தார்கள். சிலருக்கு இவர் பட்டாம்பூச்சி – கேயாஸ் தியரி என்பார்களே… அது மாதிரி அடுக்கடுக்கான மாற்றங்களை உருவாக்கினவர். PMK விரிவாக்கத்தை நினைவில் நிறுத்தியது மட்டுமல்ல. திராவிடத்தின் தோலுரிப்புகளையும் அபிமன்யுவாக கையாண்டவர்.
  7. முத்து தமிழினி:
    விவாதங்களில் கெட்டித் தயிர்; கொள்கை விளக்கங்களில் வெண்ணெய்; நேர்ப்பேச்சில் வழிந்தோடும் மோர்; அரசியலில் குதிக்கும் எண்ணத்தில் தூய்மையான வெள்ளந்தி பால்.
  8. குழலி:
    ஒருவன் ஒருவன் முதலாளி என்னும் தேய்பதத்திற்கு உள்ளாகும் அபாயம் இருந்தாலும், அவர்களுக்குக் கிடைத்த உபாயம்.
  9. டோண்டு ராகவன்:
    மூர்த்தியா? இவரா? என்னும் ஒண்டிக்கு ஒண்டி பலப்பரீட்சையில் எல்லோரும் ஒதுங்கிக் கொள்ள, அசராமல் ஆடி ஜெயித்த வீரர்.
  10. ரோசா வசந்த்:
    பூர்ஷ்வா, ரோசா போன்ற நேம் டிராப்பிங் இருக்கும். இளையராஜா என்னும் அணுக்கமும் இருக்கும். கொண்ட முடிவின் கறார்த்தனத்திற்கு ஜெயலலிதாவே வெட்கப்பட வேண்டும். விலாவாரியாக எதிர்வினையின் நீள அகல ஆழத்தைக் கண்டு ஜெயமோகனே நாணங்கொள்ள வேண்டும்.
தூக்கக் கலக்கத்தில் விட்டவர்களை நினைவூட்டவும்.

Top 10 woes of Tamil Writers & Book Authors

In Life, Lists, Tamilnadu on பிப்ரவரி 15, 2011 at 3:23 முப

ஜெயமோகனின் அறம் சிறுகதை புனைவு; இது எழுத்தாளர்கள் படும் நிஜ சிரமங்கள்; அசல் கஷ்டங்கள்; கொஞ்சம் கூட கற்பனை கலக்காமல் படைப்பாளியின் பிரச்சினைகளும் புத்தக ஆசிரியரின் அசௌகரியங்களும்:

  1. ‘உரிமை பதிப்பகத்தாருக்கே’ என்று போட்டுக் கொள்வது
  2. கதையோ, புனைவோ கொடுத்தால், அதைத் தங்களின் ஸ்டார் எழுத்தாளரிடம் கொடுத்து, ரெண்டு ‘மானே/தேனே’ சேர்த்து, திருடி, அவர் பெயரில் வெளியிடுவது
  3. எழுதியவரின் பெயருக்கு பதில் விற்கக்கூடியவரின் பெயரை மாற்றிப் போட்டு பெஸ்ட்செல்லர் ஆக்கிக் கொள்வது (போன புல்லட்டில் பணம் கிடைக்காது; இதில் தொகை உண்டு)
  4. எழுத்துப் பிரதி பத்திரமாக பீரோவில் இருந்தாலும் ‘தொலைந்து போனது’ என்று சால்ஜாப்பு சொல்லிவிடுவது
  5. வெளியாகிய புத்தகத்திற்குரிய சன்மானம் கேட்டால், ‘விற்ற பின் தருவதாக’ பணம் தராமல் டபாய்ப்பது
  6. ‘எட்டாம் பதிப்பு’ வெளியாகி இருக்கிறதே என்று கொஞ்ச தசாப்தம் கழித்து கேட்டால், ‘சில்லறைப் பற்றாக்குறை’ என்று காரணம் உண்டாக்கித் தள்ளிப் போடுவது
  7. வீட்டிலோ, தெருமுக்குகளின் பிசிஓ போன் இல்லாத காலத்தில் அலைய விடுவது
  8. கிடுக்கிப் பிடியாக சத்தியாகிரகம் செய்தால், ‘உங்ககிட்ட இந்தப் பெரிய ப்ராஜெக்ட் கொடுக்கலாம்னு இருந்தேன்’னு தூண்டில் போட்டு உக்கிரத்தை இளக்குவது
  9. மெய்ப்பு (ப்ரூஃப்) பார்க்க செய்வது; (நீங்க சரி பார்த்தால்தான் ஒழுங்கா இருக்கு’ என்பது சங்கேத மொழி)
  10. இப்படி வெறும் எழுத்தை அச்சில் பார்க்குயம் மகிழ்ச்சியில் மட்டும் இருப்பவர்களை, Vanity publishing மூலமும் படைப்பாளியின் முன்னுரை முடக்கம், ஆசிரியரின் சிறுகுறிப்பு இருட்டடிப்பு மூலமும் கன்ட்ரோலில் வைத்திருப்பது