Snapjudge

Posts Tagged ‘Talk’

Best & worst cellphones by radiation output levels

In Internet, Technology, USA, World on செப்ரெம்பர் 28, 2009 at 3:44 பிப

Listing is based on phones currently available from major carriers. You can also see all available phones or all phones (current and legacy) ranked by radiation.

BEST PHONES (low radiation) WORST PHONES (high radiation)
Samsung Impression (SGH-a877) [AT&T] Motorola MOTO VU204 [Verizon Wireless]
Motorola RAZR V8 [CellularONE] T-Mobile myTouch 3G [T-Mobile]
Samsung SGH-t229 [T-Mobile] Kyocera Jax S1300 [Virgin Mobile]
Samsung Rugby (SGH-a837) [AT&T] Blackberry Curve 8330 [Sprint, U.S. Cellular, Verizon Wireless, MetroPCS]
Samsung Propel Pro (SGH-i627) [AT&T] Motorola W385 [U.S. Cellular, Verizon Wireless]
Samsung Gravity (SGH-t459) [CellularONE, T-Mobile] T-Mobile Shadow [T-Mobile]
T-Mobile Sidekick [T-Mobile] Motorola C290 [Sprint, Kajeet]
LG Xenon (GR500) [AT&T] Motorola i335 [Sprint]
Motorola Karma QA1 [AT&T] Motorola MOTO VE240 [Cricket, MetroPCS]
Sanyo Katana II [Kajeet] Blackberry Bold 9000 [AT&T]

சொன்னார்கள்! மறந்தார்கள் – அரசியல் பேச்சு

In Politics on ஏப்ரல் 22, 2009 at 2:59 பிப

முந்தைய மேற்கோள் 10:
தமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு – மேடை மொழி

1. லாலுபிரசாத் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் தலைமையிலான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங் :

“எங்களுக்கு காங்கிரசுடன் தகராறு எதுவும் கிடையாது. மன்மோகன்சிங்கையே மீண்டும் பிரதமர் ஆக்க விரும்புகிறோம்.”

2. ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் :

“மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு அமைப்பான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, காங்கிரசுக்கு மட்டும் சொந்தம் அல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமராக, மன்மோகன்சிங்கை ஏற்க முடியாது.”

3. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிடிக்கப்பட்டு இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டால், எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கேள்விக்கு அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தனது அண்ணன் ராகுல் காந்திக்காக பிரசாரம் செய்யும் பிரியங்கா வாத்ராவின் பதில் :

“இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதை அரசியல் ரீதியாக என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரம், ஒரு நாடு என்ற முறையில் அவரை (விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்) இந்தியா மன்னிக்கவே கூடாது.”

4. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி:

“தமிழ்நாட்டிலும் சரி, இந்திய துணைக்கண்டத்திலும் சரி. இப்போது வருகின்ற செய்திகளை பார்த்தபோதும், எங்கெங்கே எத்தனை இடங்களை காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இன்றைக்கு பிடிக்கின்றன என்பதை உற்று நோக்கும் நேரத்தில், தேர்தல் ஜாதகத்தை கணிப்பவர்கள், அடுத்து வரும் ஆட்சியும் இந்திய துணைக்கண்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிதான் என்று முடிவுகளை சொல்லியிருக்கிறார்கள்.”

5. திராவிட முன்னேற்ற கழக அமைச்சர் அன்பழகன் :

“டெல்லியில் மீண்டும் சமய சார்பற்ற, மசூதிகளை இடிக்காத, மசூதிகளை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டுவோம் என்ற சொல்லாத ஒரு ஆட்சி அமைய வேண்டும்.”

6. காங்கிரஸ் தலைவர் தங்கபாலு :

“காங்கிரஸ் கட்சியும், அன்னை சோனியாகாந்தியும் இருக்கும்வரை தி.மு.க.வை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.”

7. திருவள்ளூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் காயத்ரி ஸ்ரீதரனை ஆதரித்து பூந்தமல்லியில் பிரசாரம் செய்த முக ஸ்டாலின் :

“பாமக தலைவர் ராமதாஸ், ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது தனது மகன் அன்புமணிக்கு மேல்சபை எம்பி சீட் என்ற நிபந்தனையுடன்தான் கூட்டணி வைக்கிறார்.

ராமதாசுக்கு தைரியம் இருந்தால், அவரது மகனை தேர்தலில் நிறுத்தி மக்களின் ஆதரவை பெற்று எம்பியாக்கட்டும். கொல்லைப்புறம் வழியாக எம்பியாக்கும் வழக்கத்தையே அவர் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்.”

8. மகன் அன்புமணியின் மாமனாரும் ஆரணி காங்கிரஸ் வேட்பாளருமான கிருஷ்ணசாமியை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியனை ஆதரித்து ராமதாஸ் பேசுகையில் :

“நாங்கள் சொந்தம், பந்தம், பாசத்திற்கு எல்லாம் இடம் கொடுக்க மாட்டோம். அதைப்பற்றி யோசிக்கவும் மாட்டோம். பாவம், இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி, ராஜ்யசபா எம்பி சீட் கேட்டு பல முறை முயற்சி செய்தார். கிடைக்கவில்லை, ஏனென்றால் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.”

9. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முத்துவேல்ராஜை ஆதரித்து பிரசாரம் செய்தபோது:

“அரசு அறிவத்த இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், கேஸ் அடுப்பு போன்றவற்றால் கட்சிகாரர்களின் பினாமிகளுக்கு தான் ஆதாயம் ஏற்பட்டுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம்.”

10. சேலத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செம்மலை அறிமுக நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் :

“எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். சுகாதார வசதி கிடைக்க வேண்டும். ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள். பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகிறார்கள்.

தமிழகம் டாஸ்மாக் மூலம் மதுபானம் விற்பனையில் மட்டும் வளர்ந்துள்ளது. வேறு எதிலும் வளர்ச்சி அடையவில்லை.”

கொசுறு: பாஜக தலைவர் இல.கணேசன் :

“தென் சென்னையில் உள்ள வாக்காளர்களில் படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 40 சதவீதம் பேர் பெரும்பாலும் வாக்களிப்பதில்லை. தங்களது ஜனநாயக பொறுப்பை அவர்கள் உணர வேண்டும். கண்டிப்பாக வாக்களிக்க முன்வர வேண்டும்.

தமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு – மேடை மொழி

In Politics, Tamilnadu on ஏப்ரல் 17, 2009 at 4:04 பிப

முந்தைய மேற்கோள் 10:
அ) Therthal 2009: Top 10 Quotes
ஆ) Tamil Nadu Quotes: Elections 2009

1. அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் :

“இன்னும் 2 ஆண்டு காலம் தமிழகத்தில் இந்த திமுக ஆட்சியை நீடிக்கவிட்டால் தமிழ்நாடும், பிகார் போன்ற மாநிலமாக மாறிவிடும்.”

2. நடிகர் மன்சூரலிகான்:

“அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து போட்டியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடருவேன்.”

3. கலைஞர் கருணாநிதி:

“எந்தப் பிரச்னை குறித்த ஜெயலலிதாவின் அறிக்கையானாலும், அதிலே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற கருத்து இடம் பெறாமல் இருக்காது!”

4. டாக்டர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி.

“மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் ஆட்சி மாறும் என்று நான் கூறியதை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் ஆட்சியில் அமர வேண்டும், காமராஜரின் ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும் என்பது தமிழகத்தில் பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்களின் கனவு. அவர்களின் கனவு நிறைவேற வேண்டும் என்றுதான் கூறினேன்.”

5. முதல்வர் கருணாநிதி கேள்வி-பதில் அறிக்கை:

“அதிமுக கூட்டணியின் தலைவர் ஜெயா தமிழகத்திலே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அந்தக் கட்சிக்கு தற்போது போயிருக்கின்ற டாக்டர் ராமதாஸ், அந்த அம்மையாருக்கும் துரோகம் இழைக்கும் வகையிலும், அந்தக் கூட்டணியிலே இருக்கிற இரண்டு கம்ïனிஸ்ட் கட்சிகளுக்கும் “பெப்பே” காட்டுகின்ற வகையிலும் – அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டே, காங்கிரசாரின் கனவு நிறைவேறி தமிழகத்திலே காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டுமென்று சொல்கிறார்!

அவர் எங்கே போனாலும், இருக்கும் இடத்திற்கு குழி பறிக்கத்தான் பார்ப்பார்!

6. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் அளித்த பேட்டி:

“இஸ்ரேலில் இருந்து ஏவுகணை வாங்கியதில் ஊழல் நடந்து இருப்பதாக இடதுசாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. எனது மந்திரி சபையில் யாருமே ஊழல்வாதிகள் கிடையாது.

7. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்:

“அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எடுத்த முயற்சியில் 10-ல் ஒரு பங்கு முயற்சியை இலங்கை தமிழர் பிரச்னையில் எடுத்திருந்தால், இலங்கை தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம்.”

8. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்:

“ஒரு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி வழங்குகிறோம் என்று மேடைதோறும் முதலமைச்சர் கருணாநிதி பேசி வருகிறார். நீங்கள் கொடுக்கக்கூடிய அரிசி நியாயவிலை கடைகளுக்குப் போவதற்குப் பதிலாக லாரிகளில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இதுவரை இந்த அரிசி கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா? மணல் கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா?”

9. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா:

“ஐந்தாண்டு கால, மத்திய காங்கிரஸ் ஆட்சியின், நிர்வாகத் திறமையின்மை காரணமாக, நாட்டின் பொருளாதாரம், மோசமான நிலைக்கு சென்றுள்ளதையும், தீவிரவாதம் அதிகரித்துள்ளதையும், நீங்கள் நன்கு அறிவீர்கள். ஐந்து ஆண்டு கால மத்திய காங்கிரஸ் ஆட்சியில், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.”

10. ஆந்திர மாநில விஜயவாடாவில் பிரஜா ராஜ்யம் கட்சித்தலைவர் நடிகர் சிரஞ்சீவி:

“சந்திரபாபு நாயுடு ஏழைகளின் பசி, மற்றும் அவர்களது வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் கலர் டிவி வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். சந்திரபாபு நாயுடு சொந்தமாக எதுவும் சிந்திக்காமல் தமிழ்நாட்டில் செய்யப்படும் நலத்திட்ட உதவிகளை காப்பியடித்து வருகிறார். ஐடெக் முறையில் சிந்திக்கும் சந்திரபாபு நாயுடு ஏழைகளுக்காக செய்யப்போவது எதுவும் இல்லை.”

கொசுறு: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி:

“தேர்தலுக்கு பிறகு 4 வது அணி கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெறுமா என்ற கேள்விக்கு இப்போது பதில் கூற முடியாது. அது எண்ணிக்கையை பொறுத்தது. ஜனநாயகம் என்றாலே எண்ணிக்கை விளையாட்டு என்றே பொருள்.”

Culture of Cussing: Frequently Used Terms

In Books, Life, Lists, Magazines, USA on ஏப்ரல் 12, 2009 at 4:30 பிப

Top 10 frequently used terms in most taboo-words:

  1. Fuck
  2. Shit
  3. Hell
  4. Damn
  5. Goddamn
  6. Jesus Christ
  7. Ass
  8. Oh My God
  9. Bitch
  10. Sucks

Thanks (pdf): Perspectives on Psychological Science – March Issue: Timothy Jay

Most Annoying Phrases of All Time

In Life, Misc, USA on ஏப்ரல் 2, 2009 at 2:25 முப

Complete List: Salon

  1. Smile.
  2. Chill Out.
  3. Sweet!
  4. It’s all good.
  5. Everything happens for a reason.
  6. Don’t go there.
  7. Let’s touch base.
  8. Dude…
  9. No offense but…
  10. Classy!
  11. You rock!
  12. Sorry but (fill in the blank)
  13. I’m not going to lie…
  14. Um, can we talk?
  15. Wait till your father gets home.
  16. It is what it is.
  17. Due diligence.
  18. Just kiddding!
  19. So what do you do?
  20. “You know what you should do?”
  21. Well, that’s different.
  22. To be honest….

பத்து மேற்கோள்: சொன்னது நீதானா?

In Lists, Misc, Tamilnadu on பிப்ரவரி 13, 2009 at 11:44 முப

Quotable Quotes :: சொன்னாங்க! சொன்னாங்க

அறிஞர் அண்ணா
1. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.
2. சட்டம் ஒரு இருட்டறை, வக்கீலின் வாதம் ஒரு விளக்கு.

வீரபாண்டிய கட்டபொம்மன்
திறை கட்டாமை குறித்து வீரபாண்டியனைக் குற்றம் சுமத்திய ஜக்சன் துரையை நோக்கி வீரபாண்டியன் கூறியது:

3. “வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி!?”

கலைஞர் கருணாநிதி

நேரு காலத்தில் சோசலிசம் பேசிய காங்கிரஸின் பிற்காலத்திய “பரிணாம” வளர்ச்சியைக் கிண்டலடித்து 92ல் அவர் எழுதிய கவிதை

4. “திருப்பதியில் காங்கிரசு மாநாடு
ஆவடியில் மொட்டாக வெடித்த சோஷலிசம்
ஆண்டவன் சந்நிதியில் மொட்டையாக நின்றது”

சட்டசபையில் திராவிடநாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பினார் காங்கிரஸின் அனந்தநாயகி. இவரின் பதில்:

5. ‘நாடாவைக் கழற்றி பாவாடையை தூக்கிப் பார். அங்கே தெரியும்’

பா.ம.க. இராமதாஸ்

6. ‘இன்றைக்குத் தமிழ்நாட்டுல எந்தக் கட்சி கொள்கைக்காக நடக்குது? எங்கள் கட்சி உள்பட. எல்லாத்துக்குமே அரசியல் ஆதாயம் ஒண்ணுதான் அடிப்படை’

7. ‘அய்ந்தும் மூன்று எட்டு; அரசியல்வாதியை வெட்டு!’

ஸ்ருதி கமல்ஹாசன்

8. ‘அப்பா இப்போ நிறைய கவிதைகள் எழுதுறார். வீட்டில் இரவு நேரத்தில் ஆளாளுக்கு பேப்பர் வெச்சுக்கிட்டு நாங்க கவிதைக்காக யோசிப்பதைப் பார்ப்பதே அழகாக இருக்கும்!’

குஷ்பு

9. “பெண்கள் திருமணமாகும்போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பதுபோன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகமாலும் பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னை தற்காத்துக் கொள்ளவேண்டும்” – இந்தியா டுடே

விகடனில் வந்த நாஞ்சில் நாடனின் சிறப்புப் பேட்டி.

10. “தமிழ் எழுத்தாளனுக்கு அரசியல் பற்றி அச்சம் இருக்கு. எலுமிச்சம் பழம் புளிக்கும்னு தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும். ஆனால், புளிக்குன்னு எழுத்தில் ‘கமிட்’ பண்ண இவன் ஏழு நாட்கள் யோசிக்கிறான். அதனால எதாவது பாதிப்பு, கெடுதல் வருமா? ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் மாதிரி பாதுகாப்பா, சௌகரியமா இருந்துட்டுப் போயிருவோம்னு நினைக்கிறான். ஆனால், இப்படி பாதுகாப்பை நினைச்சு கவலைப்படுபவன் எப்படி சுதந்திரமான எழுத்தாளனா இருக்க முடியும்?” – திருட்டு வி.சி.டி விற்றால் திருட்டு, என் கதையிலிருந்து எடுத்தால்?