Posts Tagged ‘Sri Lanka’
arts, Authors, ஆக்கம், இலக்கியம், இலங்கை, ஈழம், எழுத்தாளர், கண்ணன், கதை, கன்னியாகுமரி, காலச்சுவடு, சிறுகதை, சுரா, தமிழ், தமிழ்நாடு, நாகர்கோவில், படைப்பாளி, பட்டியல், புத்தகம், புனைவு, Fiction, India, Kaalachuvadu, Kalachuvadu, Lit, Magazines, Magz, Media, MSM, Pop, Popular, Shorts, Southern, Sri Lanka, Story, Tamil, Tamil Nadu, Tamil people, Uyirmmai, Writers
In Books, Literature, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 7, 2012 at 8:48 பிப
கடந்த ஆறு ஆண்டுகளில் (2007 துவக்கம் முதல்) காலச்சுவடு பத்திரிகையில் சிறுகதை எழுதியவர்கள் யார்?
குறிப்புகள்:
- ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
- பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது
தொடர்புள்ள பதிவு: 2012 Anandha Vikadan Short Story Writers: Tamil Fiction Authors List
- அ. முரளி
- அ.முத்துலிங்கம்
- அசோகமித்திரன்
- அரவிந்தன்
- இ. ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன்
- இடலாக்குடி ஹஸன்
- இராம. முத்துகணேசன்
- எம். கே. குமார்
- எம். கோபாலகிருஷ்ணன்
- எஸ். செந்தில்குமார்
- குமாரசெல்வா
- குலசேகரன்
- கே.என். செந்தில்
- கோகுலக்கண்ணன்
- சச்சிதானந்தன் சுகிர்தராஜா
- சசி
- சந்திரா
- சந்ரு
- சிறீநான். மணிகண்டன்
- சுந்தர ராமசாமி
- சுரேஷ்குமார இந்திரஜித்
- தமிழில்: அரவிந்தன் — க்லேர் மார்கன்
- தமிழில்: ஆனந்தராஜ் — ஃப்ராங்க் பாவ்லாஃப்
- தமிழில்: எம். ரிஷான் ஷெரீப் — அஸீஸ் நேஸின்
- தமிழில்: குளச்சல் மு. யூசுப் — மலையாள மூலம்: மதுபால்
- தமிழில்: கே. நர்மதா — ஓரான் பாமுக்
- தமிழில்: கே. முரளிதரன் — சினுவா அச்சிபி
- தமிழில்: சுகுமாரன் — அய்ஃபர் டுன்ஷ்
- தமிழில்: சுகுமாரன் — காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
- தமிழில்: சுகுமாரன் — சி. அய்யப்பன்
- தமிழில்: சுகுமாரன் — டேவிட் அல்பாஹரி
- தமிழில்: சுகுமாரன் — மிரோஸ்லாவ் பென்கோவ்
- தமிழில்: சொ. பிரபாகரன் — சொஹராப் ஹுசேன்
- தமிழில்: நஞ்சுண்டன் — கன்னட மூலம்: சுமங்கலா
- தமிழில்: புவனா நடராஜன் — விபூதிபூஷண் பந்தோபாத்யாய
- தமிழில்: ஜி. குப்புசாமி — ரேமண்ட் கார்வர்
- தி. மயூரன்
- தூரன் குணா
- தேவிபாரதி
- ந. முத்துசாமி
- நாகரத்தினம் கிருஷ்ணா
- பா. திருச்செந்தாழை
- பா. வெங்கடேசன்
- பெருமாள்முருகன்
- மண்குதிரை
- மாதங்கி
- யுவன் சந்திரசேகர்
- ரஞ்சகுமார்
- லதா
- வாஸந்தி
- வைக்கம் முகம்மது பஷீர் – –தமிழில்: குளச்சல் மு. யூசுப்
- வைக்கம் முகம்மது பஷீர் — தமிழில்: சுகுமாரன்
- ஜே.பி. சாணக்யா
- ஸ்ரீரஞ்சனி
Anandha Vikatan, Authors, ஆக்கம், ஆனந்த விகடன், ஆவி, எழுத்தாளர், கதை, சிறுகதை, தமிழ், படைப்பாளி, பட்டியல், புத்தகம், புனைவு, விகடன், Fiction, India, Shorts, Sri Lanka, Story, Tamil, Tamil Nadu, Tamil people, Vikadan, Writers
In Literature, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 7, 2012 at 8:06 பிப
கடந்த ஒரு வருடத்தில் ஆனந்த விகடனில் சிறுகதை எழுதியவர்கள் யார்?
குறிப்புகள்:
- நான் விகடன் சந்தாதாரர் இல்லை. எனவே, சில விடுபடல் இருக்கலாம்
- ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
- பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது
- அ.முத்துலிங்கம்
- அசோகமித்திரன்
- இமையம்
- இரா.சரவணன்
- எஸ் ராமகிருஷ்ணன்
- க.சீ.சிவகுமார்
- கவிதா சொர்ணவல்லி
- கவிதாபாரதி
- கவின் மலர்
- கி ராஜநாராயணன்
- கிருஷ்ணா டாவின்சி
- சதத் ஹசன் மண்டோ
- சுகா
- சுகுணா திவாகர்
- சுதேசமித்திரன்
- சொக்கன்
- தமிழ்மகன்
- தமிழருவி மணியன்
- தமயந்தி
- பட்டுக் கோட்டை பிரபாகர்
- பாவண்ணன்
- பாஸ்கர்சக்தி
- பிரபஞ்சன்
- பெருமாள் முருகன்
- மேலாண்மை பொன்னுசாமி
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- வாமு கோமு
- ஷங்கர் பாபு
வீட்டுப்பாடம்:
- தவறவிட்டவர்களை சுட்டவும்
- மொழிபெயர்த்தவர்களை சொல்லவும்
- யார் யார், எவர் எவருக்கு நண்பர்கள் என்றும் குறிக்கலாம்
- விகடன் சிறுகதை லிஸ்டில் இல்லாதவர்களில் ஒரு டஜன்
- ஜெயமோகன்
- அழகிய பெரியவன்
- கோணங்கி
- பா ராகவன்
- கீரனூர் ஜாகிர் ராஜா
- விமலாதித்த மாமல்லன்
- மனுஷ்யபுத்திரன்
- ஆபிதின்
- கண்மணி குணசேகரன்
- பிரான்சிஸ் கிருபா
- நாஞ்சில் நாடன்
- இரா முருகன்
10, America, Authors, Awards, அ முத்துலிங்கம், ஆக்கம், இயல், இலக்கிய தொட்டம், எழுத்தாளர், எழுத்து, ஒண்டாரியோ, கதை, கனடா, கலை, கியூபெக், டிராமா, டொரண்டோ, நாடகம், நாவல், படைப்பாளர், படைப்பு, புனைவு, மாண்ட்ரியால், ரொரொன்றோ, லட்சுமி, லட்சுமி ஹாம்ஸ்டம், லஷ்மி ஹோம்ஸ்ரோம், விருது, Canada, Chennai, Colombo, Events, Functions, Garden, India, Iyal, lakshmi holmstrom, Lit, Literary, Names, People, Publishers, Recognition, SL, Sri Lanka, Tamil, Tamil Nadu, Tamil people, Thamil Ilakkiya Thottam, TN, Toronto, Writers
In Lists on ஜூலை 6, 2011 at 5:44 பிப
- 2001 – சுந்தர ராமசாமி
- 2002 – கே கணேஸ் (திண்ணை | தமிழ் இலக்கிய தோட்டம்)
- 2003 – வெங்கட் சாமிநாதன்
- 2004 – இ பத்மநாப ஐயர்
- 2005 – ஜார்ஜ் எல் ஹார்ட்
- 2006 – தாசீசியஸ்
- 2007 – லஷ்மி ஹோம்ஸ்ரோம் (மு.புஷ்பராஜன் | ஜெயமோகன்)
- 2008 – அம்பை
- 2009
- கோவை ஞானி – கி பழனிச்சாமி
- ஐராவதம் மகாதேவன்
- 2010 – எஸ் பொன்னுத்துரை
இலங்கை, ஈழம், கவிதை, சிலோன், சிவரமணி, செல்வி, Ceylon, Eelam, Eezham, Kavidhai, Kavithaigal, LTTE, Poems, Poets, SL, Sri Lanka, Tamil, Tigers
In Books, Srilanka on செப்ரெம்பர் 3, 2009 at 3:00 முப
நன்றி: சொல்லாத சேதிகள் :: பத்து பெண் கவிஞர்களின் இருபத்துநான்கு கவிதைகள்
1. அவமானப்படுத்தப்பட்டவள்
(1990: தற்கொலைக்கு ஒரு வருடம் முன்)
உங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்,
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்
என்னுடைய நாட்களை நீங்கள்
பறித்துக் கொள்ள முடியாது.
கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்
உறுதி பெற்றது.
நிராகரிக்கப்பட முடியாதவள் நான்
இனியும் என்ன
தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்
நான்
பிரசன்னமாயுள்ளேன்
என்னை
அவமானங்களாலும்
அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்
ஆனால்,
உங்கள் எல்லோரினதும்
நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது
ஒரு அழுக்குக் குவியலாய்
பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை
அசுத்தம் செய்கிறேன்.
என்னுடைய நியாயங்கள்
நிராகரிக்கப்படும் வரை
உங்களின் எல்லாப் பாதைகளும்
அழுக்குப் படிந்தவையே.
2. முனைப்பு
பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.
என்னை
மேகத்திற்குள்ளும்
மண்ணிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர் .
அவர்களின்
குரோதம் நிறைந்த பார்வையும்
வஞ்சகம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெரித்தன.
எனது
ஆசைகள் இலட்சியங்கள்
சிதைக்கப்பட்டன.
அவர்களின் மனம்
மகிழ்ச்சி கொண்டது.
அவர்களின் பேரின்பம்
என் கண்ணீரில்தான்
இருக்கமுடியும் .
ஆனால் என் கண்களுக்கு
நான் அடிமையில்லையே
அவர்களின் முன்
கண்ணீரக் கொட்ட
என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என்தலை
குனிந்து போனதாய்க்
கனவு கண்டனர் .
ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன் .
3. எமது விடுதலை
நாங்கள் எதைப் பெறுவோம்
தோழர்களே
நாங்கள் எதைப் பெறுவோம்?
இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும்
சுமந்து வந்தோம்
நாங்கள் எதைப் பெறுவோம்?
விடுதலை என்றீர்
சுதந்திரம் என்றீர்
எம் இனம் என்றீர்
எம் மண் என்றீர்
தேசங்கள் பலதிலும்
விடுதலை வந்தது இன்று
சுதந்திரம் கிடைத்தது
எனினும்
தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப் பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சைப் பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை?
நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்;
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!
தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை.
4. வையகத்தை வெற்றி கொள்ள
என் இனிய தோழிகளே
இன்னுமா தலைவார
கண்ணாடி தேடுகிறீர்?
சேலைகளைச் சரிப்படுத்தியே
வேளைகள் வீணாகின்றன.
வேண்டாம் தோழிகளே
வேண்டாம்.
காதலும் கானமும்
எங்கள் தங்கையர் பெறுவதற்காய்
எங்கள் கண்மையையும்
இதழ்பூச்சையும்
சிறிதுகாலம் தள்ளிவைப்போம்.
எங்கள் இளம் தோள்களில்
கடமையின் சுமையினை
ஏற்றிக் கொள்வோம்.
ஆடையின் மடிப்புகள்
அழகாக இல்லை என்பதற்காக
கண்ணீர் விட்ட நாட்களை
மறப்போம்.
வெட்கம் கெட்ட
அந்த நாட்களை
மறந்தே விடுவோம்.
எங்கள் தோழிகள் பலரும்
உலகில் இன்று
கண்மையையும் இதழ்பூச்சையும்
மறது போயினர்.
ஆனால்
தமது மணிக்கரத்தைப்
பிணைத்த விலங்கை
அறுத்தனர்.
வாருங்கள் தோழிகளே
நாங்களும் வழிசெய்வோம்.
மண்ணால் கோலமிட்டு
அழித்தது போதும்.
எங்கள் செந்நீரில் கோலமிட்டு
வாழ்க்கைக் கோலத்தை
மாற்றி வரைவோம்
வாருங்கள் தோழிகளே.
சரிகைச் சேலைக்கும்
கண்ணிறைந்த காதலர்க்கும்
காத்திருந்த காலங்கள்!
அந்த வெட்கம் கெட்ட
காலத்தின் சுவடுகளை
அழித்து விடுவோம்.
புதிய வாழ்வின்
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்
வாருங்கள் தோழிகளே.
5. யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்
….நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை
இல்லா தொழித்தது.
எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங்கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போனார்கள்….
எங்கள் குழந்தைகள்
திடாரென்று
வளர்ந்தவர்களாகி விடுகிறார்கள்
6. எழுதிய ஆண்டு: 1983
நன்றி: எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்
புத்திசாலித்தனமான
கடைசி மனிதனும்
இறந்து கொண்டிருக்கின்றான்…
கேள்வி கேட்பதற்கான
எல்லா வாசலும் அறையப்பட்ட பின்னர்
இருட்டின் உறுதியாக்கலில்
உங்கள் குழந்தைகளை விட்டுச் செல்லுங்கள்
அவர்களுக்கு பின்னால் எதுவுமே இல்லை
சேலை கட்டிக் காப்பாற்றிய
சில நாகரீகங்களைத் தவிர…
வினாக்களுக்குரிய விடைகள் யாவும் அச்சடிக்கப்ட்டுள்ளன
முடிவுகளின் அடிப்படையில்
வெற்றி பெற்றவர் வரிசையில்
யாரை இங்கே நிறுத்துதல் வேண்டும்?
தேசத்தின் புத்திசாலிகள் யாவரும்
சந்திக்குச் சந்தி
தெருக்களில் காத்துள்ளனர்
வினாக்களும் விடைகளும் முடிவுகளும்
யாவருக்கும் முக்கியமற்றுப் போனது
“மனிதர் பற்றிய மனிதத்தின் அடிப்படையளில்
வாழ்வதை மறந்தோம்” என்பது
இன்றைய எமது
கடைசிப் பிரகடனமாயுள்ளது.
கவிதை வெறிமுட்டி
நான்
கவிஞன் ஆகவில்லை
என்னை வெறிமூட்ட
இங்கு
ஓராயிரம் சம்பவங்கள்
அன்று நான்
கவிதைகள் வரையவில்லை
என்னிடம் இருந்தது
கறுப்பு மையே
இன்றோ சிவப்பு மையால்
வரைகின்றேன்
என் உள்ளத்தை
உன் உள்ளத்தை
தோல்வியுறா தர்மத்தின்
இறுதித் தீர்ப்புகளை
நானொரு பிறவிக்
கவிஞன் அல்ல
என்னை வெறிமூட்ட
இங்கு
ஓராயிரம் சம்பவங்கள்
நானோ
இருபதாம் நூற்றாண்டின்
வசந்தத் தென்றல் அல்ல.
ஓரு சிறிய குருவினுடையதைப் போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஓவ்வொரு குருதி தோய்நத
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்.
7. எனது பரம்பரையம் நானும்
ஒவ்வொருத்தனும்
தனக்குரிய சவப்பெட்டியை சுமந்தபடியே
தனது ஒவ்வொருவேளை
உணவையும் உண்கிறான்
தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும்
தீர்க்கதரிசிகளுக்கும் உரிய
இடமும் காலமும் போதனையும்கூட
இல்லாதொழிக்கப்பட்டு விட்டது
கூனல் விழுந்த எம்
பொழுதுகளை
நிமிர்த்ததக்க
மகிழ்ச்சி எதுவும்
எவரிடமும் இல்லை
எல்லாவற்றையும்
சகஜமாக்கிக் கொள்ளும்
அசாதாரண முயற்சியில்
தூங்கிக் கொண்டும் இறந்து கொண்டும்
இருப்பவர்களிடையே
நான்
எனது நம்பிக்கைகளை
தோற்றுக் கொண்டிருக்கிறேன்.
8. எனக்கு உண்மைகள் தெரியவில்லை
பொய்களை கண்டுபிடிப்பதும்
இந்த இருட்டில்
இலகுவான காரியமில்லை…
தெருவில் அவலமும் பதற்றமுமாய்
நாய்கள் குலைக்கும் போது
பூட்டப்பட்ட கதவுகளை
மீண்டும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு
எல்லோரும் தூங்கப்போகும் நேரத்தில்
நான்
நாளைக்கு தோன்றுகின்ற சூரியன் பற்றி
எண்ண முடியாது
இரவு எனக்கு முக்கியமானது
நேற்றுப் போல்
மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய
இந்த இருட்டு
எனக்கு மிகவும் பெறுமதியானது.
2009, Bookmarks, Books, Categories, Category, Cool, del.icio.us, Delicious, Desi, Dictionary, Eelam, Eezham, Hot, India, Indian, Internet, Keywords, Most, Net, News, Online, Pop, Popular, Refer, Reference, Search, Sites, SL, Sri Lanka, Srilanka, Tags, Top, travel, Typing, Web, Websites, Words
In Blogs, Books, India, Internet, Literature, Movies, Srilanka, Tamilnadu, Technology on ஓகஸ்ட் 4, 2009 at 3:46 பிப
Tamil bookmarks in Popular: (Not necessarily by number of people bookmarked or recently added)
- Govt. of Tamil Nadu – Textbooks Online
- REGINET :: Registration Department Office
- TTDC Official Website, Department of Tourism, Government of Tamilnadu
- EB Payment Gateway
- English – Tamil Dictionary – Google Books
- Wiktionary
- Tamil Electronic Library – a comprehensive site on Thamil Language, Tamizh Culture, Thamizh Literature, Carnatic Music, Hindu Temples, Thamiz Books, தமிழ் Radio and TV
- To Catch a Tiger – The Atlantic (July 1, 2009): “Sri Lanka’s brutal suppression of the Tamil Tigers offers an object lesson in how to defeat an insurgency. Or does it? by Robert D. Kaplan”
- Type in Tamil using transliteration bookmarklet
- Tamil language – Wikipedia, the free encyclopedia
- Tamil News | Online Tamil News | ThatsTamil | Tamil Portal | தட்ஸ்தமிழ்
- Online Tamil Dictionary
- chennailibrary.com – சென்னை நூலகம் – Online Tamil Library
- Kalachuvadu: a magazine for arts and ideas
- TFM Notes Page
- Web Site for Learning and Teaching Tamil
- Balaji’s Thots
- நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள
- Learn Tamil online
- TamilNet
இலக்கியம், எஸ்பொ, சித்தன், பத்திரிகை, பொனுத்துரை, முகப்பு, யுகமாயினி, Covers, Eelam, Eezam, Eezham, Ess Po, EssPo, Images, Journals, Little zines, Magz, Net, Photos, Pictures, SL, Small Magz, SPo, Sri Lanka, TN, Wrappers, Yugamaayini, Yugamayini, Yukamaayini, Yukamayini
In Magazines, Srilanka, Tamilnadu on ஜூலை 16, 2009 at 10:10 பிப
ADMK, சாரு, ஜெமோ, ஜெயமோகன், ஜெயமோஹன், நிவேதிதா, Charu, Charu Nivethitha, Eelam, Eezham, Elections, Jaya, Jayalalitha, Jayamogan, Jayamohan, Jemo, Jeya, Jeyalalitha, Jeyamogan, Jeyamohan, JJ, kalainjar, Karunanidhi, Magz, Manmohan, Media, Ministers, NDTV, Nivethitha, Sannasi, Sri Lanka, Tamils
In Blogs, Guest, Misc, Politics, Questions, Srilanka on ஜூன் 11, 2009 at 6:07 பிப
முழுவதும் வாசிக்க: வேதம் ஓதும் சாத்தான்கள்
1. புஷ்ஷின் கோவேறுகழுதைத்தனமான பிடிவாதத்தை, முட்டாள்தனத்தைத் தாண்டி இதுபோன்ற தருணங்களில் புஷ்ஷின் வினோதமான/பிரத்யேகமான ‘அற’வுணர்வு இத்தருணத்தில் சரியாக இயங்கியிருக்கக் கூடும் என்று பாமரத்தனமாக நினைக்க வைப்பதுதான் ஒருவிதத்தில் அந்த நபரின் வெற்றி போல.
2. மனித உரிமைகள் குறித்த அக்கறைதான் கிடையாது என்பது ஒருபுறம் இருக்க, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் ராஜதந்திர வெற்றி என்றுகொண்டு, அண்டை நாடுகளை இலங்கையில் அழுத்தமாகக் கால் பதிக்க வழிகோலிக் கொடுத்துவிட்டு தெற்கு ஆசியாவின் மத்தியில் காயடிக்கப்பட்ட மாடு மாதிரி நிற்கிறது இந்தியா – அதன் வீச்சு அவ்வளவு தான்.
3. ஊடகப் பொறுக்கிகள் கருணாநிதி போன்றவர்களை உள்ளூர் அரசியல் பொறுக்கிகள் மாதிரிச் சித்தரிப்பதைப் பார்க்கும்/கேட்கும்போது கொதித்திருக்கிறது – கருணாநிதி என்ற தனி நபர் மீதுள்ள ஆதுரத்தால் அல்ல – விரும்பியோ விரும்பாமலோ எனது அடையாளங்களிலொன்றை முன்னிறுத்தும் கருவிகளிலொன்றாக இந்த கருணாநிதி என்ற நபர் இருப்பதான தருணத்தின் மீதுள்ள ஒட்டுறவால். குறிப்பாக வட இந்திய ஆங்கில ஊடகங்களுக்கு கருணாநிதியின் வாரிசு அரசியல் குறித்த கிண்டல்களும், மத்திய அமைச்சரவையில் பங்குக்கு அடிக்கும் குரங்கு பல்டிகள் குறித்த கிண்டல்களும் கருணாநிதி-தி.மு.க என்ற எல்லை தாண்டி, ஜெயின் கமிஷன் மொத்தத் தமிழர்களையும் காட்டுமிராண்டிகள் என்று சித்தரித்தது போன்ற ஒரு ஒட்டுமொத்தச் சாணியடிப்பு உத்தி. இது அனைத்துக்கும் உருண்டையை உருட்டிக் கொடுப்பது கருணாநிதி என்றிருக்கும்போது யாரை நோக.
4. சாரு நிவேதிதா மாதிரியான eurosnobகளை/oreo cookie/தேங்காய்களை (உள்ளே வெளுப்பு வெளியே கறுப்பு) அமெரிக்காவில் பல்வேறு தளங்களில் பார்க்கலாம் – இந்தியாவிலிருந்து வந்த இந்தியர்கள், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சுத்த அமெரிக்கர்கள். பாலாடைக்கட்டி சரியில்லை, மார்ஜரின் சரியில்லை, ஒயின் சரியில்லை, கலாச்சார சுரணையேதுமற்ற அமெரிக்கக் குய்யான்கள் ஒற்றைக்கையால் ஃபோர்க்கால் வெட்டித் தின்கிறார்கள் என்பது மாதிரி.
5. சாரு நிவேதிதாவின் கலாச்சார மீறல்கள் பெரும்பாலும் இந்த ரகமானவை. வாழைப்பழக் குடியரசு டி-ஷர்ட் போடுவதையும் டீசல் ஜீன்ஸ் போடுவதையும் டாமி ஹில்ஃபிகர் ஜட்டி போடுவதையும் ஆட்டைச் சுட்டுத் தின்பதையும் சாராய பாட்டில்கள் முன்பு திரும்பி போஸ் கொடுப்பதை தனது வலைத்தளத்தில் போடுவதையும் அயர்ன் மெய்டன் மாதிரி கி.மு.267களின் ராக் குழுக்களை வைத்து தனது ‘*த்’ (யூத்)தை அளந்துகொள்வதையும் ஒரு ‘அ-தயிர்வடைக் கலாச்சாரமாகக்’ காட்ட முயல்வது மாதிரி. லீ, லீவைஸ் போன்றவற்றின் விற்பனைக்கடைகள் சென்னையில் வந்தபோது சம்பளத்தில் நாலில் ஒரு பங்கைக் கொடுத்தாவது ஒரு லீவைஸ் லீ ஜீன்ஸ் வாங்கி விடவேண்டுமென்று திரிந்துகொண்டிருந்த கும்பல் இருந்தது – சாருவைப் படிக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது.
6. ஜெயமோகனை விட சாரு மேல் ஏன் இவ்வளவு ஆத்திரம்? சாரு நிவேதிதாவுடையது முட்டாள்தனம் – முட்டாள்களுக்குத் திட்டினால் பெரும்பாலான நேரங்களில் உறைக்கும், திருத்திக் கொள்வார்கள்.
7. இயலாதவன் வலியை மற்றொரு இயலாதவனை முன்வைத்து இயன்றவன் தப்பித்துக்கொள்ளும் உத்தி எப்படிப்பட்டது?
8. ஆஷ்விட்ஸ், பெயௌஷெட்ஸ் (Belzec) நாஸி வதைமுகாம்களை/நினைவிடங்கள் சிலவற்றை நேரில் பார்த்திருக்கிறேன். இதுவரை இலங்கை போனதில்லை, ஊடகங்களில் படித்தவை சிலரிடம் உரையாடியது தவிர எதையும் நேரில் கண்டதில்லை – இதுதான் என்னைப் போன்றவர்களின் வாழ்வின் அவமானகரமான, குரூர நகைமுரண். அழிவுக்குப் பின்னான பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களைப் பார்ப்பது எப்படிப்பட்ட மனச்சிக்கலையளிக்கும் விஷயமென்பதை எளிதில் விளக்கிவிட முடியாது – கண்டதைப் பிறருக்கு விளக்கும் முனைப்பைவிட, கண்டது தன்னைநோக்கி தனக்குள் திரும்புகையில் நிகழும் சுயவதையைக் கையாள்வது சிக்கலான ஒன்று.
9. இன்னும் எனக்கு பதில் புரியாத கேள்வி:
நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒருபங்கு இதேபோன்ற உள்நாட்டுப்போர்களில் அழிந்துகொண்டிருக்கிறது என நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப்போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் என பேசுவதில்லை. அந்த போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான அந்த மனநிலையை, ஆயுதவெறியை, மீண்டும் நம் நாட்டு மக்கள் மனதில் ஊட்டிவளர்கக் முடியுமா என்றுதான் நம் அறிவுஜீவிகளில் ஒருசாரார் முயல்கிறார்கள். அவர்களே மானுடநேயம் பேசுபவர்களாகவும் இங்கே அறியப்படுகிறார்கள்.
– Jayamohan » வெறுப்புடன் உரையாடுதல்
2009, ADMK, Alagiri, Amma, DMDK, DMK, Elections, Increase, India, Jaya, Jayalalita, Jayalalitha, Jeya, Jeyalalita, Jeyalalitha, JJ, kalainjar, Kanimozhi, Karunanidhi, KK, LTTE, MP, MuKa, Parliament, Percentages, Polls, Sri Lanka, Srilanka, Stalin, States, Tamilnadu, TN, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, Vijaykanth
In Lists on ஜூன் 8, 2009 at 6:33 பிப
|
DMK + Congress + Thol Thiruma VCK |
AIADMK, MDMK, PMK, CPI, Marxists |
Vijayganth DMDK |
Congress-2004 |
52 |
21 |
15 |
DMK 2004 |
71 |
10 |
7 |
PMK 2004 |
12 |
75 |
9 |
MDMK 2004 |
20 |
60 |
7 |
AIADMK 2004 |
11 |
65 |
5 |
2009, ADMK, Alagiri, Amma, DMDK, DMK, Elections, Increase, India, Jaya, Jayalalita, Jayalalitha, Jeya, Jeyalalita, Jeyalalitha, JJ, kalainjar, Kanimozhi, Karunanidhi, KK, LTTE, MP, MuKa, Parliament, Percentages, Polls, Sri Lanka, Srilanka, Stalin, States, Tamilnadu, TN, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, Vijaykanth
In India, Politics, Tamilnadu on ஜூன் 8, 2009 at 6:27 பிப
Caste/communities |
Vote share of DMK + Congress + Thol Thiruma VCK
|
AIADMK, MDMK, PMK, CPI, Marxists
|
Vijayganth DMDK |
Upper castes |
39 |
37 |
13 |
Thevars |
33 |
47 |
13 |
Vanniyars |
46 |
42 |
6 |
Mudaliars |
50 |
30 |
5 |
Lower OBCs |
34 |
44 |
12 |
Dalits |
43 |
28 |
11 |
Muslims |
38 |
17 |
6 |
Amirthalingam, Dissanayake, Eelam, Eezam, Eezham, EPRLF, Gandhi, GoSL, Kamini, Kathirgamar, LTTE, Padmanaba, PLOT, PLOTE, Premadasa, Rajeev, Rajiv, Sri Lanka, Srilanka, Thissanayake, Tigers, TULF
In Politics, Srilanka, Tamilnadu on ஜூன் 5, 2009 at 2:17 முப
- ஆல்ஃப்ரட் துரையப்பா – ஜுலை 27, 1975: யாழ்ப்பாண மேயரை சுட்டுக் கொன்றது போரைத் தூண்டியது.
- சிறீ சபாரத்தினம் – மே 6, 1986: டெலோ அமைப்பின் நிறுவனர் கொல்லப்பட்டார்
- ஏ அமிர்தலிங்கம் – ஜூலை 13, 1989: மிதவாதியான டி.யு. எல்.எஃப்பின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
- ஆர் பிரேமதாசா – மே 1, 1993: புலிகள் தரப்பை ஆதரித்து பிறகு திசைமாறியவர் இவர்
- கே பத்மநாபா – ஜூன் 19, 1990: இ.பி.ஆர்.எல்.எஃப். தலைவரான இவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்
- ரஞ்சன் விஜயரத்னே – மார்ச் 2, 1991: பாதுகாப்புத் துறை இணையமைச்சர் கார் வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.
- ராஜீவ் காந்தி – மே 21 1991: தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.
- ஏ தங்கதுரை – ஜூலை 2, 1992: டி.யு.எல்.எஃப்பின் எம்.பி திரிகோணமலையில் வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.
- காமினி திசநாயகே – அக். 24, 1994: எதிர்க்கட்சித் தலைவர். மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார்
- லஷ்மண் கதிர்காமர் – ஆகஸ்ட் 12, 2005: இலங்கை வெளியுறவு அமைச்சர். புலிகளின் தோட்டாவுக்கு பலியானார்
எல்.டி.டி.ஈ.னால் கொல்லப்பட்ட மற்றும் சில அரசியல் எதிரிகள்: Prominent Tamil Leaders Assassinated by the LTTE Tamil Tiger Terrorists in Sri Lanka « Tamil Archives