Aadi, Amman, Anga Prathatchinam, அம்மன், ஆடி, இந்து, கடவுள், சினிமா, ஜாலி, நிகழ்வுகள், பெருமாள், மசாலா மிக்ஸ், லக்கிலுக், லடாய், வினவு, ஹிந்து, Blogs, Coil, Crimes, Hindus, Koil, Kovil, Koyil, Kumudam, Kumudham, Kumutham, Links, LL, Lucky, Lucky Look, Periyapaalaiyam, Perumal, Religion, Reporter, Series, Sex, Temples, Tolerance, Vinavu, Yuva krishna, Yuvakrishna
In Blogs, India, Lists, Misc, Religions, Tamilnadu on ஜூலை 30, 2009 at 5:01 பிப
முதற்கண் உரிமைதுறப்பு: நான் குமுதம் வாசிக்கும் நிலையில் இல்லை. எனவே கீழ்க்கண்ட உரல்களில் அரைபட்டிருக்கும் மசாலாவை வாசிக்கவில்லை:
1. வினவு :: லக்கிலுக் ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?
2. யுவகிருஷ்ணா :: ஆபாசத்துக்கு எதிரான எதிர்வினை!
3. உடன்பிறப்பு :: லக்கிலுக் – வினவு லடாய் பின்னணி
இப்பொழுது குமுதங்கள் எழுதும் கோவில்களின் தல புராண வர்ணனைகளும், காம இச்சைத் தூண்டுதல்களும் பத்து:
1. பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் வேப்பிலையால் நெய்த சேலை அணிபவர்கள்.
2. திருப்பதி திருமலை அங்கப்பிரதட்சணத்தில் புஷ்கரிணி சொட்ட சொட்ட, ஆடை விலகியதை சீர் செய்யத் துணையின்றி மெய்வருத்துபவர்கள்.
3. ராமேசுவரம் ஸ்ரீ ராமநாத சுவாமி கோயில் பிரம்ம தீர்த்தத்தில் ஆடி, தை அமாவாசை தினங்களில் புனித நீராடும் பக்தர்கள்.
4. குருவாயூர் கிருஷ்ணன் கோவில் வழக்கப்படி, சட்டையை கழற்றி விட்டு உள்ளே சென்றவர்கள்.
5. வரலட்சுமி நோன்பு பூஜை முடிவில், தங்கள் நண்பர்களுக்கு, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட தாம்பூலம் வழங்கும் பெண்கள்.
6. கோவில் கும்பாபிஷேகம்.
7. சிவலிங்கம்.
8. பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் கோவணாண்டியாக கையில் தண்டத்துடன் காட்சியளிப்பவன்.
9. சீர்காழி சட்டைநாதர் கோயிலில் ஞானப்பால் அருந்திய பசியால் அழுத குழந்தை திருஞானசம்பந்தர்.
10. திருமண மண்டபம்.
Articles, இணையம், சிதறல், தமிழ்ப்பதிவுகள், துணுக்கு, தொகுப்பு, படித்தவை, வலை, வாசித்தவை, வாசிப்பு, Blogs, Brand, Category, Charu, Columns, Google, Headers, Headings, Identity, Journalism, Journals, Kumudam, Labels, Magz, Marketing, Media, Mktg, MSM, Nivethitha, Opinion, Para, Polls, Posts, Raghavan, Readers, Results, Search, SEO, Series, Subjects, Sujatha, Tags, Titles, Vikadan
In Blogs, Lists, Magazines, Questions, Tamilnadu on மே 15, 2009 at 4:29 முப
சற்றேறக்குறைய பத்தாண்டுக்கு முந்தைய பழங்காலத்தில் ஆனந்த விகடனில் சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’, குமுதம்.காம்-இல் பா ராகவனின் ‘தெரிந்தது மட்டும்’, விகடன்.காம்-இல் சாரு நிவேதிதாவின் ‘கோணல் பக்கங்க’ளும் வெளிவந்தது.
இன்றைக்கு அப்படி சிதறல்களைத் தொகுத்து எழுதும் பெருமகனார் சில:
கருத்துக்கணிப்பு எக்ஸிட் போல் பத்து கேள்விகள்:
- நாலு பதிவுக்கான விஷயங்களை ஒரே பதிவாக்குவது பிடித்திருக்கிறதா?
- ஒவ்வொரு அனுபவத்தையும், ஒவ்வொன்றாக சொல்லி, அதற்குறிய குறிச்சொல் இன்னபிற வலைப்பூச்சு இடவேண்டுமா?
- இப்படி ஆளுக்கொரு ப்ரான்ட் வைப்பது வலைப்பதிவை சந்தைமயமாக்குமா?
- அவரவரின் ‘குறிச்சொல்’ மெய்யாலுமே மனதில் பதிந்து, அவரைச் சொல்வதற்கு பதில் இந்த அடைமொழி நிழலாட வைக்கிறதா?
- பதிவின் தலைப்புக்கும், இந்தத் தொடர் இடுகை தலைப்புக்கும் வித்தியாசம் தேவையா?
- குட்டியாக இருக்கிறது என்னும் அவச்சொல்லை நீக்கத்தான், இப்படி தொகுக்கிறார்களா?
- இந்த மாதிரி துணுக்குத் தோரணத்திற்கு பதில் ட்விட்டர் தோரணம் தேவலாமா?
- கூகிள் தேடல் முடிவுகளில் தலைப்புக்கு அதிமுக்கியத்துவம் கிடைக்கும் காலத்தில், உபதலைப்பு கூட கிட்டாத இந்தப் பதிவுகளுக்கு போதிய ரீச் நிலைக்குமா?
- கடைசியாக: தனித் தனி இடுகை அல்லது மொத்த குவிப்பு – எது உங்கள் தேர்வு?
- இதற்கெல்லாம் கருத்துக் கணிப்பு தேவையா?