Snapjudge

Posts Tagged ‘Sangam’

Top 10 Action Items for FeTNA: அமெரிக்காவில் தமிழ் சங்கங்கள் என்ன செய்யலாம்?

In Business, Finance, USA on ஜூலை 13, 2012 at 10:01 பிப

1. நிதி திரட்டல் மூலம் தொண்டு நிறுவன பங்களிப்புகளை ஊக்குவித்தல்

2. மேடைப் பேச்சு அரசியல்வாதிகளுக்கு பதிலாக சிந்தனையாளர்களை, எழுத்தாளர்களை முன்னிறுத்துதல்

3. உள்ளூர் பல்கலைக்கழகங்களின் மூலம் வந்தவர்களை சொற்பொழிவாற்ற, விவாத மேடைகளில் பங்கு கொள்ள வைத்தல்

4. மொழிபெயர்த்தல்

5. தமிழ் கற்றுத் தருதல்

6. நூலகங்களை அணுக்கமாக ஆக்குதல் – யேல், ஹார்வார்ட் பல்கலை லைப்ரரியில் மட்டும் இல்லாமல், உள்ளூர் டவுன், கிராம, நகர நூலகங்களிலும் தமிழ்ப் புத்தகங்களை நுழைத்தல்

7. நாடு தழுவிய தமிழ்ப் போட்டிகளை நடத்துதல் – நார்த் சவுத் பவுண்டேஷன் போல், ஸ்பெல்லிங் பீ போல்

8. ஈழத்திற்கு பச்சாதாபம் மட்டும் காட்டாமல், செயலூக்கத்துடன் களப்பணிகளை, மறுகட்டமைப்புகளை முன்னெடுத்தல்

9. வைரமுத்து, தாமரை போன்ற சினிமா பாடலாசிரியர்களை அழைப்பதுடன் இளங்கவிஞர்களை அழைத்தல்

10. வெளிப்படையான கணக்கு வழக்குகளை காட்டுதல்; திறந்த வழியில் செயல்படுதல்

சில தொடர்புள்ள பதிவுகள்:

அ) பெட்னா விழா – செந்தழல் ரவி

ஆ) 25th FeTNA – Tamils Annual National Convention: Thamizhar Thiruvizhaa in July 2012

இ) FeTNA: Finances, Venues: Whitepaper on Federation of Tamil Sangams of North America

25th FeTNA – Tamils Annual National Convention: Thamizhar Thiruvizhaa in July 2012

In Life, Srilanka, Tamilnadu, USA on ஜூலை 12, 2012 at 9:17 பிப

குளிர் 100 டிகிரி

அகர முதல எழுத்தெல்லாம் அமலா 
பால் முதற்றே உலகு

(பெட்னா குறள் எண் : 1)

நீராருங் கடலுடுத்த

தமிழச்சி தங்கபாண்டியன் கையில் எத்தனை வளையல்? சரியாக சொல்பவருக்கு ஐ-பேடு பரிசு!!

Abercrombie to ‘Actor Bharath’ : Ditch our brand

நடிகர் பரத் அய்யா… ஜெர்சி ஷோர் மாதிரி ஆகிடப் போகுது! ஏபர்கோம்பி & ஃபிட்ச் காலில் விழாக்குறையாக காசு கொடுத்து மாடலிங்கை நிறுத்தச் சொல்லப் போறாங்க

மூன்று முடிச்சு

விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள்பாலா … தூய்மையானவள், மாசற்றவள், பரிசுத்தமானவள், இளமை உடையவள், பொன்னிறம் படைத்தவள், நல்ல பருவம் உடையவள், மயானத்தில் ஆடுபவள் ஆகியவளுடன் இல்லத்தர்சிகள்.

தொப்பி & திலகம்

நான் ஜெயலலிதா என்றால், நீ எம்.ஜி.ஆர்.

கம்யூனிஸ்ட் என்றால் சிவப்பு

எந்தக் கரை வேட்டி கட்டியிருக்கிறான் இவன்?

ஆட்டமா! தேரோட்டமா!!

நாம அரங்கில வந்தப்ப நாலு பேரு ஆடினாங்க… இப்ப என்னடான்னா குவிஞ்சுட்டாங்களே!

புள்ளி வைத்து கோலம் போடுவார்கள் – இங்கே ஆடை

’என்னோட நெஞ்சில் தமிழச்சி மாதிரி பதக்கம் இல்லாமல் இருக்கலாம்… ஆனால், என் இதய தெய்வங்களாகிய ரசிகர்கள் நீங்க இருக்கீங்க!’

என்னது பத்து லட்சமா?

அமலா பால்: உனக்கு அஞ்சு லட்சம்தானா? எனக்கு பத்தாக்கும்!

நடிகர் பரத்:நான் பாய்ஸ்; நீ தமிழுக்கு கிடைத்த நான்காம் பால்!!

அறிஞர் அண்ணாவும் யேல் பல்கலைக்கழகமும்



பிரபாகரன் பிசினெஸ்

இறந்தாலும் ஆயிரம் பொன்

பொழிப்புரை

கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு மொருவாழ்வே

காம கலக்கத்தினால் மலஞ்சோறும் இந்த உடம்பின் மிகுந்த நோய்களுக் காளாகித் தவிக்காமல், உன்னைக் கவிமாலையால் போற்றித் துதிக்கும் என்னை ஈடேறச் செய்கின்ற ஒப்பற்ற பெருவாழ்வுடையவனே!

உன்னைக் கண்டு நானாட

எ.கொ.இ.சா. (அ) ஒய் திஸ் கொலவெறி சூப்

Twitter Venpa: Rhythmic Rhyming 4 line Limerick Poems

In Blogs, Literature, Misc on ஜூன் 20, 2009 at 3:05 முப

பெனாத்தல் சுரேஷ்

1. வெண்பாம் போட்டெடுக்க வேளைகூடவில்லையெனும்
நண்பா கொத்தனாரே கேளு – முன்பே
போட்ட சிறுப்பாவை பொட்டியிலிருந்தெடுத்து
நாட்டு உன்கொடியை நீ

2. நாலை முடிச்சிருக்கே அப்படிநான் சொன்னா,
நாளையே முடிச்சதா ஆளைவிடச் சொல்வே!
மேலும் ஆறுபோடணும் நீ –
ஆறு கொத்தா ஆறு

3. ஃபாலோ பண்ணலியே மீனாக்ஸை – பாடுறேன்
சோலோவா இங்கே நான். ஆளாரும்
மீனாக்ஸின் ஐடியைக் கொடுத்தால் அடுத்தநொடி
தானாக இணைவேனே நான்

4. சொத்தா போகுது சோம்பேறியாய் இருக்காதே
கொத்தா கேளு எழுந்துரு- முத்தாய்
சந்தக்கவி எழுது சாகாவரம் பெறு
சொந்தப்பணி அப்பாலெ பார்

5. இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் –
அன்னிக்கே சொன்னார் பத்மஸ்ரீ –
திண்ணை வெண்ணைன்னு திரிசமம் பேசினா
மன்னிக்க மாட்டோம் வா

6. காதல்தோல்வியினால் புதுக்கவிதை
பலவிளையும்; மோதல்தோல்வியால் வெண்பாமா?
ஆதல் பெண்ணாலே – ஆமாம் இன்னோர்முறை
இல்லறத்தியல் படி கொத்தா!

7. ஒத்திப்போ்டுவதால் ஓராயிரம் வெண்பாமை
ஒட்டுப்போட்டு கொண்டுவர யத்தனிக்கும்
கொத்தனாரே, சித்தநேரம் தூக்கக் கலக்கத்தை
பாரா குத்திக் காட்டுறார்

8. கண்ணாடி காட்டிடும் தழும்பின் காரணங்கள்
வெண்பா மட்டுமா கூறு – அந்நாளில் செய்திட்ட
அநியாயம் ஏராளம் – இல்லாளோர்
நியாயம் எய்திட்ட அம்பு

9. தவியாய் தவிக்கிறாள் தமிழன்னை ட்விட்டரில்
கவியாய்ப் போடுறார் வெண்பாம்-பாவிகள்
மனித வெடிகுண்டாய் படுத்தறாரே மாதாவை
புனிதம் எதிவுமில்லை காண்!
https://twitter.com/penathal/status/2234064395

10. வெள்ளிவிடுமுறை வேலைகள் அதிகம்
தள்ளிப்போயே ஆகணும் – தள்ளாட்டா
சொல்லிப்பார்ப்பதில் ஆரம்பம் – கேக்காட்டா
killஇப் பார்ப்பதில் முடிவு!
https://twitter.com/penathal/status/2234098156

11. குறுக்கெழுத்தாய் வார்த்தை குதறிச்சிதைத்து
சுருக்காய் போடுறோம் தமிழுக்கு-மறுபக்கம்
எறும்பேறியா யானை மடிந்திடும்
குறும்புதான் செய்தேன் நான்!
https://twitter.com/penathal/status/2234199568

12. ஷாப்பிங் ஷாப்பிங் சகட்டுமேனி ஷாப்பிங்
ஆப்பு வாங்கும் பர்ஸினால் – மாப்பு
கேட்டுக்கறேன் தோழர்களே நாளைக்கு நிச்சயம்
போட்டுத்தரேன் வெண்பாம்
https://twitter.com/penathal/status/2241769385

13. வெங்கட்டின் மாற்றம் பாராமல் இருப்போமோ
சங்கம் அமைத்துச் சாதிப்போம்-எங்கள்
கொத்தனும் சொக்கனும் பினாத்தும் ஸ்ரீதரும்
சத்தியா் குமாரும் கூடி
http://twitter.com/penathal/status/2248005938

14. களைப்பான நேரத்தில் கால்நீட்டி உட்கார்ந்து
விளையாட ஓர்வழியா வெண்பாமைத் தேர்ந்தெடுத்தா
தலைபோறா மாதிரி தடங்கல் செய்றாங்கோ
தளைதேடும் மக்களேதான்
http://twitter.com/penathal/status/2248533175

15. இறங்கற வெய்யிலுக்கே இவ்ளோ பில்டப்பா –
இரங்காமல் எரிதழலைக் கொட்டுறான் சூரியன்
கிறங்கிப் போறோமே கிழியறது கிட்ணகிரியில்ல
பரங்கிப்பேட்டை துபாய்!
http://twitter.com/penathal/status/2248284636


இலவசக்கொத்தனார்

1. தந்திபோல் செய்தியை முந்தியே நீர்தந்தீர்
மந்தியா கம்பெடுத்து நான்சுத்த – சிந்திப்பீர்
சேதி தெரிந்தபின் சீந்துவார் இல்லை
பேதிஎடுத்தார்ப் போல்பறந்தனரே காண்
https://twitter.com/elavasam/status/2248524360

2. பேரரசு எண்ணத்தை போக்கிரிதான் வந்திங்கு
வேரறுத்த கதைசொன்ன பாராவே – பேரிருக்கு
என்றெண்ணி பேயாட்டம் ஆடாதே அடங்கியிரு
என்றென்றும் என்பதே நீதி.
https://twitter.com/elavasam/status/2248433982

3. ஐபோனில் ஏது தமிழெழுத பாண்டு
மைபோட்ட பேனாவை நம்பு
https://twitter.com/elavasam/status/2248279090

4. ஜாவாஸ்க்ரிப்ட் தந்திடும் வைரஸ் போலவே
மாவாவும் தருமே புற்று
https://twitter.com/elavasam/status/2247829198

5. தளிகை செய்யாமல் இருந்ததன் காரணம்
மளிகைக் கடை காதல் என்றாயின்
குளிகை ஒன்று இருந்தால் மட்டுமே
வளைகை பிடித்திடும் கரண்டி.

மளிகைக் கடை காதல் என்பது பாரா எழுதும் கால் கிலோ காதல் அரை கிலோ கனவு என்பதனை அறிக!
https://twitter.com/elavasam/status/2247674687

6. வெண்பாம் எழுதாரை வையோம் கலங்கேல்
நண்பா எழுதிடவே வைத்திடுவோம் என்போமே
நன்பா எழுதவே நல்லொழுக்கம் தேவை
வம்பாய் எழுதிடவே வா.
https://twitter.com/elavasam/status/2243717675

7. வெண்பாமைப் பாவென்று வேண்டாத பேச்சினை
நண்பாநீ பேசாதே என்பேன் – அன்பாய்
சொல்லும் போதே நீஅடங்கு இல்லையேல்
பல்லும் பறந்திடும் பார்.

8. பத்துபா எழுதவே சொன்னாரே பாரா
ஒத்துபா என்றாலும் ஒதுங்கவில்லை – செத்துப்
பிழைத்தேன் என்றாலும் சொன்னபடி செய்தேன்
மலைத்தேன் அவரோட மகிமை

9. கொடியைப் பிடியென்று கொஞ்சிடும் அண்ணனே
பொடி வைத்துப் பேசுவதுமேன் – அடிஒன்று
போட்டு எழுதவே சொன்னாய் நானும்
காட்டிடும் கருத்தையே பிடி

10. சொக்கர் வருவார் என்றுநான் காத்திருந்தேன்
மக்கர் செய்கிறார் மனுசர் – டக்கர்
வெண்பாம் தந்திடவே அழைக்கின்றேன் இப்போது
நண்பா வந்திடல் சிறப்பு

11. ஆடத் தெரியாத கூத்தாடி சொன்னாளாம்
மாடத் தெருவே சரியில்லை – போட
இடமில்லை ட்விட்டரில் வெண்பாமே பாரா
மடத்தையே தேடுறாரு பாரு.

12. ஒத்து ஊதும் பெனாத்தல் உமக்கு
வெத்து வேலை எதுக்கு – பத்து
வெண்பாம் டார்கெட் இருக்கு எண்ணிநீ
கன்பர்ம் பண்ணு கணக்கு.

13. படுக்கவே விடாமல் படுத்தரார் பாரா
மிடுக்காப் போடறார் வெண்பாம் – கெடுக்கவா
நானும் அவரோட மூடை நல்லா
வேணும் எனக்கு என்றழுவாரே

14. உண்மையச் சொன்ன வுடமாட்டே நீயி
வெண்ணநீ வெளங்கவே மாட்டே – திண்ண
காலியான உக்கார க்யூ இருக்கு
ஜாலியா உம்பொழப்ப பார்

15. தூக்கம் வராது தவிக்கும் வேளையில்
ஆக்கம் செய்திடுவேன்வெண்பாமே – ஏக்கம்
இனிமேலும் உனக்கேன் வேண்டாமே இன்றுபோல்
தனியாள் நீஇல்லை இனி

14. தூங்காத விழியென்று சொல்லவும் வழியில்லை
தாங்காமல் வருதே உறக்கம் – ஏங்காதே
நான் வருவேன் நாளை இரவினிலே
பாங்காகத் தருவேன் வெண்பாம்.

15. வெண்பாமில் இன்னமும் வெள்ளெனவே நானிருந்தால்
கண்ணாடி காட்டுமே தழும்பு


பா ராகவன்

1. புனிதமா புதிரா இரண்டுமிலை நண்பா
கணிதமிது கற்பதில் நமக்கென்ன – அணியணியாய்
சொல்சேர்த்துக் கூட்டி சூடாயொரு பார்சல்
வில்வித்தை போல இது
https://twitter.com/writerpara/status/2234140956

2. வேலை தடுக்கும் வேறுபணி வந்துநிற்கும்
மாலைப்பனி மயக்கத்தி லாழ்த்தும் – ஜாலியென
பாம்போட முடிவெடுத்துப் பாக்களத்தில் குதித்துவிடு
பாம்பாய்நான் பின்வருவேன் பார்
https://twitter.com/writerpara/status/2247414577

3. மடியிலொரு கனிஉறங்க மடிக்கணியை எதிர்வைத்து
பிடிமகனே வெண்பாவை விரைந்து.
https://twitter.com/writerpara/status/2247515990

4. சொக்கனை நானும் அழைத்தேன் அதிகாலை
அப்படியும் ஆளில்லை இங்கே எப்படியும்
இன்றைக்குள் வந்திடுவான் இடைவேளை கிடைத்ததூஉம்
கொன்றுத்தான் தீர்ப்பான் கவி.
https://twitter.com/writerpara/status/2234038790

5. கூத்தாடி தப்பில்லை கூடவரும் கோஷ்டியில்
காத்தாடி விடத்தெரியா கூட்டம் ஒன்றுண்டு
ஆத்தாடி உனக்கு இதுபுரிய வில்லையெனில்
கொத்தாநீ கொடியைப் பிடி
https://twitter.com/writerpara/status/2233941503

6. எனிமா எனக்கில்லை ஏற்கெனவே அவர்வாங்கி
தனிமை வளையினிலேதவிக்கின்றார் – மினிமம்
நாலைந்துபேர்சொல்ல நான்கேள்விப்படுகின்றேன்
காலையிலே கெட்டசேதி காண்.
http://twitter.com/writerpara/status/2248407750

7. வேட்டைக்காரனுக்கு அப்புறம் நானென்று
கோட்டைக் கனவில் குடியிருந்தார் பேரரசு
ஆட்டையிலே நீயில்லை அப்படியே போவென்று
போட்டுடைத்தார் போக்கிரி இன்று

இன்றைய செய்தி. விஜயின் 50வது படத்தை பேரரசு இயக்கவில்லை. அதிக சம்பளம் கேட்டார் என்று அவரை விட்டுவிட்டு அயன் கேவி ஆனந்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாகக் கேள்விப்படுகிறேன். செய்தியை பாம் ஆக்க ஒரு சிறு முயற்சி;-)
http://twitter.com/writerpara/status/2248349037

8. கனடாகுளிர்பத்தி வெங்கட்டு அண்ணாச்சி பலநாள்
சொன்னகத கேட்டிருக்கேன் -கனவாத்தான்
போச்சேய்யா இங்க பொழப்பக் கெடுக்குதுபார்
டார்ச்சர் தாங்கலையே தல
http://twitter.com/writerpara/status/2248265138

9. எழுந்ததுமே கொளுத்துதுபார் வெய்யில் இன்னிக்கி
கிழிஞ்சிதுபோ கிருஷ்ண கிரி
http://twitter.com/writerpara/status/2248236835

10. பொங்கல் வடைக்குப் போயிருக்கா ரொருநண்பர்
திங்கஇது நேரமென் றுணர்.
http://twitter.com/writerpara/status/2247984928

11. ஆனியன் இன்னிக்கி அடித்து ஆடுதுபார்
வானிலை மாற்றம் கவனி.
http://twitter.com/writerpara/status/2247945347

12. புற்றுக்கு பயந்து புகலிடம் பலதேடி
சுற்றித் திரியுமோ பாம்பு?
http://twitter.com/writerpara/status/2247896110

13. சூப்பரய்யா சுவைகூட்ட வந்துநின்றீர்
பாப்புனைய எத்தனைபேர் பார்!
http://twitter.com/writerpara/status/2247827258

14. மாவாவின் மகத்துவம் நீயறிய மாட்டாயோ
ஜாவாஸ்க்ரிப்ட் போல அது.
http://twitter.com/writerpara/status/2247790439

15. கேஸ்போட வள்ளுவன் திரும்பி வரமாட்டான்
லூஸ்லவிடு குறள்வெண்பாம் நூறு.
http://twitter.com/writerpara/status/2247707040

16. வெண்பொங்கல் தின்றாலும் வெறும்கஞ்சி யென்றாலும்
வெண்பாம் போட செரிக்கும்.
http://twitter.com/writerpara/status/2248445058

17. செய்திதான் நான் சொன்னேன் சரியாப் புரியலியா
கய்தே கஸ்மாலம் கத்தாதே – மெய்தான்னு
டெய்லிதந்தி பாத்து தெரிஞ்சிக்கோ
ஒயிலாக நாளை வரும்.
http://twitter.com/writerpara/status/2248484752

18. அடடே மீனாக்சும் ஆட்டத்தில் இங்குண்டா
தடையில்லை வாமகனே தமிழ்கைமா செய்திடவே
இருகை குறைகிறது இருக்கிறாய் நீயென்றால்
ஒருகை பார்த்திடுவோம் நாம்
https://twitter.com/writerpara/status/2233760880

19. வெத்துச்சண்டைகள் வேண்டாம் சோதரனே
பத்துபாம்போட்டுவிட்டுப் போகப்பார்
அத்தனையும்/முத்தென்பதல்ல முழித்திருத்தலேமுக்யம்
விட்டுவா வெத்துறக்கம்வீண்
https://twitter.com/writerpara/status/2233724729

20. தூக்கம் எனச்சொல்லி தப்பித்தார் கொத்தனார்
பாக்கிப் பணியென்று பாய்ந்தார் பெனாத்தல்
வெண்பாம் விளையாட்டில் இத்தனை உள்குத்தா
நண்பா நல்லால்லை பார்
https://twitter.com/writerpara/status/2233628395

21. சொக்கா எங்கேநீ சோர்ந்தோடிப் போகாதே
பக்காத் திருடர்கள் இங்கென்னை -அக்கக்காய்
கழட்டிப் போட்டு கவிநாசம் செய்விக்க
அழைத்து வந்ததினைப் பார்
https://twitter.com/writerpara/status/2233469912

22. முப்பது செக்கண்டில் முத்தெடுக்க யார்வருவார்
இப்போது மணிபத்து என்னகத்தில் – தப்பில்லை
தளையற்றுப் போனாலும் களைமிக்கதானாலும்
விலையற்ற வெண்பாமை வை.
https://twitter.com/writerpara/status/2233395204


வெங்கட்

1. அய்யா சொல்றீங்க அப்பால இன்னுமென்ன
கையில் அடிச்சிருந்த ஆப்பைப் புடுங்கிட்டு
எளுதுறேன் கூடவே கொத்தும் பெனாத்தலும்
நளுவாம சொக்கனும் வா
https://twitter.com/donion/status/2247683876

2. நடால் தபால் இவைகூட தபால்
படால் விடாய் கிடாய் – அடுக்கியே
அடாசு பாடலாம் ஆனால் பயனேது
கடாசு கச்சடா இதை
https://twitter.com/donion/status/2247483335

3. பாராவும் கூப்பிட்டார் பாவெழுத ட்விட்டருக்கு
வாராய் வெங்கிட்டா நீயென-வெளிக்கிட்டு
காப்பு எழுதநான் குந்தினால் கைபிடித்து
ஆப்புஅடிக்கிறதே வேலை
https://twitter.com/donion/status/2247312202

4. மாகாளி மாதா கெடாவெட்டு பிடாரி
வாகாக குந்தும் அய்யனார் – நீலி
சூலி மாரியாயி சப்ஜாடா எல்லாரும்
காலி வெண்பாம் கேட்டு
https://twitter.com/donion/status/2248368879

5. மாவா என்றே மடிச்சுக் கொடுத்தார்
காமா சோமா எனக்குந்த ஆவல
டக்கர் அடித்து தலைசுற்றி எல்லாம்
மக்கர் ஆவுதே மாமு
https://twitter.com/donion/status/2248162269

6. வெள்ளி விளக்கு வைத்தால் தவறாது
சொல்லி வைத்தாற்போல் சோப்பு – டிவியில்
கள்ளி உனக்கேதும் காதில் விழுமோடி
கிள்ளி இழுக்கனுமோ சொல்
https://twitter.com/donion/status/2248046596

7. சிந்தியில் வெண்பா கிடையாது சத்தியா
பந்தியில் பால்கோவா போட்டாலும் மார்வாடி
முந்தி விலைகேட்பார் காண்
https://twitter.com/donion/status/2247893420

8. கரண்டி பிடிப்பதில் கஷ்டமில்லை நண்பா
முரண்டு பிடிப்பதில்லை நம்சமையல் – கரண்டடுப்பில்
திரண்டு வரும்பாலை இறக்காது விட்டு
சுரண்டித் தேய்த்தல் சுமை
https://twitter.com/donion/status/2247822349


சத்யராஜ்குமார்

1. வெண்பாம் எழுதாரை வெறுப்பாவே பார்த்தொதுக்கும்
விபரீதம் தாங்குமா ட்விட்டர்? ஒரு பாவும்
அறியாத படுபாவி என் போன்றோர்
இனி தேடுவார் ஜண்டு பாம்
https://twitter.com/ksrk/status/2243649123

2. கத்தி கம்பு வீச்சருவா குண்டுமழை பொழிஞ்சதுல
எங்க பாரு நிலமெல்லாம் ரத்தம்.
அதை எழுதினவர் மறந்தா நீருமா
மறப்பீரு? பாம் போட்டா கிடைக்குமே உதை.
https://twitter.com/ksrk/status/2244997385


சத்யா

1. என்முறை எங்கென ஓடோடி வந்திடின் ,
வன்முறை வீசுவார் பாங்காய் -ஆங்கவன் ,
சிந்தினிலே சந்தம் சிதறாமல் கோர்த்தெடுத்து,
சிந்தையிலே மகிழந்தாலது பா.
https://twitter.com/msathia/status/2239856536

2. பண்போடு நடந்துகொள பாசமாய் அழைத்திட்டார்
நண்பரே எனவழைத்து நயமாயப் பாவடிக்க
பல்லைப் பறக்கடிக்க பகன்றார் இன்னொருவர்
வெள்ளியன்று பிடித்ததோ சனி.
https://twitter.com/msathia/status/2241408591

3. பொதுவிடத்தில் நைட்டியோ டுலாவும் முதுமகளிர்,
அதுகண்டு புலம்பும்நீ அருவருப்பாய் கைலிபனியன்
வேஷத்தில் போய்வரின் வீம்பாய் இரண்டுமே ,
பேஷனாய் மாறும் பார்
https://twitter.com/msathia/status/2245577919

4. வெண்பா வெழுதவே வெட்டிடும் டிவிட்டர்
வெண்பாம் எழுதிடின் பண்பாய் பார்க்கும்
திண்ணமாய் பகர்வேன் நான்.
https://twitter.com/msathia/status/2247766326

5. பாட்டெல்லாம் நாமெழுத பாபாவோ
டேக்காக டிவிட்டரினில் சுட்டெடுத்து மேலாக
போட்டரே சூப்பர் பதிவு.
https://twitter.com/msathia/status/2248296745

6. மாவான்னு தேடினா மாறாம பிங்(bing)னிலே
பாராவின் பேர்வருது பார்.
https://twitter.com/msathia/status/2248071365


ஸ்ரீதர் நாராயணா

1. வெண்பாம் என்னும் வடிவம் ஏற்பானதா
எண்பாம் என்று சொன்னால் தீவிரவாதியா
உண்டாம் சிறை தண்டனை இது
தேவையா காண்டாம் சிலருக்கு காண்
https://twitter.com/SridharNarayana/status/2233957906

2. பத்து பா எழுதி பாக்கனுமா
சொல்றார் கத்து வா என்று
கூப்பிட்டு அனுப்பினாலும் செத்து போ
என்று திட்டிவிட்டு தத்து தா மூளை
https://twitter.com/SridharNarayana/status/2233990248

3. சுள்ளி பொறுக்க போன சுப்பம்மாள்
கள்ளிக் காட்டில் உள்ளே கர்ப்பமானாள்
எள்ளி நகைக்காமல் நீயில்லை என்று
கிள்ளி சத்தியம் செய்
https://twitter.com/SridharNarayana/status/2234031800

4. நடால் போட்டால் ஆடும் கூட்டம்
மூட்டால் முடங்கி விட்டால் பெடரரை
பெட்டால் பெரிதாக்கி விட்டால் இன்று
போட்டி இட்டால் இவனே வெற்றி
https://twitter.com/SridharNarayana/status/2242598940

5. பாலா பெரியவர் பாராட்டி சொன்னார்
கோலா குடித்து குஷாலா உலாவி
கூலாக சொன்னார் கூடாது ஆங்கிலம்
நாலாம் வரியில் சொன்னேன் நன்றி
https://twitter.com/SridharNarayana/status/2244556491


மீனாக்ஸ்

1. தூக்கம் வராமல் வெண்பாம் இயற்றினால்
காக்கும் கடவுளுக்கும் பொறுக்காதே – வீக்கம்
வரும்படி தர்மஅடி வாங்குகின்ற‌ அள‌வுக்கு
விருப்ப‌ம் இல்லையே என‌க்கு
https://twitter.com/m_meenaks/status/2233842007

2. சாத்தானைப் போலொருவன் வந்துநிண்ணு தந்தானே
…தா எனத்துவங்கும் வசை
https://twitter.com/m_meenaks/status/2248300995

3. எலைட்என்று எமைச்சொல்லி இன்புற்று மகிழ்வதில்
டிலைட் என்ன உமக்கு நண்பரே தளைதட்டும்
வெண்பா ஒன்றிரண்டு எழுதுகிறேன் பரிவோடு
பண்பாக நடந்து கொள்ளும்
https://twitter.com/m_meenaks/status/2240474047

4. வருகவென பிரியாவை சிரம்தாழ்த்தி வரவேற்று
த‌ருக உம்வெண்பாமை என்றேன் – உருகாதா
ப‌டிப்பவ‌ர்கள் ம‌ன‌மெல்லாம் உம்க‌வியைக் க‌ண்டு
இடிம‌ழையாய் க‌விதை பொழி
https://twitter.com/m_meenaks/status/2240204183

5. ரெடியா ஆட்டத்துக்கு என்றழைக்கும் நண்பா
படிதாண்டி அலுவலகம் வந்தபின்னே
துடியாக‌ அதிலேதான் என்கவனம் என்செய்ய
வாழ்வதற்கு நிதியளிப்பது அதுவல்லவோ!
https://twitter.com/m_meenaks/status/2239941441

6. உருவத்தில் குண்டு என்றுதான் இதுவரை
பருவத்தில் என்னைப் பலர்சொல்வார் – புருவத்தை
உயர்த்தி வெடிகுண்டா, நானா என்று
அயர்ந்து போனேன் நான்
https://twitter.com/m_meenaks/status/2234108522

7. மீனாட்சி வந்தபின்பு சொக்கரும் வருவாரே 😉
தானாக நடக்கும் எல்லாம் – நானாக‌
அழைக்கவா, அல்லது பார்த்துவிட்டுப் போகட்டும்
பிழைப்பை எனவிட வா
https://twitter.com/m_meenaks/status/2234004848

8. நாலுவரியில் வெண்பாம் எழுதும் நால்வருமே
காலுமேல் காலுபோட்டு உட்கார்ந்து வாலுண்டு
எனக்காட்டித் துள்ளுகிறோம் போலும் இதற்காக‌
மெனக்கெட்டு கண்விழித்து நான்!
https://twitter.com/m_meenaks/status/2233975817

9. விதிவலியது என்றுநான் கண்டடைந்தேன் இன்று
மதியினால் வெல்லவா முடியும்
சதிகார‌ சகட்வீட்டர் வெண்பாம் விளையாடும்
வெளியில் முகம்காட்ட வந்தது தவறு
https://twitter.com/m_meenaks/status/2233917239

10. டீலா அல்லது நோ-டீலா எனக்கேட்கும்
பீலா நிகழ்ச்சியைப் பாரீர் – லாலா
கடையல்வா வைப்போல் அரைமில்லியன் டால‌ர்கள்
கிடைத்தவன் அள்ளிச்சென் றான்!
https://twitter.com/m_meenaks/status/2233709946

11. தளையெல்லாம் வேண்டாமே தடைசெய்ய மனுச்செய்வோம்
சுளைசுளையாய் எழுதுக‌வெண் பாம்
https://twitter.com/m_meenaks/status/2248344911

14 தமிழறிஞர் பட்டியல்

In Books, Lists, Literature, Tamilnadu on ஏப்ரல் 9, 2009 at 3:23 முப

  • டாக்டர் மு வரதராசனார்
  • கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை
  • சொல்லின் செல்வர் டாக்டர் ரா பி சேதுப்பிள்ளை
  • தமிழ்த்தென்றல் திரு வி கல்யாணசுந்தரனார்
  • ரசிகமணி டி கே சிதம்பரநாத முதலியார்
  • வித்துவான் தியாகராச செட்டியார்
  • நற்றமிழ் உரை செய்த நல்லூர் ஆறுமுக நாவலர்
  • நாவலர் சோமசுந்தர பாரதியார்
  • பேரறிஞர் பரிதிமாற் கலைஞர் (வி கோ சூரியநாராயண சாஸ்திரியார்)
  • தமிழ்த் தாத்தா டாக்டர் உ வே சாமிநாதையர்
  • பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
  • தமிழ்க்கடல் மறைமலையடிகள்
  • மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  • பைந்தமிழ்க் காவலர் பாண்டித்துரைத் தேவர்

நாஞ்சில் நாடன் படித்ததிலே: பிடித்த தலை 10

In Books, Literature, Tamilnadu on ஏப்ரல் 7, 2009 at 2:31 பிப

  1. அப்பர் – தேவாரம்
  2. கம்பர் – இராமாயணம்
  3. திருமந்திரம்
  4. குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்
  5. முத்தொள்ளாயிரம்
  6. நகுலன் கவிதைகள்
  7. பிரமிள் கவிதைகள்
  8. சுந்தர ராமசாமி சிறுகதைகள்
  9. அசோகமித்திரன் சிறுகதைகள்
  10. அ மாதவன் கதைகள்

சிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள் 96

In Lists, Literature on பிப்ரவரி 19, 2009 at 11:29 முப

நன்றி: marabilakkiyam : Message: sitrilakkiyangaL 1-3 (was) [Marabilakkiyam] Re: pirabandham

பிரபந்தம் என்றால் என்ன

96 வகைச் செய்யுள் வகைப் பாடல்களின் தொகுப்பு

96 வகைச் சிற்றிலக்கியங்களுக்குப் பிரபந்தம் என்று பெயர். பிரபந்தம் என்றால் பொதுவாக ‘இசையோடு கூடியது’ என்று பொருள்.

‘சந்த பந்த முந்து விஞ்சை செஞ்சொலிற் பிரபந்த நந்து சங்க மங்கலம் பொருந்து தமிழ் பாடியே’
அருணகிரி

1) சாதகம்

2) பிள்ளைக்கவி

3) பரணி

4) கலம்பகம்

5) அகப்பொருள் கோவை

6) ஐந்திணைச் செய்யுள்

7) வருக்கக் கோவை

8) மும்மணிக் கோவை

9) அங்க மாலை

10) அத்தமங்கலம்: அட்டமங்கலம்

11) அணுராக மாலை: அநுராக மாலை

12) இரட்டை மணிமாலை

13) இணைமணி மாலை

14) நவமணி மாலை

15) நான்மணி மாலை: பாரதியின் விநாயக நான்மணிமாலை எடுத்துக்காட்டு.

16) நாம மாலை

17) பல்சந்த மாலை

18) பன்மணி மாலை

19) மணி மாலை

20) புகழ்ச்சி மாலை

21) பெருமகிழ்ச்சி மாலை

22) வருக்க மாலை

23) மெய்கீர்த்தி மாலை: மெய்க்கீர்த்தி மாலை

24) காப்பு மாலை

25) வேணிண் மாலை: வேனின் மாலை (வேனில் மாலை)

26) வசந்த மாலை

27) தாரகை மாலை

28) உற்பவ மாலை

29) தாணை மாலை

30) மும்மணி மாலை: வள்ளுவ மும்மணி மாலை தெரியுமா?

31) தந்தக மாலை: தண்டக மாலை

32) வீரவெற்சி மாலை: வீர வெட்சி மாலை

33) வெற்றிக் கரந்தை மஞ்சரி

34) போர்க்கெழு வஞ்சி: போர்க்கு எழு வஞ்சி என்று பிரித்தால் சட்டுன்னு புரியும்.

35) வரலாற்று வஞ்சி

36) செருக்கள வஞ்சி

37) காஞ்சி மாலை: காஞ்சி என்பது காஞ்சிப் பூவைக் குறிக்கும்

38) நொச்சி மாலை

39) உள்ளிணை மாலை: உழிஞை மாலை.

40) தும்பை மாலை

41) வாகை மாலை

42) ஆடோரண மஞ்சரி: வரதோரண மஞ்சரி

43) எண் செய்யுள்

44) தொகை நிலைச் செய்யுள்

45) ஒலியல் அந்தாதி

46) பதிற்றந்தாதி

47) நூற்றந்தாதி

48) உலா

49) உலாமடல்

50) வளமடல்

51) ஒரு பா ஒரு பக்து: ஒரு பா ஒரு ப·து.

52) இரு பா இரு பக்து: இருபா இரு ப·து. ஒருபது, இருபது என்றும் சொல்லலாம்.

53) ஆற்றுப் படை: திருமுருகாற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்று சங்க காலத்தில் தொடங்கி எங்க காலம் வரை ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.

54) கண்படை நிலை

55) துயில் எடை நிலை: துயிலெடை நிலை என்று சேர்த்து எழுதுவாங்க.

56) பெயர் இன்னிசை

57) ஊர் இன்னிசை

58) பெயர் நேரிசை

59) ஊர் நேரிசை

60) ஊர் வெண்பா

61) விளக்கு நிலை: லைட்டுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. விளக்குகிற நிலை.

62) புற நிலை

63) கடை நிலை

64) கையறு நிலை

65) தசாங்கப் பத்து

66) தசாங்கட்டியல்: தசாங்கத்தியல். தச அங்கத்து இயல்.

67) அரசன் விருத்தம்

68) நயனப் பாட்டு: நயனப் பத்து.

69) பயோதரப் பாட்டு: பயோதரப் பத்து

70) பாதாதி கேசம்

71) கேச, கேசாதி பாதம்: கேசாதி பாதம் (மனோன்மணீயத்துல ஒரு கேசாதி பாதம் வருது. எட்பூ ஏசிய நாசியாய் என்று ஓரிடம் வரும்.)

72) அலங்கார பணிசகம்: அலங்கார பஞ்சகம்

73) கைக்கிளை

74) மங்கல வெள்ளை

75) தூது

76) நாற்பது

77) குலமகன்: குழமகன்

78) தாண்டகம்: திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம் எல்லாம் எதில வருது?

79) பதிகம்

80) சதகம்

81) செவியறிவிரூ: செவியறிஉறூஉ

82) வாயுறை வாழ்த்து

83) புற நிலை வாழ்த்து

84) பவணிக் காதல்: பவனிக் காதல்

85) குறத்திப் பாட்டு

86) உளத்திப் பாட்டு: உழத்திப் பாட்டு

87) ஊசல்

88) எழு, கூற்றிருக்கை: எழுகூற்றிருக்கை. திருவெழுகூற்றிருக்கை தெரியுமா?

89) கடிகை வெண்பா

90) சிண்ணப்பூ: சின்னப் பூ (சின்னங்களைக் குறித்தது. சின்னது இல்லை.)

91) விருத்த இலக்கணம்

92) முது காஞ்சி

93) இயன்மொழி வாழ்த்து

94) பெருமங்கலம்

95) பெருங்காப்பியம்

96) சிறுகாப்பியம்: பெருங்காப்பியம், காப்பியம் என்றுதான் சொல்லுவாங்க.


பிரபந்தங்கள்‘ என்று பொதுவாகச் சொன்னாலும், சிற்றிலக்கியங்கள் என்றும் இவற்றைச் சொல்வதுண்டு. பத்தே பத்து பாடல்கள் முதல் ஒரு நானூறு, ஐநூறு, ஆயிரம் பாடல்கள் வரை அது பாட்டுக்குப் போகும். பல சமயங்களில் இந்தப் பிரபந்தங்களின் பெயர்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறேன்.

வச்சணந்தி மாலை இந்தப் பிரபந்தங்களுக்கான இலக்கணத்தைச் சொல்கிறது. ஆனாலும் ஒரு சில பிரபந்தங்களை வச்சணந்தி மாலையில் காண முடிவதில்லை.

1) சாதகம்:

ஜாதகம். திதி, வார, நட்சத்திர, யோக, கரண, ஓரை, கிரக நிலைகளை ஆராய்ந்து தலைவனுக்குச் சொல்லுதல் என்று அபிதான சிந்தாமணி சொல்கிறது.

2) பிள்ளைக் கவி:

3. பரணி :
போர் முறை மற்றும் பெரும்போர் செய்து வென்ற வீரன் பற்றிய பாடல் வகை என்றும் கூறுவர். ஆனால் பாட்டுடைத்தலைவன் தோல்வியுற்றவனாகவும் இருக்கலாம்.

பெயர்க்காரணம்:
காடு கிழவோள் பூத மடுப்பே தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப்
பாகு பட்டது பரணி நாட்பெயரே(திவாகரம்)

அதாவது யமனையும் காளியையும் தெய்வமாகப் பெற்ற நாள் மீன் பரணி. இப்பரணி நாளில் கூளிகள் (பேய்?!) கூழ் சமைத்து காளிக்கு படைப்பார்கள்.

உறுப்புகள்:
கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு ,காடு பாடியது, பேய்முறைப்பாடு போன்றவை பொதுவாக கலித்தாழிசைகளால் அமையும்,

உதாரணங்கள்:

  1. கலிங்கத்துப்பரணி
  2. தக்கயாகப்பரணி
  3. இரணியவதைப்பரணி
  4. கஞ்சவதைப்பரணி
  5. அஞ்ஞவதப்பரணி
  6. மோகவதைப்பரணி
  7. திருச்செந்திற்பரணி
  8. பாசவதைப்பரணி

Pillai Thamizh: 10 Stages of a Tamil Boy & Girl Kids

In Life, Lists, Literature on பிப்ரவரி 10, 2009 at 6:52 பிப

பிள்ளைக் கவி:

‘பில்லைத் தமில் பாடவந்தேன்; ஒரு பில்லைக்காகப் பாட வந்தேன்,’ என்று ஜேசுதாஸ் பாடுவாரே அதே அதுதான் இது. பிள்ளைத் தமிழ் என்றும், பிள்ளைக் கவி என்றும் சொல்வார்கள். ஒரு குழந்தை பிறந்தது முதல், வளர வளர ஒவ்வொரு நிலையிலும் செய்யும் காரியங்களையும், விளையாட்டுகளையும் சொல்வது. மொத்தம் பத்துப் பருவங்களைச் சொல்வது வழக்கம்.

ஆண் குழந்தையாய் இருந்தால்:

1. காப்பு. (எப்பவும் முதலில் ‘காப்பு’ சொல்லிட்டுதான் தொடங்கணும்.)

2. செங்கீரை. செங்கீரை என்பது ஒரு வகைக் கீரை. பிறந்த ஐந்து மாதத்தில் குழுந்தைக்குக் கழுத்து நிற்கும். மெல்ல, கீரையைப் போலத் தலையை எடுத்து இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைக்கும்; பார்க்கும். அப்படிப் பார்ப்பதை வருணித்துப் பாடுவார்கள். அப்படியில்லாமல், பெருமைகளை அடுக்கி, ‘இப்படிப்பட்டவனே, செங்கீரை ஆடுகவே,’ என்றும் சொல்வார்கள்.

பெரியாழ்வாருடைய முதல் திருமொழி ஓர் எடுத்துக்காட்டு. கழுத்தைப் பக்கத்துக்குப் பக்கம் திருப்பித் திருப்பிப் பார்ப்பது என்பதைத்தான் செங்கீரை ஆடுதல் என்று சொல்கிறார்கள். அழகா கீரைக் குருத்து போல ஆடுவது.

3. தால். தால் என்றால் நாக்கு. தாலை ஆட்டி ஒள ஒள ஒள ஒள ஒள ஒள ஆயி என்றெல்லாம் சப்தம் எழுப்பிப் பாடுவது தாலாட்டு. குழந்தையைத் தூங்க வைக்கப் பாடுவது.

4. சப்பாணி. சப்பாணி என்றால் ‘கைகளைக் கொட்டுவது’ என்று பொருள். பாணி என்றாலே கை என்பதுதான் பொருள். சக்கரபாணி என்றால் சக்கரக் கையன்.

தண்டபாணி என்றால், தண்டாயுதம் தரித்த கையன். (சப்பாணி என்றால் ‘கால்விளங்காதவன்’ என்று பொருள் வருமாறு சொல்லக் காரணம், ‘சப்பாணி மாடன்,’ என்றொரு பேய் வகையின் பெயர் அது. நொண்டிப் பேய். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை.) கொஞ்சம் வளர்ந்து எழுந்து உட்காரும் குழந்தை, கைகளைக் கொட்டும். அந்தப் பருவத்தைப் பாடுவது சப்பாணிப் பருவம்.

5. முத்தம்: குழந்தையை முத்தம் தரச் சொல்லிக் கேட்பது.

6. வாரானை: எழுந்து நடக்கத் தொடங்குகிறது குழந்தை. ‘வாவாவா வாவாவாவா,’ என்று ஒவ்வொரு அம்மாவும் தன்னை நோக்கி வரும்படியாகத் தன் குழந்தையைக் கை நீட்டிக் கூப்பிடுவாள் இல்லையா, அந்தப் பருவம் இது.

7. அம்புலி: நிலாவைக் காட்டிச் சோறூட்டுதல்.

8. சிறுபறை: கையில் சின்னதாக ஒரு மேளத்தையும், இன்னொரு கைக்கு ஒரு குச்சியையும் (குணில் என்று சொல்வார்கள்) கொடுத்துவிட்டால், அதுபாட்டுக்கு கொட்டிக்கொண்டு விளையாடும்.

சப்பாணி கொட்டுவது, சிறுபறை கொட்டுவது எல்லாமே, சின்னக் கைகளுக்குத் தரப்படும் பயிற்சிகள்தாம். மெல்ல வலுவடைய.

9. சிற்றில்: கொஞ்சம் வளர்ந்த குழந்தை மணலால் வீடு கட்டி விளையாடுவதைச் சொல்வது.

10. சிறுதேர்: எந்தக் குழந்தைக்கும் வண்டி உருட்டப் பிடிக்கும். (சைக்கிள் சக்கரத்தையாவது உருட்டும் என் காலத்துக் குழந்தைகள். இப்போ எலக்ட்ரானிக் ரகம்.) சின்னதாக ஒரு தேர் பண்ணிக் கொடுத்துவிட்டால் அதை இங்கேயும், அங்கேயும் இழுத்துக் கொண்டு நடை பழகும். அந்தப் பருவம் இது.

பெண் குழந்தைகள் என்றால் கடைசி மூன்றுக்குப் பதிலாக
8. கழங்கு ஆடுதல்,
9. அம்மானை ஆடுதல்,
10. ஊஞ்சல் ஆடுதல்
என்று வரும்.

சிற்றில் பருவம் பெண் குழந்தைகளுக்கும் உண்டு.

இந்தப் பத்துதான் என்றில்லை. அச்சோப் பருவம், காக்கையை அழைக்கும் பருவம் என்றெல்லாம் பெரியாழ்வாரைப் போல் விரித்துக் கொள்ளலாம். மேலே சொல்லியிருக்கும் பத்தும் ஒரு guide line மாதிரி. இதற்கு அடுத்தது இது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் கிடையாது. காப்பில் தொடங்க வேண்டும். அம்புட்டே. பொருத்தமாக எதையும் விரித்தோ, மாற்றியோ பண்ணிக் கொள்ளலாம்.

இப்போ, நம்ம காலத்துக் குழந்தைக்கு என்னென்ன பத்துப் பருவங்களைச் சொல்லலாம்? டயாபர் பருவம், பெராம்புலேட்டர் பருவம்….. என்று தொடங்கி, கம்ப்யூட்டர் கேம்ஸ் பருவம் என்று முடிக்கலாம். 🙂

நன்றி: marabilakkiyam : Message: sitrilakkiyangaL 1-3 (was) [Marabilakkiyam] Re: pirabandham

பசி வந்தால் பத்தும் பறக்கும்

In Life, Literature on பிப்ரவரி 3, 2009 at 7:07 பிப

நல்வழி‘ :: ஔவையார் பாடல்

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.

1. மானம்: honour and respect

2. குலம்: birth

3. கல்வி: education

4. வன்மை: caring

5. அறிவுடைமை: wisdom

6. தானம்: giving

7. தவம்: penance

8. உயர்ச்சி: high status

9. தாளாண்மை: effort

10. காமம்: sexuality

நன்றி: agathiyar : Messages : 7778-8999 of 46699