Snapjudge

Posts Tagged ‘Reasons’

Why do we read Fiction?

In Books, Literature on செப்ரெம்பர் 30, 2009 at 1:52 பிப

உதவி: புள்ளி – சித்ரன்

கதைகளோ, நாவல்களோ படிப்பது என்பது

  1. சும்மா பொழுதுபோக்கிற்காகவா?
  2. குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்து நடைக்கான ஆராதனை?
  3. மனதைக் கொள்ளைகொண்ட படைப்பாளியின் நடை மேல் எழும் கவர்ச்சி கலந்த ஆர்வமா?
  4. இலக்கிய தாகமா?
  5. கமர்ஷியல் ஆசையா?
  6. கதையில் வரும் சம்பவங்களோடு தன் வாழ்வில் எதையாவது பொருத்திப் பார்த்து மகிழ்ச்சி அல்லது துக்கப்படுவதற்கா?
  7. தன் வாழ்வுக்கெட்டாத, கற்பனை செய்து பார்க்க இயலாத நிகழ்வுகளை கதைகளில் படித்துக் களிக்கிற திருப்தியா?
  8. பொது அறிவு வளர்ப்பதற்கா?

Sun TV Athirady Singer: Sakthi Loganathan Special

In Tamilnadu, TV on ஏப்ரல் 15, 2009 at 9:33 முப

சன் டிவி அதிரடி சிங்கரில் வெல்ல தேவையான பத்து தகுதி:

sun-tv-athirady-singer-judges-serials-programmes-contest

  1. வாரிசு: தாத்தாவின் பெயர் ‘திருச்சி லோகநாதன்‘ என்றிருக்க வேண்டும்.
  2. முயற்சி: ஏ ஆர் ரெஹ்மான் பாடல் எல்லாம் எடுத்துக் கொள்ளாமல் எழுபதுகளின் எளிமையான sakthy-loganathan-athiradi-singer-shakthi-winnersமெட்டுகளை பாடிவிட வேண்டும்.
  3. தோல்வி: விஜய் டிவி ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு தோற்றிருக்க வேண்டும்.
  4. ஜாலி: இந்தப் போட்டி எல்லாம் சின்னத் திரை சீரியல் போல் அனுபவிக்கணும்; வீற்றிருக்கும் நடுவர் கூட ஆராய மாட்டார்.
  5. கவனிக்கவைத்தல்: கவனிக்க வேண்டிய தயாரிப்பாளர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால், கவனம் கோருமாறு பெர்ஃபார்மனஸ் இல்லாவிட்டாலும் நடுவர்களால் கவனிக்கப்படுவார்கள்.
  6. கலவை: எத்தனை தமிழ்த் தொலைக்காட்சி வந்தாலும் அதே நடிகர்களைக் கொண்டு ஒரே மாதிரி நெடுந்தொடர் வருகிறது அல்லவா? அங்கே போய் வெரைட்டி கேளுங்க! அவர்களை நிறுத்த சொல்லுங்க!
  7. நம்பிக்கை: ஜெயிச்சுடுவோங்கிற உடல் மொழி தானா வரதில்ல… அதற்குரிய ஸ்டேட்டஸ், பலம், தராதரம் எல்லாம் இருக்கில்ல!
  8. சிபாரிசு: சிசு என்பதன் விரிவாக்கம்தான் சிபாரிசு.
  9. அதிரடியின்மை: பங்குனி உற்சவத்தில் கணபதியும் சிவனும் பார்வதியும் முருகனும் நடுநாயகமாக உலா வந்தாலும் கூடவே சண்டிகேஸ்வரர் தொற்றிக் கொள்வார். அது மாதிரிதாங்க இது.
  10. தையற்கலை: சிங்கர் தையல் மெசின் இருக்கும். அதை பெண்கள் வீட்டில் வைத்துக் கொண்டு அவ்வப்போது தைப்பதாக பாவ்லா காட்டுவார்கள். அது போல், ‘சிங்கர்’ போட்டில் பாவ்லா காட்டியதால் அதிரடி சிங்கர் – சக்தி!

10 Reasons to be Proud about India

In India, Questions on மார்ச் 10, 2009 at 8:49 பிப

  1. நிஜ வாழ்க்கை நாயகர்கள் (காட்டாக புத்தர், காந்தி)
  2. மத நல்லிணக்கம்
  3. இயற்கை அழகு, வனம், மலை
  4. மொகஞ்சதாரோ காலத்தில் துவங்கிய சரித்திரம்
  5. யானை, மயில்
  6. பூஜ்யம், வான சாஸ்திரம், ஆரோக்கிய வாழ்க்கையை ஒட்டிய அறிவியல் கலாச்சாரம், கட்டிடக் கலை போற்றும் கோவில்
  7. உணவு
  8. சினிமா, இசை
  9. படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம், விடாமுயற்சியில் நம்பிக்கை, உயரத் துடிக்கும் ஆர்வத்தின் மேல் பிடிப்பு தரும் குணாம்சங்கள்.
  10. இந்தியக் களையுடன் தென்பட்டால், ‘ஆர் யூ ஃப்ரம் இந்தியா’ என்று உரிமை கலந்த நட்போடு அறிமுகம் செய்து கொள்ளும் அன்னியோன்யம்.