Snapjudge

Posts Tagged ‘Poets’

Some Vital Books from 2014

In Books, Literature on ஜனவரி 23, 2015 at 4:24 பிப

Source: What to Read Now — Some Vital Books from 2014 | The American Poetry Review

  1. ]Exclosures[, Emily Abendroth, Ahsahta Press, 2014
  2. Veiled Spill: A Sequence, Jan Clausen, GenPop Books 2014
  3. Ecodeviance: (Soma)tics for the Future Wilderness, CA Conrad, Wave Books 2014
  4. The Poem She Didn’t Write and Other Poems, Olena Kalytiak Davis, Copper Canyon 2014
  5. Blood Lyrics, Katie Ford, Graywolf Press, 2014
  6. In a Landscape, John Gallaher, BOA Editions, 2014
  7. The Arrow, Lauren Ireland, Coconut Books, 2014
  8. Patter, Douglas Kearney, Red Hen, 2014
  9. Red Juice, Hoa Nguyen, Wave Books, 2014
  10. Citizen: An American Lyric, Claudia Rankine, Graywolf, 2014
  11. The Pedestrians, Rachel Zucker, Wave Books, 2014
Also Mentioned
  • You Animal Machine: The Golden Greek, Eleni Sikelianos, Coffee House Press, 2014
  • Gephryomania, TC Tolbert, Ahsahta, 2014
  • MOTHERs, Rachel Zucker, Counterpath Press, 2014

National Book Critics Circle Finalists – 2014

In Books, Literature, USA on ஜனவரி 23, 2015 at 4:19 பிப

Source: National Book Critics Circle: NATIONAL BOOK CRITICS CIRCLE ANNOUNCES FINALISTS; Sandrof Award to Toni Morrison – Critical Mass Blog

AUTOBIOGRAPHY

  1. Blake Bailey, The Splendid Things We Planned: A Family Portrait (W.W. Norton & Co.)
  2. Roz Chast, Can’t We Talk About Something More Pleasant? (Bloomsbury)
  3. Lacy M. Johnson, The Other Side (Tin House)
  4. Gary Shteyngart, Little Failure (Random House)
  5. Meline Toumani, There Was and There Was Not (Metropolitan Books)

 

BIOGRAPHY

  1. Ezra Greenspan, William Wells Brown: An African American Life (W.W. Norton & Co.)
  2. S.C. Gwynne, Rebel Yell: The Violence, Passion and Redemption of Stonewall Jackson (Scribner)
  3. John Lahr, Tennessee Williams: Mad Pilgrimage of the Flesh (W.W. Norton & Co.)
  4. Ian S. MacNiven, “Literchoor Is My Beat”: A Life of James Laughlin, Publisher of New Directions (Farrar, Straus & Giroux)
  5. Miriam Pawel, The Crusades of Cesar Chavez: A Biography (Bloomsbury)

 

CRITICISM

  1. Eula Biss, On Immunity: An Innoculation (Graywolf Press)
  2. Vikram Chandra, Geek Sublime: The Beauty of Code, the Code of Beauty (Graywolf Press)
  3. Claudia Rankine, Citizen: An American Lyric (Graywolf Press)
  4. Lynne Tillman, What Would Lynne Tillman Do? (Red Lemonade)
  5. Ellen Willis, The Essential Ellen Willis, edited by Nona Willis Aronowitz (University of Minnesota Press)

 

FICTION

  1. Rabih Alameddine, An Unnecessary Woman (Grove Press)
  2. Marlon James, A Brief History of Seven Killings (Riverhead Books)
  3. Lily King, Euphoria (Atlantic Monthly Press)
  4. Chang-rae Lee, On Such a Full Sea (Riverhead Books)
  5. Marilynne Robinson, Lila (Farrar, Straus and Giroux)

 

GENERAL NONFICTION

  1. David Brion Davis, The Problem of Slavery in the Age of Emancipation (Alfred A. Knopf)
  2. Peter Finn and Petra Couvee, The Zhivago Affair: The Kremlin, the CIA, and the Battle over a Forbidden Book (Pantheon)
  3. Elizabeth Kolbert, The Sixth Extinction: An Unnatural History (Henry Holt & Co.)
  4. Thomas Piketty, Capital in the Twenty-First Century, translated from the French by Arthur Goldhammer (Belknap Press/Harvard University Press)
  5. Hector Tobar, Deep Down Dark: The Untold Stories of 33 Men Buried in a Chilean Mine, and the Miracle that Set Them Free (Farrar, Straus & Giroux)

POETRY

  1. Saeed Jones, Prelude to Bruise (Coffee House Press)
  2. Willie Perdomo, The Essential Hits of Shorty Bon Bon (Penguin Books)
  3. Claudia Rankine, Citizen: An American Lyric (Graywolf Press)
  4. Christian Wiman, Once in the West (Farrar, Straus & Giroux)
  5. Jake Adam York, Abide (Southern Illinois University Press)

 

NONA BALAKIAN CITATION FOR EXCELLENCE IN REVIEWING: Alexandra Schwartz

JOHN LEONARD PRIZE: Phil Klay, Redeployment (Penguin Press)

 

2014 Lannan Literary Awards and Fellowships: Author Recognitions by NYRB

In Books, Literature, USA on ஜனவரி 23, 2015 at 4:07 பிப

Lannan_NYRB_Ad_Awards_Fellowships_2014_Writers_Authors_Books_Fiction_Essays_Opinions

Source: Literary Awards by Year – Lannan Foundation

  1. Steve Erickson, 2014, Award, Lifetime
  2. Mitchell S. Jackson, 2014, Fellowship, Fiction
  3. Adrian Matejka, 2014, Fellowship, Poetry
  4. Jamaal May, 2014, Fellowship, Poetry
  5. Jill McDonough, 2014, Fellowship, Poetry
  6. Claudia Rankine, 2014, Award, Poetry
  7. Joseph Stroud, 2014, Award, Lifetime

Cultural Freedom awards and fellowships

Promising Tamil Writers: Nanjil Nadan picks Potential Literature Stars

In Books, Literature, Tamilnadu on ஜூன் 6, 2014 at 7:39 பிப

”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?”

இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன்.

  1. சயந்தன்
  2. தமிழ்நதி
  3. இளங்கோ
  4. குமாரசெல்வா
  5. வா.மு.கோமு
  6. மு.ஹரிகிருஷ்ணன்
  7. ஜே.பி.சாணக்யா
  8. கே.என்.செந்தில்
  9. எஸ்.செந்தில்குமார்
  10. பா.திருச்செந்தாழை
  11. என்.ஸ்ரீராம்
  12. தூரன் குணா
  13. சந்திரா
  14. இளஞ்சேரல்
  15. அ.வெண்ணிலா
  16. லக்ஷ்மி சரவணக்குமார்
  17. கட்டுரைகள் — மீனா
  18. தி.பரமேசுவரி,
  19. ச.விசயலட்சுமி
  20. கவிஞர்களில் உமா மகேஸ்வரி
  21. குட்டி ரேவதி
  22. லீனா மணிமேகலை
  23. சுகிர்தராணி
  24. சக்தி ஜோதி
  25. சாம்ராஜ்
  26. லிபி ஆரண்யா
  27. இசை
  28. இளங்கோ கிருஷ்ணன்

Nanjil_picks_Writers

85 இந்திய இலக்கியச் சிற்பிகள்: சாகித்திய அகாதெமி

In Lists, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 17, 2012 at 8:27 பிப

இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறைந்த இலக்கிய அறிஞர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை வெளியிட்டுள்ளோம்.

  1. வாணிதாசன்
  2. முடியரசன்
  3. ஜெகசிற்பியன்
  4. தமிழவேள் உமாமகேசுவரனார்
  5. கா. அப்துல்கபூர்
  6. தி.கோ.சீனிவாசன்
  7. கா. சுப்பிரமணிய பிள்ளை
  8. கெ.என். சிவராஜ பிள்ளை
  9. உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை
  10. ஆனந்தரங்கப்பிள்ளை
  11. புலவர் குழந்தை
  12. பா. வே. மாணிக்க நாயக்கர்
  13. ஆர். சண்முகசுந்தரம்
  14. சி. இலக்குவனார்
  15. கா. அப்பாத்துரை
  16. மா. இராசமாணிக்கனார்
  17. அ.சிதம்பரநாதச் செட்டியார்
  18. வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்
  19. டி.எஸ். சொக்கலிங்கம்
  20. சதாசிவ பண்டாரத்தார்
  21. சே.ப.நரசிம்மலு நாயுடு
  22. வ.சுப. மாணிக்கம் (தமிழ் அறிஞர்)
  23. த.நா. குமாரஸ்வாமி (தமிழ் கதாசிரியர்)
  24. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
  25. ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
  26. பி.ஸ்ரீ. ஆச்சார்யா (பி.ஸ்ரீ) (தமிழ் அறிஞர்)
  27. கி.வா. ஜகந்நாதன் (தமிழ் கதாசிரியர்)
  28. வெ. சாமிநாத சர்மா (தமிழ் கதாசிரியர்)
  29. தொல்காப்பியர்
  30. ஒளவையார்
  31. கம்பன் (தமிழ் மகாகவி)
  32. மாணிக்கவாசகர் (தமிழ் சைவ கவிஞானி)
  33. பெரியாழ்வார் (ஆழ்வார்களில் ஒருவர்)
  34. புதுமைப்பித்தன் (சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
  35. ரசிகமணி டி.கே. சிதம்பநாத முதலியார் (சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்)
  36. வேதநாயகம் பிள்ளை
  37. கு.பா. ராஜகோபாலன் (தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
  38. ஆண்டாள் (பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்)
  39. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
  40. மறைமலை அடிகள்
  41. திரு.வி.க. (தமிழ் அறிஞர்)
  42. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தமிழ் பாடலாசிரியர்)
  43. அ. மாதவையா
  44. ச.து.சு. யோகியார் (தமிழ்க் கவிஞர்)
  45. நாவலர் சோமசுந்தர பாரதியார் (தமிழ் ஆராய்ச்சியாளர்)
  46. நா. பார்த்தசாரதி (தமிழ்க் கதாசிரியர்)
  47. க.நா. சுப்ரமண்யம் (நாவலாசிரியர்.)
  48. ம.ப. பெரியசாமித் தூரன்
  49. அகிலன் (சிறந்த நாவலாசிரியர்)
  50. வ.வே. சு. ஐயர் (தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி)
  51. நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (காந்தியக் கவிஞர்)
  52. பாரதியார்
  53. தமிழ்த் தாத்தா (உ.வே. சாமிநாதஐயர்)
  54. அறிஞர் அண்ணா
  55. கல்கி
  56. மு.வ. (மு.வரதராசனார்) ( தமிழ்ப் பேரறிஞர்)
  57. விந்தன்
  58. நா.வானமாமலை
  59. சோமலெ
  60. உமறுப்புலவர் (இஸ்லாமியக் கம்பர் எனப் புகழப்படுவர்.)
  61. செய்குத் தம்பிப் பாவலர்
  62. வை.மு.கோதைநாயகி அம்மாள்
  63. தேவநேயப் பாவாணர்
  64. ந. பிச்சமூர்த்தி
  65. ஜீவ நாரண துரைக்கண்ணன்
  66. உடுமலை நாராயண கவி
  67. கோபாலகிருஷ்ண பாரதி
  68. குலசேகராழ்வார்
  69. தி. ஜானகிராமன்
  70. திரிகூடராசப்பக்கவிராயர்
  71. வ.உ. சிதம்பரனார்
  72. மா.பொ.சிவஞானம்
  73. பி. எஸ்.ராமையா
  74. பெரியார் ஈ.வெ.ரா
  75. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
  76. திருஞானசம்பந்தர்
  77. பரஞ்சோதி முனிவர்
  78. கு.அழகிரிசாமி
  79. க. அயோத்திதாச பண்டிதர்
  80. அழ. வள்ளியப்பா
  81. அருணகிரிநாதர்
  82. குமரகுருபரர்
  83. குன்றக்குடி அடிகளார்
  84. தேசிக விநாயகம் பிள்ளை
  85. காரைக்காலம்மையார்

S Ramakrishnan Speech Snippets: நீயா நானா முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை

In Books, Lists, Literature on ஜூன் 21, 2012 at 3:28 முப

முந்தைய எஸ் ராமகிருஷ்ணன் வீடியோ பதிவுகள்:

* Acceptance speech by EssRaa at Canada: Tamil Literary Garden Iyal Virudhu: Award Meeting for S Ramakrishnan

* Interview of S Ramakrishnan: Question and Answer with Tamil Writers and Notable Thinkers

* S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

1. ஷேக்ஸ்பியரின் மாக்பெத் நாடகம் – தமிழச்சி தங்கபாண்டியன் நடிக்கிறார்

2. நீயா நானா – புத்தக வாசிப்பு ஏன் அவசியம்?

3. சென்னை புத்தக கண்காட்சியில் லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் இதழின் புத்தக வெளியீடு

4. தமிழ் கவிதைச் சூழல் – நூல்களும் கவிஞர்களும்: தமிழ்நாடு & ஈழம்

5. அன்னா கரேனினா – கரீநிநா கதையும் ஃபேஸ்புக் கலாச்சாரமும்

Lyricist Arivumathi picks his Top 10 Books for 2012

In Books, Srilanka, Tamilnadu on ஜனவரி 17, 2012 at 2:28 முப

கவிஞர் அறிவுமதி பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:

1. பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் – பழ.நெடுமாறன்

2. மனித சமூக சாரம் – ஜார்ஜ் தாம்சன்

3. அருகன் – தமிழச்சி தங்கப்பாண்டியன்

4. அன்னை வயல் – சிங்கிஸ் ஜத்மாத்தவ்

5. ஜமீலா – சிங்கிஸ் ஜத்மாத்தவ்

6. இவன் தான் பாலா – ரா.கண்ணன்

7. தஞ்சை பெரியகோவிலின் ஓவியங்கள் – தஞ்சை பல்கலைக்கழகம்

8. பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்

9. வீழ்வேனென்று நினைத்தாயோ? – சி.மகேந்திரன்

10. உறவுகள் – நா.முத்துக்குமார்

Manushya Puthiran picks his top books for 2012

In Books, Tamilnadu on ஜனவரி 16, 2012 at 5:12 பிப

கவிஞர் மனுஷ்ய புத்திரன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்

1. கரமஸோவ் சகோதரர்கள் – தஸ்தயேவஸ்கி

2. கமல் நம் காலத்து நாயகன்

3. நொறுங்கிய குடியரசு – அருந்ததி ராய்

4. ஒன்றுக்கும் உதவாதவன் – அ. முத்துலிங்கம்

5. பாலற்ற பொற்பால் – ஜெர்மெய்ன்கிரீர் (தமிழில் ராஜ் கௌதமன்)

6. இருத்தலியமும் மார்க்சியமும் – எஸ்.வி.ராஜதுரை

7. கதைக் கருவூலம்

8. விபூதி பூஷண் பந்தோபாத்யாயவின் `ஆரண்யக்’ – வனவாசி – விபூதி பூஷண்: த.நா. குமாரசாமியால் `வனவாசி’ : 1968ல் சாகித்ய அகாதமியால் பிரசுரிக்கப்பட்டது.

9. கால்கள் – அபிலாஷ்

10. புத்தனாவது சுலபம் – எஸ்.ராமகிருஷ்ணன்

32 Women Writers in Tamil: Female Authors from Tamilnadu

In Literature, Tamilnadu on மார்ச் 3, 2011 at 11:12 பிப

புத்தகம் பேசுது - பெண்கள் சிறப்பிதழ்: தமிழ் எழுத்தாளர்கள்

ஒளிப்படங்கள்: புகைப்படங்கள்

சிவரமணி கவிதைகள்

In Books, Srilanka on செப்ரெம்பர் 3, 2009 at 3:00 முப

நன்றி: சொல்லாத சேதிகள் :: பத்து பெண் கவிஞர்களின் இருபத்துநான்கு கவிதைகள்

1. அவமானப்படுத்தப்பட்டவள்

(1990: தற்கொலைக்கு ஒரு வருடம் முன்)

Selvi-Sivaramani-Eelam-Tamils-LTTE-Podichi-Peddai.netஉங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்,
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்
என்னுடைய நாட்களை நீங்கள்
பறித்துக் கொள்ள முடியாது.
கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்
உறுதி பெற்றது.

நிராகரிக்கப்பட முடியாதவள் நான்
இனியும் என்ன
தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்
நான்
பிரசன்னமாயுள்ளேன்
என்னை
அவமானங்களாலும்
அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்

ஆனால்,
உங்கள் எல்லோரினதும்
நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது
ஒரு அழுக்குக் குவியலாய்
பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை
அசுத்தம் செய்கிறேன்.

என்னுடைய நியாயங்கள்
நிராகரிக்கப்படும் வரை
உங்களின் எல்லாப் பாதைகளும்
அழுக்குப் படிந்தவையே.


2. முனைப்பு

பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.

என்னை
மேகத்திற்குள்ளும்
மண்ணிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர் .
அவர்களின்
குரோதம் நிறைந்த பார்வையும்
வஞ்சகம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெரித்தன.

எனது
ஆசைகள் இலட்சியங்கள்
சிதைக்கப்பட்டன.
அவர்களின் மனம்
மகிழ்ச்சி கொண்டது.
அவர்களின் பேரின்பம்
என் கண்ணீரில்தான்
இருக்கமுடியும் .

ஆனால் என் கண்களுக்கு
நான் அடிமையில்லையே
அவர்களின் முன்
கண்ணீரக் கொட்ட

என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என்தலை
குனிந்து போனதாய்க்
கனவு கண்டனர் .

ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன் .


3. எமது விடுதலை

நாங்கள் எதைப் பெறுவோம்
தோழர்களே
நாங்கள் எதைப் பெறுவோம்?
இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும்
சுமந்து வந்தோம்
நாங்கள் எதைப் பெறுவோம்?

விடுதலை என்றீர்
சுதந்திரம் என்றீர்
எம் இனம் என்றீர்
எம் மண் என்றீர்

தேசங்கள் பலதிலும்
விடுதலை வந்தது இன்று
சுதந்திரம் கிடைத்தது
எனினும்
தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப் பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சைப் பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை?

நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்;
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!

தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை.


4. வையகத்தை வெற்றி கொள்ள

என் இனிய தோழிகளே
இன்னுமா தலைவார
கண்ணாடி தேடுகிறீர்?
சேலைகளைச் சரிப்படுத்தியே
வேளைகள் வீணாகின்றன.
வேண்டாம் தோழிகளே
வேண்டாம்.

காதலும் கானமும்
எங்கள் தங்கையர் பெறுவதற்காய்
எங்கள் கண்மையையும்
இதழ்பூச்சையும்
சிறிதுகாலம் தள்ளிவைப்போம்.
எங்கள் இளம் தோள்களில்
கடமையின் சுமையினை
ஏற்றிக் கொள்வோம்.

ஆடையின் மடிப்புகள்
அழகாக இல்லை என்பதற்காக
கண்ணீர் விட்ட நாட்களை
மறப்போம்.
வெட்கம் கெட்ட
அந்த நாட்களை
மறந்தே விடுவோம்.

எங்கள் தோழிகள் பலரும்
உலகில் இன்று
கண்மையையும் இதழ்பூச்சையும்
மறது போயினர்.
ஆனால்
தமது மணிக்கரத்தைப்
பிணைத்த விலங்கை
அறுத்தனர்.

வாருங்கள் தோழிகளே
நாங்களும் வழிசெய்வோம்.
மண்ணால் கோலமிட்டு
அழித்தது போதும்.
எங்கள் செந்நீரில் கோலமிட்டு
வாழ்க்கைக் கோலத்தை
மாற்றி வரைவோம்
வாருங்கள் தோழிகளே.

சரிகைச் சேலைக்கும்
கண்ணிறைந்த காதலர்க்கும்
காத்திருந்த காலங்கள்!
அந்த வெட்கம் கெட்ட
காலத்தின் சுவடுகளை
அழித்து விடுவோம்.

புதிய வாழ்வின்
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்
வாருங்கள் தோழிகளே.


5. யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்

….நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை
இல்லா தொழித்தது.

எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங்கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போனார்கள்….

எங்கள் குழந்தைகள்
திடாரென்று
வளர்ந்தவர்களாகி விடுகிறார்கள்


6. எழுதிய ஆண்டு: 1983

நன்றி: எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்

புத்திசாலித்தனமான
கடைசி மனிதனும்
இறந்து கொண்டிருக்கின்றான்…
கேள்வி கேட்பதற்கான
எல்லா வாசலும் அறையப்பட்ட பின்னர்
இருட்டின் உறுதியாக்கலில்
உங்கள் குழந்தைகளை விட்டுச் செல்லுங்கள்
அவர்களுக்கு பின்னால் எதுவுமே இல்லை
சேலை கட்டிக் காப்பாற்றிய
சில நாகரீகங்களைத் தவிர…

வினாக்களுக்குரிய விடைகள் யாவும் அச்சடிக்கப்ட்டுள்ளன
முடிவுகளின் அடிப்படையில்
வெற்றி பெற்றவர் வரிசையில்
யாரை இங்கே நிறுத்துதல் வேண்டும்?
தேசத்தின் புத்திசாலிகள் யாவரும்
சந்திக்குச் சந்தி
தெருக்களில் காத்துள்ளனர்

வினாக்களும் விடைகளும் முடிவுகளும்
யாவருக்கும் முக்கியமற்றுப் போனது
“மனிதர் பற்றிய மனிதத்தின் அடிப்படையளில்
வாழ்வதை மறந்தோம்” என்பது
இன்றைய எமது
கடைசிப் பிரகடனமாயுள்ளது.

கவிதை வெறிமுட்டி
நான்
கவிஞன் ஆகவில்லை
என்னை வெறிமூட்ட
இங்கு
ஓராயிரம் சம்பவங்கள்
அன்று நான்
கவிதைகள் வரையவில்லை
என்னிடம் இருந்தது
கறுப்பு மையே
இன்றோ சிவப்பு மையால்
வரைகின்றேன்
என் உள்ளத்தை
உன் உள்ளத்தை
தோல்வியுறா தர்மத்தின்
இறுதித் தீர்ப்புகளை

நானொரு பிறவிக்
கவிஞன் அல்ல
என்னை வெறிமூட்ட
இங்கு
ஓராயிரம் சம்பவங்கள்
நானோ
இருபதாம் நூற்றாண்டின்
வசந்தத் தென்றல் அல்ல.

ஓரு சிறிய குருவினுடையதைப் போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஓவ்வொரு குருதி தோய்நத
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்.


7. எனது பரம்பரையம் நானும்

ஒவ்வொருத்தனும்
தனக்குரிய சவப்பெட்டியை சுமந்தபடியே
தனது ஒவ்வொருவேளை
உணவையும் உண்கிறான்

தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும்
தீர்க்கதரிசிகளுக்கும் உரிய
இடமும் காலமும் போதனையும்கூட
இல்லாதொழிக்கப்பட்டு விட்டது

கூனல் விழுந்த எம்
பொழுதுகளை
நிமிர்த்ததக்க
மகிழ்ச்சி எதுவும்
எவரிடமும் இல்லை

எல்லாவற்றையும்
சகஜமாக்கிக் கொள்ளும்
அசாதாரண முயற்சியில்
தூங்கிக் கொண்டும் இறந்து கொண்டும்
இருப்பவர்களிடையே

நான்
எனது நம்பிக்கைகளை
தோற்றுக் கொண்டிருக்கிறேன்.


8. எனக்கு உண்மைகள் தெரியவில்லை
பொய்களை கண்டுபிடிப்பதும்
இந்த இருட்டில்
இலகுவான காரியமில்லை…
தெருவில் அவலமும் பதற்றமுமாய்
நாய்கள் குலைக்கும் போது
பூட்டப்பட்ட கதவுகளை
மீண்டும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு
எல்லோரும் தூங்கப்போகும் நேரத்தில்
நான்
நாளைக்கு தோன்றுகின்ற சூரியன் பற்றி
எண்ண முடியாது
இரவு எனக்கு முக்கியமானது
நேற்றுப் போல்
மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய
இந்த இருட்டு
எனக்கு மிகவும் பெறுமதியானது.