Snapjudge

Posts Tagged ‘PMK’

பா.ம.க. என்றவுடன்?

In Lists, Politics, Tamilnadu on திசெம்பர் 30, 2011 at 6:08 பிப

உங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்றவுடன் என்ன நினைவுக்கு வருகிறது?

அப்படி எனக்குத் தோன்றியதன் தொகுப்பு:

  1. பாபா (படம் ஃப்ளாப்)
  2. காடுவெட்டி (குரு மட்டும் அல்ல)
  3. சாதிச்சங்கம் (க்ரீமி லேயர் மட்டும்)
  4. சவுக்கடி (சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்)
  5. பேரம் (பணமும் சீட்டும்)
  6. இளையபெருமாள் (திருமா அல்ல)
  7. அய்யா (பள்ளியோ படையாச்சியோ அல்ல)
  8. குழலி (முகமூடி அல்ல)
  9. சத்திரியன் (சாணார்களும் நாடார்களும் அல்ல)
  10. பச்சோந்தி (பசுமை தாயகம் அல்ல)

 

முந்தையவை: என்றவுடன்

சொன்னார்கள்! மறந்தார்கள் – அரசியல் பேச்சு

In Politics on ஏப்ரல் 22, 2009 at 2:59 பிப

முந்தைய மேற்கோள் 10:
தமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு – மேடை மொழி

1. லாலுபிரசாத் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் தலைமையிலான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங் :

“எங்களுக்கு காங்கிரசுடன் தகராறு எதுவும் கிடையாது. மன்மோகன்சிங்கையே மீண்டும் பிரதமர் ஆக்க விரும்புகிறோம்.”

2. ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் :

“மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு அமைப்பான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, காங்கிரசுக்கு மட்டும் சொந்தம் அல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமராக, மன்மோகன்சிங்கை ஏற்க முடியாது.”

3. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிடிக்கப்பட்டு இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டால், எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கேள்விக்கு அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தனது அண்ணன் ராகுல் காந்திக்காக பிரசாரம் செய்யும் பிரியங்கா வாத்ராவின் பதில் :

“இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதை அரசியல் ரீதியாக என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரம், ஒரு நாடு என்ற முறையில் அவரை (விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்) இந்தியா மன்னிக்கவே கூடாது.”

4. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி:

“தமிழ்நாட்டிலும் சரி, இந்திய துணைக்கண்டத்திலும் சரி. இப்போது வருகின்ற செய்திகளை பார்த்தபோதும், எங்கெங்கே எத்தனை இடங்களை காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இன்றைக்கு பிடிக்கின்றன என்பதை உற்று நோக்கும் நேரத்தில், தேர்தல் ஜாதகத்தை கணிப்பவர்கள், அடுத்து வரும் ஆட்சியும் இந்திய துணைக்கண்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிதான் என்று முடிவுகளை சொல்லியிருக்கிறார்கள்.”

5. திராவிட முன்னேற்ற கழக அமைச்சர் அன்பழகன் :

“டெல்லியில் மீண்டும் சமய சார்பற்ற, மசூதிகளை இடிக்காத, மசூதிகளை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டுவோம் என்ற சொல்லாத ஒரு ஆட்சி அமைய வேண்டும்.”

6. காங்கிரஸ் தலைவர் தங்கபாலு :

“காங்கிரஸ் கட்சியும், அன்னை சோனியாகாந்தியும் இருக்கும்வரை தி.மு.க.வை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.”

7. திருவள்ளூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் காயத்ரி ஸ்ரீதரனை ஆதரித்து பூந்தமல்லியில் பிரசாரம் செய்த முக ஸ்டாலின் :

“பாமக தலைவர் ராமதாஸ், ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது தனது மகன் அன்புமணிக்கு மேல்சபை எம்பி சீட் என்ற நிபந்தனையுடன்தான் கூட்டணி வைக்கிறார்.

ராமதாசுக்கு தைரியம் இருந்தால், அவரது மகனை தேர்தலில் நிறுத்தி மக்களின் ஆதரவை பெற்று எம்பியாக்கட்டும். கொல்லைப்புறம் வழியாக எம்பியாக்கும் வழக்கத்தையே அவர் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்.”

8. மகன் அன்புமணியின் மாமனாரும் ஆரணி காங்கிரஸ் வேட்பாளருமான கிருஷ்ணசாமியை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியனை ஆதரித்து ராமதாஸ் பேசுகையில் :

“நாங்கள் சொந்தம், பந்தம், பாசத்திற்கு எல்லாம் இடம் கொடுக்க மாட்டோம். அதைப்பற்றி யோசிக்கவும் மாட்டோம். பாவம், இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி, ராஜ்யசபா எம்பி சீட் கேட்டு பல முறை முயற்சி செய்தார். கிடைக்கவில்லை, ஏனென்றால் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.”

9. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முத்துவேல்ராஜை ஆதரித்து பிரசாரம் செய்தபோது:

“அரசு அறிவத்த இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், கேஸ் அடுப்பு போன்றவற்றால் கட்சிகாரர்களின் பினாமிகளுக்கு தான் ஆதாயம் ஏற்பட்டுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம்.”

10. சேலத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செம்மலை அறிமுக நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் :

“எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். சுகாதார வசதி கிடைக்க வேண்டும். ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள். பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகிறார்கள்.

தமிழகம் டாஸ்மாக் மூலம் மதுபானம் விற்பனையில் மட்டும் வளர்ந்துள்ளது. வேறு எதிலும் வளர்ச்சி அடையவில்லை.”

கொசுறு: பாஜக தலைவர் இல.கணேசன் :

“தென் சென்னையில் உள்ள வாக்காளர்களில் படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 40 சதவீதம் பேர் பெரும்பாலும் வாக்களிப்பதில்லை. தங்களது ஜனநாயக பொறுப்பை அவர்கள் உணர வேண்டும். கண்டிப்பாக வாக்களிக்க முன்வர வேண்டும்.

தமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு – மேடை மொழி

In Politics, Tamilnadu on ஏப்ரல் 17, 2009 at 4:04 பிப

முந்தைய மேற்கோள் 10:
அ) Therthal 2009: Top 10 Quotes
ஆ) Tamil Nadu Quotes: Elections 2009

1. அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் :

“இன்னும் 2 ஆண்டு காலம் தமிழகத்தில் இந்த திமுக ஆட்சியை நீடிக்கவிட்டால் தமிழ்நாடும், பிகார் போன்ற மாநிலமாக மாறிவிடும்.”

2. நடிகர் மன்சூரலிகான்:

“அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து போட்டியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடருவேன்.”

3. கலைஞர் கருணாநிதி:

“எந்தப் பிரச்னை குறித்த ஜெயலலிதாவின் அறிக்கையானாலும், அதிலே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற கருத்து இடம் பெறாமல் இருக்காது!”

4. டாக்டர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி.

“மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் ஆட்சி மாறும் என்று நான் கூறியதை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் ஆட்சியில் அமர வேண்டும், காமராஜரின் ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும் என்பது தமிழகத்தில் பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்களின் கனவு. அவர்களின் கனவு நிறைவேற வேண்டும் என்றுதான் கூறினேன்.”

5. முதல்வர் கருணாநிதி கேள்வி-பதில் அறிக்கை:

“அதிமுக கூட்டணியின் தலைவர் ஜெயா தமிழகத்திலே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அந்தக் கட்சிக்கு தற்போது போயிருக்கின்ற டாக்டர் ராமதாஸ், அந்த அம்மையாருக்கும் துரோகம் இழைக்கும் வகையிலும், அந்தக் கூட்டணியிலே இருக்கிற இரண்டு கம்ïனிஸ்ட் கட்சிகளுக்கும் “பெப்பே” காட்டுகின்ற வகையிலும் – அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டே, காங்கிரசாரின் கனவு நிறைவேறி தமிழகத்திலே காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டுமென்று சொல்கிறார்!

அவர் எங்கே போனாலும், இருக்கும் இடத்திற்கு குழி பறிக்கத்தான் பார்ப்பார்!

6. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் அளித்த பேட்டி:

“இஸ்ரேலில் இருந்து ஏவுகணை வாங்கியதில் ஊழல் நடந்து இருப்பதாக இடதுசாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. எனது மந்திரி சபையில் யாருமே ஊழல்வாதிகள் கிடையாது.

7. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்:

“அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எடுத்த முயற்சியில் 10-ல் ஒரு பங்கு முயற்சியை இலங்கை தமிழர் பிரச்னையில் எடுத்திருந்தால், இலங்கை தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம்.”

8. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்:

“ஒரு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி வழங்குகிறோம் என்று மேடைதோறும் முதலமைச்சர் கருணாநிதி பேசி வருகிறார். நீங்கள் கொடுக்கக்கூடிய அரிசி நியாயவிலை கடைகளுக்குப் போவதற்குப் பதிலாக லாரிகளில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இதுவரை இந்த அரிசி கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா? மணல் கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா?”

9. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா:

“ஐந்தாண்டு கால, மத்திய காங்கிரஸ் ஆட்சியின், நிர்வாகத் திறமையின்மை காரணமாக, நாட்டின் பொருளாதாரம், மோசமான நிலைக்கு சென்றுள்ளதையும், தீவிரவாதம் அதிகரித்துள்ளதையும், நீங்கள் நன்கு அறிவீர்கள். ஐந்து ஆண்டு கால மத்திய காங்கிரஸ் ஆட்சியில், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.”

10. ஆந்திர மாநில விஜயவாடாவில் பிரஜா ராஜ்யம் கட்சித்தலைவர் நடிகர் சிரஞ்சீவி:

“சந்திரபாபு நாயுடு ஏழைகளின் பசி, மற்றும் அவர்களது வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் கலர் டிவி வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். சந்திரபாபு நாயுடு சொந்தமாக எதுவும் சிந்திக்காமல் தமிழ்நாட்டில் செய்யப்படும் நலத்திட்ட உதவிகளை காப்பியடித்து வருகிறார். ஐடெக் முறையில் சிந்திக்கும் சந்திரபாபு நாயுடு ஏழைகளுக்காக செய்யப்போவது எதுவும் இல்லை.”

கொசுறு: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி:

“தேர்தலுக்கு பிறகு 4 வது அணி கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெறுமா என்ற கேள்விக்கு இப்போது பதில் கூற முடியாது. அது எண்ணிக்கையை பொறுத்தது. ஜனநாயகம் என்றாலே எண்ணிக்கை விளையாட்டு என்றே பொருள்.”

தேர்தலில் நிற்க 10 இலட்சணங்கள்

In India, Lists, Politics on மார்ச் 10, 2009 at 9:09 பிப

  1. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் / ஐ.பி.எஸ். / ஐ.எஃஃப்.எஸ் அதிகாரி
  2. முன்னாள் (அ) இன்னாள் மந்திரியின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகள்
  3. நாற்பத்திரண்டு ஆண்டு, ஏழு மாதம், நான்கு நாள் முன்பு அம்மா நடிகர்/தொலைக்காட்சி அழுவாச்சி நடிகையாக பதவி உயர்வு பெற்றவர்.
  4. பதினெட்டு கொலை, 67 கால் நீக்கல், 105 கை வெட்டல் உட்பட கட்டப்பஞ்சாயத்து முதல் கற்பழிப்பு குற்றங்களுக்காக சிறை சென்ற தியாகி.
  5. ஆளும் எதிர்க்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி ஜாதிக் கட்சி ஆரம்பித்திருப்பவர்.
  6. சமீபத்தில் மறைந்த எம்.எல்.ஏ/எம்.பி.யின் மனைவி
  7. மன்னரை போதும் போதும் என்னுமளவு போற்றிப் பாடியுள்ள/படமெடுத்துள்ள, டப்பு கையில் நிறைய சேர்த்துள்ள கவிஞர்/எழுத்தாளர்/இயக்குநர்.
  8. கட்சித் தலைவருக்காக இலவசமாக வழக்குகளில் ஆஜராகி முன் – ஜாமீன் ஆரம்பித்து சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா வரை வாங்கித் தரும் வக்கீல்.
  9. ஆட்சிபீடத்தின் அரியணையில் அமர்ந்திருப்பவரின் மகளோ, மகனோ மாட்டிக் கொள்ளாதிருக்க இடைத்தரகராய் லஞ்ச ஊழல் பேரம் நடத்தி, தெஹல்காவாக பூகம்பம் வெடித்தால் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பலிகடா.
  10. துணைவி (கவனிக்க: மனையில் இருப்பவர் மனைவி; புது தில்லி குளிருக்கு, கதகதப்பாக, காந்தர்வ விவாகம் கூட செய்து கொள்ளாத கம்பெனி)

Pro-Eelam Chennai Bandh & Life Experiences: 10 Twits

In Life, Srilanka, Tamilnadu on பிப்ரவரி 6, 2009 at 5:09 முப

1. சென்னையில் பந்த் நடப்பதற்கான எவ்விதமான அறிகுறியும் இல்லை. எல்லாம் சாதாரணமாக இருக்கிறது. தென் தமிழகத்தில் வீச்சு அதிகமாக இருக்கலாம்.4:35 AM Feb 4th
Narain_biggernarain

2. @kg86 Btw, today is Bandh/strike in Chennai (lol and it’s “approved” by Supreme Court). My brother’s college, NIT T, is working. 😦10:36 PM Feb 3rd
Dscn0667_biggerdrgrudge / Ashwin

3. @aryanscourge yeah, what with the Strike and closure of colleges and all.. we wna be heard too.. 😀11:47 AM Feb 4th
Your_image_biggerVetti / Karthik H

4. @just_reva a lot of things happened at leather bar yesterday & the best part was it was empty cuz of the strike and moral policing shit. 🙂about 21 hours ago
Dilip_-_vidu_s_revenge_biggerdilipm / Dilip Muralidaran

5. Chennai Bandh (dont know if it was useful) certainly brought me happiness.I worked from home. I was like on cloud nine 🙂1:57 PM Feb 4th
Kavi__2__biggertkavitha / kavitha

6. Strange.I had blogged about chennai bandh a year ago.i get flamed for it for todaysi bandh.go figure. http://tinyurl.com/aebga71:02 PM Feb 4th
Face1_biggermadguy000 / Aditya

7. @anandnataraj i don’t think companies in chennai are off on bandh..not sure..life is normal here so far..how abt there in Madurai..1:30 AM Feb 4th
Me_biggerksawme / Swami K

8. Traffic Update >> Took 29 mins from Porur to Cenatoph..Moderate traffic..may be PMK bandh have made some free traffic flow..Just a guess12:07 AM Feb 4th
Me_biggerksawme / Swami K

9. @elavasam Rulingpartysponsored bandh, buses will not operate, but you can go in the road safely. In oppostion spnsred,our head will be brokn11:09 AM Feb 3rd
Blogbruno_biggerspinesurgeon / Bruno Mascarenhas

10. Wish Kerala politicians visited Chennai today to see how the people had thrashed todays bandh – except shops, everyone’s working as usual!1:13 AM Feb 4th
vaartha / Kerala News