Snapjudge

Posts Tagged ‘Novel’

Novel Writer Tamilmagan picks his Top 10 Books for 2012

In Books, Tamilnadu on ஜனவரி 14, 2012 at 11:40 பிப

எழுத்தாளர் தமிழ்மகன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:

1. அசடன் – தஸ்யேவஸ்கி, தமிழில்: எம்.ஏ.சுசீலா (மதுரை புக் ஹவுஸ்)

2. கரமஸோவ் சகோதரர்கள் தஸ்தயேவஸ்கி, தமிழில்: கவிஞர் புவியரசு (என்.சி.பி.ஹெச்.)

3. அனுபவங்களின் நிழல்பாதை- ஹரி சரவணன், ரெங்கையா முருகன் (வம்சி பதிப்பகம்)

4. அறம் – ஜெயமோகன் (வம்சி பதிப்பகம்)

5. கலங்கியநதி – பி.ஏ. கிருஷ்ணன் (காலச்சுவடு பதிப்பகம்)

6. கடல் – ஜான் பால்வில், தமிழில்: ஜி. குப்புசாமி (காலச்சுவடு பதிப்பகம்)

7 பசித்தபொழுது – மனுஷ்யபுத்திரன் (உயிர்மை பதிப்பகம்)

8. உருப்படாதவன் – அ.முத்துலிங்கம் (உயிர்மை பதிப்பகம்)

9. காவல்கோட்டம் – சு. வெங்கடேசன் (தமிழினி பதிப்பகம்)

10. பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், ஜான் பெர்கின்ஸ், தமிழில்: இரா.முருகவேள் (விடியல் பதிப்பகம்)

10 Most Popular & All time Favorite Tamil Writers

In Books, Lists, Literature, Magazines, Tamilnadu on ஓகஸ்ட் 12, 2009 at 9:49 பிப

    • இந்தப் பட்டியல் கிடுக்கிப்பிடி எழுத்தாளர்கள் பற்றியது.
    • தங்களை படிப்பவர்களை சிக்கெனப் பற்றிக் கொள்பவர்கள் இவர்கள்.
    • என்ன ஆவி அடித்தாலும், புகுந்தவரை வெளியேற்றுவது இயலாது. பிறிதொரு படைப்பாளி நுழைய எத்தனித்தாலும் துரத்தியடிக்கப்படுவர்.
    • தன்னுள் இருப்பவரை எதற்காக அனுப்பவேண்டும், பிறிதொருவரை ஏன் வாசிக்க வேண்டும் என்று லாஜிக்கலாக புரிய வைக்க முயன்றால், நீங்களே கீழே குறிப்பிடப்படுபவர்களுள் ஈர்க்கப்பட்டு, சுழலுக்குள் மாட்டிக்கொள்ளும் அபாயமும் உண்டு.
    • ஒவ்வொருவருக்கும் ஒரு வட்டம், ஆகர்ஷணம், மயக்கம் உண்டு.
      1. சுஜாதா
      2. ரமணி சந்திரன்
      3. கல்கி
      4. மு. வரதராசன் / அகிலன் / நா பார்த்தசாரதி
      5. சாண்டில்யன்
      6. ராஜேஷ்குமார் / பட்டுக்கோட்டை பிராபகர்
      7. பாலகுமாரன்
      8. ஈ வெ ரா பெரியார் / சோ ராமசாமி
      9. வைரமுத்து / வாலி
      10. தி. ஜானகிராமன்

      From book to film: Kamal Haasan recommends

      In Books, Lists, Movies on ஜூலை 1, 2009 at 3:11 முப

      Earlier: Best Tamil Movie Screenplays according to Kamal Haasan « 10 Hot

      1. Cyrano de Bergerac by Edmond Rostand has a few film versions, the notable ones starred Jose Ferrer (1950) and Gerard Depardieu (1990).

      2. Spartacus the Howard Fast novel was turned into a screenplay by Dalton Trumbo and directed by Stanley Kubrick

      3. A Clockwork Orange by Anthony Burgess was turned into a screenplay for Kubrick.

      4. The Last Temptation of Christ, a novel by Nikos Kazantzakis, was translated to film by Scorsese.

      5. Being There, a novel by Jerzy Kosinski, was turned into a screenplay by Kosinski directed by Hal Ashby

      6. Trainspotting, the novel by Irvine Welsh, was adapted by John Hodge for Danny Boyle’s film

      7. Perfume, the novel by Patrick Suskind, was rewritten by Tom Tykwer for film

      8. Chitty Chitty Bang Bang, a novel by Ian Fleming, was turned into a screenplay by Roald Dahl and Ken Hughes.

      9. The Curious Case of Benjamin Button was a short story by F Scott Fitzgerald, which was fleshed out as a screenplay by Eric Roth for David Fincher’s film.

      10. Forrest Gump by Winston Groom was a novel turned into film by Groom and Eric Roth.

      11. Marathon Man, a novel by William Goldman, turned into a screenplay by Goldman himself.

      12. Magic, a novel by William Goldman, was turned into a screenplay by the author and directed by Richard Attenborough

      13. Bram Stoker’s Dracula was turned into a screenplay by James V Hart for Francis Ford Coppola

      14. And of course, The Godfather, a novel by Mario Puzo, was translated to film as the Godfather trilogy, written by Puzo and Francis Ford Coppola.

      கூகை :: சோ.தர்மன் – சகுனப் பாட்டு

      In Books, Literature on ஏப்ரல் 27, 2009 at 1:56 பிப

      காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடான 2005இன் சிறந்த நாவலுக்கான ‘தமிழ் வளர்ச்சித் துறை’யின் பரிசு பெற்ற சோ.தர்மனின் கூகை நாவலிலிருந்து…

      இரவில் கூகை கூப்பிட்டால் என்னென்ன நடக்கும்?

      ஓருரை உரைக்குமாகில் உற்றதோர் சாவு சொல்லும்.
      ஈருரை உரைக்குமாகில் எண்ணிய கருமம் ஈடேறும்.
      மூவுரை உரைக்குமாகில் மோகமாய் மங்கை சேர்வாள்.
      நாலுரை உரைக்குமாகில் நாழியில் கலகம் வந்திரும்.
      அய்யுரை உரைக்குமாகில் ஒரு பயணம் கிட்டும்.
      ஆருரை உரைக்குமாகில் அடுத்தவர் வரவு கூறும்
      ஏழுரை உரைக்குமாகில் இழந்த பொருள்கள் மீளும்
      எண்ணுரை உரைக்குமாகில் திட்டென சாவு நேரும்
      ஒன்பதும் பத்தும் உத்தமம் மிகவே நன்று

      கனவுத் தொழிற்சாலை: சுஜாதா

      In Lists, Literature, Magazines on ஏப்ரல் 27, 2009 at 10:36 முப

      குமுதம் இதழில் தொடர்கதையாக வெளியான சினிமா குறித்த சுஜாதா நாவலின் அத்தியாயங்களுக்கு முன் இடம்பெற்றதில் காணக்கிடைத்த பத்து மேற்கோள்:

      1. My days are darker than your nights.
      ஹாஸன் பிரதர்ஸ் ராஜ பார்வை‘ அழைப்பிதழ்

      2. All those books barely read, those friends barely loved, those cities barely visited, those women barely possessed…
      Albert CamusThe Fall.

      3. “படத்தைத் தாக்கு தாக்கு என்று தாக்கி எழுதினீர்கள். என்னவாயிற்று உங்கள் விமரிசனம்? உங்கள் எழுத்தால் அந்தப் படம் ஓடுவதைத் தடுத்து நிறுத்த முடிந்ததா? பிரமாதமாக ஓடியதே!”
      எம். ஏ. காஜா: ‘குங்குமம்‘ இதழில்

      4. The writers want to be directors. The producers want to be writers. The actors want to be producers. The wives want to be painters. Nobody is satisfied.
      Gottfried Reinhardt

      5. வானத்துப் பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதுமில்லை. அறுப்பதுமில்லை. களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் வானகத் தந்தை அவறுக்கும் உணவளிக்கிறார்.
      மத்தேயு ஆறாம் அதிகாரம். (6.26)

      6. “Include me out.” – Sam Goldwyn

      7. துத்திப்பூ மாலை – எனக்குத்
      தோளிலிட்ட நாள் முதலா
      தும்பம் ஒருபுறமே – இப்போ
      துயரம் இருபுறமே
      ஒப்பாரிப் பாடல், திருவாட்டி சின்னத்தாய் பாடியது

      8. ‘No picture shall be certified for public exhibition which will lower the moral standards of those who see it.’
      Ministry of I & B: Directions to the Board of Film Censors

      9. பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கூடி இருக்கலாம். – ஔவையார்

      10. இரத்தினங்கள் வைத்து இழைத்து
      இராவைப் பகலாக்கும்
      சித்திரங்கள் வகை வகையாய்
      செய்வேன் மனோன்மணியே
      குணங்குடி மஸ்தான் சாஹிப்

      கொசுறு: “இதைத் தவிர ‘இந்தியர்கள் நம்மவர்களுள் வீண் சண்டை’, ‘ராட்டினமாம் காந்தி கை பாணம்’ என்ற பாட்டுக்களையும் இனிய குரலுடன் பாடுகிறாள். வார்த்தைகள் தெளிவாக இருப்பது படத்தின் மேன்மையை அதிகரிக்கிறது. மிஸ் ஜான்ஸிபாயும் மிஸ்டர் ஆர்டியும் செய்த கொறத்தி நடனமும் இதில் அடங்கியிருக்கிறது. அவசியம் காணத் தகுந்தது.”
      – 29-01-1931 சுதேசமித்திரனில் வெளியான ‘காளிதாஸ்‘ படத்தின் விமரிசனத்திலிருந்து பிலிம் நியூஸ் ஆனந்தன்