Snapjudge

Posts Tagged ‘Meet’

எழுத்தாளர்களை நேரில் சந்திக்க ஏழு காரணங்கள்

In Blogs, Life, Literature on பிப்ரவரி 26, 2014 at 1:32 முப

எழுத்தாளர்களை நான் ஏன் பார்க்கப் போகிறோம்?

மாநாட்டிற்கு சென்றால் பேச்சைக் கேட்கலாம். புத்தகத்தை வாங்கினால் எண்ணத்தைப் படிக்கலாம். படத்தைப் பார்த்தால் ஆவணமாகப் பார்க்கலாம். ஆனால், எழுத்தாளரை எதற்குப் பார்க்கப் போகிறோம்?

நான் பார்க்கப் போவதற்கான காரணங்கள் இவை

1. வம்பு: எழுத்தில் எழுதாத விஷயத்தை நேரில் சொல்வார் என்னும் நம்பிக்கை. இதைத் தகவலறிதல் என்றும் சொல்லலாம்.

2. கேள்வி: இது வம்பின் அடுத்தகட்டம். வம்பு என்பது பொதுவெளி. இது தனிமனித அத்துமீறல். “அந்தக் கதை நிஜமா! இதில் நீங்கள் சொல்பவர் எங்கே கிடைப்பார்?” என்று திட்டவட்டமாக நெருக்கி விளக்கம் அறியும் அவா.

3. சோம்பேறித்தனம்: புத்தகத்தைப் படிக்க நேரம் ஒதுக்காமல், அவர் வாயாலேயே, அவரின் கருத்துக்களை சொற்பொழிவாகக் கேட்டல்.

4. கம்பெனி: மதுவருந்த, புகை பிடிக்க நண்பர்களை அழைத்துச் செல்லுவது போல், அரட்டை அடிக்க சகா தேடுவது.

5. படேல் மதிப்பு: பாரீசுக்குப் போனால் ஈஃபில் கோபுரத்துடன் படம் எடுத்துக் கொள்வது போல், எழுத்தாளரின் புத்தகத்தை வாங்கினால், அவரின் கையெழுத்தைப் போட்டு வாங்கிக் கொள்வதில் விருப்பம். இதை நடிகர் சந்திப்பாகவும் கொள்ளலாம்.

6. சாதனை: அந்த எழுத்தாளரைப் போல் எழுதத்தான் முடிவதில்லை. அவரைப் பார்த்துப் பழகி விடுவதாலேயே அவருக்கு சரிநிகர் சமானமாகி விடுவது. விளையாட்டில் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது கிடைக்கும் நிறைவுணர்ச்சியை வாழ்க்கையில் கொணரும் முயற்சி.

7. தொடர்பு: எழுத்தாளரின் அறிமுகம் கிடைப்பதால் வேறு எங்காவது வாய்ப்பு ஏற்படலாம். இதை இப்பொழுது “நெட்வொர்கிங்” என்கிறார்கள்.

நடிகர் விஜய் ஏன் கோபப்பட்டார்?

In Movies on மார்ச் 17, 2009 at 8:18 பிப

இளைய தளபதி விஜய் ‘சைலன்ஸ்’ என்று கூச்சலிட்டது ஊரறிந்த விஷயம். ஏன் கோபப்பட்டார்? எப்படி மோனம் தடுமாறினார்? எவ்வாறு தன்னிலை மறந்தார்?

  1. அடுத்த படத்தில் ஒரு காட்சிக்கு இது ஒத்திகை.
  2. வீட்டில் மனைவியத்தான் திட்டமுடியல! இங்கேயாவது கத்தலாமே?
  3. கோக்கோ கோலா விளம்பரங்க – கோக் அடிச்சா குளிர்வீங்கன்னு நாளைக்கு அடுத்த பகுதி ரிலீஸ்.
  4. வில்லு படத்தில் இடம் கிடைக்காத பாடலை விஜய் பாடிக் காட்டுகிறார்.
  5. அது விஜய் அல்ல; விக்ராந்த்!
  6. கௌதம் மேனன் இயக்கியிருந்தா ‘வில்லு‘ ஓடியிருக்குமான்னு நாக்கு மேல பல்லு போட்டா கோபம் வருமா? வராதா!
  7. மதுர: இது எச்சரிக்கை இல்லை; கட்டளை! இங்கே: இது பாய்ச்சல் இல்ல; எரிச்சல்!
  8. ‘போக்கிரி‘யைப் போல் நான் ஒரு சவுண்ட் விட்டுட்டா அதற்கப்புறம் நானே அங்கே நிக்க முடியாது என்று குசு விட்டீர்களா என்று கேட்டதற்கான பதில்.
  9. ‘அழகிய தமிழ்மகன்’ இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைச்சுடுத்தே? அடுத்து உங்களுக்கு எப்போ கிடைக்கும்?
  10. ‘உங்க படம் செத்துப் போச்சே? டாக்டராச்சே நீங்க? போஸ்ட் மார்ட்டம் செய்தீர்களா?’