Snapjudge

Posts Tagged ‘Mani Ratnam’

Mani Ratnam and Jeyamohan’s Kadal Movie – Review and Viewer Questions

In Movies, Tamilnadu on பிப்ரவரி 1, 2013 at 7:36 பிப

கடல் படம் பார்த்தவர்களுக்கான வினாக்கள்:

1. மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சாத்தான் சொல்லிவிடுகிறது. இதற்கும் ‘நேர்மையான கொம்பன்’ வசனத்திற்கும் என்ன சம்பந்தம்?

2. நித்தியானந்தா, தினகரன் மாதிரி இடைத்தரகர்கள் எப்படி உருவாகிறார்கள் என்பதை சாமுவேல் கதாபாத்திரம் எப்படி விளக்குகிறது?

3. விலை மாந்தருக்கு தேவாலயத்தின் பொது கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யும் அனுமதி மறுப்பதை முன் வைப்பதன் மூலம் ஆ. சிவசுப்ரமணியன் எழுதிய காலச்சுவடு பதிப்பகத்தின் “கிறித்துவமும் சாதியும்” புத்தகத்தில் இருந்து அனுமதியின்றி ஜெயமோகன் திருடினாரா?

4. மீசைக்காரன் என்று குறிப்பிடுவது யாரை: அ) வீரப்பன் ஆ) பாரதியார் இ) சண்டியர் ஈ) மேசைக்காரன்

5. ’ஒரே கடல்’ படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். ஜெயமோகனின் முதல் படத்திலும் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். மணி ரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’விலும் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். இதனால் நீவிர் அறியும் நீதி யாது?

6. இந்தப் படத்திற்கு இன்ஸ்பிரேஷன் சிறில் அலெக்ஸ் என்பது உண்மையா?

7. தாந்தே எழுதிய Divine Comedy மூன்றாகப் பார்க்கிறார்கள்: நரகம் – செமினரி; ஆத்மா சுத்தீகரிக்கும் உலகம் – தேவாலயம்; சொர்க்கம் – சுதந்திரம். [பெர்க்மானும் சாமுவேலும் சந்திப்பது போதகாலயம்; ஃபாதர் பணியாற்றுவது சர்ச்; கடைசியில் சிறையில் இருந்து விடுதலை] – படம் கிறித்துவத்தை இழிக்கிறதா?

8. கிறித்துவப் பாதிரியார்களும் பிஷப்களும் அருட்தந்தைகளும் ஆயர்களும் கொள்ளைக்காரர்களிடமிருந்தும் கடத்தல்காரர்களிடமிருந்தும் காணிக்கை பெறும் காட்சி ஏன் இடம் பெற வேண்டும்?

9. தாமஸ் மைலாப்பூர் வந்ததை எந்த Doubting Thomasம் சந்தேகிக்க முடியாது. அப்படியானால் தாம்ஸ் என்பதை திருவள்ளுவர் என்று பெயர் மாற்றம் செய்தது யார்? [பார்க்க – வள்ளுவரின் தங்கை எழுதிய ஆத்திசூடி என்னும் கிறித்தவ ஆக்கம்]

10. தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ் பற்றி ஜெயமோகனுக்கு காசு கொடுத்தவர் யார்?

32 Tamil Movies – Best Arthouse films

In Lists, Movies, Tamilnadu on ஜூலை 27, 2010 at 3:09 பிப

‘நல்ல படம்னா…’ என்று மேதாவிலாசத்துடன் படம் பார்ப்பவர்களுக்கென்று பட்டியல் இருக்கிறது. அப்படி தமிழ் இலக்கிய வாசகர்களால், சிறு பத்திரிகையாளர்களால், வலைப்பதிவு பேரறிஞர்களால், சினிமா சஞ்சிகையாளர்களால் முன்னிறுத்தப்படும் படங்களின் பட்டியல்:

  1. சந்தியா ராகம்
  2. வீடு
  3. உன்னைப் போல் ஒருவன்
  4. உதிரிப் பூக்கள்
  5. முள்ளும் மலரும்
  6. உச்சி வெயில்
  7. சில நேரங்களில் சில மனிதர்கள்
  8. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
  9. அவள் அப்படித்தான்
  10. அழியாத கோலங்கள்
  11. கண் சிவந்தால் மண் சிவக்கும்
  12. மெட்டி
  13. ராஜ பார்வை
  14. மகா நதி
  15. குணா
  16. அந்த நாள்
  17. முதல் மரியாதை
  18. ஹே ராம்
  19. ஒருத்தி
  20. நாயகன்
  21. மொழி
  22. சுப்பிரமணியபுரம்
  23. சென்னை 28
  24. ஆயுத எழுத்து
  25. வெயில்
  26. புதுப்பேட்டை
  27. பருத்திவீரன்
  28. அஞ்சாதே
  29. நண்பா நண்பா
  30. இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்
  31. சங்க நாதம்
  32. அக்ரஹாரத்தில் கழுதை

Ravan Special – 10 Proverbs for Ramayanam

In Literature, Misc, Movies, Religions on ஜூன் 20, 2010 at 4:25 முப

இராமாயணத்தை வைத்து புகழ்பெற்ற பத்து பழமொழிகள்:

  1. ‘கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்.’
  2. படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்.
  3. விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பன் என்று சொன்னால் எப்படி?
  4. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை
  5. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
  6. குரங்கு பிடிக்க போய் பிள்ளையார் ஆன கதை
  7. கெட்ட பிள்ளை இருப்பான், கெட்ட தாய் ஒரு நாளும் இருக்க மாட்டாள்.
  8. பிச்சை எடுத்தாரம் ராமர், பிடுங்கி திண்டாராம் அனுமார்
  9. அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டார்
  10. Caesar’s wife must be above suspicion