Snapjudge

Posts Tagged ‘Lyrics’

Top 10 Double Meaning Songs in Tamil Cinema

In Literature, Movies, Tamilnadu on திசெம்பர் 21, 2018 at 9:49 பிப

தமிழ் சினிமாவில் வந்த இரட்டை அர்த்த பாடல்கள் எவ்வளவு இருக்கும்?

இரட்டை அர்த்தம் என்றாலே காமம் மட்டும்தானா?

எந்தப் பாடலை இந்த தலை பத்து டபுள் மீனிங் பட்டியலில் சேர்க்கலாம்?

  1. ரெண்டு கன்னம் சந்தனக் கின்னம்! தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்!! – வைரமுத்து
  2. அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல – பேரரசு
  3. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ – புலமைப்பித்தன்
  4. மாடில நிக்குற மான் குட்டி… மேலவா காட்டுறேன் ஊர சுத்தி – கானா பாலா
  5. எப்படி? எப்படி!? சமைஞ்சது எப்படி – வாலி
  6. நிலா காயுது நேரம் நல்ல நேரம் – வாலி
  7. எலந்தப் பழம், செக்கச் சிவந்த பழம், தேனாட்டம் இனிக்கும் பழம் – கண்ணதாசன்
  8. நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவன் மாம்பழம் வேண்டுமென்றார் – வாலி
  9. மல மல மல மருத மல மல்லே மருத மலை – வாலி
  10. வாடி என் கப்பக்கிழங்கே… எங்க அக்கா பெத்த முக்காத்துட்டே – கங்கை அமரன்
Simbu STR Silamabarasan as Tamilandaa!

“இந்த விளையாட்டுக்கு நான் வரல்லே” என்று கவி காமு ஷெரீப்பை திரையுலகத்தை விட்டே துரத்திய பெருமை #8 பாடலைச் சேரும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடிக்க, மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, வாலிபக் கவிஞர் வாலி எழுதிய பாடலிது. “ஒழுக்கக்கேட்டைப் பறைசாற்றி, சமுதாயத்தை சீர்கெடுக்கும் பாடல்” என்று தன் முழு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து “இனி திரைப்படத்திற்கே பாடல் எழுதவதில்லை” என்ற சபதத்தை மேற்கொண்டார் கவி கா.மு.ஷெரீப்.

Top 21 Songs from Gangai Amaran as a Lyricist

In Movies, Tamilnadu on பிப்ரவரி 26, 2014 at 2:52 முப

பாடலாசிரியராக கங்கை அமரன் மிளிர்ந்தவை:

1. சென்னை 600028 – ஜல்சா பண்ணிக்கடா

2. நிழல்கள் – பூங்கதவே… தாழ் திறவாய்!

3. மூடுபனி – என் இனிய பொன் நிலாவே

4. ஜானி – காற்றில் எந்தன் கீதம்

5. ஆவாரம்பூ – ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே

6. பதினாறு வயதினிலே – செந்தூரப் பூவே

7. நெஞ்சத்தைக் கிள்ளாதே – உறவெனும் புதிய வானில்

8. ரோசாப்பூ ரவிக்கைக்காரி – மாமன் ஒரு நாள் மல்லிகப்பூ கொடுத்தானாம்

9. கல்லுக்குள் ஈரம் – சிறு பொன்மணி

10. தூறல் நின்னு போச்சு – என் சோகக் கதயேக் கேளு… தாய்க்குலமே!

11. மௌனம் சம்மதம் – கல்யாணத் தேனிலா

12. பகல் நிலவு – பூமாலையே… தோள் சேரவா

13. முள்ளும் மலரும் – நித்தம் நித்தம் நெல்லிச்சோறு

14. பாசப் பறவைகள் – தென்பாண்டித் தமிழே

15. பன்னீர் புஷ்பங்கள் – கோடைக்கால காற்றே

16. கிழக்கே போகும் ரயில் – பூவரசம்பூ பூத்தாச்சு! பொண்ணுக்கு சேதி

17. ராஜ பார்வை – விழியோரத்துக் கனவு

18. அம்மன் கோவில் கிழக்காலே – கடவீதி கலகலக்கும்

19. சின்னத்தம்பி – போவோமா ஊர்கோலம்

20. பயணங்கள் முடிவதில்லை – ஏ… ஆத்தா! ஆத்தோரமா வாறியா…

21. அகல் விளக்கு – ஏதோ நினைவுகள்

தொடர்புள்ள பதிவு: ராஜா ஆண்டாலும்: Gangai Amaran Rocks!

பத்துப் பாட்டு

In Movies, Tamilnadu on ஓகஸ்ட் 28, 2009 at 2:51 முப

தமிழ் சினிமாவில் எழுதப்படும் திரைப்பாடல்கள் எத்தனை வகைப்படும்?

  1. கிராமிய, நாட்டுப்புற, தெம்மாங்குப் பாடல்
  2. கொச்சை மொழி, கிளுகிளுப்பு, பேரரசு வகையறா, குத்தாட்டப் பாடல்
  3. ஆங்கிலப் பாடல்களின் தமிழாக்கம்; ஆங்கில வரிகள் அப்படியே வரும் ராப்
  4. பட்டியல் பாடல்கள்; பெயர்ச்சொல்லும் அதற்கு உரித்தான வினைகளும் என்று pattern பாட்டு
  5. அதீத கற்பனை; உயர்வு நவிற்சி கவிதை
  6. நாயக பாவம்; பரணி; ஹீரோ அறிமுகப் பாடல்; இசையமைப்பாளர் துதி; ஸ்தோத்திர வகை.
  7. புரியாத சொற்றொடர்கள்; அன்னிய மொழிப் பதங்களை மீண்டும் மீண்டும் ஒலிக்கவிடும் வரிகள் கொண்ட விளங்காப் பாடல்
  8. ரீ-மிக்ஸ்; புகழ் பெற்ற பழைய பாடல்கள தேய்ந்த vinylல் கொடுக்கும் மறு-வாந்திப் பாடல்
  9. Ctrl+C; அராபிய, ஸ்பானிஷ், உருது, உலக இசையை அப்படியே பிரதியெடுக்கும் இசைப் பாட்டு
  10. இதெல்லாம் இல்லாத பாக்கி பாடல்கள்: சாஸ்திரீய கச்சேரி; சாமி பாட்டு; கானா.

10 Illogical Lyrics: Unpoetical analysis of Tamil Film Songs

In Lists, Movies, Music on ஓகஸ்ட் 23, 2009 at 4:07 பிப

1. பாடல்: எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
திரைப்படம்: கந்தசாமி
எழுதியவர்: இளங்கோ – விவேகா
வரி: எம்ப்டி ஐபாடே — உன்னை ஸ்விட்ச் ஆன் பண்றது வேஸ்ட்டு
ஏன்: ஐ-பாட் காலியாக இருக்கும்போது உயிர் கொடுக்காவிட்டால், எப்படி அந்த ஐ – பாடில் பாடல்களை ஏற்றுவது? மேலும், வாங்கும்போது எல்லா எம்பி3 ப்ளேயர்களும் எந்தவித ஒலிப்பேழையும் இல்லாமல்தான் இருக்கும்.

2. பாடல்: தாய் சொல்லும் உறவை வைத்தே
திரைப்படம்: கனாக் கண்டேன்
எழுதியவர்: வைரமுத்து
வரி: 17 வயசு வரைக்கும் நீ வாழும் வாழ்க்கைதானே பாலூத்தும் காலம் வரைக்கும் கூட வரும்!
ஏன்: +2 மதிப்பெண் வைத்தே அண்ணா பொறியியலும், மெட்ராஸ் மெடிகலும் கிடைக்கும் என்றாலும், சட்டம் பயில்வது, தொழில் முனைவது, கலைகளில் சிறந்தோங்குவது என்று தமிழகம் அமெரிக்காவாகும் காலம் இது.

3. பாடல்: பூமாலையே தோள் சேரவா
திரைப்படம்: பகல் நிலவு
எழுதியவர்: ?
வரி: தேனினை தீண்டாத பூ இல்லையே
ஏன்: வண்டுகளை ஏமாற்ற தேன் தயாரித்துத் தராத பூக்களின் செய்கையை இந்த வரிகள் தவிர்த்துவிடுகிறது. Nectarless flowers: ecological correlates and evolutionary stability : Flowers may cheat by not producing nectar

4. பாடல்: போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
திரைப்படம்: சிங்காரவேலன்
எழுதியவர்: ?
வரி: காவேரி அல்ல… அணைபோட்டுக் கொள்ள
ஏன்: இன்றைய காவிரியில் தண்ணீர் எங்கே இருக்கிறது? கர்நாடக டி.எம்.சி. வந்தாலும், பாசன ஏரிகள் எல்லாம் ஃப்ளாட் அகி விட்டனவே!

5. பாடல்: ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
திரைப்படம்: மீரா
எழுதியவர்: ?
வரி: எனையும்தான் உன்னைப் போலே… படைத்தானே… இறைவன் எனும் ஓர் தலைவன்
ஏன்: பகுத்தறிவிற்கும் (கடவுள்?) அறிவியலுக்கும் (வளர் உருமாற்றம்) இலக்கியத்திற்கும் (Franz Kafka: Metamorphosis) பெண்ணியத்துக்கும் (ஆண் இறை) எதிரான கொள்கையை விரிக்கும் கவிதை.

6. பாடல்: வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
திரைப்படம்: மெல்லத் திறந்தது கதவு
எழுதியவர்: ?
வரி: உனைச்சேர எதிர்பார்த்தேன்; முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்
ஏன்: இது போலி சாமியார் வகையறா. ஏழு ஜனனமும் தெரிவதெல்லாம் அக்மார்க் கப்சா.

7. பாடல்: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
திரைப்படம்: பொல்லாதவன்
எழுதியவர்: ?
வரி: வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித் தலைகீழாகத் தொங்கிடுமே
ஏன்: வௌவாலுக்கு உலகம் நேராகத்தான் இருக்கும். நமக்குத்தான் அது upside down.

8. பாடல்: காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
திரைப்படம்: சின்ன மாப்பிள்ளை
எழுதியவர்: ?
வரி: கந்தன் தேடி வந்த வள்ளி
ஏன்: வள்ளியை நினைத்து, ஏங்கி, காதல் கொண்டு, இன்றைய தினத்தில் பிறந்த நாள் கொண்டாடும் கணேசரின் உதவியோடு, வசியமாக்கி, மணம் புரிந்தது சரித்திரம் (அல்லது ஆன்மிக புராணம் [அல்லது தலவரலாறு])

9. பாடல்: சின்னத் தாயவள் தந்த ராசாவே
திரைப்படம்: தளபதி
எழுதியவர்:
வரி: தேய்பிறை காணும் வெண்ணிலா
ஏன்: ‘வளர்பிறை என்பதும் தேய்பிறையென்பதும் நிலவுக்குக் கிடையாது!’ (அப்படியே இருந்தாலும், வெண்ணிலவே தேய்பிறையைக் காண முடியுமா?)

10. பாடல்: ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!
திரைப்படம்: தாய் மூகாம்பிகை
எழுதியவர்: வாலி
வரி: ஜகன் மோஹினி நீ
ஏன்: ஜெயமாலினிதான் ஜெகன்மோகினி என்பது ஊரறிந்த தகவலாச்சே!