Snapjudge

Posts Tagged ‘God’

Mother Teresa: அன்னை தெரசா: வாழ்வும் கொள்கையும்

In Business, India, Politics, Religions on ஓகஸ்ட் 27, 2012 at 3:25 முப

1. மதம்: குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் சீக்கிரமே சொர்க்கம் அனுப்பும் திட்டத்தை அன்னை தெரஸா ஆரம்பித்தார்; சட்டு புட்டென்று சிறார் செத்தால்தானே படுக்கை காலியாகும்!

2. சட்டம்: அன்னை தெரசாவைப் பொறுத்தவரை பிறந்து விட்ட குழந்தையைக் கொல்வது ஒகே; ஆனால், வன்புணர்வினாலோ, பதின்ம வயது பருவக் கோளாறினாலோ, ஏழை வீட்டில் பத்தாவதாக பிறக்கும் மகவையோ கருக்குலைப்பது குற்றம்.

3. அரசியல்: குவாடாமாலா கொலைகளுக்கு முலாம் போட்டதாகட்டும். மத்திய அமெரிக்க சண்டைகளுக்கு ஆசி வழங்கியது ஆகட்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்; அதே சமயம் எப்போதுமே கொடுங்கோலரின் கனவு போல் வாடிகனுக்காக போரிட்டவர் மதர் தெரசா.

4. சுயநலம்: பத்தாயிரம் மில்லியன் எல்லாம் எண்பதுகளிலேயே புரண்ட தொண்டு நிறுவனம் மிக மிக சிறப்பான படுக்கைகளையும் மருத்துவ சிகிச்ச்சைகளையும் கவனிப்பாளர்களையும் நோயாளிகளுக்கான வசதிகளையும் செய்து தந்திருக்கலாம். ஆனால், அன்னை தெரசாவோ, தன் பெயரில் நூற்றி ஐந்து நாடுகளில் ஐநூறு கான்வெண்டுகளைத் தன் நிறுவனத்திற்காக திறந்து கன்னியாஸ்திரீகளை சேர்க்க ஆரம்பிக்கும் திருப்பலியை மேற்கொள்கிறார்.

5. குற்றவுணர்ச்சி: மேற்கத்திய உலகிற்கு நாம் மட்டும் நல்ல வாழ்க்கையில் திளைக்கிறோம்; அதே சமயத்தில் ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் வறுமையில் வாடுகிறார்கள் என்னும் எண்ணம் நிறைந்த எழுபதுகளில் உதித்தவர். வெள்ளைக்கார பெண்மணியாக சேவை செய்தவர். அமெரிக்க மகளிர் பீச்சில் உல்லாசமாய் இருக்கும்பொழுது எழும் தர்மசங்கடமான வருத்தத்தை சிம்பாலிக்காக கலைத்தவர்.

6. சாதாரணரை வளரவிடாத அடக்குமுறை: சாலையில் செல்லும்போது நாய் அடிபட்டுக் கிடந்தால் என்ன செய்வீர்கள்? மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, காலை சரி பார்த்து நடக்க வைப்பீர்கள். ஏழைகளுக்கு கடன் கொடுத்து, நிமிர்ந்து நடக்க வைப்பது அது போன்றது. நாய் கால் விந்தி விந்தி நடந்தால் கூட முடக்கி மூலையில் உட்கார வைப்பது தெரசாவின் லட்சியம்.

7. பொருள்முதல்வாத போராளி: போபால் விஷவாயு கசிவினால் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டபோது, யூனியன் கார்பைட் நிறுவனத்தை மன்னித்து சும்மா விட்டு விடுங்கள் என்பார். ஹைதி நாட்டில் அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவாக பட்டயம் வழங்குவார். கிறித்துவத்திற்கு பணம் கொடுக்கும் எந்த அட்டூழியத்திற்கும் துணை நிற்பார்.

8. பாசிசம் (fascism): முசோலினியும் ஸ்டாலின் ஆதரவாளர்களும் மதர் தெர்சாவினால் ஆனுதாபிகளாகப் கொண்டாடப்பட்டவர்கள். அல்பேனிய சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார விஷயங்கள் தீர்மானிப்பவர்களையும், முதலாளிகளையும் வாழ்த்தி வணங்கியவர் அன்னை தெரசா.

9. ஏழைகளிடமிருந்து திருடியவர்: சென்றதெல்லாம் தனியார் விமானம்; சொகுசு கார்; உலகம் எங்கும் சுற்றுலா; இத்தனை கோடி நிதி திரட்டினாலும் கொல்கத்தா வறியவர்களுக்கு ஆஸ்பிரின் கூட கொடுக்காத கெடுபிடி சிறை. இவருக்கு இத்தனை பணம் ஏற்பாடு செய்து தந்த கீட்டிங் போன்ற பலர், தற்போது திருட்டுக் குற்றங்களுக்காக சட்டப்படி தண்டனை அனுபவிக்கின்றனர். பெற்றுக் கொண்ட அன்னை தெரசா ஞானி ஆகிறார்.

10. பச்சிளங்குழந்தைகளின் பாலியல் பலாத்காரத்திற்கு துணை நின்றவர்: New Statesman:Mother Teresa defended notorious paedophile priest – Mother Teresa and the Paedophile

உசாத்துணை: Chatterjee’s book Mother Teresa: The Final Verdict is available on-line. Click here.

அடுத்தவனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்காமல், தண்ணீரில் தள்ளிவிட்டு காப்பாற்றிக் கொண்டேயிருந்தவர். தெரசா போன்றவர்கள் இந்தியாவை வறுமையான நாடாக அடையாளம் காட்ட பயன்பட்டார்கள். மேற்கத்திய உலகின் கரிசனையை முழுப்பக்க விளம்பரமாக எடுத்துப் போட உதவினார். அவரின் நிறுவனத்தில் நடந்த அக்கிரமங்களை வெளிச்சம் காட்ட இந்திய ஊடகங்களே தயங்கினதால், சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை நிறைவேற்றுவதும் எளிதாகியது.

12 Hot Books on Indian Culture & Arts in Tamil for the Chennai Book Fair

In Books, Religions, Tamilnadu on ஜனவரி 4, 2012 at 5:50 பிப

தமிழ் ஹிந்து (TamilHindu.com) பரிந்துரைக்கும் புத்தகங்கள்:

  1. திராவிட மாயை: ஒரு பார்வை
    ஆசிரியர்: சுப்பு
    பதிப்பு: திரிசக்தி பதிப்பகம், அடையார், சென்னை-20 (2010)
    பக்கங்கள்: 320
    விலை: Rs.125
    தொலைபேசி எண்: 044-42970800
  2. ஓடிப்போனானா? – ஹரி கிருஷ்ணன்
    கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் – திரிசக்தி
  3. சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம்
    அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி
    வெளியீடு: தமிழ்ஹிந்து.
    ISBN: 978-81-910509-1-2
    பக்கங்கள்: 48
    விலை: ரூ. 35
  4. பண்பாட்டைப் பேசுதல் – இந்து அறிவியக்கக் கட்டுரைகள்
    Pages 256
    Price: Rs 120.00
  5. ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்
    Aravindan Neelakandan
    Pages 80
    கிழக்கு
    Price: Rs 30.00
  6. உடையும் இந்தியா?
    உடையும் இந்தியா? ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்
    ராஜிவ் மல்ஹோத்ரா & அரவிந்தன் நீலகண்டன்
    வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
    ISBN: 978-81-8493-310-9
    பக்கங்கள் : 768
    விலை: ரூ. 425.
    இணையம் மூலம் வாங்கலாம்.
  7. எம். சி. ராஜா சிந்தனைகள்
    பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்-
    தொகுப்பாசிரியர் வே.அலெக்ஸ்.
    எழுத்து பிரசுரம் ::Siron Cottage Jonespuram First street, Pasumalai, Madurai-625 004
  8. பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்
    அரவிந்தன் நீலகண்டன்
    கிழக்கு பதிப்பகம்
  9. ஆரிய சமாஜம்
    Malarmannan
    Pages 112
    Price: Rs 65.00
  10. தோள்சீலைக் கலகம்தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்
    ஆசிரியர்கள்: எஸ்.ராமச்சந்திரன் & அ.கணேசன்
    வெளியிடுவோர்: தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்
    விலை: ரூ. 100
    பக்கங்கள்: 192
  11. மதச்சார்பின்மை
    அடல் பிகாரி வாஜ்பாய் – ரூ. 10/-
  12. நிகரில்லா நிவேதிதா :: (விலை ரூ 45/-)
    நூல் வெளியிடுவோர்:
    ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவிகா சமிதி, லஷ்மி கிருபா, இ.ஜி.1/1 ஸ்டிரிங்கர்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ட்ரிங்கர்ஸ் சாலை, வேப்பேரி, சென்னை-3. தொலைபேசி: 9444915973ஜனவரி 2012 சென்னை புத்தகக் கண்காட்சியில் ராமகிருஷ்ண தபோவனம் அரங்கு (ஸ்டால் 192) மற்றும் விஜயபாரதம் அரங்குகளில் இந்த நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.

சென்னை புத்தகக் கண்காட்சி விவரங்கள்:
நாள்: ஜனவரி 5 முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.
இடம்: பச்சையப்பா கல்லூரி எதிரில் செயிண்ட் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி
நேரம்: வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 8.30 வரை.
விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.

10 Richest Temples in India: Ten Wealthiest Gods

In India, Religions, Tamilnadu on செப்ரெம்பர் 24, 2011 at 2:46 பிப

In no Specific order… (due to hidden treasures, lack of bank accounts, unavailable tracking of true deposits)

  1. Golden Temple, Amritsar (Punjab)
  2. Akshardham Temple, Bochasanvasi Aksharpurushottam Swaminarayan Sanstha (BAPS)
  3. Puttabarthi Sai Baba (Andhra Pradesh)
  4. Tirupati Thirumala Balaji temple (Andhra Pradesh)
  5. Siddhivinayak temple, Mumbai  (Maharashtra)
  6. Guruvayur temple (Kerala)
  7. Shirdi Sai Baba Mandir (Maharashtra)
  8. Sri Padmanabhaswamy Temple, Trivandrum (Kerala)
  9. Mata Vaishno Devi Temple (Jammu & Kashmir)
  10. Puri Jagannath Temple, Puri (Orissa)
Potential Religious Alternate Candidates, Town Runner-ups, Famous Tourist Spots:
  1. Somnath Temple, Saurashtra, Gujarat
  2. Meenakshi Temple, Madurai, Tamil Nadu
  3. Kashi Vishwanath Temple, Varanasi, Uttar Pradesh
  4. Rameshwaram temple, Tamil Nadu
  5. Haridwar, Rishikesh, Uttharkhand
  6. Kolkata Kali Temple, West Bengal
  7. Kolhapur Mahalakshmi Temple, Maharashtra
  8. Srisailam Bramrambika Mallikarjuna swamy Temple, Andhra Pradesh
  9. Dwarka Dwarkadhish Temple, Gujarat
  10. Ahobilam Lakshmi Narasimha swamy temple & Mutt, Kurnool district, Andhra Pradesh

திராவிடர் கழகம் பார்ப்பனர்களைச் சேர்த்துக்கொள்ளாததன் காரணங்கள்

In Books, Politics, Tamilnadu on ஜூன் 10, 2009 at 2:10 பிப

நன்றி: எதிர்வினை :: பகுத்தறிவின் வளர்ச்சி நாத்திகம்! – ப்ரவாஹன்: காலச்சுவடு

  1. ‘ஆரியர்கள்’
  2. பேராசைக்காரர்கள்
  3. இரு நாக்குகள் கொண்டவர்கள்
  4. தந்திரசாலிகள்
  5. தாசர்களின் தலைவர்கள்
  6. வஞ்சக வேந்தர்கள்
  7. கொடுமைக் குணமுடையவர்கள்
  8. கோழைகள்
  9. படுமோசக்காரர்கள்
  10. சிண்டு முடிபவர்கள்
  11. சிரிக்கின்ற நரிகள்
  12. ஒட்டுவித்தைக் காரர்கள்
  13. அநீதிக்காரர்கள்
  14. (திராவிட) இனம் கெடுத்தவர்கள்
  15. ஈடில்லாக் கேடர்கள்

(ஆதாரம்: அண்ணாதுரையின் ‘ஆரிய மாயை’)