Posts Tagged ‘ADMK’
21 Literary Alternate Magazines in Tamil for Arts, Culture and Opinion
In Magazines, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 3, 2015 at 2:13 முபTakeaways from Sannasi blog on Charu, Jeyamohan & their Eezham opinions
In Blogs, Guest, Misc, Politics, Questions, Srilanka on ஜூன் 11, 2009 at 6:07 பிபமுழுவதும் வாசிக்க: வேதம் ஓதும் சாத்தான்கள்
1. புஷ்ஷின் கோவேறுகழுதைத்தனமான பிடிவாதத்தை, முட்டாள்தனத்தைத் தாண்டி இதுபோன்ற தருணங்களில் புஷ்ஷின் வினோதமான/பிரத்யேகமான ‘அற’வுணர்வு இத்தருணத்தில் சரியாக இயங்கியிருக்கக் கூடும் என்று பாமரத்தனமாக நினைக்க வைப்பதுதான் ஒருவிதத்தில் அந்த நபரின் வெற்றி போல.
2. மனித உரிமைகள் குறித்த அக்கறைதான் கிடையாது என்பது ஒருபுறம் இருக்க, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் ராஜதந்திர வெற்றி என்றுகொண்டு, அண்டை நாடுகளை இலங்கையில் அழுத்தமாகக் கால் பதிக்க வழிகோலிக் கொடுத்துவிட்டு தெற்கு ஆசியாவின் மத்தியில் காயடிக்கப்பட்ட மாடு மாதிரி நிற்கிறது இந்தியா – அதன் வீச்சு அவ்வளவு தான்.
3. ஊடகப் பொறுக்கிகள் கருணாநிதி போன்றவர்களை உள்ளூர் அரசியல் பொறுக்கிகள் மாதிரிச் சித்தரிப்பதைப் பார்க்கும்/கேட்கும்போது கொதித்திருக்கிறது – கருணாநிதி என்ற தனி நபர் மீதுள்ள ஆதுரத்தால் அல்ல – விரும்பியோ விரும்பாமலோ எனது அடையாளங்களிலொன்றை முன்னிறுத்தும் கருவிகளிலொன்றாக இந்த கருணாநிதி என்ற நபர் இருப்பதான தருணத்தின் மீதுள்ள ஒட்டுறவால். குறிப்பாக வட இந்திய ஆங்கில ஊடகங்களுக்கு கருணாநிதியின் வாரிசு அரசியல் குறித்த கிண்டல்களும், மத்திய அமைச்சரவையில் பங்குக்கு அடிக்கும் குரங்கு பல்டிகள் குறித்த கிண்டல்களும் கருணாநிதி-தி.மு.க என்ற எல்லை தாண்டி, ஜெயின் கமிஷன் மொத்தத் தமிழர்களையும் காட்டுமிராண்டிகள் என்று சித்தரித்தது போன்ற ஒரு ஒட்டுமொத்தச் சாணியடிப்பு உத்தி. இது அனைத்துக்கும் உருண்டையை உருட்டிக் கொடுப்பது கருணாநிதி என்றிருக்கும்போது யாரை நோக.
4. சாரு நிவேதிதா மாதிரியான eurosnobகளை/oreo cookie/தேங்காய்களை (உள்ளே வெளுப்பு வெளியே கறுப்பு) அமெரிக்காவில் பல்வேறு தளங்களில் பார்க்கலாம் – இந்தியாவிலிருந்து வந்த இந்தியர்கள், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சுத்த அமெரிக்கர்கள். பாலாடைக்கட்டி சரியில்லை, மார்ஜரின் சரியில்லை, ஒயின் சரியில்லை, கலாச்சார சுரணையேதுமற்ற அமெரிக்கக் குய்யான்கள் ஒற்றைக்கையால் ஃபோர்க்கால் வெட்டித் தின்கிறார்கள் என்பது மாதிரி.
5. சாரு நிவேதிதாவின் கலாச்சார மீறல்கள் பெரும்பாலும் இந்த ரகமானவை. வாழைப்பழக் குடியரசு டி-ஷர்ட் போடுவதையும் டீசல் ஜீன்ஸ் போடுவதையும் டாமி ஹில்ஃபிகர் ஜட்டி போடுவதையும் ஆட்டைச் சுட்டுத் தின்பதையும் சாராய பாட்டில்கள் முன்பு திரும்பி போஸ் கொடுப்பதை தனது வலைத்தளத்தில் போடுவதையும் அயர்ன் மெய்டன் மாதிரி கி.மு.267களின் ராக் குழுக்களை வைத்து தனது ‘*த்’ (யூத்)தை அளந்துகொள்வதையும் ஒரு ‘அ-தயிர்வடைக் கலாச்சாரமாகக்’ காட்ட முயல்வது மாதிரி. லீ, லீவைஸ் போன்றவற்றின் விற்பனைக்கடைகள் சென்னையில் வந்தபோது சம்பளத்தில் நாலில் ஒரு பங்கைக் கொடுத்தாவது ஒரு லீவைஸ் லீ ஜீன்ஸ் வாங்கி விடவேண்டுமென்று திரிந்துகொண்டிருந்த கும்பல் இருந்தது – சாருவைப் படிக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது.
6. ஜெயமோகனை விட சாரு மேல் ஏன் இவ்வளவு ஆத்திரம்? சாரு நிவேதிதாவுடையது முட்டாள்தனம் – முட்டாள்களுக்குத் திட்டினால் பெரும்பாலான நேரங்களில் உறைக்கும், திருத்திக் கொள்வார்கள்.
7. இயலாதவன் வலியை மற்றொரு இயலாதவனை முன்வைத்து இயன்றவன் தப்பித்துக்கொள்ளும் உத்தி எப்படிப்பட்டது?
8. ஆஷ்விட்ஸ், பெயௌஷெட்ஸ் (Belzec) நாஸி வதைமுகாம்களை/நினைவிடங்கள் சிலவற்றை நேரில் பார்த்திருக்கிறேன். இதுவரை இலங்கை போனதில்லை, ஊடகங்களில் படித்தவை சிலரிடம் உரையாடியது தவிர எதையும் நேரில் கண்டதில்லை – இதுதான் என்னைப் போன்றவர்களின் வாழ்வின் அவமானகரமான, குரூர நகைமுரண். அழிவுக்குப் பின்னான பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களைப் பார்ப்பது எப்படிப்பட்ட மனச்சிக்கலையளிக்கும் விஷயமென்பதை எளிதில் விளக்கிவிட முடியாது – கண்டதைப் பிறருக்கு விளக்கும் முனைப்பைவிட, கண்டது தன்னைநோக்கி தனக்குள் திரும்புகையில் நிகழும் சுயவதையைக் கையாள்வது சிக்கலான ஒன்று.
9. இன்னும் எனக்கு பதில் புரியாத கேள்வி:
நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒருபங்கு இதேபோன்ற உள்நாட்டுப்போர்களில் அழிந்துகொண்டிருக்கிறது என நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப்போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் என பேசுவதில்லை. அந்த போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான அந்த மனநிலையை, ஆயுதவெறியை, மீண்டும் நம் நாட்டு மக்கள் மனதில் ஊட்டிவளர்கக் முடியுமா என்றுதான் நம் அறிவுஜீவிகளில் ஒருசாரார் முயல்கிறார்கள். அவர்களே மானுடநேயம் பேசுபவர்களாகவும் இங்கே அறியப்படுகிறார்கள்.
– Jayamohan » வெறுப்புடன் உரையாடுதல்
Tamil Nadu 2009 Elections: Large proportion of Congress voters shift to DMDK
In Lists on ஜூன் 8, 2009 at 6:33 பிபDMK + Congress + Thol Thiruma VCK | AIADMK, MDMK, PMK, CPI, Marxists | Vijayganth DMDK | |
Congress-2004 | 52 | 21 | 15 |
DMK 2004 | 71 | 10 | 7 |
PMK 2004 | 12 | 75 | 9 |
MDMK 2004 | 20 | 60 | 7 |
AIADMK 2004 | 11 | 65 | 5 |
DMK-Congress alliance in Tamil Nadu: Social basis of voting
In India, Politics, Tamilnadu on ஜூன் 8, 2009 at 6:27 பிபCaste/communities | Vote share of DMK + Congress + Thol Thiruma VCK |
AIADMK, MDMK, PMK, CPI, Marxists |
Vijayganth DMDK |
Upper castes | 39 | 37 | 13 |
Thevars | 33 | 47 | 13 |
Vanniyars | 46 | 42 | 6 |
Mudaliars | 50 | 30 | 5 |
Lower OBCs | 34 | 44 | 12 |
Dalits | 43 | 28 | 11 |
Muslims | 38 | 17 | 6 |
Best woman politician in India?
In India, Politics on மே 24, 2009 at 2:35 முபSource: connect.in.com – Explore Profiles and Express your Opinions on People, Places, Trends and Events
- Mayawati
- Sonia Gandhi
- Jayalalithaa
- Sushma Swaraj
- Brinda Karat
- Sheila Dikshit
- Mamta Banerjee
- Vasundhara Raje
- Uma Bharati
- Pratibha Patil
- Mehbooba Mufti
தேர்தல் 2009: கருத்துக் கணிப்பு 10
In Magazines, Politics, Tamilnadu on ஏப்ரல் 27, 2009 at 10:02 முபதேர்தலின் திசைகளில் இடம்பெற்ற மாலனின் பத்து தேர்தல்:
1. அடுத்த பிரதமரைத் தமிழகம் தீர்மானிக்கும் என்பது
மிகையான கற்பனை
|
30 (19%)
|
நிச்சியம் நடக்கும்
|
29 (18%)
|
வாய்ப்புக்கள் உண்டு
|
87 (55%)
|
No Chance!
|
10 (6%)
|
2. இளைஞர்களுக்கு காங்கிரஸ் வாய்ப்பளிக்காதது
ஏமாற்றமளிக்கிறது
|
18 (10%)
|
எதிர்பார்த்ததுதான்
|
58 (34%)
|
இருந்தால்தானே கொடுக்க முடியும்?
|
94 (55%)
|
3. திருமாவளவனின் பேச்சு உணர்த்துவது
யதார்த்த நிலைமை
|
36 (20%)
|
இரண்டு சீட்டுக்காகப் போடும் ஜால்ரா
|
111 (62%)
|
இலங்கைப் பிரசினையில் இனித் திமுக எதுவும் செய்யாது
|
31 (17%)
|
4. லாலுவின் பாப்ரி மஸ்ஜித் பேச்சு
பிளாக் மெயில்
|
43 (38%)
|
சரி.ஆனால் Too Late
|
43 (38%)
|
பாஜகவிற்கு சாதகம்
|
25 (22%)
|
5. வெளிநாட்டிலுள்ள கறுப்புப் பணத்தைக்
கட்டாய்ம் கொண்டு வந்தே ஆக வேண்டும்
|
79 (45%)
|
கொண்டுவருவது நடைமுறையில் சாத்தியமில்லை
|
7 (4%)
|
கொண்டு வர முயற்சித்துப் பார்க்கலாமே?
|
35 (20%)
|
முதல்ல இங்க உள்ளதைக் கொண்டாங்கய்யா!
|
51 (29%)
|
6. இலங்கைத் தமிழர்களின் இன்றைய இன்னலுக்குப் பெரிதும் காரணம்
மத்திய அரசின் மெத்தனம்
|
65 (31%)
|
பிரசினையை சரியான முறையில் மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லாத கருணாநிதி
|
69 (33%)
|
விடுதலைப் புலிகளின் அணுகுமுறை
|
71 (34%)
|
7. திமுக அறிவித்துள்ள வேலை நிறுத்தம்
இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவிததிலும் உதவாது
|
76 (44%)
|
தேர்தல் நேரத்து வீரம்
|
75 (43%)
|
இதைக் கூட செய்யவில்லை என்றால் எப்படி?
|
20 (11%)
|
8. ஜெயலலிதா கூறும் ஊழல் புகார்
உண்மையாக இருக்கலாம்
|
82 (53%)
|
உள்நோககம் கொண்டது
|
16 (10%)
|
விரிவான விசாரணை தேவை
|
40 (26%)
|
பொருட்படுத்தத் தக்கதல்ல
|
14 (9%)
|
9. ஜெயலலிதாவின் மனமாற்றம்
வரவேற்கத் தக்கது
|
42 (50%)
|
ந்ம்புவதற்கில்லை
|
16 (19%)
|
தேர்தல் தந்திரம்
|
24 (28%)
|
புரியமாட்டேங்குதே!
|
2 (2%)
|
10. காலணி வீசும் கலாசாரத்திற்கு
தொலைக்காட்சிகள் காரணம்
|
4 (15%)
|
அடக்குமுறை காரணம்
|
10 (38%)
|
விளம்பர ஆசை காரண்ம்
|
12 (46%)
|
சொன்னார்கள்! மறந்தார்கள் – அரசியல் பேச்சு
In Politics on ஏப்ரல் 22, 2009 at 2:59 பிபமுந்தைய மேற்கோள் 10:
தமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு – மேடை மொழி
1. லாலுபிரசாத் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் தலைமையிலான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங் :
“எங்களுக்கு காங்கிரசுடன் தகராறு எதுவும் கிடையாது. மன்மோகன்சிங்கையே மீண்டும் பிரதமர் ஆக்க விரும்புகிறோம்.”
2. ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் :
“மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு அமைப்பான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, காங்கிரசுக்கு மட்டும் சொந்தம் அல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமராக, மன்மோகன்சிங்கை ஏற்க முடியாது.”
3. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிடிக்கப்பட்டு இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டால், எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கேள்விக்கு அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தனது அண்ணன் ராகுல் காந்திக்காக பிரசாரம் செய்யும் பிரியங்கா வாத்ராவின் பதில் :
“இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதை அரசியல் ரீதியாக என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரம், ஒரு நாடு என்ற முறையில் அவரை (விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்) இந்தியா மன்னிக்கவே கூடாது.”
4. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி:
“தமிழ்நாட்டிலும் சரி, இந்திய துணைக்கண்டத்திலும் சரி. இப்போது வருகின்ற செய்திகளை பார்த்தபோதும், எங்கெங்கே எத்தனை இடங்களை காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இன்றைக்கு பிடிக்கின்றன என்பதை உற்று நோக்கும் நேரத்தில், தேர்தல் ஜாதகத்தை கணிப்பவர்கள், அடுத்து வரும் ஆட்சியும் இந்திய துணைக்கண்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிதான் என்று முடிவுகளை சொல்லியிருக்கிறார்கள்.”
5. திராவிட முன்னேற்ற கழக அமைச்சர் அன்பழகன் :
“டெல்லியில் மீண்டும் சமய சார்பற்ற, மசூதிகளை இடிக்காத, மசூதிகளை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டுவோம் என்ற சொல்லாத ஒரு ஆட்சி அமைய வேண்டும்.”
6. காங்கிரஸ் தலைவர் தங்கபாலு :
“காங்கிரஸ் கட்சியும், அன்னை சோனியாகாந்தியும் இருக்கும்வரை தி.மு.க.வை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.”
7. திருவள்ளூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் காயத்ரி ஸ்ரீதரனை ஆதரித்து பூந்தமல்லியில் பிரசாரம் செய்த முக ஸ்டாலின் :
“பாமக தலைவர் ராமதாஸ், ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது தனது மகன் அன்புமணிக்கு மேல்சபை எம்பி சீட் என்ற நிபந்தனையுடன்தான் கூட்டணி வைக்கிறார்.
ராமதாசுக்கு தைரியம் இருந்தால், அவரது மகனை தேர்தலில் நிறுத்தி மக்களின் ஆதரவை பெற்று எம்பியாக்கட்டும். கொல்லைப்புறம் வழியாக எம்பியாக்கும் வழக்கத்தையே அவர் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்.”
8. மகன் அன்புமணியின் மாமனாரும் ஆரணி காங்கிரஸ் வேட்பாளருமான கிருஷ்ணசாமியை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியனை ஆதரித்து ராமதாஸ் பேசுகையில் :
“நாங்கள் சொந்தம், பந்தம், பாசத்திற்கு எல்லாம் இடம் கொடுக்க மாட்டோம். அதைப்பற்றி யோசிக்கவும் மாட்டோம். பாவம், இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி, ராஜ்யசபா எம்பி சீட் கேட்டு பல முறை முயற்சி செய்தார். கிடைக்கவில்லை, ஏனென்றால் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.”
9. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முத்துவேல்ராஜை ஆதரித்து பிரசாரம் செய்தபோது:
“அரசு அறிவத்த இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், கேஸ் அடுப்பு போன்றவற்றால் கட்சிகாரர்களின் பினாமிகளுக்கு தான் ஆதாயம் ஏற்பட்டுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம்.”
10. சேலத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செம்மலை அறிமுக நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் :
“எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். சுகாதார வசதி கிடைக்க வேண்டும். ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள். பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகிறார்கள்.
தமிழகம் டாஸ்மாக் மூலம் மதுபானம் விற்பனையில் மட்டும் வளர்ந்துள்ளது. வேறு எதிலும் வளர்ச்சி அடையவில்லை.”
கொசுறு: பாஜக தலைவர் இல.கணேசன் :
“தென் சென்னையில் உள்ள வாக்காளர்களில் படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 40 சதவீதம் பேர் பெரும்பாலும் வாக்களிப்பதில்லை. தங்களது ஜனநாயக பொறுப்பை அவர்கள் உணர வேண்டும். கண்டிப்பாக வாக்களிக்க முன்வர வேண்டும்.“
தமிழக தேர்தல்: நடிகர் பட்டியல்: வேட்பாளர் லிஸ்ட்
In Lists on ஏப்ரல் 20, 2009 at 7:52 பிப- நடிகன் நெப்போலியன் – பெரம்பலூர் : திமுக
- காமெடியன் சிவக்குமார் என்கிற ஜே கே ரித்தீஷ் – ராமநாதபுரம் : திமுக
- இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் – கள்ளக்குறிச்சி : லட்சிய திமுக
- வில்லன் மன்சூர் அலிகான் – திருச்சி : லட்சிய திமுக
- வெளிவராத படத்தின் ஹீரோ திருமாவளவன் – சிதம்பரம் : விடுதலை சிறுத்தைகள்
- ஒரு பட கதாநயகன் திருநாவுக்கரசர் – ராமநாதபுரம் : பாஜக
- கார்த்திக் முத்துராமன் – விருதுநகர் : அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி
- எஸ்.எஸ்.சந்திரன் – மத்திய சென்னை : அதிமுக
தமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு – மேடை மொழி
In Politics, Tamilnadu on ஏப்ரல் 17, 2009 at 4:04 பிபமுந்தைய மேற்கோள் 10:
அ) Therthal 2009: Top 10 Quotes
ஆ) Tamil Nadu Quotes: Elections 2009
1. அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் :
“இன்னும் 2 ஆண்டு காலம் தமிழகத்தில் இந்த திமுக ஆட்சியை நீடிக்கவிட்டால் தமிழ்நாடும், பிகார் போன்ற மாநிலமாக மாறிவிடும்.”
2. நடிகர் மன்சூரலிகான்:
“அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து போட்டியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடருவேன்.”
3. கலைஞர் கருணாநிதி:
“எந்தப் பிரச்னை குறித்த ஜெயலலிதாவின் அறிக்கையானாலும், அதிலே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற கருத்து இடம் பெறாமல் இருக்காது!”
4. டாக்டர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி.
“மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் ஆட்சி மாறும் என்று நான் கூறியதை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் ஆட்சியில் அமர வேண்டும், காமராஜரின் ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும் என்பது தமிழகத்தில் பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்களின் கனவு. அவர்களின் கனவு நிறைவேற வேண்டும் என்றுதான் கூறினேன்.”
5. முதல்வர் கருணாநிதி கேள்வி-பதில் அறிக்கை:
“அதிமுக கூட்டணியின் தலைவர் ஜெயா தமிழகத்திலே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அந்தக் கட்சிக்கு தற்போது போயிருக்கின்ற டாக்டர் ராமதாஸ், அந்த அம்மையாருக்கும் துரோகம் இழைக்கும் வகையிலும், அந்தக் கூட்டணியிலே இருக்கிற இரண்டு கம்ïனிஸ்ட் கட்சிகளுக்கும் “பெப்பே” காட்டுகின்ற வகையிலும் – அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டே, காங்கிரசாரின் கனவு நிறைவேறி தமிழகத்திலே காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டுமென்று சொல்கிறார்!
அவர் எங்கே போனாலும், இருக்கும் இடத்திற்கு குழி பறிக்கத்தான் பார்ப்பார்!”
6. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் அளித்த பேட்டி:
“இஸ்ரேலில் இருந்து ஏவுகணை வாங்கியதில் ஊழல் நடந்து இருப்பதாக இடதுசாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. எனது மந்திரி சபையில் யாருமே ஊழல்வாதிகள் கிடையாது.”
7. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்:
“அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எடுத்த முயற்சியில் 10-ல் ஒரு பங்கு முயற்சியை இலங்கை தமிழர் பிரச்னையில் எடுத்திருந்தால், இலங்கை தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம்.”
8. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்:
“ஒரு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி வழங்குகிறோம் என்று மேடைதோறும் முதலமைச்சர் கருணாநிதி பேசி வருகிறார். நீங்கள் கொடுக்கக்கூடிய அரிசி நியாயவிலை கடைகளுக்குப் போவதற்குப் பதிலாக லாரிகளில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இதுவரை இந்த அரிசி கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா? மணல் கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா?”
9. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா:
“ஐந்தாண்டு கால, மத்திய காங்கிரஸ் ஆட்சியின், நிர்வாகத் திறமையின்மை காரணமாக, நாட்டின் பொருளாதாரம், மோசமான நிலைக்கு சென்றுள்ளதையும், தீவிரவாதம் அதிகரித்துள்ளதையும், நீங்கள் நன்கு அறிவீர்கள். ஐந்து ஆண்டு கால மத்திய காங்கிரஸ் ஆட்சியில், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.”
10. ஆந்திர மாநில விஜயவாடாவில் பிரஜா ராஜ்யம் கட்சித்தலைவர் நடிகர் சிரஞ்சீவி:
“சந்திரபாபு நாயுடு ஏழைகளின் பசி, மற்றும் அவர்களது வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் கலர் டிவி வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். சந்திரபாபு நாயுடு சொந்தமாக எதுவும் சிந்திக்காமல் தமிழ்நாட்டில் செய்யப்படும் நலத்திட்ட உதவிகளை காப்பியடித்து வருகிறார். ஐடெக் முறையில் சிந்திக்கும் சந்திரபாபு நாயுடு ஏழைகளுக்காக செய்யப்போவது எதுவும் இல்லை.”
கொசுறு: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி:
“தேர்தலுக்கு பிறகு 4 வது அணி கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெறுமா என்ற கேள்விக்கு இப்போது பதில் கூற முடியாது. அது எண்ணிக்கையை பொறுத்தது. ஜனநாயகம் என்றாலே எண்ணிக்கை விளையாட்டு என்றே பொருள்.”