Snapjudge

Posts Tagged ‘வினா’

Book Quiz on Modern Tamil Lit: புத்தகப் புதிர் – 10

In Books, Literature, Magazines, Tamilnadu on ஜூலை 7, 2011 at 1:34 பிப

1. ‘பெரிய மரமும் சிறிய மரமும்’ உலக நாடோடிக்கதைகளை தமிழில் வழங்கியவர் யார்?

2. கமலாதாஸ் வழங்கும் மாதவிக் குட்டியின் கதைகளை தமிழில் மொழிபெயர்த்தவர்?

3. ‘முள்ளி வாளிணிக்காலுக்குப்பின்’- ஈழத்தமிழ்க் கவிதைத் தொகுதியின் தொகுப்பாசிரியர் யார்?

4. கூத்துக் கலைஞர்கள் பற்றிய ‘அருங்கூத்து’ நூலின் ஆசிரியர் யார்?

5. ‘ஆமென்’ தன் வரலாற்று நூலின் மூலஆசிரியர் சிஸ்டர்ஜெஸ்மி. இதைத் தமிழில் தந்தவர் யார்?

6. ‘கருப்பாளிணி சில ஆப்பிரிக்க மேகங்கள்’ கருப்பின கவிதை நூலின் தொகுப்பு ஆசிரியர் யார்?

7. ‘தமிழ்த் திரைப்படமும் பண்பாட்டு அரசியலும்’ – நூலின் ஆசிரியர் யார்?

8. ‘அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது’- குறுநாவல் யாருடையது?

9. விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ எனும் ராஜீவ் சர்மாவின் ஆங்கில நூலைத் தமிழில் தந்தவர் யார்?

10. ‘யாருமற்ற நிழல்’ யாருடைய கவிதைத் தொகுதி?

Source: Puthagam Pesuthu

விடைகள்

1. யூமா வாசுகி
2. உதயசங்கர்
3. குட்டிரேவதி
4. தவசிக்கருப்பசாமி
5. குளச்சல் மு. யூசுப்
6. மதியழகன் சுப்பையா
7. மா. சின்னப்பொண்μ
8. வ.ஐ.ச. ஜெயபாலன்
9. ஆனந்தராஜ்
10. தேவதச்சன்

வலைப்பதிவரிடம் பத்து வினாக்கள்

In Blogs, Life, Lists on ஒக்ரோபர் 21, 2010 at 7:02 பிப

சென்னைக்குப் போகிறேன். வலைப்பதிவரை சந்திக்கலாம். என்ன கேள்வி கேட்கலாம்? எதற்கு விடை அறிய ஆவல்?

  1. ஏன் வலைப்பதிகிறீர்கள்?
  2. உங்களுக்கு மணமாகிவிட்டதா? குழந்தை உள்ளதா?
  3. வேலை? ஊதியத்துக்கேற்ற உழைப்பைத் தருவதாக நினைக்கிறீர்களா?
  4. கடைசியாக பதவி மாறியது எப்போது?
  5. ட்விட்டர், ஃபேஸ்புக் பிடித்திருக்கிறதா? பதிவு அதிகம் பிடிச்சிருக்கா?
  6. குமுதம், விகடனில் எழுத ஆசையா?
  7. தமிழ்ப்பேப்பர், திண்ணை, சொல்வனம் குறித்த உங்கள் எண்ணம்.
  8. உங்கள் பதிவு எந்த இடங்களில் கவனிக்கப்பட்டிருக்கிறது?
  9. வலைப்பதிவு அறிமுகம் இல்லாதவர்களால், உங்கள் பதிவு எவ்வாறு நோக்கப்படுகிறது?
  10. பைசா பிரயோசனம் உண்டா?

வாக்குமூலம்: நகுலன் – வினா வரிசை: எனக்குப் பிடித்த பத்து வினா

In Books, Life, Questions on மார்ச் 12, 2009 at 4:40 முப

  1. நீங்கள் ஏன் குடிக்கிறீர்கள்?
  2. நீங்கள் உங்களுடேனேயே பேசிக் கொள்வதுண்டா?
  3. நீங்கள் முன்கோபியரா அல்லது எதையும் சகித்துக் கொள்ளும் இயல்புடையவரா?
  4. உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு ஆட்கள் உங்களைச் சாமர்த்தியமாக ஏமாற்றியிருக்கிறார்கள்? நீங்கள் அவர்கள் மீது சட்டபூர்வமாக ஏதாவது நடவடிக்கை எடுத்ததுண்டா?
  5. ஊழலை அறவே ஒழிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
  6. உங்கள் பிள்ளை மருமகன்மார் இவர்களில் சிலர் உங்களை விடப் பதவியில் பொருளாதார வகையில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதால் அவர்களைக் காணும் போது தாழ்வுநிலை மனப்பானமை அடைகிறீர்களா?
  7. நீங்கள் எல்லோரரையும் நம்பி எளிதில் ஏமாந்திருக்கிறீர்களா? நீங்கள் எல்லோரையும் சந்தேகக் கண்கள் கொண்டே பார்க்கிறீர்களா? உலகில் நல்லவர்களே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா?
  8. நீங்கள் எப்பொழுதாவது ஒரு சிநேகபாவமான உறவு வைத்துக் கொள்ள முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றிருக்கிறீர்களா?
  9. வாழ்க்கையில் உங்களுக்கு மிகக் கசப்பான அனுபவம் எது?
  10. உங்களுக்கு உங்கள் தொழில், பணம் சம்பாதிப்பது இவைகளைத் தாண்டி ஏதாவது லஷியம் உண்டா?

நகுலன் எழுதிய ‘வாக்குமூலம்‘ நாவலில் இருந்து; தொடரும்

சுஜாதா கேள்விகள்: கற்றதும் பெற்றதும் (ஆனந்த விகடன்)

In Life, Questions on பிப்ரவரி 23, 2009 at 6:32 பிப

இன்றைய தினங்களில் எல்லாமே விழுக்காடு அல்லது எண்ணிக்கைதான். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து ஐ.ஐ.டி. அனுமதித் தேர்வு வரை வாழ்வில் உள்ள இலக்கங்களும் விழுக்காடுகளும் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள கீழ்க்காணும் கேள்விகளின் அருகில் ஒரு பென்சிலால் விடை எழுதிப் பாருங்கள் (பேனாவால் எழுதினால், அப்புறம் மாற்ற முடியாது).

நீங்கள் எத்தனை விழுக்காடு?

1. சம்பளத்தில் தர்ம காரியங்களுக்காக எவ்வளவு செலவழிக்கிறீர்கள்?

2. எத்தனைக் கடிதங்களுக்குப் பதில் எழுதுகிறீர்கள்?

3. எத்தனை மணி நேரம் வீட்டை ஒழித்து, சுத்தப்படுத்துகிறீர்கள்?

4. எத்தனை மணி நேரம் குடும்பத்துடன் செலவிடுகிறீர்கள்?

5. எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?

6. எத்தனை முறை ஓட்டுப் போட்டிருக்கிறீர்கள்?

7. அரட்டை அடிக்காமல் எத்தனை மணி நேரம் நிஜமாக வேலை செய்கிறீர்கள்?

8. உங்களுக்கு எத்தனை ஆப்த நண்பர்கள்?

9. தினம் எத்தனை மணி நேரம் வேண்டாத வேலைகளைச் செய்கிறீர்கள்?

10. எத்தனை மணி நேரம் புத்தகம் படிக்கிறீர்கள்?

11. எவ்வளவு நேரம் டி.வி. பார்க்கிறீர்கள்? என்ன பார்க்கிறீர்கள்?

12. பாட்டு மட்டும் எவ்வளவு நேரம் கேட்கிறீர்கள்?

13. போன வருஷம் எத்தனை பேருக்குப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து அனுப்பினீர்கள்?

14. தினம் எத்தனை மணி நேரம் செய்திப் பத்திரிகை படிக்கிறீர்கள்?

15. எத்தனை மணி நேரம் ஜஸ்ட் சும்மா இருக்கிறீர்கள்?

16. தினம் எத்தனை மணி நேரம் பஸ், ஸ்கூட்டர் அல்லது காரில் பயணிக்கிறீர்கள்?

17. பள்ளியில் உங்களுக்குப் பிடித்திருந்த பாடம் எது?

18. இப்போது பிடித்த நடிகர், நடிகை யார், யார்?

இந்த 18 கேள்விகளுக்கும் பதில் எழுதிவிட்டு… எனக்கு அனுப்பாதீர்கள்! ஒரு வாரம் கழித்து அவற்றைப் பாருங்கள். உங்களை நீங்களே அறிந்து கொள்வீர்கள். கீழ்க்கண்டவற்றில் ஒன்றை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.

நான் ஒரு…

1. சோம்பேறி

2. சாதாரண மனிதன்

3. நல்ல குடிமகன்

4. அறிவு ஜீவி