Snapjudge

Posts Tagged ‘படித்தவை’

கற்றதும் பெற்றதும் ஹேங் ஓவர் குழுமம்

In Blogs, Lists, Magazines, Questions, Tamilnadu on மே 15, 2009 at 4:29 முப

சற்றேறக்குறைய பத்தாண்டுக்கு முந்தைய பழங்காலத்தில் ஆனந்த விகடனில் சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’, குமுதம்.காம்-இல் பா ராகவனின் ‘தெரிந்தது மட்டும்’, விகடன்.காம்-இல் சாரு நிவேதிதாவின் ‘கோணல் பக்கங்க’ளும் வெளிவந்தது.

இன்றைக்கு அப்படி சிதறல்களைத் தொகுத்து எழுதும் பெருமகனார் சில:

கருத்துக்கணிப்பு எக்ஸிட் போல் பத்து கேள்விகள்:

  1. நாலு பதிவுக்கான விஷயங்களை ஒரே பதிவாக்குவது பிடித்திருக்கிறதா?
  2. ஒவ்வொரு அனுபவத்தையும், ஒவ்வொன்றாக சொல்லி, அதற்குறிய குறிச்சொல் இன்னபிற வலைப்பூச்சு இடவேண்டுமா?
  3. இப்படி ஆளுக்கொரு ப்ரான்ட் வைப்பது வலைப்பதிவை சந்தைமயமாக்குமா?
  4. அவரவரின் ‘குறிச்சொல்’ மெய்யாலுமே மனதில் பதிந்து, அவரைச் சொல்வதற்கு பதில் இந்த அடைமொழி நிழலாட வைக்கிறதா?
  5. பதிவின் தலைப்புக்கும், இந்தத் தொடர் இடுகை தலைப்புக்கும் வித்தியாசம் தேவையா?
  6. குட்டியாக இருக்கிறது என்னும் அவச்சொல்லை நீக்கத்தான், இப்படி தொகுக்கிறார்களா?
  7. இந்த மாதிரி துணுக்குத் தோரணத்திற்கு பதில் ட்விட்டர் தோரணம் தேவலாமா?
  8. கூகிள் தேடல் முடிவுகளில் தலைப்புக்கு அதிமுக்கியத்துவம் கிடைக்கும் காலத்தில், உபதலைப்பு கூட கிட்டாத இந்தப் பதிவுகளுக்கு போதிய ரீச் நிலைக்குமா?
  9. கடைசியாக: தனித் தனி இடுகை அல்லது மொத்த குவிப்பு – எது உங்கள் தேர்வு?
  10. இதற்கெல்லாம் கருத்துக் கணிப்பு தேவையா?