மதுவிருந்து நடன நிகழ்ச்சிக்கு தனது தோழர்-தோழியர் புடைசூழப் போனார் த்ரிஷா. மது போதையுடன் டான்ஸ் ஆடியபோது, ஆட்டத்தில் லயித்திருந்த த்ரிஷாவின் மீது யாரோ பலமாக மோதினான். உடனே அவனோடு கடும் வாக்கு வாதத்தில் நடிகை த்ரிஷா ஈடுபட்டார்.
ஹீரோயினுக்கு ஆதரவாக அவர் தோழிகளும் இறங்க விவகாரம் முற்றியது. அவர் சண்டை போட்டது இந்திய கிரிக்கெட் வீரர் பதானியுடன். ஆத்திரமடைந்த திரிஷா, பதானியை திட்டியதாக தெரிகிறது. பதிலுக்கு பதானியும் திட்டினார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே அடிதடி மூண்டுள்ளது. பதானியைப் பிடித்து த்ரிஷா தள்ள, பதிலுக்கு அவரும் தள்ள ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, செய்திகளை வெளியிட்ட அதே பத்திரிகைகளுக்கு த்ரிஷா தனிப்பட்ட முறையில் பேட்டியளித்து வருகிறார்.
அதில் தனக்கு பதானி என்ற கிரிக்கெட் வீரரையே தெரியாது என்றும், சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் நாள் இரவு, அந்த ஓட்டலில் தோழிகளுடன் அமைதியாக டின்னர் சாப்பிட்டு வந்துவிட்டேன் என்று அவர் கூறியுள்ளார். தன்னைப் பற்றி திட்டமிட்டு இதுபோன்ற செய்திகள் வருவதாகவும், இப்படி செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறினார்.
திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் கூறுகையில், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. அந்த கிளப்புக்கு திரிஷா சமீப காலமாக போகவே இல்லை. மேலும், அவர் இதுவரை பார்த்திராத நபருடன் ஏன் சண்டை போட வேண்டும் என்றார்.
பதானி தரப்பில் இதுவரை இந்த செய்தியை மறுக்கவும் இல்லை, நடந்தது என்று ஒப்புக் கொள்ளவும் இல்லை.
இப்பொழுது 10 காரணங்கள்:
பெண்:
1. ஹேமங் பதானிகளை சகித்துக் கொள்வதற்குப் பெயர் மாநகரப் பேருந்து. ‘Dublin‘கள் அல்ல.
2. பொறி பறந்தால்தான் ‘Sparks‘; இல்லையென்றால் புஸ்ஸு.