Snapjudge

Posts Tagged ‘தொகுப்பு’

Writer Jeyamohan on Author S Ramakrishnan

In Books, Literature on ஜூலை 6, 2012 at 7:39 பிப

1. விழித்திருப்பவனின் இரவு: உலக இலக்கியச்சிமிழ்

தமிழில் ஒரு சராசரி வாசகன் உலக இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் அறிவதற்கான சாளரமாக அவரது கட்டுரைகள் இருந்து வருகின்றன. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் அவர் எடுத்துப் பேசியிருக்கும் ஆசிரியர்களின், நூல்களின் பெயர்ப் பட்டியலே வியப்பூட்டுவதாக உள்ளது. இன்றைய தமிழ்ச்சூழலில் இத்தகைய பல குரல்கள் எழுந்தாக வேண்டியிருக்கிறது. நமக்கு இன்றைய இன்றியமையாத தேவை இலக்கிய இதழியல். அதற்கான மிகச்சிறந்த முன்மாதிரிகள் எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரைகள்.

2.

3. இதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்

அற்பமான, அன்றாட வாழ்வு சார்ந்த புற யதார்த்தங்களை ‘அப்படியே’ பதிவு செய்வதிலேயே திருப்தி காண்கிற இலக்கியப் போக்கிலிருந்து விலகி இலக்கிய ஆக்கம் குறித்தான மகத்தான கனவுடன் ஆக்கப்பட்ட உண்மையான தீவிரமுயற்சி இப்படைப்பு. ஒரு நாவல் உருவாக்குவது ஒரு புனைவு வெளியைத்தான் என்ற நவீனப்பிரக்ஞை இதில் உள்ளது. இதனுடன் பலவகையிலும் ஒப்பிடத்தக்க நவீன இலக்கிய ஆக்கம் என இடாலோ கால்வினோவின் ‘புலப்படா நகரங்கள்’ நாவலைச் சொல்லலாம்.

4. பாரதி மகாகவியே: விவாதம்- ஒரு கடிதம்

பாரதியைக் கொண்டாடுபவர்களில் இரு வகையினர் உண்டு. திரிலோகசீதாராம் போன்றவர்கள் பாரதியின் வேதாந்தநோக்கை முக்கியமாகக் கருதுபவர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அவன் நவீன ஜனநாயக சமூகத்தின் உருவாக்கத்துக்கு ஆற்றிய பங்களிப்பைப் பெரிதாக எண்ணுபவர்கள். அவை இரு தனி மரபுகளாக வளர்ந்தன

எஸ்.ராமகிருஷ்ணன் மரபே ஜீவானந்தம் முதல் இடதுசாரி ஜெயகாந்தன் வரை பாரதி பக்தர்களை உருவாக்கியது. கைலாசபதி முதல் ரகுநாதன் வரை இடதுசாரி பாரதி ஆய்வாளர்களை உருவாக்கியது.

5. இருவகை எழுத்து

எஸ்.ராமகிருஷ்ணன் வணிக எழுத்துக்கு மாற்றாக சிற்றிதழ்சார் இலக்கிய உலகம் உருவாக்கிய வகைமாதிரிக்குள் நிற்பவர். தன்னை வாசகன் என உணரும் ஒருவன் கவனித்துப் பொறுக்கிக்கொள்ளும் மொழிநுட்பங்களும், சித்தரிப்புநுட்பங்களும் நிறைந்தது அது. வாச்கானை உள்ளே ஈடுபடுத்தாதது. அந்நுட்பங்களின் எல்லையை வாசகன் கண்டுபிடிக்கும் வரை அவன் ஆர்வத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும்.

6. யாமம் : எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு

7. காமத்துக்கு ஆயிரம் உடைகள் : எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’

8. ஜெய்? மோகன்?

ஜேம்ஸ்பாண்டு உடையில் தோன்றி ஜெய்சங்கர் பரிமளிக்கும் படங்களை பார்க்கும் இவர் என்னய்யா நம்ம ஜெயமோகன் மாதிரியே நடிக்கிறதும், சாடி குதிக்கிறதும், நகத்தை கடிக்கிறதும். உணர்ச்சிவசப்படுறதும், எதுக்குனு தெரியாம சண்டை போடுறதுமா செய்றாரே என்று பல முறை சிரிப்பை அடக்க முடியாமல் திணறியிருக்கிறேன். உண்மையில் இப்போது தான் அவருக்கு ஜெய் என்ற பெயர் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.

& எஸ்ரா : ஆளுமை, நகைச்சுவை & பகிடி

எங்களூரின் ராமகிருஷ்ணனுக்கு வாசகர்கள் அதிகம். எங்கள் அக்கவுண்ட் கிளார்க் என்னிடம் ”சார் உங்களுக்கு நெஜம்மாவே ராமகிருஷ்ணனை தெரியுமா சார்?” என்றார்.

”தெரியுமே”

”உங்ககூட பேசுவாரா?”

”அப்பப்ப பேசுவார். சில சமயம் சிரிக்கக்கூட செய்வார்”

”பெரிய ரைட்டர் சார். பாத்து பேசணும். யூ ஆர் லக்கி” என்றார் ”அவரு ஒரு தேசாந்தரி சார்”

அந்த வார்த்தை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது போல. ”அந்தக்காலத்திலே ராணி வாராந்தரீண்ணு ஒண்ணு வந்ததே ”என்றேன்.

9. எஸ்ராவுடன் ஒரு உரையாடல் – கெ.பி.வினோத்

10. http://www.jeyamohan.in/?s=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&searchsubmit&paged=3

’கரிசலில் பிறப்பவர்கள் இயல்பிலே வெக்கை குடித்தவர்கள். வாழ்க்கை இவர்களுக்கு எவ்விதமான சுகபோகத்தையும் தந்துவிடவில்லை. தினப்பாடுகளைக் கடந்து போவதற்கே சமர் செய்து பழகிய மனிதர்கள். குறிப்பாக இங்குள்ள விவசாயிகள் வானத்தோடு பேசிப் பழகிப்போனவர்கள். மழையைக் கொண்டு செல்லும் மேகம் வேறு ஊரை நோக்கிப் போகிறதே என்று ஆத்திரப்பட்டு மேகங்களை விரட்டி மடக்கி இழுத்துவரப் பின் தொடர்பவர்கள்’ என எஸ்.ராமகிருஷ்ணன் கரிசலை ஒரு கட்டுரையில் விவரிக்கிறார்.

கொலையுண்ணப்பட்ட வயோதிகரின் திரேகத்தின் மீது அலையும் வஸ்திரத்தில் காற்றின் விரல்கள் அலைவு கொள்வதாக தெரிகிறது என்பதனால் கொலைவெளியில் மிதந்து கொண்டிருக்கும் பறவையின் மூன்றாவது கண்களின் அபூர்வ ஷணங்கள் காரணமாக அமையலாம் என தலைமறைவாக இருக்கும் அன்னியஸ்தனான கிழவர் சொல்லியிருக்கிறார் . [கொலை ஏற்கனவே கோயில்பட்டியை சேர்ந்த பெரிய ஒச்சாத்தேவர் என்பவரால் – — துரத்தித் துரத்தி, கதறக் கதற —செய்யப்பட்டு விட்டது . நாமெல்லாம் போஸ்ட்மார்ட்டம்தான் செய்யமுடியும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் ]

– எஸ்.ராமகிருஷ்ணன், விருதுநகர்

Writer S Ramakrishnan: 20 Links

In Lists, Literature, Tamilnadu on ஜூன் 26, 2012 at 6:29 பிப

1. Webulagam நேர்காணல்எஸ். ராமகிருஷ்ணன்

சன் டி.வி-யில் செய்திப் பிரிவில் வேலை செய்து வந்த இவர், எழுத்தில் கவனம் செலுத்த இயலாத காரணத்தால், வேலையை ராஜினாமா செய்தார்.

`கவிதைக்கும் இதுவரை இருக்கும் சிறுகதை வடிவங்களுக்கும் இடையே நான் ஒரு `கதைசொல்லல்’ முறையை – ஒரு `Fable’ போன்ற வடிவத்தைக் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறேன்’

`விஷ்ணுபுரம்’ நாவல் குறித்த உங்கள் `contention’ என்ன?

2. கால் முளைத்த கதைகள் – எஸ். ராமகிஷ்ணன்உயிர்மை பதிப்பகம்

நெல் எப்படி உருவானது?

நாய் ஏன் வாலை ஆட்டுகிறது?

பெண்களுக்கு ஏன் தாடி வளர்வதில்லை?

என்கிற ஒரு நைஜீரியா கதை உள்ளிட்ட 80 கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார்

3. எஸ்.ராமகிருஷ்ணன்: ‘கோடுகள் இல்லாத வரை படம்’ தொடர்

வாஸ்கோட காமா, மார்க்கோ போலோ, இபின் பதூதா (Ibn Battuta), அல்பெரூனி (Alberuni) – உள்ளிட்ட பயணிகளின் திரைகடலோடிய அநுபவங்களைப் பற்றிய சுவையான தொடர் இது.

4. Anandha Vikadan Interview with Noted Writer S Ramakrishnan on Eelam, Jeyamohan, Tamil Cinema

” ‘சண்டக்கோழி’ விவகாரத்துக்குப் பிறகு, உங்களுக்கும் பெண்ணியவாதி களுக்குமான உறவில் விழுந்த விரிசலை நீங்கள் உணர்கிறீர்களா?”

”ஏன் எல்லாம் தெரிந்தவர்கள்போல தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறீர்கள்? ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா?”

”சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்… யாருக்கு ரசிகர்கள் அதிகம்?”

5. உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தும் நூல்: செகாவின் மீது பனிபெய்கிறது

சிறுவயதில் சாலையில் கைவிடப்பட்ட குதிரை ஒன்று பனியில் நனைந்தபடி நிற்பதை பார்த்து தானும் பனியில் நிற்கிறார். நீண்ட இரவில் பனி கொட்டி அவரை நடுகங்கச் செய்கிறது. செகாவ் ஒரு நோயாளி. ஆனாலும் அவர் தன்னை வாட்டும் குளிரில் நிற்கிறார். குதிரை இவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. மனித வேதனைகளில் முக்கியமானது கைவிடப்படுதலும் நிராகரிப்புமே முக்கியமானது என்பதைத் தனது கதைகளில் உணர்த்துகிறார்.

6. மாற்று மருத்துவம்கால்களால் சிந்திக்கிறேன்

ஒட்டகம் மட்டுமே நடக்கும்போது வாயசைத்துக் கொண்டேயிருக்கும். அதுபோல நமது மனது எதையோ அசைபோட்டபடியே தானிருக்கிறது என்கிறார் தோரூ. ஒரு முறை வோர்ட்ஸ்வொர்த் வீட்டிற்கு சென்ற ஒரு வாசகர், கவிஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது பணிப் பெண்ணிடம் கேட்டார். அந்த பெண் கவிஞர் வீட்டு நூலகத்தினுள் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் ஜன்னலுக்கு வெளியில் உள்ள உலகை படித்துக் கொண்டிருக்கிறார் என்றாராம். நடைப்பயிற்சி அப்படியான ஒரு அனுபவத்தையே தரக்கூடியது. கண்களால் உலகை வாசிப்பதன் பெயரே நடைபயிற்சி.

7. வைரமுத்து, ரஜினிகாந்த் பேச்சுக்களும் விழியங்களும்: S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

8. ‘நெடுங்குருதிகுறித்து எஸ். ராமகிருஷ்ணன்

ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடும்போது அது விளைந்த மண்ணின், நீரின் ருசியையும் சேர்த்துதான் சாப்பிடுகிறோம். ஆனால், அதை தனித்து அறிவதில்லை. எனில் ஒரு ஊர் அங்கிருக்கும் காய்களில், கனிகளில், வீடுகளில், கனவுகளில் தன் ருசியை உருவாக்கிவிடுகிறது என்பது உண்மைதானே.

‘ஆரோக்ய நிகேதனம்’, ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ போன்ற சிறந்த இந்திய நாவல்கள் எழுப்பிய கனவைப் போல இந்த நாவலும் ஒரு சிதறடிக்கப்பட்ட கனவைக் கொண்டிருக்கிறது.

9. Tamil Writer S Ramakrishnan Interview in Thendral by Arvind Swaminathan: Literary Icons Series

வெகுஜன வாசகர்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்ததில் முக்கியமானவர். வாசகனை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் தனித்துவமான மொழிக்குச் சொந்தக்காரர். இலக்கியச் சிந்தனை விருது, இயல் விருது, விஸ்டம் விருது, கண்ணதாசன் விருது, நல்லி-திசையெட்டும் விருது, இலக்கியச் சுடர் விருது, தாகூர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர். உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் என உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர். இன்றும் தனது பல சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் வழியாக அப்பணியைத் தீவிரமாகச் செய்து கொண்டிருப்பவர். சமீபத்தில், ரஷ்ய கலாச்சார மையத்தில் உலக இலக்கியம் பற்றி இவர் ஆற்றியுள்ள சொற்பொழிவு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. இவருடைய நூல்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து பலர் எம்ஃபில், பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். இலக்கியம், பத்திரிக்கை, சினிமா, குறும்படம், நாடகம், ஆய்வு, பயிலரங்குகள், இணையம் என்று மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவரை தென்றலுக்காகச் சந்தித்தோம்.

10. பா.மு. ராமகிருஷ்ணனும் பா.பி. ராமகிருஷ்ணனும் :: அ. மார்க்ஸ் – அநிச்ச, நவம்பர் 2005

“நமக்கு மண்ட்டோ போன்ற பிறமொழி எழுத்தாளர்கள் ‘மாடல்’களாக இருக்க வேண்டியதில்லை. வீடு திரும்புதல்தான் இன்றைய எழுத்துக்களின் லட்சியமாக இருக்கிறது. லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் சாட்சி. பிரிவினைக் கலவரங்கள் பற்றி மண்ட்டோ எழுதியது உண்மைதான். ஆனால் பிரிவினைக் கலவரங்கள் நடந்து கொண்டிருந்தபோது அவர் நடிகை வீட்டில் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார். வேசிகளின் வீடுகளில் இருந்தார்”

11. சிறுகதை: உபதேசியார்: எஸ் ராமகிருஷ்ணன் – தி சன்டே இந்தியன்

12. Acceptance speech by EssRaa at Canada: Tamil Literary Garden Iyal Virudhu: Award Meeting for S Ramakrishnan

தன் சீடர் கூட்டத்துடன் இரவு தங்குவதற்கு இடம் தேடி ஜென் துறவி சத்திரத்திற்கு வருகிறார். அந்த இடத்தின் காப்பாளனோ, இவர்களைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை நிறைய பாலுடன் வருகிறான். அதைப் பார்த்த சன்னியாசி, சிரித்துவிட்டு, அந்த பாலின் மீது ஒரு இலையைப் போடுகிறார். இதைப் பார்த்து சத்திரத்து இன் சார்ஜ் இடம் கொடுத்து விடுகிறார்.

என்ன நடந்தது அங்கே?

13. Short Films based on S Ramakrishnan Stories: எஸ் ராமகிருஷ்ணன் குறும்படங்கள்

14. Interview of S Ramakrishnan: Question and Answer with Tamil Writers and Notable Thinkers

15. S Ramakrishnan Speech Snippets: நீயா நானா முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை

16. Tamil Author S Ramakrishnan on why we write Essays in Magazines and Fiction Novels?

தான் எதற்கு எழுதுகிறோம் என்றே தெரியாமலிருப்பவர்கள் தமிழில் ஏராளம். அது போன்ற ஒரு கேள்விளை சந்திக்கும் போது தான் இப்படியொரு கேள்வி இருப்பதே அவர்களுக்கு தெரியவரும். வாசகர்களை போலவே எழுத்தாளரும் பதிலை தேடிக்கொண்டே தானிருக்கிறார்கள்.

17. Kumudham Theeranadhy Interview with Writer Ess Ramakrishnan by Thalavaai Sundharam

ஒரு நேரத்தில் ஒரேயொரு பொருளை மட்டுமே யாவரும் வாங்க வேண்டும் என்று கட்டயாப்படுத்துவதற்கு தமிழ் இலக்கியம் என்ன ரேஷன் கடையா? மேலை இலக்கியங்களை படித்து விட்டு காப்பியடிக்கிறார்கள் என்று சொல்பவர் யார்.? அவர்கள் என்ன வாசித்திருக்கிறார்கள்.? வம்பு பேச்சுகளும் அவதுôறுகளும் தொடாத துறையிருக்கிறதா என்ன.? இல்லை என்றால் யதார்த்தவாத கதைகள் இவ்வளவு நாட்களுக்குள் எழுதி முடிக்கபட்டுவிடும் என்று ஏதாவது ரிடயர்ட்மண்ட் தேதி ஏதாவது இருக்கிறதா என்ன ?

18. வரல் ஆற்றின் திட்டுகள்

19. நள் எனும் சொல்

20. உலகசினிமா, நனையாத எனது மழைநாட்கள் & காணிக்காரர்கள்

More… இன்னும் வரலாம்

21. Kalachuvadu – காலச்சுவடு இதழ்களில்

22. Uyirmmai – உயிர்மை சஞ்சிகையில்

23. Atcharam – அட்சரம் எழுத்துகள் தொகுப்பு

 

Paavannan picks his Favorite Short Stories in Tamil after 1995

In Books, Lists, Literature on ஓகஸ்ட் 30, 2009 at 4:49 பிப

  1. யூமா.வாசுகி – வேட்டை, ரத்த ஒளி
  2. சூத்ரதாரி – தேர், வலியின் நிறம்
  3. மனோஜ்குமார் – பால்
  4. பா.வெங்கடேசன் – மழையின் நிறம் தனிமை
  5. தளவாய்சுந்தரம் – ஹிம்சை
  6. கோகுலகண்ணன் – பாம்பும் பிற கனவுகளும்
  7. பவாசெல்லத்துரை – வேட்டை
  8. லட்சுமிமணிவண்ணன் – பூனை
  9. குமாரசெல்வா – உக்கிலு
  10. பாப்லோ அறிவுக்குயில் – இருள்தின்னி
  11. க.சீ.சிவக்குமார் – நாற்று
  12. சோ.தருமன் – வலைகள்

மிகச்சிறந்த தமிழ்ச்சிறுகதைத் தொகுப்பு என்று பொத்தாம்பொதுவாகக் குறிப்பிடுவது முடிவெடுப்பதில் சில நடைமுறைச் சிக்கல்களைத் தரும். மறைந்த மூத்த எழுத்தாளர்களை வைத்துக் கொள்வதா விட்டுவிடுவதா, வாழும் மூத்த எழுத்தாளர்களில் யார் யாரை எடுத்துக் கொள்வது என நிறைய பிரச்சனைகளில் அகப்பட்டுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

1995க்குப் பின் எழுதப்பட்ட இளம் எழுத்தாளர்கள் கதைகளில் முக்கியமானவர்களாகச் சிலரை நான் மனத்தில் வைத்திருக்கிறேன். இவர்கள் பெயர்களை மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

இவர்களில் பாதிப்பேருக்கு இன்னும் முதல்தொகுப்பே வரவில்லை. மீதிப்பேர் சமீபத்தில்தான் தம் முதல் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். மிகவும் புதியதான மொழி ஆளுமையும் படைப்புலகும் கொண்டவர்களாக இவர்கள் உள்ளார்கள். இந்த அடையாளத்தைத் தற்காலத்திய தமிழ்ப்படைப்புலகின் அடையாளமாகப் பார்க்கத் தடையில்லை.

Dec 11, 2004

சுஜாதா: எனக்குப் பிடித்த சிறுகதைகள்

In Books, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 27, 2009 at 10:17 பிப

Courtesy: ForumHub

  1. புதுமைப் பித்தன் – மனித இயந்திரம்
  2. கு.ப.ராஜகோபலன் – விடியுமா
  3. தி.ஜா. – சிலிர்ப்பு
  4. லா.ச.ரா. – கொட்டு மேளம்
  5. கு ழகிரிசாமி – அன்பளிப்பு
  6. சுந்தர ராமசாமி – பிரசாதம்
  7. அ மாதவன் – நாயனம்
  8. ஜெயகாந்தன் – அக்னி பிரவேசம்
  9. ஜெயமொகன் – பல்லக்கு
  10. வண்னதாசன் – நிலை
  11. கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு
  12. நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள்
  13. அசோகமித்திரன் – புலிக் கலைஞன்
  14. கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
  15. இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்
  16. இரா முருகன் – உத்தராயணம்
  17. சு சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு
  18. ரா கி ர – செய்தி
  19. தங்கர்பச்சான் – குடி முந்திரி
  20. சிவசங்கரி – செப்டிக்
  21. ராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்
  22. பிரபஞ்சன் – மீன்
  23. கி.ரா. – கதவு
  24. வண்ணநிலவன் – எஸ்தர்
  25. திலீப் குமார் – கடிதம்
  26. சோ தருமன் – நசுக்கம்
  27. நாகூர் ரூமி – குட்டியாப்பா
  28. ராமசந்தர வைத்தியநாதன் – நாடக காரர்கள்
  29. பாமா – அண்ணாச்சி
  30. சுஜாதா – மகாபலி

Venkat picks his Top 10 in Tamil Fiction

In Books, Literature, Tamilnadu on ஜூலை 9, 2009 at 11:30 பிப

Source: வெங்கட் (ஜூன் 2000)

என்முதல் பத்து (குறிப்பிட்ட முக்கியத்துவ வரிசையில் இல்லை) புனைகதைகள்

  1. சுந்தரராமசாமி ஜே.ஜே. சிலகுறிப்புகள்
  2. அசோகமித்திரன் – 18வது அட்சக்கோடு
  3. நீல.பத்மனாபன் பள்ளிகொண்டபுரம்
  4. ஜி.நாகராஜன் – நாளை மற்றுமொரு நாளே,
  5. நாஞ்சில்நாடன் என்பிலதனை வெயில்காயும்
  6. தி.ஜானகிராமன் – மோகமுள்
  7. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
  8. கி.ராஜநாராயணன் – கோபல்லபுரத்து மக்கள்
  9. இந்திரா பார்த்தசாரதி குருதிப்புனல்
  10. ஜெயகாந்தன் – சிலநேரங்களில் சிலமனிதர்கள்

Ramani’s Top Tamil Novels (based on India)

In Lists on ஜூலை 9, 2009 at 11:29 பிப

Source: இரமணி (ஜூன் 2000)

அண்மைக்காலங்களில் (என்பது முழுப்பொய்; கடந்த பத்து வருடங்களாக) புதினங்கள், சிறுகதைத்தொகுதிகள் படிக்கும் வாய்ப்பு பெருமளவிலே கைவசமாகக் காணேன்.

ஆகையினால், என்து பட்டியல் முன்னைப் பழமையின் புதினத்தொகுப்பே 😦 (இந்தியாவினைக் களமாகக் கொண்ட எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமே இங்கே தந்துள்ளேன்) (முதலாவதினைத் தவிர்த்து மிகுதி விருப்பின் ஒழுங்கிலே இல்லை)

1. காகிதமலர்கள் :- ஆதவன்

2. குருதிப்புனல்:- இந்திரா பார்த்தசாரதி

3. உயிர்த்தேன்:- தி. ஜானகிராமன்

4. நாளை மற்றுமொரு நாளே:- ஜி. நாகராஜன்*

5. தலைமுறைகள்: நீல பத்மநாபன்

6. புத்தம் வீடு: ஹெப்சிபா ஜேசுதாசன்.

7. சாய்வு நாற்காலி:- தோப்பில் மீரான்

8. கடலுக்கப்பால்:- ப. சிங்காரம்

9. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்:- ஜெயகாந்தன்#

10. கோபல்லபுரத்து மக்கள்:- கி. ராஜநாராயணன்

RV’s Top 11 Literary Tamil Books: Best of Fiction

In Books, Literature, Tamilnadu on ஜூலை 9, 2009 at 11:29 பிப

Source: தமிழில் டாப் டென் புத்தகங்கள், சிறந்த புத்தகங்கள் போல ரீடிங் லிஸ்ட்

நான் சிபாரிசு செய்யும் டாப் டென் நாவல்கள்: (வரிசைப்படி அல்ல)

1. பின் தொடரும் நிழலின் குரல்
2. விஷ்ணுபுரம்
3. பொன்னியின் செல்வன்
4. என் பெயர் ராமசேஷன்
5. கரைந்த நிழல்கள்
6. சாயாவனம்
7. கோபல்ல கிராமம்
8. பாற்கடல் (இதை நாவல் என்று சொல்வதுதான் சரி)
9. வெக்கை
10. ஜே ஜே சில குறிப்புகள்
11. மோக முள்

Gopal Rajaram: Best of Tamil Literature: Top Books

In Lists on ஜூலை 9, 2009 at 4:37 முப

Source: தமிழ் நாவல் பட்டியல் :: கோபால் ராஜாராம்

வரிசை முக்கியத்துவத்தைக் கொண்டு வரிசைப் படுத்தப் படவில்லை.

1. ஜெயகாந்தன் : ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

2. தி ஜானகிராமன் : அம்மா வந்தாள்.

3. லா ச ராமாமிர்தம் : புத்ர

4. பொன்னீலன் : ‘ புதிய தரிசனங்கள் ‘

5. ஆ மாதவன் : ‘கிருஷ்ணப் பருந்து ‘

6. தமிழவன் : ‘ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள் ‘

7. கிருத்திகா : ‘வாசவேஸ்வரம் ‘

8. பிரபஞ்சன் : ‘மானுடம் வெல்லும் ‘

9. வண்ண நிலவன் : ‘கடல் புரத்தில் ‘

10. அசோக மித்திரன் : ‘கரைந்த நிழல்கள் ‘

11. இந்திரா பார்த்தசாரதி : ‘கால வெள்ளம் ‘

12. நீல பத்ம நாபன் தலைமுறைகள் ‘

13. சுஜாதா : ‘என் இனிய இயந்திரா ‘

தொடர்வினை: சி மோகனின் பட்டியல்கள் – கோபால் ராஜாராம்

Era Murugan picks his Top 81 works in Tamil: Authors & Writers – Fiction & Poems

In Books, Literature, Tamilnadu on ஜூலை 8, 2009 at 6:53 பிப

Source: இரா முருகன் – அகத்தியர் யாஹு குழுமம் (ஜூலை 2001)

Related: S Ramakrishnan: 100 Best Books in Tamil Literature: Must Read Stuff « 10 Hot & Jeyamohan picks Top Tamil Novels: Best of Fiction Writing « 10 Hot

1.கு.ப.ராவின் ‘விடியுமா’,

2.அண்ணாவின் ‘ஓர் யிரவு’,

3.புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’,

4.தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’,

5.சுந்தரராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’,

6.விந்தனின்’பாலும் பாவையும்’,

7.கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கார்’,

8.கிருஷ்ணன் நம்பியின் ‘மாமியார் வாக்கு’,

9.ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’,

10.கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’,

11.க.நா.சுவின் ‘பொய்த்தேவு’,

12.கல்கியின் ‘தியாகபூமி’,

13.பா.ஜெயப்பிரகாசத்தின் ‘யின்னொரு ஜெருசலேம்’,

14.ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’,

15.நீல.பத்மனாமனின் ‘பள்ளி கொண்டபுரம்’,

16. மாதவனின் ‘சாலைக்கடைத் தெருக் கதைகள்’,

17.பொன்னீலனின் ‘உறவுகள்’,

18.கு.சின்னப்பபாரதியின் ‘தாகம்’,

19.சுஜாதாவின் ‘ஊஞ்சல்’,

20.சோ.தர்மனின் ‘நசுக்கம்’,

21. இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’,

22.பா.செல்வராஜின் ‘தேனீர்’,

23.பாமாவின் ‘கருக்கு’,

24.ராஜம் கிருஷ்ணனின் ‘அமுதமாகி வருக’,

25.கிருத்திகாவின் ‘வாசவேச்வரம்’,

26.அம்பையின் ‘சிறகுகள் முறியும்’,

27.பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’,

28.தோப்பில் முகம்மது மீரானின் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’,

29.சே.யோகநாதனின் ‘மீண்டும் வந்த சோளகம்’,

30.பெ.கருணாகரமூர்த்தியின் ‘அகதி உருவாகும் நேரம்’,

31.நகுலனின் ‘நிழல்கள்’,

32.அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக் கோடு’,

33. இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப் புனல்’,

34.ஜெயமோகனின் ‘ரப்பர்’,

35.மா.அரங்கநாதனின் ‘காடன் மலை’,

36.பாவண்ணனின் ‘பாய்மரக் கப்பல்’,

37.வண்ண நிலவனின் ‘எஸ்தர்’,

38.வண்ணதாசனின் ‘தனுமை’,

39.திலீப் குமாரின் ‘மூங்கில் குருத்து’,

40.எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’,

41.தஞ்சை பிரகாஷின் ‘கள்ளம்’,

42.குமார செல்வாவின் ‘உக்கிலு’,

43.பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’,

44.நரசய்யாவின் ‘கடலோடி’,

45.தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள்’,

46.லா.ச.ராவின் ‘அபிதா’,

47.சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’,.

48.நாகூர் ரூமியின் ‘குட்டியாப்பா’,

49.சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும்’,

50.பா.விசாலத்தின் ‘மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்’,

51.பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’,

52.ஜெயந்தனின் ‘நினைக்கப்படும்’,

53.கோமல் சாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’,

54.எஸ்.பொவின் ‘நனவிடைத் தோய்தல்’,

55.வல்லிக்கண்ணனின் ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’,

56.ந.பிச்சமூர்த்தியின் ‘காட்டு வாத்து’,

57.சி.மணியின் ‘வரும்,போகும்’,

58.கலாப்ரியாவின் ‘எட்டயபுரம்’,

59.ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை’,

60.மனுஷ்யபுத்திரனின் ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’,

61.மீராவின் ‘ஊசிகள்’,

62.சுதேசமித்திரனின் ‘அப்பா’,

63.யுகபாரதியின் ‘மனப்பத்தாயம்’,

64.சோ.வைத்தீசுவரனின் ‘நகரத்துச் சுவர்கள்’,

65.பிரம்மராஜனின் ‘கடல் பற்றிய கவிதைகள்’,

66.மஹாகவியின் ‘குறும்பா’,

67.மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள்’,

68.காமராசனின் கறுப்பு மலர்கள்’,

69.அ.சீனிவாசராகவனின் (’நாணல்’) ‘வெள்ளைப் பறவை’,

70.சுகுமாரனின் ‘பயணத்தின் சங்கீதம்’,

71.அப்துல் ரகுமானின் ‘பால்வீதி’,

72.அபியின் ‘மவுனத்தின் நாவுகள்’,

73.கல்யாண்ஜியின் ‘புலரி’,

74.பழமலயின் ‘சனங்களின் கதை’,

75.கலாந்தி கைலாசபதியின் ‘ஒப்பியல் யிலக்கியம்’,

76.எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கற்பின் கனலி’,

77.ஆர்.கே.கண்ணனின் ‘புதுயுகம் காட்டிய பாரதி’,

78. ஜானகிராமனின் ‘நடந்தாய் வாழி காவேரி’,

79.காஞ்சனா தாமோதரனின் ‘வரம்’,

80.கீல் கண்ணனின் சிறுகதைத் தொகுப்பு

81. சிட்டி

கற்றதும் பெற்றதும் ஹேங் ஓவர் குழுமம்

In Blogs, Lists, Magazines, Questions, Tamilnadu on மே 15, 2009 at 4:29 முப

சற்றேறக்குறைய பத்தாண்டுக்கு முந்தைய பழங்காலத்தில் ஆனந்த விகடனில் சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’, குமுதம்.காம்-இல் பா ராகவனின் ‘தெரிந்தது மட்டும்’, விகடன்.காம்-இல் சாரு நிவேதிதாவின் ‘கோணல் பக்கங்க’ளும் வெளிவந்தது.

இன்றைக்கு அப்படி சிதறல்களைத் தொகுத்து எழுதும் பெருமகனார் சில:

கருத்துக்கணிப்பு எக்ஸிட் போல் பத்து கேள்விகள்:

  1. நாலு பதிவுக்கான விஷயங்களை ஒரே பதிவாக்குவது பிடித்திருக்கிறதா?
  2. ஒவ்வொரு அனுபவத்தையும், ஒவ்வொன்றாக சொல்லி, அதற்குறிய குறிச்சொல் இன்னபிற வலைப்பூச்சு இடவேண்டுமா?
  3. இப்படி ஆளுக்கொரு ப்ரான்ட் வைப்பது வலைப்பதிவை சந்தைமயமாக்குமா?
  4. அவரவரின் ‘குறிச்சொல்’ மெய்யாலுமே மனதில் பதிந்து, அவரைச் சொல்வதற்கு பதில் இந்த அடைமொழி நிழலாட வைக்கிறதா?
  5. பதிவின் தலைப்புக்கும், இந்தத் தொடர் இடுகை தலைப்புக்கும் வித்தியாசம் தேவையா?
  6. குட்டியாக இருக்கிறது என்னும் அவச்சொல்லை நீக்கத்தான், இப்படி தொகுக்கிறார்களா?
  7. இந்த மாதிரி துணுக்குத் தோரணத்திற்கு பதில் ட்விட்டர் தோரணம் தேவலாமா?
  8. கூகிள் தேடல் முடிவுகளில் தலைப்புக்கு அதிமுக்கியத்துவம் கிடைக்கும் காலத்தில், உபதலைப்பு கூட கிட்டாத இந்தப் பதிவுகளுக்கு போதிய ரீச் நிலைக்குமா?
  9. கடைசியாக: தனித் தனி இடுகை அல்லது மொத்த குவிப்பு – எது உங்கள் தேர்வு?
  10. இதற்கெல்லாம் கருத்துக் கணிப்பு தேவையா?