Snapjudge

Posts Tagged ‘தமிழ்நாடு’

படைப்பு அரங்கம்: சென்னை இலக்கிய திருவிழா 2023

In Lists, Literature, Tamilnadu on ஏப்ரல் 24, 2023 at 12:53 முப

  1. 06.01.2023: பிற்பகல் 12.00 – 1.00: சென்னையும் நானும்: திரு. எஸ்.ராமகிருஷ்ணன்
  2. பிற்பகல் 2.00 3.00: கோவேறு கழுதையிலிருந்து தாலிமேல சத்தியம் வரை:
    • திரு.இமையம்:
    • உரையாடல். திரு. த.ராஜன்
  3. பிற்பகல் 3.00 – 4.00: எனது புனைவுகளில் நடுநாட்டு வாழ்வு திரு. கண்மணி குணசேகரன்
  4. பிற்பகல் 4.00 – 5.00: ஒரு நாவலாசிரியரின் இசை அனுபவங்கள்
    • திரு.யுவன் சந்திரசேகர்
    • உரையாடல். திரு. கார்த்திக் பாலசுப்பிரமணியன்
  5. 07.01.2023: முற்பகல் 10.00 – 11.00 தமிழ் வெளியில் நவீன கலை
    • திரு. சி.மோகன்
    • உரையாடல். மண் குதிரை;
  6. முற்பகல் 11.00 – 12.00: பெருநகரமும் கவிஞனும்
    • திரு. மனுஷ்யபுத்திரன்
    • உரையாடல். திருமிகு கவின் மலர்
  7. முற்பகல் 12.00 – 1.00: எனது படைப்புகளில் பெண்கள்
    • திருமிகு சு.தமிழ்ச்செல்வி;
    • திருமிகு இளம்பிறை
  8. பிற்பகல் 2.00 3.00: “சென்னை வாழ்வியல்” ஓர் இலக்கியப் பார்வை:
    • திரு. கரன் கார்க்கி
    • திரு. தமிழ்ப் பிரபா
  9. பிற்பகல் 3.00 – 4.00: மொழியைச் செழுமைப்படுத்தும் மொழிபெயர்ப்பு மலையாளத்தை முன்வைத்து: திரு. பால் சக்காரியா
  10. தமிழ் வாசகப் பரப்பும் மொழி பெயர்ப்பும்:
    • திரு. ஜி.குப்புசாமி
    • திருமிகு கே.வி.சைலஜா
  11. பிற்பகல் 4.00 5.00: ஆளுமைகளும் நானும்:
    • திரு. பாவண்ணன்
    • திரு. ரவிசுப்பிரமணியன்
  12. 08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: கலையும் மீறலும்
    • திரு. சாரு நிவேதிதா
    • உரையாடல். திரு. நெல்சன் சேவியர்
  13. முற்பகல் 11.00 – 12.00: தமிழ்ச் சமூகத்தில் பெண்ணியம்
    • திருமிகு கனிமொழி கருணாநிதி;
    • உரையாடல். திருமிகு கவிதா முரளிதரன்
  14. பிற்பகல் 12.00 – 1.00 நவீன கவிதை – இவர்கள் பார்வையில்
    • திரு. யாழன் ஆதி
    • திரு. கண்டராதித்தன்
    • திரு.இளங்கோ கிருஷ்ணன்
  15. பிற்பகல் 2.00 – 3.00 புலம்பெயர் இலக்கியம்:
    • திரு. தெய்வீகன்
    • திரு. செல்வம் அருளானந்தம்
    • திரு. ஷோபாசக்தி
  16. பிற்பகல் 3.00 – 4.00: தமிழ்ச் சிறுகதையில் பாராமுகங்கள்
    • திரு. அழகிய பெரியவன்
    • திரு.ஜே.பி. சாணக்யா
    • திரு. ஆதவன் தீட்சண்யா
    • திரு. காலபைரவன்
  17. பிற்பகல் 4.00 5.00 தமிழ்க் கவிதைகளில் ஆண் மையப்பார்வை
    • திருமிகு சுகிர்தராணி
    • திருமிகு ச.விஜயலட்சுமி
    • திருமிகு ஜி. கனிமொழி

இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Kaalachuvadu Short Story Writers: Tamil Fiction Authors List

In Books, Literature, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 7, 2012 at 8:48 பிப

கடந்த ஆறு ஆண்டுகளில் (2007 துவக்கம் முதல்) காலச்சுவடு பத்திரிகையில் சிறுகதை எழுதியவர்கள் யார்?

குறிப்புகள்:

  • ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
  • பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது

தொடர்புள்ள பதிவு: 2012 Anandha Vikadan Short Story Writers: Tamil Fiction Authors List

  1. அ. முரளி
  2. அ.முத்துலிங்கம்
  3. அசோகமித்திரன்
  4. அரவிந்தன்
  5. இ. ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன்
  6. இடலாக்குடி ஹஸன்
  7. இராம. முத்துகணேசன்
  8. எம். கே. குமார்
  9. எம். கோபாலகிருஷ்ணன்
  10. எஸ். செந்தில்குமார்
  11. குமாரசெல்வா
  12. குலசேகரன்
  13. கே.என். செந்தில்
  14. கோகுலக்கண்ணன்
  15. சச்சிதானந்தன் சுகிர்தராஜா
  16. சசி
  17. சந்திரா
  18. சந்ரு
  19. சிறீநான். மணிகண்டன்
  20. சுந்தர ராமசாமி
  21. சுரேஷ்குமார இந்திரஜித்
  22. தமிழில்: அரவிந்தன் — க்லேர் மார்கன்
  23. தமிழில்: ஆனந்தராஜ் — ஃப்ராங்க் பாவ்லாஃப்
  24. தமிழில்: எம். ரிஷான் ஷெரீப் — அஸீஸ் நேஸின்
  25. தமிழில்: குளச்சல் மு. யூசுப் — மலையாள மூலம்: மதுபால்
  26. தமிழில்: கே. நர்மதா — ஓரான் பாமுக்
  27. தமிழில்: கே. முரளிதரன் — சினுவா அச்சிபி
  28. தமிழில்: சுகுமாரன் — அய்ஃபர் டுன்ஷ்
  29. தமிழில்: சுகுமாரன் — காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
  30. தமிழில்: சுகுமாரன் — சி. அய்யப்பன்
  31. தமிழில்: சுகுமாரன் — டேவிட் அல்பாஹரி
  32. தமிழில்: சுகுமாரன் — மிரோஸ்லாவ் பென்கோவ்
  33. தமிழில்: சொ. பிரபாகரன் — சொஹராப் ஹுசேன்
  34. தமிழில்: நஞ்சுண்டன் — கன்னட மூலம்: சுமங்கலா
  35. தமிழில்: புவனா நடராஜன் — விபூதிபூஷண் பந்தோபாத்யாய
  36. தமிழில்: ஜி. குப்புசாமி — ரேமண்ட் கார்வர்
  37. தி. மயூரன்
  38. தூரன் குணா
  39. தேவிபாரதி
  40. ந. முத்துசாமி
  41. நாகரத்தினம் கிருஷ்ணா
  42. பா. திருச்செந்தாழை
  43. பா. வெங்கடேசன்
  44. பெருமாள்முருகன்
  45. மண்குதிரை
  46. மாதங்கி
  47. யுவன் சந்திரசேகர்
  48. ரஞ்சகுமார்
  49. லதா
  50. வாஸந்தி
  51. வைக்கம் முகம்மது பஷீர் – –தமிழில்: குளச்சல் மு. யூசுப்
  52. வைக்கம் முகம்மது பஷீர் — தமிழில்: சுகுமாரன்
  53. ஜே.பி. சாணக்யா
  54. ஸ்ரீரஞ்சனி

Top 10 Hindu Temples by Revenue in Tamil Nadu

In Religions, Tamilnadu on ஜனவரி 3, 2012 at 10:08 பிப

முந்தைய பதிவு: 10 Richest Temples in India: Ten Wealthiest Gods

டாப் 10 கோவில்கள்

ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் கடந்த ஆண்டு வருவாய், 506 கோடி ரூபாய். இதில், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவைகளில் நான்கு, முருகன் கோவில்கள். முதல் 10 இடங்களை பிடித்துள்ள கோவில்கள்:

எண் – கோவில் – ரூ/கோடி

1. தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி 72.12
2. மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம் 33.51
3. சுப்ரமணியசாமி திருக்கோவில், திருச்செந்தூர் 19.80
4. சுப்ரமணியசாமி திருக்கோவில், திருத்தணி 16.09
5. அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை 13.54
6. அரங்கநாதர் திருக்கோவில், ஸ்ரீரங்கம் 12.21
7. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை 11.65
8. ராமநாத சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம் 9.89
9. தாணுமாலய பெருமாள் கோவில், சுசீந்திரம் 5.87
10. தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு 5.62.

ஆதாரம்/நன்றி: தினமலர்

2011: Tamil Literary Awards to Writers and Authors: Book Felicitations & Rewards

In Lists on திசெம்பர் 22, 2011 at 10:41 பிப

இந்த வருடம் வழங்கப்பட்ட முக்கிய விருதுகளும் பெற்றவர்களும்:

1.

தமுஎகச இலக்கியப் பரிசு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக 2010ஆம் ஆண்டுக்கான இப்போட்டியின் முடிவுகள்:

அமரர் க.சமுத்திரம் நினைவுப் பரிசு ரூ10 ஆயிரம், விளிம்புநிலை மக்கள் பற்றிய படைப்புக்கு பரிசு பெறுபவர்: சோலை சுந்தரபெருமாள், படைப்பு – வெண்மணியிலிருந்து – வாய்மொழி வரலாறு, வெளியீடு – பாரதி புத்தகாலயம்.

நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதியின் பெற்றோர் அமரர் பெருமாயி-குப்பண்ணன் நினைவுப்பரிசு ரூ5000, சிறந்த நாவலுக்கான பரிசு பெறுபவர் டி. செல்வராஜ், நூலின் பெயர்- தோல், வெளியீடு-NCBH

புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு ரூ 4000, சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு பெறுபவர் ச.சுப்பாராவ்.  நூலின் பெயர் – தாத்தாவின் டைரிக் குறிப்புகள், வெளியீடு – பாரதி புத்தகாலயம்.

குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு ரூ 4000, தமிழ்வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான பரிசு பெறுபவர் முனைவர் மு. இளங்கோவன், நூலின் பெயர் – இணையம் கற்போம், வெளியீடு-வயல்வெளிப் பதிப்பகம்

அமரர் சேதுராமன்-அகிலா நினைவுப்பரிசு ரூ2500. சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கான பரிசு பெறுபவர் சந்திரா மனோகரன். நூலின் பெயர்-சில்லுக்குட்டி(சிறுவர் கதைகள்) வெளியீடு – எஸ்.எஸ்.பப்ளிகேஷன்.

தமிழறிஞர் வ.சுப. மாணிக்கனார் நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு பெறுபவர் நிழல் வண்ணன். நூலின் பெயர் – அதிகாலைப் பெறுவெள்ளம் – மா.வோவும் சீனப்புரட்சியும், வெளியீடு-விடியல் பதிப்பகம்.

அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த கவிதை நூலுக்கான பரிசு பெறுபவர் நாணற்காடன். நூலின் பெயர்– சாக்பீஸ் சாம்பலில்

குறும்பட ஆவணப்பட பரிசு

பா.இராமச்சந்திரன் நினைவு தமுஎகச மாநில குறும்பட ஆவணப்பட பரிசு நான்கு பேருக்கு தலா ரூ2500,

குறும்படங்கள்-

விண்ட் – இயக்குநர் மணிகண்டன்
அதிகாலை – இயக்குநர் கவின் ஆண்டனி

ஆவணப்படங்கள்-

அக்றிணைகள் – இயக்குநர் இளங்கோவன்
புலி யாருக்கு? – இயக்குநர் ஆன்ட்டோ


2.

தமிழ் இலக்கியத் தோட்டம்

வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் : எஸ்.பொன்னுத்துரை

3. கலைமகள் சஞ்சிகை நடத்திய சர்வதேச குறுநாவல் போட்டி – 2011ல் விருது பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன்

4. இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற எழுத்தாளர்: அகில் சாம்பசிவம்

5. கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வழங்கும் திருமதி ரங்கம்மாள் விருதுக்கு தமிழ்மகன் எழுதிய “வெட்டுப்புலி’ நாவல்

வெளியீடு – உயிர்மை

6. கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது

7. வண்ணநிலவன் வண்ணதாசனுக்கு சாரல் விருது

8. பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது

9.  விளக்கு விருது, தேவதச்சனுக்கு

10. தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது: மலேசியா வாழ் கணினியியலாளர் முத்து நெடுமாறன்

11. சாகித்ய அகாதமி விருது: காவல் கோட்டம் (நாவல்) – சு. வெங்கடேசன்

12. தாகூரின் 150-வது ஆண்டினை முன்னிட்டு, இந்திய இலக்கியங்களை கௌரவிக்கும் வகையில் கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாடமியுடன் இணைந்து வழங்கும் தாகூர் இலக்கிய (Tagore Literature Award) விருது: எஸ் ராமகிருஷ்ணனின்யாமம்

13. நல்லி-திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள்: குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பான எஸ் ராமகிருஷ்ணனின் கால்முளைத்த கதைகள் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது.

  • தமிழிலிருந்து பிற இந்திய மொழிகளுக்குச் செல்லும் நூல்கள் ஐந்து
  • பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் நூல்கள் ஐந்து
  • ஆங்கில புனைவிலக்கிய நூலின்  தமிழாக்கத்திற்கு ஒரு விருது
  • ஆங்கிலம்/பிற அயல் மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் புனைவு இலக்கியம் அல்லாத ஒரு நூல் என்று மொத்தம் 12 விருதுகள்.  ஒவ்வொன்றிற்கும் ரொக்கப் பரிசு ரூ.10,000.
  • தமிழ்ப் படைப்புகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு சென்றுள்ள படைப்பாளி ஒருவருக்கும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்குப் படைப்புகளைக் கொண்டு வந்துள்ள ஒருவருக்கும் என்று வாசகர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் குழுவின் பரிசீலனைப்படி இரு வாழ்நாள் சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  ஒவ்வொருவருக்கும் ரூ.15000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

14. சாகித்ய அகாதெமியின் குழந்தை இலக்கிய விருது: தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா – “சோளக் கொல்லைப் பொம்மை’ என்னும் தலைப்பிலான குழந்தைகளுக்கான பாடல் நூல்

மற்றவை

i). விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ‘அம்பேத்கர் விருது’ : தமிழக அரசின் அன்றைய தலைவரான முதல்வர் கருணாநிதி

ii) திருவள்ளுவர் விருது : முனைவர் பா. வளன் அரசு

iii) கணினி மென்பொருளுக்கான கணியன் பூங்குன்றனார் விருது : என்.எச்.எம் ரைட்டர் மென்பொருள்

iv) அமுதன் அடிகள் இலக்கிய விருது: கே. எஸ். பாலச்சந்திரன்

v) கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழா

  1. வி.ஜீவகுமாரன் (டென்மார்க்) – சங்கானைச் சண்டியன்
  2. நாகரத்தினம் கிருஷ்ணா (பிரானசு) – மாத்தகரி
  3. சை.பீர்முகமது (மலேசியா) – பெண் குதிரை
  4. நடேசன் (ஆஸ்திரேலியா) – வண்ணத்திகுளம்
  5. தெணியான் (இலங்கை) – ஒடுக்கப்பட்டவர்கள்
  6. கே.விஜயன் – (இலங்கை) – மனநதியின் சிறு அலைகள்
  7. சிவசுப்ரமணியன் (இலங்கை) – சொந்தங்கள்
  8. தனபாலசிங்கம் (இலங்கை) – ஊருக்கு நல்லது சொல்வேன்
  9. கலைச்செல்வன் (இலங்கை) – மனித தர்மம்
  10. உபாலி லீலாரத்னா (இலங்கை)- கு.சி.பா.வின் சுரங்கம், தாகம், நாவல்களின் சிங்கள மொழியாக்கம் செய்தவர்.


பரிசு பெற்ற தமிழக எழுத்தாளர்கள், நூல்களின் விவரம்:

  1. ஆர்.எஸ்.ஜேக்கப் – பனையண்ணன்
  2. சுப்ரபாரதி மணியன் – சுப்ரபாரதி மணியன் கதைகள்
  3. முனைவர் மு.இளங்கோவன் – இணையம் கற்போம்
  4. புவலர். இராச.கண்ணையன் – குறளோசை
  5. ப.ஜீவகாருண்யன் – கவிச்சக்ரவர்த்தி
  6. குறிஞ்சிவேலன் – முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்
  7. லேனா தமிழ்வாணன் – ஒரு பக்கக் கட்டுரை 500
  8. வெண்ணிலா – நீரில் அலையும் முகம்
  9. பூங்குருநல் அசோகன் – குமரமங்கலம் தியாக தீபங்கள்
  10. கூத்தங்குடி அழகு ராமானுஜன் – காவிரி மண்ணின் நேற்றைய மனிதர்கள்

தெரியாதவை

அ) கவிஞர் சிற்பி அறக்கட்டளை: கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழின் தலை சிறந்த கவிஞர்களைப் பாராட்டி விருது

ஆ) இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் விருது

&

முதல் கவிதைத் தொகுப்புக்கான ராஜமார்த்தாண்டன் (நெய்தல்) விருது

இ) பெரியார் விருது

ஈ) அண்ணா விருது

உ) அம்பேத்கர் விருது

ஊ) காமராசர் விருது

எ) பாரதியார் விருது

ஏ) பாரதிதாசன் விருது

ஐ) திரு.வி.க. விருது

ஒ) கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

ஓ) திருப்பூர் தமிழ்ச் சங்கம் இலக்கிய விருதுகள்

ஔ) ஆனந்த விகடனின் விருது

க) பாரதிதாசன் அறக்கட்டளை – மன்னர்மன்னன் இலக்கிய விருது நூல்கள்

ங) கலைமாமணி

ச) நொய்யல் இலக்கிய வட்டம் மூன்றாம் ஆண்டு இலக்கிய விருதுகள்

  1. கவிதை – 2 பரிசுகள்
  2. கட்டுரை – 2 பரிசுகள்
  3. சுற்றுப்புறச் சூழல் – 2 பரிசுகள்
  4. குழந்தை இலக்கியம் – 2 பரிசுகள்
  5. சிறுகதைகள் – 2 பரிசுகள்
  6. ஓவியம் – 3 பரிசுகள் (கோட்டுச் சித்திரம் 1, ஆயில் பெயிண்டிங் 1, வாட்டர் கலர் 1)

Who is the Real Thamizhan?

In Blogs, Life, Lists, Tamilnadu on ஜூலை 15, 2010 at 4:32 முப

ட்விட்டரில் மாயவரத்தனார் எழுதிய ‘இவன் தான் தமிழன்’ குறுஞ்செய்திகளில் இருந்து சில:

1. ’தலை சுத்துதுன்னு’ சொன்னா, ‘அஜீத்தா?’ அப்படீன்னோ, ‘ஹை..முதுகை பார்க்கலாமே’ அப்படீன்னோ அச்சுபிச்சு ஜோக் (?!) அடிக்கிறவன் தான் #தமிளன்

2. யாருனாச்சும் கேமரா வெச்சிருந்தா தான் போட்டோ எடுத்து தர்றாதா சொல்லி தலையை பாதி கட் பண்ணி போட்டோ எடுக்கிறவன் தான் #தமிளன்

3. பிட்ஸா கண்டு பிடிச்சதே நம்மூரு ஊத்தப்பத்தை வெச்சு தான் அப்படீன்னு உலக மகா உண்மையை அடிச்சு விடுறவன் தான் #தமிளன்

4. பர்கரை வாங்கி ரெண்டு பன்னையும் தனித்தனியா பிச்சு சாப்பிடுறவன் தான் #தமிளன்

5. பக்கத்து தெருவுக்கு சும்மா போவுறதுக்கு கூட முதுகில ஒரு பொதி மூட்டையை மாட்டிக்கிட்டு கிளம்புறவன் தான் #தமிளன்

6. டொக்கு செல்போனிலயும் 4 ஜிபி மெமரி இருக்குறதா கதை உடுறவன் தான் #தமிளன்

7. கூட்டமான எலக்ட்ரிக் ட்ரெயினிலே நட்ட நடு செண்டரில நின்னு செல்போனிலே உச்சபச்ச டெசிபலில் பேசுபவன் தான் #தமிளன்

8. ‘பொறுத்தது போதும் பொங்கி எழு’ எல்லாம் ஒரு பஞ்ச் டயலாக்குன்னு இன்னமும் நம்பிட்டிருக்கவன் #தமிளன்

9. பாண்டிச்சேரிக்கு போறோம்ன்னு சொன்னாலே பாட்டிலுக்கு தான் அப்படீன்னு நெனச்சு கெக்கேபிக்கேன்னு சிரிக்கிறவன் தான் #தமிளன்

10. எந்த ஊர் பேர் சொன்னாலும் அந்த ஊர் ஸ்பெஷல் சாப்பாட்டைப் பத்தி பேசறவன் #தமிளன் – பெனாத்தல்

11. ரவுடியா இருந்தாலும் நடிகரா இருந்தாலும் ‘அடைமொழி’யோட தான் சொல்லுவேன்னு அடம் புடிக்கிறவன் தான் #தமிளன்

12. சன் டி.வி.யில ஒரு நியூஸ் பாத்திட்டு அதையே ஜெயா, கலைஞர், விஜய், டி.டி. எல்லாத்திலயும் மறுபடியும் பாக்குறவன் #தமிளன்

13. இளையராஜா காலத்தில எம்.எஸ்.வி.யையும், ரஹ்மான் காலத்துல இளையராஜாவையும் புகழ்ந்து பேசுறவன் #தமிளன்

14. டூத் பேஸ்ட் முடிஞ்சிடுச்சுன்னு தெரிஞ்சும் ஏறி நின்னு மிதிச்சு உள்ள இருக்கிறதை உபயோக்கிறவன் #தமிளன்

15. பக்கத்து வீட்டுல இடியே விழுந்தாலும் கண்டுக்காம சீரியல் பாக்குறவன் #தமிளன்

16. டிவிட்டர் ஃப்ரீன்னா இப்படி எதையாவது சொல்லி ரிவிட் அடிக்கிறவன் #தமிழன். – ஹரன்பிரசன்னா

17. ’இந்த மாதிரி ஒரு சம்மரை என் லைப் டைம்ல பாத்ததில்லை’ன்னு ஒவ்வொரு வருஷமும் சொல்றவன் #தமிளன்

18. ஆனந்த விகடனில் தனது ட்விட் வராவிட்டால், ஆள் தெரியாததாலோ கவனிக்காததாலோ வராமல் போச்சுன்னு ட்விட்டறவன் தான் #தமிளன் – ஸ்னாப்ஜட்ஜ்

19. செஃல்ப் டேமேஜ் பண்ணிக்கிட்டாலும் சிரிச்சுக்கிட்டே யாருக்கோ மாதிரி நினைச்சுகிறவன் #தமிளன் – ஆயில்யன்

20. தன் மூஞ்சியை கண்ணாடில பார்க்காம விஜயகாந்த்தையும் T.Rரையும் கிண்டலடித்துக் கொண்டிருப்பவன் #தமிளன் – ஜிகார்த்தி1

21. தல தல என்று சொல்லியே அந்த தலயின் காலை வாருகின்றவன் #தமிளன் – மு75

22. பொழுதுபோகலன்னு தமிழனையே கிண்டல் பண்ணி பேசுறவன் தான் உண்மையான தமிழன் #தமிளன் – கார்க்கி

23. ஆக்ஸ்வலி என்னாது இது? இதை எப்படி செய்வாங்க என்று அரிசியை பார்த்து கேட்பவன் தான் தமிழன் # தமிளன் – குசும்புஒன்லி

24. 53 வயசான ஒருத்தரை இன்னமும் ‘இளைய’ திலகம் எண்டு அழைக்கிறவன் #தமிளன் – kangon

25. விடை தெரிந்தே கேள்வி கேட்கும் நீர்தான் உண்மையான #தமிளன் – கேஸ்வாமி

26. அமெரிக்க பொருளாதாரத்தை நினைத்து கவலை கொள்பவன் #தமிளன் – mu75

27. அடுத்தவன் தப்பை அருவாமணையா திருத்திகிட்டிருக்கறவன் # தமிளன் – ஜெயஸ்ரீ

28. தன் பெருமையே பேசிக்கிட்டு திரியறவன். #தமிளன் – Jsrigovind

29. அடுத்தவன் எழுதறதை சுட்டு, தானே எழுதியதாப் போடறவன் தமிழன்ஸ்னாப்ஜட்ஜ்

30. டீ சர்ட்டும் முக்கால் டவுசரும் போட்டுக்கிட்டு கிராமத்து கோயிலில் காட் & கல்ச்சர் பத்தி டிபைனுறவன் #தமிளன் – aayilyan

31. மூணு பேரு சேர்ந்தா நாலு சங்கம் ஆரம்பிக்கறவன் #தமிளன் – ஸ்ரீகாந்த்

32. பறவை முனியம்மான்ற பேர் வெச்சிருக்காங்க. றெக்கையே இல்லையேன்னு ஆராய்ச்சி பண்ணுறவன் #தமிளன்

33. திருவள்ளுவர்தான் தெய்வம்னு சொல்லிக்கிட்டு, ஒரு திருக்குறளை கூட உருப்படியா சொல்லத் தெரியாதவன் #தமிளன் – ஹரன் பிரசன்னா

34. பாரின் போய்ட்டு வந்தா எப்பவும் அரைடிராயரோட கையில மினிமினரல் வாட்டர் பாட்டிலோட சுத்தறவன் #தமிளன் – அதிஷா

35. ஒருத்தன் ஒண்ணு சொன்னா இதை ஏற்கெனவே இன்னார் இங்க சொல்லிட்டாங்கன்னு உடனே ஓடிவர்றவனும் #தமிளன் – ஹரன் பிரசன்னா

36. ஜப்பான்ல பொட்டிக்கடைக்காரனுக்கு இங்கிலீஷே தெரிலன்னு கோபப்படுறவன் தான் #தமிளன்

37. ஊர்க்காரங்களைப் பார்த்ததும் யார் ஜாதி என்னான்னு நேரடியா கேக்காம கண்டுபிடிக்கிறது எப்படின்னு யோசிக்கிறவனும் #தமிளன் – ஹரன் பிரசன்னா


ஃபினிஷிங் டச்:
அடுத்தவன் நம்மை எதாவது சொல்லிடப் போறானேன்னு அவனுக்கு முன்னால் தானே சொல்லறவந்தான் #தமிளன் – இலவசம்

கொசுறு:
தான் என்னவோ வேற்றுகிரக ஆசாமி போல இப்படி ட்வீட்டுறவன் தான் #தமிளன்

Top 10 in-Famoused Tamil Visionaries

In Lists, Tamilnadu on ஜூலை 15, 2010 at 4:20 முப

சீரிய சிந்தனையாளர்களைப் பட்டியல் போடுவது சுலபம்; தங்களை சிந்தனையாளர் என்று நினைத்துக் கொண்டிருப்பவரை தெளிவிப்பது கஷ்டம். எப்போதுமே போலிகள் பல்கிப் பெருகினாலும், அவர்களில் தலை பத்து இது.

பெரியார்தாசன் இன்னும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத, தொல் திருமாவளவன் போல் பலரால் வெளிப்படுத்த படாத, பாக்யராஜ் போல் பாலு மகேந்திரா தொப்பி மட்டும் அணியாத, ஞானக்கூத்தன் போல் சமீபத்திய தடாலடியாத, இளையராஜா போல் பிற துறையால் பேசவராத க்ரூப்:

    • சின்னக்குத்தூசி
    • நக்கீரன் கோபால்
    • விவேக் (நகைச்சுவை நடிகர்)
    • சாலமன் பாப்பையா
    • கோவி கண்ணன் (வலைப்பதிவர்)
    • சாரு நிவேதிதா
    • ரஜினிகாந்த் (நடிகர்)
    • மதன்
    • பாலகுமாரன் (எழுத்தாளர்)
    • வாசந்தி (பெண்களுக்கும் இட ஒதுக்கீடு)

      List of cool thinkers in Tamil

      In Internet, Lists, Misc, Tamilnadu on ஜூலை 12, 2010 at 4:15 முப

      “தமிழகத்தில் பொதுவெளி அறிவுஜீவி என்று யாரும் இல்லை. அப்படி ஒரு இடமே இங்கு இல்லை. தமிழகத்தில் ஒரு அருந்ததி ராய் உருவாகி வருவார் என்று நாம் கற்பனை பண்ண முடியுமா?”
      இந்திரா பார்த்தசாரதி 80

      இந்த சமயத்தில், தமிழகத்தில் யார் இன்ஃப்ளூயன்ஷியல்? எவர் அடுத்தவர் சிந்தனையை சுட்டாலும், பரவலாக்குகிறார்? யார் சொன்னால் பேச்சு எடுபடும்? எம் எஸ் உதயமூர்த்தி போல்வுட் ஆஃப் போகஸ் ஆகாமல், கல்வியாளர் கி.வேங்கடசுப்ரமணியன் போல் அவுட் ஆஃப் தி வோர்ல்ட் ஆகாமல், அவுட் ஆஃப் தி பாக்ஸ் யோசிப்பதாக சொல்லிக்கொள்பவர் பட்டியல்:

      • சுகி சிவம் (சமயச் சொற்பொழிவாளர்)
      • ஜெயமோகன் (இலக்கிய எழுத்தாளர் – வசனகர்த்தா)
      • கமல் (சினிமா நடிகர்)
      • மனுஷ்யபுத்திரன் (பத்திரிகையாளர் + பாடலாசிரியர் & உயிர்மை)
      • ரவிக்குமார் எம்.எல்.ஏ. (அரசியல்வாதி – விடுதலை சிறுத்தைகள்)
      • சோ (ஆங்கில ஊடகப் பேட்டியாளர் + துக்ளக்)
      • தமிழருவி மணியன் (கட்சி சார்பற்ற பத்தி ஆசிரியர்)
      • ஜக்கி வாசுதேவ் (மதகுரு)
      • கோபிநாத் (ஸ்டார் விஜய்நீயா நானா)
      • பைத்தியக்காரன் (வலைப்பதிவர்)

      முந்தைய பதிவு: Top 10 Influential Tamils from TN: India Today « 10 Hot

      சென்ற வீக் எண்ட் மெனு

      In Life, Lists, Misc on ஜூன் 24, 2009 at 3:35 முப

      1. பிஸிபேளா பாத்
      2. பகாளா பாத்
      3. தக்காளி ரசம்
      4. சுண்டைக்காய் மோர்க் குழம்பு
      5. புல்கா சப்பாத்தி
      6. எலுமிச்சை தால்
      7. பல காய் பொரித்த கூட்டு
      8. மோர் மிளகாய்
      9. அரிசி அப்பளாம்
      10. காலிஃப்ளவர் ஃப்ரை
      11. கோஸ் கறி
      12. வெள்ளரிக்காய் பச்சடி
      13. மில்க் மெய்ட் பாயாசம்

      Therthal 2009 Special

      In India, Politics, Tamilnadu on மார்ச் 18, 2009 at 3:11 பிப

      தேர்தல் குறித்து நான் அறிந்தவரைக்கும் நான்கு பதிவுகள்தான் தேறுகிறது.

      இப்போது புதிய பதிவு தொடங்குவதற்கான ஐடியா:

      1. தினம் ஒரு வினா: அன்றைய சூடான பிரச்சினையை கேள்வியாக மாற்றி, இரு தரப்பு விவாதத்தையும் இரண்டு வரிகளில் சுருங்கச் சொல்லி, வாசகரை வாக்களிக்க சொல்வது. மாலன் இதை செய்கிறார் என்றாலும் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இதைத் தொடரவில்லை.
      2. புகைப்படமும் செய்தித் தொகுப்பும்: செய்திகளுக்கு கூகிள், தினமலர், யாஹூ, எம்.எஸ்.என் எல்லாம் இருக்கிறது. நிழற்படம் எளிதில் கிடைப்பதில்லை. தினசரி நிகழ்வுகளை பருந்துப் பார்வை செய்தித் தொகுப்பாக்கி, கூடவே முக்கியமான, அரிதான ஒளிக்கோர்வைகளை சொடுப்பது.
      3. குசும்பு கருத்து கார்ட்டூன்: திருமாவும் கருணாநிதியும் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள்? விஜய்காந்த்தும் ரஜினியும் சேர்ந்திருக்கும் பழைய படத்திற்கு உங்கள் எண்ணச்சிறகு எப்படி பறக்கும்? குசும்பர் செய்கிறார் என்றாலும், எக்ஸ்க்லூசிவாக இந்திய தேர்தல் களத்திற்கு செய்வது.
      4. அன்றும் இன்றும்; சொன்னார்கள்; துக்கடா: இன்றைக்கு ஒரு அறிக்கை விடுவது; அது என்றோ சொன்னதற்கு நேர் எதிராக இருப்பது அரசியல் லட்சணம். அந்த மாதிரி முரண்களை முன்னிறுத்துவது. பொருத்தமான மேற்கோள்களுக்கு, பதிலாக கருத்துக்கணை ரெண்டணா வீசுவது.
      5. எண்ணும் புள்ளிவிவரமும்: ‘ரமணா’ விஜய்காந்த் மாதிரி ஒவ்வொரு தொகுதிக்கும், ஒவ்வொரு வேட்பாளருக்கும், அனைத்து கட்சிகளுக்கும் பின்புல தகவல்களை சுவையாகக் கொடுப்பது. எத்தனை முறை குற்றஞ்சாட்டப்பட்டார்? எவ்வளவு தடவை தொகுதிக்கு விசிட் அடித்தார்? வாக்கு விகிதாச்சாரம்?
      6. பேட்டி, நேர்காணல், வல்லுநர் பார்வை: விடுதலை சிறுத்தை இரவிக்குமார் துவங்கி பா.ஜ.க. பிரதம வேட்பாளர் அத்வானி வரை வலையில் வசிப்போரே. அவர்களிடம் இமெயில் பேச்சுவார்த்தை நடத்துவது. முன்னாள் எம்பி, அதிருப்தி எம்.எல்.ஏ என்று வலை வீசி சிறப்புக் கட்டுரை வாங்குவது; தமிழிணைய தாதாக்களிடம் கிடுக்கிப் பிடி இன்டெர்வ்யூ பெறுவது.
      7. தேர்தல் அறிக்கை ஆராய்ச்சி, ஆய்வு: “கெட்டதெல்லாம் கெட்டது. இலவச டிவி கிழவனைத் தூக்கி மனையில் வை” என்கிற மாதிரி 55 கெட்ட விவாத துவக்க புள்ளிகளை விக்கி பட்டியலிட்டிருக்கிறது. மலிவு அரசியலை விட்டுவிட்டு சமூகம் எதிர்நோக்கும் விஷயங்களில் கட்சி நிலைப்பாடுகளையும் வேட்பாளரின் பாராளுமன்ற நடவடிக்கையையும் அரசின் செயல்பாடுகளையும் அலசுவது.
      8. ஆங்கில ஊடகம், மாற்று பத்திரிகை, பிற தினசரி: Covert, Tehelka போன்ற பத்திரிகைகளின் தலையங்கம் என்ன? டெலிகிராஃப், ஸ்டேட்ஸ்மேன், TOI, HT என்ன சொல்கிறது? ஈநாடு, ஆனந்த பஜார் பத்ரிகாவில் என்ன முக்கியமான மேட்டர்? அவுட்லுக், சன்டே இந்தியன், வீக், இந்தியா டுடே எல்லாம் என்ன எழுதி உள்ளது?
      9. தகவல் சரிபார்த்தல்; பிழைபொறுக்கி: நம் தலைவர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பது கஷ்டம். இலவச அரிசிக்கு எவ்வளவு செல்வாயிற்று? யார் காலத்தில் மின்சாரம் எவ்வளவு கட் ஆனது? எப்போது எந்த நிலையை எவர் ஆதரித்தார்? சொன்னது சரிதானா என்று பூதக்கண்ணாடி வைத்து குற்றங்கண்டுபிடிப்பது.
      10. யூ ட்யூப், ஃப்ளிக்கர், வலைப்பதிவு தொகுப்பான்: எல்லா சோஷியல் மீடியாவிடமிருந்தும் பொருத்தமான இடுகையை ஒத்த தலைப்பில் சேர்த்துக் கொடுப்பது. வேட்பாளரை நேரில் சந்தித்து விழியமோ, புகைப்படமோ வலையேற்றும் கலையைக் கற்றுத் தருவது.
      11. கொசுறு தமிழ் ஆனியன்: ஆங்கில ஆனியன் பார்த்திருப்பீர். லக்கிலுக் போன்றோர் அவ்வப்போது எழுதும் ஒன்றரை பக்க நாளேடு படித்திருப்போம். அன்றாட செய்திகளை நக்கலெடுப்பதே முழு நேரத் தொழில். புகைப்படங்களை வெட்டி ஒட்டுதல், போலி பேட்டி, நிஜ அறிக்கை போன்றே தோன்றும் பகிடி, கிட்டத்தட்ட நம்பிவிடக் கூடிய கிண்டல் உல்டா நிறைப்பது.

      ‘டாப்-10’ லஞ்சம் பெறும் துறைகள்

      In India, Life, Lists, Politics, Technology on ஜனவரி 28, 2009 at 7:27 பிப

      டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் மற்றும் சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் லஞ்சம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவு:

      • ஓர் ஆண்டில் மட்டும் ரூ.883 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
      • அரசுத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள மூன்றில் ஒருவர் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.

      எந்த துறையில் லஞ்சம் அதிகம்: ஒரு ஆண்டில் கொடுக்கப்படும் லஞ்சம் (ரூ. கோடிகளில்).

      1. போலீஸ் 215,
      2. வீட்டுவசதி வாரியம் 157,
      3. பத்திரப்பதிவு 124,
      4. மின்சாரம் 105,
      5. மருத்துவம் 87,
      6. வங்கி 83,
      7. ரேஷன் 45,
      8. வனத்துறை 24,
      9. குடிநீர் 24,
      10. பள்ளிக்கூட கல்வி 12,
      11. கிராம வேலை வாய்ப்பு 7