Snapjudge

Posts Tagged ‘செக்ஸ்’

Top 10 Double Meaning Songs in Tamil Cinema

In Literature, Movies, Tamilnadu on திசெம்பர் 21, 2018 at 9:49 பிப

தமிழ் சினிமாவில் வந்த இரட்டை அர்த்த பாடல்கள் எவ்வளவு இருக்கும்?

இரட்டை அர்த்தம் என்றாலே காமம் மட்டும்தானா?

எந்தப் பாடலை இந்த தலை பத்து டபுள் மீனிங் பட்டியலில் சேர்க்கலாம்?

  1. ரெண்டு கன்னம் சந்தனக் கின்னம்! தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்!! – வைரமுத்து
  2. அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல – பேரரசு
  3. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ – புலமைப்பித்தன்
  4. மாடில நிக்குற மான் குட்டி… மேலவா காட்டுறேன் ஊர சுத்தி – கானா பாலா
  5. எப்படி? எப்படி!? சமைஞ்சது எப்படி – வாலி
  6. நிலா காயுது நேரம் நல்ல நேரம் – வாலி
  7. எலந்தப் பழம், செக்கச் சிவந்த பழம், தேனாட்டம் இனிக்கும் பழம் – கண்ணதாசன்
  8. நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவன் மாம்பழம் வேண்டுமென்றார் – வாலி
  9. மல மல மல மருத மல மல்லே மருத மலை – வாலி
  10. வாடி என் கப்பக்கிழங்கே… எங்க அக்கா பெத்த முக்காத்துட்டே – கங்கை அமரன்
Simbu STR Silamabarasan as Tamilandaa!

“இந்த விளையாட்டுக்கு நான் வரல்லே” என்று கவி காமு ஷெரீப்பை திரையுலகத்தை விட்டே துரத்திய பெருமை #8 பாடலைச் சேரும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடிக்க, மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, வாலிபக் கவிஞர் வாலி எழுதிய பாடலிது. “ஒழுக்கக்கேட்டைப் பறைசாற்றி, சமுதாயத்தை சீர்கெடுக்கும் பாடல்” என்று தன் முழு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து “இனி திரைப்படத்திற்கே பாடல் எழுதவதில்லை” என்ற சபதத்தை மேற்கொண்டார் கவி கா.மு.ஷெரீப்.

Actress Amala Paul at FeTNA: FAQ for Federation of Tamil Sangams of North America

In Lists on ஜூலை 6, 2012 at 3:35 முப

முந்தைய அழைப்பு: Actress Amala Paul invites you to FeTNA 2012: Movie Stars at Stage at 25 Tamils Festival

1. மேடையில் குத்தாட்டம் கிடைக்குமா: அமெரிக்க தமிழர்கள் ஆர்வம்


2. தமிழில் ‘வணக்கம்’ சொல்வார்: பெட்னா அமைப்பாளர்கள் உறுதி


3. பாலம் சில்க் பட்டுப் புடைவை கிடைக்குமா? – மாமிகள் யோசனை


4. அமலா பால் இத்தனை நகையுடன் வருவாரா? – திருடர் திட்டம்


5. அடுத்த பாடல் பதிவை முடித்து விடலாமா? – இயக்குநர் சிந்தனை


6. முல்லைப் பெரியாறு குறித்தும் பேசுவாரா? – மலையாளிகளும் சேரர்களே


7. FeTNAவிற்கு வர நாற்பது லட்சம்தான் ஆரம்பத்தில் கேட்டாரா? – வருமான வரி விசாரணை


8. அமலா பாலுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? பெட்னா ஆய்வு


9. நான் இருக்கும்; ஸ்டேஜ் இருக்கும்; ஸ்கோப் இருக்கும்

Actress Amala Paul invites you to FeTNA 2012: Movie Stars at Stage at 25 Tamils Festival

In Movies, USA on ஜூலை 2, 2012 at 6:51 பிப

ஃபெட்னா உங்களை அமலா பாலுடன் வரவேற்கிறது:

அமலாவுடன் உணவருந்தலாம்.
அமலா பால் உடன் படகு சவாரி செல்லலாம்..
நடிகை அமலா உடன் புகைப்படம் எடுக்கலாம்…

வருக வருக!
பயன் பெருக!!
நலன் அடைக!!!

Hot Blog Posts in Tamil Net from Tamilmanam

In Blogs, Srilanka, Tamilnadu on திசெம்பர் 15, 2011 at 3:12 முப

வலையில் வாசிப்போரை எது கவர்கிறது? எந்தத் தலைப்பு மக்களை ஈர்க்கிறது? எப்படி டைட்டில் போட்டால், நெட் தமிழர், க்ளிக்குவார்?

தமிழ்மணம் பக்கத்தில் இருந்து:

  1. முஸ்லிம் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் :: யோகராஜா சந்ரு
  2. ஆண்களுக்கு பாலியல் தொல்லை இல்லையா? :: shanmugavel
  3. ஒரு ஆணின் முனகல்… :: அனு
  4. 38வயதிற்கு உட்பட்ட “தாய்“மார்களுக்கு மட்டும் :: tamilwriter.saravanan saravanan
  5. கேரளாவில் தமிழ் பெண்கள் மானபங்கம்.. வெட்கம் கெட்ட மன்மோகன் அரசே.. :: !* வேடந்தாங்கல் – கருன் *!
  6. அய்யப்பன் இந்தியனா? மலையாளியா? :: பெரியார்தளம்
  7. தாம்பத்யம் தகிடுதத்தம் :: பாச மலர் / Paasa Malar
  8. யாழ்ப்பாணத்துப் பெண்களும், புலம்பெயர் அன்பரும்! – நம்மவர்! :: ஜீ…
  9. வாங்க சிரிக்கலாம்; நகைச்சுவை தொகுப்புகள், மொக்கை ஜோக்ஸ், அறுவை ஜோக்ஸ், … !. :: கருடன் !
  10. ஈரோடு – தமிழகம் தழுவிய பதிவர் சந்திப்பு ,ட்வீட்டர் , … :: சி.பி.செந்தில்குமார்

விக்கிப்பிடியா குறிப்பில் இருந்து:

வலைப்பதிவுகள் 1990 களின் இறுதியில் தோற்றம் கண்டன… தமிழில் வலைப்பதிவுகள் 2003 இல் முதலாவதாக எழுதப்படத் தொடங்கின.

பத்து குறள்

In Books, Tamilnadu on ஜனவரி 22, 2009 at 3:43 பிப

திருக்குறள் > கற்பியல் > கனவு நிலை உரைத்தல்

1. நனவினான் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.

2. துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தார் ஆவர் விரைந்து.

தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.

3. நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர்க் காணா தவர்.

கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.

களவியல் > புணர்ச்சி மகிழ்தல்

4. கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்; கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன.

5. தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.

தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது.

6. வீழும் இருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.

7. ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும்.

8. அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது.

அலர் அறிவுறுத்தல்

9. களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்.

10. கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் “கிரகணம்” எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது.