Snapjudge

Posts Tagged ‘சாரு’

2011: Tamil Literary Awards to Writers and Authors: Book Felicitations & Rewards

In Lists on திசெம்பர் 22, 2011 at 10:41 பிப

இந்த வருடம் வழங்கப்பட்ட முக்கிய விருதுகளும் பெற்றவர்களும்:

1.

தமுஎகச இலக்கியப் பரிசு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக 2010ஆம் ஆண்டுக்கான இப்போட்டியின் முடிவுகள்:

அமரர் க.சமுத்திரம் நினைவுப் பரிசு ரூ10 ஆயிரம், விளிம்புநிலை மக்கள் பற்றிய படைப்புக்கு பரிசு பெறுபவர்: சோலை சுந்தரபெருமாள், படைப்பு – வெண்மணியிலிருந்து – வாய்மொழி வரலாறு, வெளியீடு – பாரதி புத்தகாலயம்.

நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதியின் பெற்றோர் அமரர் பெருமாயி-குப்பண்ணன் நினைவுப்பரிசு ரூ5000, சிறந்த நாவலுக்கான பரிசு பெறுபவர் டி. செல்வராஜ், நூலின் பெயர்- தோல், வெளியீடு-NCBH

புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு ரூ 4000, சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு பெறுபவர் ச.சுப்பாராவ்.  நூலின் பெயர் – தாத்தாவின் டைரிக் குறிப்புகள், வெளியீடு – பாரதி புத்தகாலயம்.

குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு ரூ 4000, தமிழ்வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான பரிசு பெறுபவர் முனைவர் மு. இளங்கோவன், நூலின் பெயர் – இணையம் கற்போம், வெளியீடு-வயல்வெளிப் பதிப்பகம்

அமரர் சேதுராமன்-அகிலா நினைவுப்பரிசு ரூ2500. சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கான பரிசு பெறுபவர் சந்திரா மனோகரன். நூலின் பெயர்-சில்லுக்குட்டி(சிறுவர் கதைகள்) வெளியீடு – எஸ்.எஸ்.பப்ளிகேஷன்.

தமிழறிஞர் வ.சுப. மாணிக்கனார் நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு பெறுபவர் நிழல் வண்ணன். நூலின் பெயர் – அதிகாலைப் பெறுவெள்ளம் – மா.வோவும் சீனப்புரட்சியும், வெளியீடு-விடியல் பதிப்பகம்.

அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த கவிதை நூலுக்கான பரிசு பெறுபவர் நாணற்காடன். நூலின் பெயர்– சாக்பீஸ் சாம்பலில்

குறும்பட ஆவணப்பட பரிசு

பா.இராமச்சந்திரன் நினைவு தமுஎகச மாநில குறும்பட ஆவணப்பட பரிசு நான்கு பேருக்கு தலா ரூ2500,

குறும்படங்கள்-

விண்ட் – இயக்குநர் மணிகண்டன்
அதிகாலை – இயக்குநர் கவின் ஆண்டனி

ஆவணப்படங்கள்-

அக்றிணைகள் – இயக்குநர் இளங்கோவன்
புலி யாருக்கு? – இயக்குநர் ஆன்ட்டோ


2.

தமிழ் இலக்கியத் தோட்டம்

வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் : எஸ்.பொன்னுத்துரை

3. கலைமகள் சஞ்சிகை நடத்திய சர்வதேச குறுநாவல் போட்டி – 2011ல் விருது பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன்

4. இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற எழுத்தாளர்: அகில் சாம்பசிவம்

5. கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வழங்கும் திருமதி ரங்கம்மாள் விருதுக்கு தமிழ்மகன் எழுதிய “வெட்டுப்புலி’ நாவல்

வெளியீடு – உயிர்மை

6. கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது

7. வண்ணநிலவன் வண்ணதாசனுக்கு சாரல் விருது

8. பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது

9.  விளக்கு விருது, தேவதச்சனுக்கு

10. தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது: மலேசியா வாழ் கணினியியலாளர் முத்து நெடுமாறன்

11. சாகித்ய அகாதமி விருது: காவல் கோட்டம் (நாவல்) – சு. வெங்கடேசன்

12. தாகூரின் 150-வது ஆண்டினை முன்னிட்டு, இந்திய இலக்கியங்களை கௌரவிக்கும் வகையில் கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாடமியுடன் இணைந்து வழங்கும் தாகூர் இலக்கிய (Tagore Literature Award) விருது: எஸ் ராமகிருஷ்ணனின்யாமம்

13. நல்லி-திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள்: குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பான எஸ் ராமகிருஷ்ணனின் கால்முளைத்த கதைகள் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது.

  • தமிழிலிருந்து பிற இந்திய மொழிகளுக்குச் செல்லும் நூல்கள் ஐந்து
  • பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் நூல்கள் ஐந்து
  • ஆங்கில புனைவிலக்கிய நூலின்  தமிழாக்கத்திற்கு ஒரு விருது
  • ஆங்கிலம்/பிற அயல் மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் புனைவு இலக்கியம் அல்லாத ஒரு நூல் என்று மொத்தம் 12 விருதுகள்.  ஒவ்வொன்றிற்கும் ரொக்கப் பரிசு ரூ.10,000.
  • தமிழ்ப் படைப்புகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு சென்றுள்ள படைப்பாளி ஒருவருக்கும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்குப் படைப்புகளைக் கொண்டு வந்துள்ள ஒருவருக்கும் என்று வாசகர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் குழுவின் பரிசீலனைப்படி இரு வாழ்நாள் சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  ஒவ்வொருவருக்கும் ரூ.15000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

14. சாகித்ய அகாதெமியின் குழந்தை இலக்கிய விருது: தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா – “சோளக் கொல்லைப் பொம்மை’ என்னும் தலைப்பிலான குழந்தைகளுக்கான பாடல் நூல்

மற்றவை

i). விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ‘அம்பேத்கர் விருது’ : தமிழக அரசின் அன்றைய தலைவரான முதல்வர் கருணாநிதி

ii) திருவள்ளுவர் விருது : முனைவர் பா. வளன் அரசு

iii) கணினி மென்பொருளுக்கான கணியன் பூங்குன்றனார் விருது : என்.எச்.எம் ரைட்டர் மென்பொருள்

iv) அமுதன் அடிகள் இலக்கிய விருது: கே. எஸ். பாலச்சந்திரன்

v) கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழா

  1. வி.ஜீவகுமாரன் (டென்மார்க்) – சங்கானைச் சண்டியன்
  2. நாகரத்தினம் கிருஷ்ணா (பிரானசு) – மாத்தகரி
  3. சை.பீர்முகமது (மலேசியா) – பெண் குதிரை
  4. நடேசன் (ஆஸ்திரேலியா) – வண்ணத்திகுளம்
  5. தெணியான் (இலங்கை) – ஒடுக்கப்பட்டவர்கள்
  6. கே.விஜயன் – (இலங்கை) – மனநதியின் சிறு அலைகள்
  7. சிவசுப்ரமணியன் (இலங்கை) – சொந்தங்கள்
  8. தனபாலசிங்கம் (இலங்கை) – ஊருக்கு நல்லது சொல்வேன்
  9. கலைச்செல்வன் (இலங்கை) – மனித தர்மம்
  10. உபாலி லீலாரத்னா (இலங்கை)- கு.சி.பா.வின் சுரங்கம், தாகம், நாவல்களின் சிங்கள மொழியாக்கம் செய்தவர்.


பரிசு பெற்ற தமிழக எழுத்தாளர்கள், நூல்களின் விவரம்:

  1. ஆர்.எஸ்.ஜேக்கப் – பனையண்ணன்
  2. சுப்ரபாரதி மணியன் – சுப்ரபாரதி மணியன் கதைகள்
  3. முனைவர் மு.இளங்கோவன் – இணையம் கற்போம்
  4. புவலர். இராச.கண்ணையன் – குறளோசை
  5. ப.ஜீவகாருண்யன் – கவிச்சக்ரவர்த்தி
  6. குறிஞ்சிவேலன் – முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்
  7. லேனா தமிழ்வாணன் – ஒரு பக்கக் கட்டுரை 500
  8. வெண்ணிலா – நீரில் அலையும் முகம்
  9. பூங்குருநல் அசோகன் – குமரமங்கலம் தியாக தீபங்கள்
  10. கூத்தங்குடி அழகு ராமானுஜன் – காவிரி மண்ணின் நேற்றைய மனிதர்கள்

தெரியாதவை

அ) கவிஞர் சிற்பி அறக்கட்டளை: கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழின் தலை சிறந்த கவிஞர்களைப் பாராட்டி விருது

ஆ) இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் விருது

&

முதல் கவிதைத் தொகுப்புக்கான ராஜமார்த்தாண்டன் (நெய்தல்) விருது

இ) பெரியார் விருது

ஈ) அண்ணா விருது

உ) அம்பேத்கர் விருது

ஊ) காமராசர் விருது

எ) பாரதியார் விருது

ஏ) பாரதிதாசன் விருது

ஐ) திரு.வி.க. விருது

ஒ) கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

ஓ) திருப்பூர் தமிழ்ச் சங்கம் இலக்கிய விருதுகள்

ஔ) ஆனந்த விகடனின் விருது

க) பாரதிதாசன் அறக்கட்டளை – மன்னர்மன்னன் இலக்கிய விருது நூல்கள்

ங) கலைமாமணி

ச) நொய்யல் இலக்கிய வட்டம் மூன்றாம் ஆண்டு இலக்கிய விருதுகள்

  1. கவிதை – 2 பரிசுகள்
  2. கட்டுரை – 2 பரிசுகள்
  3. சுற்றுப்புறச் சூழல் – 2 பரிசுகள்
  4. குழந்தை இலக்கியம் – 2 பரிசுகள்
  5. சிறுகதைகள் – 2 பரிசுகள்
  6. ஓவியம் – 3 பரிசுகள் (கோட்டுச் சித்திரம் 1, ஆயில் பெயிண்டிங் 1, வாட்டர் கலர் 1)

Takeaways from Sannasi blog on Charu, Jeyamohan & their Eezham opinions

In Blogs, Guest, Misc, Politics, Questions, Srilanka on ஜூன் 11, 2009 at 6:07 பிப

முழுவதும் வாசிக்க: வேதம் ஓதும் சாத்தான்கள்

1. புஷ்ஷின் கோவேறுகழுதைத்தனமான பிடிவாதத்தை, முட்டாள்தனத்தைத் தாண்டி இதுபோன்ற தருணங்களில் புஷ்ஷின் வினோதமான/பிரத்யேகமான ‘அற’வுணர்வு இத்தருணத்தில் சரியாக இயங்கியிருக்கக் கூடும் என்று பாமரத்தனமாக நினைக்க வைப்பதுதான் ஒருவிதத்தில் அந்த நபரின் வெற்றி போல.

2. மனித உரிமைகள் குறித்த அக்கறைதான் கிடையாது என்பது ஒருபுறம் இருக்க, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் ராஜதந்திர வெற்றி என்றுகொண்டு, அண்டை நாடுகளை இலங்கையில் அழுத்தமாகக் கால் பதிக்க வழிகோலிக் கொடுத்துவிட்டு தெற்கு ஆசியாவின் மத்தியில் காயடிக்கப்பட்ட மாடு மாதிரி நிற்கிறது இந்தியா – அதன் வீச்சு அவ்வளவு தான்.

3. ஊடகப் பொறுக்கிகள் கருணாநிதி போன்றவர்களை உள்ளூர் அரசியல் பொறுக்கிகள் மாதிரிச் சித்தரிப்பதைப் பார்க்கும்/கேட்கும்போது கொதித்திருக்கிறது – கருணாநிதி என்ற தனி நபர் மீதுள்ள ஆதுரத்தால் அல்ல – விரும்பியோ விரும்பாமலோ எனது அடையாளங்களிலொன்றை முன்னிறுத்தும் கருவிகளிலொன்றாக இந்த கருணாநிதி என்ற நபர் இருப்பதான தருணத்தின் மீதுள்ள ஒட்டுறவால். குறிப்பாக வட இந்திய ஆங்கில ஊடகங்களுக்கு கருணாநிதியின் வாரிசு அரசியல் குறித்த கிண்டல்களும், மத்திய அமைச்சரவையில் பங்குக்கு அடிக்கும் குரங்கு பல்டிகள் குறித்த கிண்டல்களும் கருணாநிதி-தி.மு.க என்ற எல்லை தாண்டி, ஜெயின் கமிஷன் மொத்தத் தமிழர்களையும் காட்டுமிராண்டிகள் என்று சித்தரித்தது போன்ற ஒரு ஒட்டுமொத்தச் சாணியடிப்பு உத்தி. இது அனைத்துக்கும் உருண்டையை உருட்டிக் கொடுப்பது கருணாநிதி என்றிருக்கும்போது யாரை நோக.

4. சாரு நிவேதிதா மாதிரியான eurosnobகளை/oreo cookie/தேங்காய்களை (உள்ளே வெளுப்பு வெளியே கறுப்பு) அமெரிக்காவில் பல்வேறு தளங்களில் பார்க்கலாம் – இந்தியாவிலிருந்து வந்த இந்தியர்கள், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சுத்த அமெரிக்கர்கள். பாலாடைக்கட்டி சரியில்லை, மார்ஜரின் சரியில்லை, ஒயின் சரியில்லை, கலாச்சார சுரணையேதுமற்ற அமெரிக்கக் குய்யான்கள் ஒற்றைக்கையால் ஃபோர்க்கால் வெட்டித் தின்கிறார்கள் என்பது மாதிரி.

5. சாரு நிவேதிதாவின் கலாச்சார மீறல்கள் பெரும்பாலும் இந்த ரகமானவை. வாழைப்பழக் குடியரசு டி-ஷர்ட் போடுவதையும் டீசல் ஜீன்ஸ் போடுவதையும் டாமி ஹில்ஃபிகர் ஜட்டி போடுவதையும் ஆட்டைச் சுட்டுத் தின்பதையும் சாராய பாட்டில்கள் முன்பு திரும்பி போஸ் கொடுப்பதை தனது வலைத்தளத்தில் போடுவதையும் அயர்ன் மெய்டன் மாதிரி கி.மு.267களின் ராக் குழுக்களை வைத்து தனது ‘*த்’ (யூத்)தை அளந்துகொள்வதையும் ஒரு ‘அ-தயிர்வடைக் கலாச்சாரமாகக்’ காட்ட முயல்வது மாதிரி. லீ, லீவைஸ் போன்றவற்றின் விற்பனைக்கடைகள் சென்னையில் வந்தபோது சம்பளத்தில் நாலில் ஒரு பங்கைக் கொடுத்தாவது ஒரு லீவைஸ் லீ ஜீன்ஸ் வாங்கி விடவேண்டுமென்று திரிந்துகொண்டிருந்த கும்பல் இருந்தது – சாருவைப் படிக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது.

6. ஜெயமோகனை விட சாரு மேல் ஏன் இவ்வளவு ஆத்திரம்? சாரு நிவேதிதாவுடையது முட்டாள்தனம் – முட்டாள்களுக்குத் திட்டினால் பெரும்பாலான நேரங்களில் உறைக்கும், திருத்திக் கொள்வார்கள்.

7. இயலாதவன் வலியை மற்றொரு இயலாதவனை முன்வைத்து இயன்றவன் தப்பித்துக்கொள்ளும் உத்தி எப்படிப்பட்டது?

8. ஆஷ்விட்ஸ், பெயௌஷெட்ஸ் (Belzec) நாஸி வதைமுகாம்களை/நினைவிடங்கள் சிலவற்றை நேரில் பார்த்திருக்கிறேன். இதுவரை இலங்கை போனதில்லை, ஊடகங்களில் படித்தவை சிலரிடம் உரையாடியது தவிர எதையும் நேரில் கண்டதில்லை – இதுதான் என்னைப் போன்றவர்களின் வாழ்வின் அவமானகரமான, குரூர நகைமுரண். அழிவுக்குப் பின்னான பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களைப் பார்ப்பது எப்படிப்பட்ட மனச்சிக்கலையளிக்கும் விஷயமென்பதை எளிதில் விளக்கிவிட முடியாது – கண்டதைப் பிறருக்கு விளக்கும் முனைப்பைவிட, கண்டது தன்னைநோக்கி தனக்குள் திரும்புகையில் நிகழும் சுயவதையைக் கையாள்வது சிக்கலான ஒன்று.

9. இன்னும் எனக்கு பதில் புரியாத கேள்வி:

நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒருபங்கு இதேபோன்ற உள்நாட்டுப்போர்களில் அழிந்துகொண்டிருக்கிறது என நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப்போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் என பேசுவதில்லை. அந்த போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான அந்த மனநிலையை, ஆயுதவெறியை, மீண்டும் நம் நாட்டு மக்கள் மனதில் ஊட்டிவளர்கக் முடியுமா என்றுதான் நம் அறிவுஜீவிகளில் ஒருசாரார் முயல்கிறார்கள். அவர்களே மானுடநேயம் பேசுபவர்களாகவும் இங்கே அறியப்படுகிறார்கள்.
Jayamohan » வெறுப்புடன் உரையாடுதல்