Snapjudge

Posts Tagged ‘சங்கம்’

புகழ் பெற்ற பட்டிமன்றத் தலைப்புகள்

In Events, Lists, Religions, Tamilnadu on மார்ச் 5, 2023 at 1:16 முப

சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றங்களில் என்ன தலைப்புகளில் வாதாடினார்கள்?

கம்பன் கழக வழக்காடு மன்றங்களின் தலை பத்து அலசல்கள் என்ன?

  1. நீதியரசர் மு.மு. இஸ்மாயில்,
  2. குன்றக்குடி அடிகளார்,
  3. அ.சா.ஞானசம்பந்தம்,
  4. சோ.சத்தியசீலன்,
  5. இலங்கை ஜெயராஜ்,
  6. ஆய்வுரை திலகம் அ அறிவொளி  துவங்கி
  7. சன் டிவி புகழ் எஸ்.ராஜா,
  8. சண்முகவடிவேலு ,
  9. திருமதி பாரதி.பாஸ்கர்,
  10. பட்டிமண்டபம் ராஜா எனத் தொடர்ந்து
  11. திண்டுக்கல் லியோனி,
  12. பர்வீன் சுல்தானா,
  13. மோகனசுந்தரம்,
  14. சுகி சிவம்,
  15. திருமதி சுதா சேஷஷையன்,
  16. புலவர் இராமலிங்கம் 
  17. வழக்கறிஞர் சுமதி
  18. உமா மகேஸ்வரன்
  19. மதுக்கூர் ராமலிங்கம்
  20. மணிகண்டன்
  21. கவிஞர் முத்துநிலவன்
  22. முத்தமிழ் வித்தகர் டாக்டர் பழ முத்தப்பன்
  23. நெல்லை கண்ணன்
  24. நாஞ்சில் சம்பத்

வந்தபிறகு நகைச்சுவை என்பற்காகவோ ஜனரஞ்சகம் என்னும் பெயரிலோ சன் டிவி பார்வையாளர்களின் பொது தரம் என்பதாலோ இவை எவ்வாறு மாறின?

சில புகழ்பெற்ற வழக்குகள்:

  1. கம்பன் பாத்திரப் படைப்பில் மகளிரின் உரிமை பறிக்கப்படுகிறது: ஆம் . இல்லை
  2. காப்பியப் போக்கிற்குப் பெரிதும் பெருமை சேர்ப்பது:
    • மதி நுட்மன்று, உறுதிப்பாடே!
    • உறுதிப்பாடன்று, தியாக உணர்வே!
    • தியாக உணர்வன்று, கொடுமை மனமே!
    • கொடுமை மனமன்று, மதி நுட்பமே!
  3. கட்டளையாய் மாறிய கவினுறு வாசகம்
    • அடியாரின் ஏவல் செய்தி
    • கோதிலானை நீயே என்வயின் கொணர்தி
    • நீயே பற்றி நல்கலை போலும்
    • நெடுத்தலையைக் கருங்கடலுள் போக்குவாய்
  4. தலைசிறந்த தூதுவன் யார்? அன்மனா? கண்ணனா?
  5. பாரதி கண்ட கனவு நிறைவேறியது என்பது குற்றமே… – வாக்கு தொடுப்பர் / வாக்கு மறுப்பவர்
  6. கோவலன் கொலையில் முதல் குற்றவாளி கண்ணகியே… : வாக்குரைஞர் / எதிர் வழக்கு உரைஞர்
  7. பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர் யார் என்று தெரிந்திருந்தும் அதைக் கூறாமல் மறைத்துவிட்டார் என்று ஆசிரியர் கல்கி மீது இந்த வழக்காடு மன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது! வழக்குரைப்பவர் / வழக்கு மறுப்பவர் / அறங்கூறுவோர்
  8. இன்றைய வாழ்க்கை எதிர்காலத் தலைமுறைக்கு… : எடுத்துக்கட்டா? எச்சரிக்கையா?
  9.  “இளங்கோ வென்ற தமிழ், கம்பன் கொன்ற தமிழ்”.
    இளங்கோவையும் கம்பனையும் – இலக்கிய இலக்கணம், காப்பிய அமைப்பு, இயல் அமைப்பு, இசை அமைப்பு, நாடக அமைப்பு, காதை/படலம், வடிவம், வரலாறு, பொது மக்களின் உணவு உடை உறையுள் வாழ்வியல், மன்னர்களின் அரசியல், மக்களின் சமூகப் பொருண்மை – ஆய்வு
  10. பேயோன் என்ற எழுத்தாளர் யாராக இருக்க கூடும்?

Top 10 Action Items for FeTNA: அமெரிக்காவில் தமிழ் சங்கங்கள் என்ன செய்யலாம்?

In Business, Finance, USA on ஜூலை 13, 2012 at 10:01 பிப

1. நிதி திரட்டல் மூலம் தொண்டு நிறுவன பங்களிப்புகளை ஊக்குவித்தல்

2. மேடைப் பேச்சு அரசியல்வாதிகளுக்கு பதிலாக சிந்தனையாளர்களை, எழுத்தாளர்களை முன்னிறுத்துதல்

3. உள்ளூர் பல்கலைக்கழகங்களின் மூலம் வந்தவர்களை சொற்பொழிவாற்ற, விவாத மேடைகளில் பங்கு கொள்ள வைத்தல்

4. மொழிபெயர்த்தல்

5. தமிழ் கற்றுத் தருதல்

6. நூலகங்களை அணுக்கமாக ஆக்குதல் – யேல், ஹார்வார்ட் பல்கலை லைப்ரரியில் மட்டும் இல்லாமல், உள்ளூர் டவுன், கிராம, நகர நூலகங்களிலும் தமிழ்ப் புத்தகங்களை நுழைத்தல்

7. நாடு தழுவிய தமிழ்ப் போட்டிகளை நடத்துதல் – நார்த் சவுத் பவுண்டேஷன் போல், ஸ்பெல்லிங் பீ போல்

8. ஈழத்திற்கு பச்சாதாபம் மட்டும் காட்டாமல், செயலூக்கத்துடன் களப்பணிகளை, மறுகட்டமைப்புகளை முன்னெடுத்தல்

9. வைரமுத்து, தாமரை போன்ற சினிமா பாடலாசிரியர்களை அழைப்பதுடன் இளங்கவிஞர்களை அழைத்தல்

10. வெளிப்படையான கணக்கு வழக்குகளை காட்டுதல்; திறந்த வழியில் செயல்படுதல்

சில தொடர்புள்ள பதிவுகள்:

அ) பெட்னா விழா – செந்தழல் ரவி

ஆ) 25th FeTNA – Tamils Annual National Convention: Thamizhar Thiruvizhaa in July 2012

இ) FeTNA: Finances, Venues: Whitepaper on Federation of Tamil Sangams of North America

25th FeTNA – Tamils Annual National Convention: Thamizhar Thiruvizhaa in July 2012

In Life, Srilanka, Tamilnadu, USA on ஜூலை 12, 2012 at 9:17 பிப

குளிர் 100 டிகிரி

அகர முதல எழுத்தெல்லாம் அமலா 
பால் முதற்றே உலகு

(பெட்னா குறள் எண் : 1)

நீராருங் கடலுடுத்த

தமிழச்சி தங்கபாண்டியன் கையில் எத்தனை வளையல்? சரியாக சொல்பவருக்கு ஐ-பேடு பரிசு!!

Abercrombie to ‘Actor Bharath’ : Ditch our brand

நடிகர் பரத் அய்யா… ஜெர்சி ஷோர் மாதிரி ஆகிடப் போகுது! ஏபர்கோம்பி & ஃபிட்ச் காலில் விழாக்குறையாக காசு கொடுத்து மாடலிங்கை நிறுத்தச் சொல்லப் போறாங்க

மூன்று முடிச்சு

விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள்பாலா … தூய்மையானவள், மாசற்றவள், பரிசுத்தமானவள், இளமை உடையவள், பொன்னிறம் படைத்தவள், நல்ல பருவம் உடையவள், மயானத்தில் ஆடுபவள் ஆகியவளுடன் இல்லத்தர்சிகள்.

தொப்பி & திலகம்

நான் ஜெயலலிதா என்றால், நீ எம்.ஜி.ஆர்.

கம்யூனிஸ்ட் என்றால் சிவப்பு

எந்தக் கரை வேட்டி கட்டியிருக்கிறான் இவன்?

ஆட்டமா! தேரோட்டமா!!

நாம அரங்கில வந்தப்ப நாலு பேரு ஆடினாங்க… இப்ப என்னடான்னா குவிஞ்சுட்டாங்களே!

புள்ளி வைத்து கோலம் போடுவார்கள் – இங்கே ஆடை

’என்னோட நெஞ்சில் தமிழச்சி மாதிரி பதக்கம் இல்லாமல் இருக்கலாம்… ஆனால், என் இதய தெய்வங்களாகிய ரசிகர்கள் நீங்க இருக்கீங்க!’

என்னது பத்து லட்சமா?

அமலா பால்: உனக்கு அஞ்சு லட்சம்தானா? எனக்கு பத்தாக்கும்!

நடிகர் பரத்:நான் பாய்ஸ்; நீ தமிழுக்கு கிடைத்த நான்காம் பால்!!

அறிஞர் அண்ணாவும் யேல் பல்கலைக்கழகமும்



பிரபாகரன் பிசினெஸ்

இறந்தாலும் ஆயிரம் பொன்

பொழிப்புரை

கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு மொருவாழ்வே

காம கலக்கத்தினால் மலஞ்சோறும் இந்த உடம்பின் மிகுந்த நோய்களுக் காளாகித் தவிக்காமல், உன்னைக் கவிமாலையால் போற்றித் துதிக்கும் என்னை ஈடேறச் செய்கின்ற ஒப்பற்ற பெருவாழ்வுடையவனே!

உன்னைக் கண்டு நானாட

எ.கொ.இ.சா. (அ) ஒய் திஸ் கொலவெறி சூப்

இலக்கிய நிகழ்வுகளுக்கு செல்லாமல் இருக்க ஏழு காரணங்கள்

In Blogs, Books, Life, Literature, Tamilnadu on ஜூன் 15, 2012 at 5:45 பிப

அயல்நாடுகளில் எழுத்தாளர்களுடன் உரையாட நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. சமீபத்தில் கட்டுரையாளரும் நாவலாசிரியருமான பி ஏ கிருஷ்ணன் லண்டனுக்கும் பே ஏரியாவிலும் வாசகர்களை சந்தித்தார். நாஞ்சில் நாடனும் அமெரிக்கா முழுக்க உலாவி வருகிறார். வெகு விரைவில் எஸ் ராமகிருஷ்ணனும் வட அமெரிக்காவை வலம் வரப் போகிறார்.

இந்த மாதிரி சந்திப்புகளுக்கும் இலக்கிய கூட்டங்களுக்கும் செல்லாமல் இருப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு பார்க்கிறேன்.

1. எனக்கு அங்கே யாரையும் தெரியாது; அதனால் கூச்சமாகவோ அச்சமாகவோ இருக்கிறது.

2. கார் ஓட்டத் தெரியாது; அவ்வளவு தூரம் ஓட்ட முடியாது.

3. அதுதான் அவரோட எழுத்தைப் படிச்சிருக்கோமே… அப்புறம் எதற்கு சந்திக்கணும்?

4. மகளுடைய பியானோ ஒப்பித்தல்; மகனுடைய கராத்தே பயிற்சி.

5. ஏற்கனவே சென்ற கூட்டங்கள் சிலாகிக்கவில்லை; வந்தவர் பேசாமல் வேறு ஒருவர் ஆக்கிரமிப்பார்; நெறியாக ஒருங்கிணைக்கப்படவில்லை என்பதால், இதுவும் ஒழுங்கற்று இருக்கலாம்.

6. சோம்பேறித்தனம் + போரடிக்கும்.

7. நான் அவரை முன்பே சில முறை சந்தித்து உரையாடிருக்கிறேன்.

கொசுறு: நான் அவரை வாசித்ததில்லை; என் கவிதைத் தொகுப்பை தரட்டுமா?

பா.ம.க. என்றவுடன்?

In Lists, Politics, Tamilnadu on திசெம்பர் 30, 2011 at 6:08 பிப

உங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்றவுடன் என்ன நினைவுக்கு வருகிறது?

அப்படி எனக்குத் தோன்றியதன் தொகுப்பு:

  1. பாபா (படம் ஃப்ளாப்)
  2. காடுவெட்டி (குரு மட்டும் அல்ல)
  3. சாதிச்சங்கம் (க்ரீமி லேயர் மட்டும்)
  4. சவுக்கடி (சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்)
  5. பேரம் (பணமும் சீட்டும்)
  6. இளையபெருமாள் (திருமா அல்ல)
  7. அய்யா (பள்ளியோ படையாச்சியோ அல்ல)
  8. குழலி (முகமூடி அல்ல)
  9. சத்திரியன் (சாணார்களும் நாடார்களும் அல்ல)
  10. பச்சோந்தி (பசுமை தாயகம் அல்ல)

 

முந்தையவை: என்றவுடன்

2011: Tamil Literary Awards to Writers and Authors: Book Felicitations & Rewards

In Lists on திசெம்பர் 22, 2011 at 10:41 பிப

இந்த வருடம் வழங்கப்பட்ட முக்கிய விருதுகளும் பெற்றவர்களும்:

1.

தமுஎகச இலக்கியப் பரிசு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக 2010ஆம் ஆண்டுக்கான இப்போட்டியின் முடிவுகள்:

அமரர் க.சமுத்திரம் நினைவுப் பரிசு ரூ10 ஆயிரம், விளிம்புநிலை மக்கள் பற்றிய படைப்புக்கு பரிசு பெறுபவர்: சோலை சுந்தரபெருமாள், படைப்பு – வெண்மணியிலிருந்து – வாய்மொழி வரலாறு, வெளியீடு – பாரதி புத்தகாலயம்.

நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதியின் பெற்றோர் அமரர் பெருமாயி-குப்பண்ணன் நினைவுப்பரிசு ரூ5000, சிறந்த நாவலுக்கான பரிசு பெறுபவர் டி. செல்வராஜ், நூலின் பெயர்- தோல், வெளியீடு-NCBH

புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு ரூ 4000, சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு பெறுபவர் ச.சுப்பாராவ்.  நூலின் பெயர் – தாத்தாவின் டைரிக் குறிப்புகள், வெளியீடு – பாரதி புத்தகாலயம்.

குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு ரூ 4000, தமிழ்வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான பரிசு பெறுபவர் முனைவர் மு. இளங்கோவன், நூலின் பெயர் – இணையம் கற்போம், வெளியீடு-வயல்வெளிப் பதிப்பகம்

அமரர் சேதுராமன்-அகிலா நினைவுப்பரிசு ரூ2500. சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கான பரிசு பெறுபவர் சந்திரா மனோகரன். நூலின் பெயர்-சில்லுக்குட்டி(சிறுவர் கதைகள்) வெளியீடு – எஸ்.எஸ்.பப்ளிகேஷன்.

தமிழறிஞர் வ.சுப. மாணிக்கனார் நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு பெறுபவர் நிழல் வண்ணன். நூலின் பெயர் – அதிகாலைப் பெறுவெள்ளம் – மா.வோவும் சீனப்புரட்சியும், வெளியீடு-விடியல் பதிப்பகம்.

அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த கவிதை நூலுக்கான பரிசு பெறுபவர் நாணற்காடன். நூலின் பெயர்– சாக்பீஸ் சாம்பலில்

குறும்பட ஆவணப்பட பரிசு

பா.இராமச்சந்திரன் நினைவு தமுஎகச மாநில குறும்பட ஆவணப்பட பரிசு நான்கு பேருக்கு தலா ரூ2500,

குறும்படங்கள்-

விண்ட் – இயக்குநர் மணிகண்டன்
அதிகாலை – இயக்குநர் கவின் ஆண்டனி

ஆவணப்படங்கள்-

அக்றிணைகள் – இயக்குநர் இளங்கோவன்
புலி யாருக்கு? – இயக்குநர் ஆன்ட்டோ


2.

தமிழ் இலக்கியத் தோட்டம்

வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் : எஸ்.பொன்னுத்துரை

3. கலைமகள் சஞ்சிகை நடத்திய சர்வதேச குறுநாவல் போட்டி – 2011ல் விருது பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன்

4. இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற எழுத்தாளர்: அகில் சாம்பசிவம்

5. கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வழங்கும் திருமதி ரங்கம்மாள் விருதுக்கு தமிழ்மகன் எழுதிய “வெட்டுப்புலி’ நாவல்

வெளியீடு – உயிர்மை

6. கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது

7. வண்ணநிலவன் வண்ணதாசனுக்கு சாரல் விருது

8. பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது

9.  விளக்கு விருது, தேவதச்சனுக்கு

10. தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது: மலேசியா வாழ் கணினியியலாளர் முத்து நெடுமாறன்

11. சாகித்ய அகாதமி விருது: காவல் கோட்டம் (நாவல்) – சு. வெங்கடேசன்

12. தாகூரின் 150-வது ஆண்டினை முன்னிட்டு, இந்திய இலக்கியங்களை கௌரவிக்கும் வகையில் கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாடமியுடன் இணைந்து வழங்கும் தாகூர் இலக்கிய (Tagore Literature Award) விருது: எஸ் ராமகிருஷ்ணனின்யாமம்

13. நல்லி-திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள்: குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பான எஸ் ராமகிருஷ்ணனின் கால்முளைத்த கதைகள் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது.

  • தமிழிலிருந்து பிற இந்திய மொழிகளுக்குச் செல்லும் நூல்கள் ஐந்து
  • பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் நூல்கள் ஐந்து
  • ஆங்கில புனைவிலக்கிய நூலின்  தமிழாக்கத்திற்கு ஒரு விருது
  • ஆங்கிலம்/பிற அயல் மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் புனைவு இலக்கியம் அல்லாத ஒரு நூல் என்று மொத்தம் 12 விருதுகள்.  ஒவ்வொன்றிற்கும் ரொக்கப் பரிசு ரூ.10,000.
  • தமிழ்ப் படைப்புகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு சென்றுள்ள படைப்பாளி ஒருவருக்கும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்குப் படைப்புகளைக் கொண்டு வந்துள்ள ஒருவருக்கும் என்று வாசகர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் குழுவின் பரிசீலனைப்படி இரு வாழ்நாள் சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  ஒவ்வொருவருக்கும் ரூ.15000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

14. சாகித்ய அகாதெமியின் குழந்தை இலக்கிய விருது: தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா – “சோளக் கொல்லைப் பொம்மை’ என்னும் தலைப்பிலான குழந்தைகளுக்கான பாடல் நூல்

மற்றவை

i). விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ‘அம்பேத்கர் விருது’ : தமிழக அரசின் அன்றைய தலைவரான முதல்வர் கருணாநிதி

ii) திருவள்ளுவர் விருது : முனைவர் பா. வளன் அரசு

iii) கணினி மென்பொருளுக்கான கணியன் பூங்குன்றனார் விருது : என்.எச்.எம் ரைட்டர் மென்பொருள்

iv) அமுதன் அடிகள் இலக்கிய விருது: கே. எஸ். பாலச்சந்திரன்

v) கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழா

  1. வி.ஜீவகுமாரன் (டென்மார்க்) – சங்கானைச் சண்டியன்
  2. நாகரத்தினம் கிருஷ்ணா (பிரானசு) – மாத்தகரி
  3. சை.பீர்முகமது (மலேசியா) – பெண் குதிரை
  4. நடேசன் (ஆஸ்திரேலியா) – வண்ணத்திகுளம்
  5. தெணியான் (இலங்கை) – ஒடுக்கப்பட்டவர்கள்
  6. கே.விஜயன் – (இலங்கை) – மனநதியின் சிறு அலைகள்
  7. சிவசுப்ரமணியன் (இலங்கை) – சொந்தங்கள்
  8. தனபாலசிங்கம் (இலங்கை) – ஊருக்கு நல்லது சொல்வேன்
  9. கலைச்செல்வன் (இலங்கை) – மனித தர்மம்
  10. உபாலி லீலாரத்னா (இலங்கை)- கு.சி.பா.வின் சுரங்கம், தாகம், நாவல்களின் சிங்கள மொழியாக்கம் செய்தவர்.


பரிசு பெற்ற தமிழக எழுத்தாளர்கள், நூல்களின் விவரம்:

  1. ஆர்.எஸ்.ஜேக்கப் – பனையண்ணன்
  2. சுப்ரபாரதி மணியன் – சுப்ரபாரதி மணியன் கதைகள்
  3. முனைவர் மு.இளங்கோவன் – இணையம் கற்போம்
  4. புவலர். இராச.கண்ணையன் – குறளோசை
  5. ப.ஜீவகாருண்யன் – கவிச்சக்ரவர்த்தி
  6. குறிஞ்சிவேலன் – முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்
  7. லேனா தமிழ்வாணன் – ஒரு பக்கக் கட்டுரை 500
  8. வெண்ணிலா – நீரில் அலையும் முகம்
  9. பூங்குருநல் அசோகன் – குமரமங்கலம் தியாக தீபங்கள்
  10. கூத்தங்குடி அழகு ராமானுஜன் – காவிரி மண்ணின் நேற்றைய மனிதர்கள்

தெரியாதவை

அ) கவிஞர் சிற்பி அறக்கட்டளை: கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழின் தலை சிறந்த கவிஞர்களைப் பாராட்டி விருது

ஆ) இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் விருது

&

முதல் கவிதைத் தொகுப்புக்கான ராஜமார்த்தாண்டன் (நெய்தல்) விருது

இ) பெரியார் விருது

ஈ) அண்ணா விருது

உ) அம்பேத்கர் விருது

ஊ) காமராசர் விருது

எ) பாரதியார் விருது

ஏ) பாரதிதாசன் விருது

ஐ) திரு.வி.க. விருது

ஒ) கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

ஓ) திருப்பூர் தமிழ்ச் சங்கம் இலக்கிய விருதுகள்

ஔ) ஆனந்த விகடனின் விருது

க) பாரதிதாசன் அறக்கட்டளை – மன்னர்மன்னன் இலக்கிய விருது நூல்கள்

ங) கலைமாமணி

ச) நொய்யல் இலக்கிய வட்டம் மூன்றாம் ஆண்டு இலக்கிய விருதுகள்

  1. கவிதை – 2 பரிசுகள்
  2. கட்டுரை – 2 பரிசுகள்
  3. சுற்றுப்புறச் சூழல் – 2 பரிசுகள்
  4. குழந்தை இலக்கியம் – 2 பரிசுகள்
  5. சிறுகதைகள் – 2 பரிசுகள்
  6. ஓவியம் – 3 பரிசுகள் (கோட்டுச் சித்திரம் 1, ஆயில் பெயிண்டிங் 1, வாட்டர் கலர் 1)

14 தமிழறிஞர் பட்டியல்

In Books, Lists, Literature, Tamilnadu on ஏப்ரல் 9, 2009 at 3:23 முப

  • டாக்டர் மு வரதராசனார்
  • கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை
  • சொல்லின் செல்வர் டாக்டர் ரா பி சேதுப்பிள்ளை
  • தமிழ்த்தென்றல் திரு வி கல்யாணசுந்தரனார்
  • ரசிகமணி டி கே சிதம்பரநாத முதலியார்
  • வித்துவான் தியாகராச செட்டியார்
  • நற்றமிழ் உரை செய்த நல்லூர் ஆறுமுக நாவலர்
  • நாவலர் சோமசுந்தர பாரதியார்
  • பேரறிஞர் பரிதிமாற் கலைஞர் (வி கோ சூரியநாராயண சாஸ்திரியார்)
  • தமிழ்த் தாத்தா டாக்டர் உ வே சாமிநாதையர்
  • பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
  • தமிழ்க்கடல் மறைமலையடிகள்
  • மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  • பைந்தமிழ்க் காவலர் பாண்டித்துரைத் தேவர்