Snapjudge

Posts Tagged ‘கேள்வி’

வலைப்பதிவரிடம் பத்து வினாக்கள்

In Blogs, Life, Lists on ஒக்ரோபர் 21, 2010 at 7:02 பிப

சென்னைக்குப் போகிறேன். வலைப்பதிவரை சந்திக்கலாம். என்ன கேள்வி கேட்கலாம்? எதற்கு விடை அறிய ஆவல்?

  1. ஏன் வலைப்பதிகிறீர்கள்?
  2. உங்களுக்கு மணமாகிவிட்டதா? குழந்தை உள்ளதா?
  3. வேலை? ஊதியத்துக்கேற்ற உழைப்பைத் தருவதாக நினைக்கிறீர்களா?
  4. கடைசியாக பதவி மாறியது எப்போது?
  5. ட்விட்டர், ஃபேஸ்புக் பிடித்திருக்கிறதா? பதிவு அதிகம் பிடிச்சிருக்கா?
  6. குமுதம், விகடனில் எழுத ஆசையா?
  7. தமிழ்ப்பேப்பர், திண்ணை, சொல்வனம் குறித்த உங்கள் எண்ணம்.
  8. உங்கள் பதிவு எந்த இடங்களில் கவனிக்கப்பட்டிருக்கிறது?
  9. வலைப்பதிவு அறிமுகம் இல்லாதவர்களால், உங்கள் பதிவு எவ்வாறு நோக்கப்படுகிறது?
  10. பைசா பிரயோசனம் உண்டா?

வாக்குமூலம்: நகுலன் – வினா வரிசை: எனக்குப் பிடித்த பத்து வினா

In Books, Life, Questions on மார்ச் 12, 2009 at 4:40 முப

  1. நீங்கள் ஏன் குடிக்கிறீர்கள்?
  2. நீங்கள் உங்களுடேனேயே பேசிக் கொள்வதுண்டா?
  3. நீங்கள் முன்கோபியரா அல்லது எதையும் சகித்துக் கொள்ளும் இயல்புடையவரா?
  4. உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு ஆட்கள் உங்களைச் சாமர்த்தியமாக ஏமாற்றியிருக்கிறார்கள்? நீங்கள் அவர்கள் மீது சட்டபூர்வமாக ஏதாவது நடவடிக்கை எடுத்ததுண்டா?
  5. ஊழலை அறவே ஒழிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
  6. உங்கள் பிள்ளை மருமகன்மார் இவர்களில் சிலர் உங்களை விடப் பதவியில் பொருளாதார வகையில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதால் அவர்களைக் காணும் போது தாழ்வுநிலை மனப்பானமை அடைகிறீர்களா?
  7. நீங்கள் எல்லோரரையும் நம்பி எளிதில் ஏமாந்திருக்கிறீர்களா? நீங்கள் எல்லோரையும் சந்தேகக் கண்கள் கொண்டே பார்க்கிறீர்களா? உலகில் நல்லவர்களே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா?
  8. நீங்கள் எப்பொழுதாவது ஒரு சிநேகபாவமான உறவு வைத்துக் கொள்ள முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றிருக்கிறீர்களா?
  9. வாழ்க்கையில் உங்களுக்கு மிகக் கசப்பான அனுபவம் எது?
  10. உங்களுக்கு உங்கள் தொழில், பணம் சம்பாதிப்பது இவைகளைத் தாண்டி ஏதாவது லஷியம் உண்டா?

நகுலன் எழுதிய ‘வாக்குமூலம்‘ நாவலில் இருந்து; தொடரும்

Cry: 10 Questions by Njaani (Anandha Vikadan)

In Guest, Life, Questions on பிப்ரவரி 21, 2009 at 5:07 முப

அறிந்தும் அறியாமலும் :: ஞாநி

சில கேள்விகளுக்குப் பதில்களை எழுதிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

1. நினைவு தெரிந்து, என் முதல் அழுகை எப்போது?

2. அப்போது எதற்காக அழுதேன்?

3. இப்போதும் அதே காரணங்களுக்கு அழுவேனா?

4. மாட்டேன் என்றால், வேறு என்ன செய்வேன்?

5. இப்போதும் அழுவேன் என்றால், ஏன் அப்படி?

6. கடைசியாக நான் அழுதது எப்போது? எதற்காக?

7. நான் அழ விரும்பி, அழாமல் அடக்கிக் கொண்டது எப்போது?

8. இனி அழ நேரும் சந்தர்ப்பங்களில், நான் என்ன செய்ய விரும்புகிறேன்?

9. அழுகிற ஒருவரைப் பார்த்தால், நான் என்ன செய்கிறேன்? என்ன செய்ய விரும்புவேன்?

10. யாருடைய அழுகை என்னை பயப்படுத்துகிறது?

நன்றி: ஆனந்தவிகடன்