Snapjudge

Posts Tagged ‘கேளிக்கை’

புகழ் பெற்ற பட்டிமன்றத் தலைப்புகள்

In Events, Lists, Religions, Tamilnadu on மார்ச் 5, 2023 at 1:16 முப

சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றங்களில் என்ன தலைப்புகளில் வாதாடினார்கள்?

கம்பன் கழக வழக்காடு மன்றங்களின் தலை பத்து அலசல்கள் என்ன?

  1. நீதியரசர் மு.மு. இஸ்மாயில்,
  2. குன்றக்குடி அடிகளார்,
  3. அ.சா.ஞானசம்பந்தம்,
  4. சோ.சத்தியசீலன்,
  5. இலங்கை ஜெயராஜ்,
  6. ஆய்வுரை திலகம் அ அறிவொளி  துவங்கி
  7. சன் டிவி புகழ் எஸ்.ராஜா,
  8. சண்முகவடிவேலு ,
  9. திருமதி பாரதி.பாஸ்கர்,
  10. பட்டிமண்டபம் ராஜா எனத் தொடர்ந்து
  11. திண்டுக்கல் லியோனி,
  12. பர்வீன் சுல்தானா,
  13. மோகனசுந்தரம்,
  14. சுகி சிவம்,
  15. திருமதி சுதா சேஷஷையன்,
  16. புலவர் இராமலிங்கம் 
  17. வழக்கறிஞர் சுமதி
  18. உமா மகேஸ்வரன்
  19. மதுக்கூர் ராமலிங்கம்
  20. மணிகண்டன்
  21. கவிஞர் முத்துநிலவன்
  22. முத்தமிழ் வித்தகர் டாக்டர் பழ முத்தப்பன்
  23. நெல்லை கண்ணன்
  24. நாஞ்சில் சம்பத்

வந்தபிறகு நகைச்சுவை என்பற்காகவோ ஜனரஞ்சகம் என்னும் பெயரிலோ சன் டிவி பார்வையாளர்களின் பொது தரம் என்பதாலோ இவை எவ்வாறு மாறின?

சில புகழ்பெற்ற வழக்குகள்:

  1. கம்பன் பாத்திரப் படைப்பில் மகளிரின் உரிமை பறிக்கப்படுகிறது: ஆம் . இல்லை
  2. காப்பியப் போக்கிற்குப் பெரிதும் பெருமை சேர்ப்பது:
    • மதி நுட்மன்று, உறுதிப்பாடே!
    • உறுதிப்பாடன்று, தியாக உணர்வே!
    • தியாக உணர்வன்று, கொடுமை மனமே!
    • கொடுமை மனமன்று, மதி நுட்பமே!
  3. கட்டளையாய் மாறிய கவினுறு வாசகம்
    • அடியாரின் ஏவல் செய்தி
    • கோதிலானை நீயே என்வயின் கொணர்தி
    • நீயே பற்றி நல்கலை போலும்
    • நெடுத்தலையைக் கருங்கடலுள் போக்குவாய்
  4. தலைசிறந்த தூதுவன் யார்? அன்மனா? கண்ணனா?
  5. பாரதி கண்ட கனவு நிறைவேறியது என்பது குற்றமே… – வாக்கு தொடுப்பர் / வாக்கு மறுப்பவர்
  6. கோவலன் கொலையில் முதல் குற்றவாளி கண்ணகியே… : வாக்குரைஞர் / எதிர் வழக்கு உரைஞர்
  7. பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர் யார் என்று தெரிந்திருந்தும் அதைக் கூறாமல் மறைத்துவிட்டார் என்று ஆசிரியர் கல்கி மீது இந்த வழக்காடு மன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது! வழக்குரைப்பவர் / வழக்கு மறுப்பவர் / அறங்கூறுவோர்
  8. இன்றைய வாழ்க்கை எதிர்காலத் தலைமுறைக்கு… : எடுத்துக்கட்டா? எச்சரிக்கையா?
  9.  “இளங்கோ வென்ற தமிழ், கம்பன் கொன்ற தமிழ்”.
    இளங்கோவையும் கம்பனையும் – இலக்கிய இலக்கணம், காப்பிய அமைப்பு, இயல் அமைப்பு, இசை அமைப்பு, நாடக அமைப்பு, காதை/படலம், வடிவம், வரலாறு, பொது மக்களின் உணவு உடை உறையுள் வாழ்வியல், மன்னர்களின் அரசியல், மக்களின் சமூகப் பொருண்மை – ஆய்வு
  10. பேயோன் என்ற எழுத்தாளர் யாராக இருக்க கூடும்?

தமிழ் சினிமாவின் தலை பத்து கொலைகள்

In Movies, Tamilnadu on ஜூலை 4, 2022 at 5:01 பிப

தமிழ்ப் படத்தில் வந்த உயிர்ப்பலிகளில் எது உடனே நினைவிற்கு வருகிறது? அது காண்பிக்கப்பட்ட கொலையாக இருக்கலாம். அல்லது கொல்லுவதற்கான திட்டமிடலாக இருக்கலாம். காட்சியமைப்பாக இருக்கலாம். எதனாலோ, நினைவில் நின்று பாதித்த பலிகளின் பட்டியல்:

  1. வாராய் நீ வாராய் – மந்திரி குமாரி படத்தில் பாடலின் முடிவில் (மு. கருணாநிதி)
  2. நூறாவது நாள் – மொட்டை சத்யராஜ் (மணிவண்ணன்)
  3. விடியும் வரை காத்திரு – க்ளைமாக்ஸ் நோக்கிய பயணம் (பாக்யராஜ்)
  4. முதல் மரியாதை – ராதா (பாரதிராஜா)
  5. ஒரு கைதியின் டைரி – பாரதிராஜா + பாக்கியராஜ்
  6. கல்லூரி (தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம்) – பாலாஜி சக்திவேல்
  7. தளபதி – நடு ரோட்டில் எரியூட்டும் சம்பவம் – ரஜினி + மணி ரத்னம்
  8. ஜெண்டில்மேன் – துவக்கத்தில் வரும் சகட்டுமேனியான கொலைகள் – ஷங்கர்
  9. நந்தா (பாடல் கூட நன்றாக இருக்கும் – ஓராயிரம் யானை கொன்றால்… பரணி) – இயக்குனர் பாலா
  10. நான் சிகப்பு மனிதன் – ரஜினி + எஸ்.ஏ. சந்திரசேகர்

கொசுறு:

அ) நாயகன் படத்தின் கொலைகளைப் பற்றிப் பேசாமல் இந்தப் பதிவு முழுமையாகாது

ஆ) அன்னியன் படமும் தொடர்கொலைகள், வித விதமாக அரங்கேறும் சித்திரைவதை பலிகள்.

இ) கடைசியாக, சமீபத்திய சுப்பிரமணியபுரம் (சசிகுமார்)

ஈ) மூன்று முடிச்சு – பாலச்சந்தரும் ரஜினிகாந்த்தும் கமலைக் காப்பாற்றாமல் கைவிடுவது கொலையா?

உ) யார்

ஊ) சிகப்பு ரோஜாக்கள் – பாரதிராஜா + பாக்யராஜ்

எ) விடிஞ்சா கல்யாணம் – மணிவண்ணன்

ஏ) பூவிழி வாசலிலே – ஃபாசில்

ஐ) மௌனம் சம்மதம் (மம்முட்டி + அமலா)

ஒ) கலைஞன் – கமல்

ஓ) சாவி

ஔ) ஆயிரத்தில் ஒருவன்: ஒருவரை “அரவான்’ போல பட்டினி நிமித்தமோ/ போரின் நிமித்தமோ பலியிடுவதாக ஒரு காட்சி இத்திரைப்படத்தில் இருக்கும். பலியிடல்கள்.

ஃ) மதுரை வீரன்: மாறுகால் மாறுகை என்று என் மாணவ பருவத்தில் பார்த்த படம். மனம் பதைபதைத்து போய்விடும்.