Snapjudge

Posts Tagged ‘கவிதை’

S Ramakrishnan Speech Snippets: நீயா நானா முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை

In Books, Lists, Literature on ஜூன் 21, 2012 at 3:28 முப

முந்தைய எஸ் ராமகிருஷ்ணன் வீடியோ பதிவுகள்:

* Acceptance speech by EssRaa at Canada: Tamil Literary Garden Iyal Virudhu: Award Meeting for S Ramakrishnan

* Interview of S Ramakrishnan: Question and Answer with Tamil Writers and Notable Thinkers

* S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

1. ஷேக்ஸ்பியரின் மாக்பெத் நாடகம் – தமிழச்சி தங்கபாண்டியன் நடிக்கிறார்

2. நீயா நானா – புத்தக வாசிப்பு ஏன் அவசியம்?

3. சென்னை புத்தக கண்காட்சியில் லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் இதழின் புத்தக வெளியீடு

4. தமிழ் கவிதைச் சூழல் – நூல்களும் கவிஞர்களும்: தமிழ்நாடு & ஈழம்

5. அன்னா கரேனினா – கரீநிநா கதையும் ஃபேஸ்புக் கலாச்சாரமும்

2011: Tamil Literary Awards to Writers and Authors: Book Felicitations & Rewards

In Lists on திசெம்பர் 22, 2011 at 10:41 பிப

இந்த வருடம் வழங்கப்பட்ட முக்கிய விருதுகளும் பெற்றவர்களும்:

1.

தமுஎகச இலக்கியப் பரிசு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக 2010ஆம் ஆண்டுக்கான இப்போட்டியின் முடிவுகள்:

அமரர் க.சமுத்திரம் நினைவுப் பரிசு ரூ10 ஆயிரம், விளிம்புநிலை மக்கள் பற்றிய படைப்புக்கு பரிசு பெறுபவர்: சோலை சுந்தரபெருமாள், படைப்பு – வெண்மணியிலிருந்து – வாய்மொழி வரலாறு, வெளியீடு – பாரதி புத்தகாலயம்.

நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதியின் பெற்றோர் அமரர் பெருமாயி-குப்பண்ணன் நினைவுப்பரிசு ரூ5000, சிறந்த நாவலுக்கான பரிசு பெறுபவர் டி. செல்வராஜ், நூலின் பெயர்- தோல், வெளியீடு-NCBH

புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு ரூ 4000, சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு பெறுபவர் ச.சுப்பாராவ்.  நூலின் பெயர் – தாத்தாவின் டைரிக் குறிப்புகள், வெளியீடு – பாரதி புத்தகாலயம்.

குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு ரூ 4000, தமிழ்வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான பரிசு பெறுபவர் முனைவர் மு. இளங்கோவன், நூலின் பெயர் – இணையம் கற்போம், வெளியீடு-வயல்வெளிப் பதிப்பகம்

அமரர் சேதுராமன்-அகிலா நினைவுப்பரிசு ரூ2500. சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கான பரிசு பெறுபவர் சந்திரா மனோகரன். நூலின் பெயர்-சில்லுக்குட்டி(சிறுவர் கதைகள்) வெளியீடு – எஸ்.எஸ்.பப்ளிகேஷன்.

தமிழறிஞர் வ.சுப. மாணிக்கனார் நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு பெறுபவர் நிழல் வண்ணன். நூலின் பெயர் – அதிகாலைப் பெறுவெள்ளம் – மா.வோவும் சீனப்புரட்சியும், வெளியீடு-விடியல் பதிப்பகம்.

அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த கவிதை நூலுக்கான பரிசு பெறுபவர் நாணற்காடன். நூலின் பெயர்– சாக்பீஸ் சாம்பலில்

குறும்பட ஆவணப்பட பரிசு

பா.இராமச்சந்திரன் நினைவு தமுஎகச மாநில குறும்பட ஆவணப்பட பரிசு நான்கு பேருக்கு தலா ரூ2500,

குறும்படங்கள்-

விண்ட் – இயக்குநர் மணிகண்டன்
அதிகாலை – இயக்குநர் கவின் ஆண்டனி

ஆவணப்படங்கள்-

அக்றிணைகள் – இயக்குநர் இளங்கோவன்
புலி யாருக்கு? – இயக்குநர் ஆன்ட்டோ


2.

தமிழ் இலக்கியத் தோட்டம்

வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் : எஸ்.பொன்னுத்துரை

3. கலைமகள் சஞ்சிகை நடத்திய சர்வதேச குறுநாவல் போட்டி – 2011ல் விருது பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன்

4. இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற எழுத்தாளர்: அகில் சாம்பசிவம்

5. கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வழங்கும் திருமதி ரங்கம்மாள் விருதுக்கு தமிழ்மகன் எழுதிய “வெட்டுப்புலி’ நாவல்

வெளியீடு – உயிர்மை

6. கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது

7. வண்ணநிலவன் வண்ணதாசனுக்கு சாரல் விருது

8. பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது

9.  விளக்கு விருது, தேவதச்சனுக்கு

10. தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது: மலேசியா வாழ் கணினியியலாளர் முத்து நெடுமாறன்

11. சாகித்ய அகாதமி விருது: காவல் கோட்டம் (நாவல்) – சு. வெங்கடேசன்

12. தாகூரின் 150-வது ஆண்டினை முன்னிட்டு, இந்திய இலக்கியங்களை கௌரவிக்கும் வகையில் கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாடமியுடன் இணைந்து வழங்கும் தாகூர் இலக்கிய (Tagore Literature Award) விருது: எஸ் ராமகிருஷ்ணனின்யாமம்

13. நல்லி-திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள்: குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பான எஸ் ராமகிருஷ்ணனின் கால்முளைத்த கதைகள் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது.

  • தமிழிலிருந்து பிற இந்திய மொழிகளுக்குச் செல்லும் நூல்கள் ஐந்து
  • பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் நூல்கள் ஐந்து
  • ஆங்கில புனைவிலக்கிய நூலின்  தமிழாக்கத்திற்கு ஒரு விருது
  • ஆங்கிலம்/பிற அயல் மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் புனைவு இலக்கியம் அல்லாத ஒரு நூல் என்று மொத்தம் 12 விருதுகள்.  ஒவ்வொன்றிற்கும் ரொக்கப் பரிசு ரூ.10,000.
  • தமிழ்ப் படைப்புகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு சென்றுள்ள படைப்பாளி ஒருவருக்கும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்குப் படைப்புகளைக் கொண்டு வந்துள்ள ஒருவருக்கும் என்று வாசகர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் குழுவின் பரிசீலனைப்படி இரு வாழ்நாள் சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  ஒவ்வொருவருக்கும் ரூ.15000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

14. சாகித்ய அகாதெமியின் குழந்தை இலக்கிய விருது: தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா – “சோளக் கொல்லைப் பொம்மை’ என்னும் தலைப்பிலான குழந்தைகளுக்கான பாடல் நூல்

மற்றவை

i). விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ‘அம்பேத்கர் விருது’ : தமிழக அரசின் அன்றைய தலைவரான முதல்வர் கருணாநிதி

ii) திருவள்ளுவர் விருது : முனைவர் பா. வளன் அரசு

iii) கணினி மென்பொருளுக்கான கணியன் பூங்குன்றனார் விருது : என்.எச்.எம் ரைட்டர் மென்பொருள்

iv) அமுதன் அடிகள் இலக்கிய விருது: கே. எஸ். பாலச்சந்திரன்

v) கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழா

  1. வி.ஜீவகுமாரன் (டென்மார்க்) – சங்கானைச் சண்டியன்
  2. நாகரத்தினம் கிருஷ்ணா (பிரானசு) – மாத்தகரி
  3. சை.பீர்முகமது (மலேசியா) – பெண் குதிரை
  4. நடேசன் (ஆஸ்திரேலியா) – வண்ணத்திகுளம்
  5. தெணியான் (இலங்கை) – ஒடுக்கப்பட்டவர்கள்
  6. கே.விஜயன் – (இலங்கை) – மனநதியின் சிறு அலைகள்
  7. சிவசுப்ரமணியன் (இலங்கை) – சொந்தங்கள்
  8. தனபாலசிங்கம் (இலங்கை) – ஊருக்கு நல்லது சொல்வேன்
  9. கலைச்செல்வன் (இலங்கை) – மனித தர்மம்
  10. உபாலி லீலாரத்னா (இலங்கை)- கு.சி.பா.வின் சுரங்கம், தாகம், நாவல்களின் சிங்கள மொழியாக்கம் செய்தவர்.


பரிசு பெற்ற தமிழக எழுத்தாளர்கள், நூல்களின் விவரம்:

  1. ஆர்.எஸ்.ஜேக்கப் – பனையண்ணன்
  2. சுப்ரபாரதி மணியன் – சுப்ரபாரதி மணியன் கதைகள்
  3. முனைவர் மு.இளங்கோவன் – இணையம் கற்போம்
  4. புவலர். இராச.கண்ணையன் – குறளோசை
  5. ப.ஜீவகாருண்யன் – கவிச்சக்ரவர்த்தி
  6. குறிஞ்சிவேலன் – முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்
  7. லேனா தமிழ்வாணன் – ஒரு பக்கக் கட்டுரை 500
  8. வெண்ணிலா – நீரில் அலையும் முகம்
  9. பூங்குருநல் அசோகன் – குமரமங்கலம் தியாக தீபங்கள்
  10. கூத்தங்குடி அழகு ராமானுஜன் – காவிரி மண்ணின் நேற்றைய மனிதர்கள்

தெரியாதவை

அ) கவிஞர் சிற்பி அறக்கட்டளை: கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழின் தலை சிறந்த கவிஞர்களைப் பாராட்டி விருது

ஆ) இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் விருது

&

முதல் கவிதைத் தொகுப்புக்கான ராஜமார்த்தாண்டன் (நெய்தல்) விருது

இ) பெரியார் விருது

ஈ) அண்ணா விருது

உ) அம்பேத்கர் விருது

ஊ) காமராசர் விருது

எ) பாரதியார் விருது

ஏ) பாரதிதாசன் விருது

ஐ) திரு.வி.க. விருது

ஒ) கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

ஓ) திருப்பூர் தமிழ்ச் சங்கம் இலக்கிய விருதுகள்

ஔ) ஆனந்த விகடனின் விருது

க) பாரதிதாசன் அறக்கட்டளை – மன்னர்மன்னன் இலக்கிய விருது நூல்கள்

ங) கலைமாமணி

ச) நொய்யல் இலக்கிய வட்டம் மூன்றாம் ஆண்டு இலக்கிய விருதுகள்

  1. கவிதை – 2 பரிசுகள்
  2. கட்டுரை – 2 பரிசுகள்
  3. சுற்றுப்புறச் சூழல் – 2 பரிசுகள்
  4. குழந்தை இலக்கியம் – 2 பரிசுகள்
  5. சிறுகதைகள் – 2 பரிசுகள்
  6. ஓவியம் – 3 பரிசுகள் (கோட்டுச் சித்திரம் 1, ஆயில் பெயிண்டிங் 1, வாட்டர் கலர் 1)

32 Women Writers in Tamil: Female Authors from Tamilnadu

In Literature, Tamilnadu on மார்ச் 3, 2011 at 11:12 பிப

புத்தகம் பேசுது - பெண்கள் சிறப்பிதழ்: தமிழ் எழுத்தாளர்கள்

ஒளிப்படங்கள்: புகைப்படங்கள்

சிவரமணி கவிதைகள்

In Books, Srilanka on செப்ரெம்பர் 3, 2009 at 3:00 முப

நன்றி: சொல்லாத சேதிகள் :: பத்து பெண் கவிஞர்களின் இருபத்துநான்கு கவிதைகள்

1. அவமானப்படுத்தப்பட்டவள்

(1990: தற்கொலைக்கு ஒரு வருடம் முன்)

Selvi-Sivaramani-Eelam-Tamils-LTTE-Podichi-Peddai.netஉங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்,
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்
என்னுடைய நாட்களை நீங்கள்
பறித்துக் கொள்ள முடியாது.
கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்
உறுதி பெற்றது.

நிராகரிக்கப்பட முடியாதவள் நான்
இனியும் என்ன
தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்
நான்
பிரசன்னமாயுள்ளேன்
என்னை
அவமானங்களாலும்
அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்

ஆனால்,
உங்கள் எல்லோரினதும்
நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது
ஒரு அழுக்குக் குவியலாய்
பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை
அசுத்தம் செய்கிறேன்.

என்னுடைய நியாயங்கள்
நிராகரிக்கப்படும் வரை
உங்களின் எல்லாப் பாதைகளும்
அழுக்குப் படிந்தவையே.


2. முனைப்பு

பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.

என்னை
மேகத்திற்குள்ளும்
மண்ணிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர் .
அவர்களின்
குரோதம் நிறைந்த பார்வையும்
வஞ்சகம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெரித்தன.

எனது
ஆசைகள் இலட்சியங்கள்
சிதைக்கப்பட்டன.
அவர்களின் மனம்
மகிழ்ச்சி கொண்டது.
அவர்களின் பேரின்பம்
என் கண்ணீரில்தான்
இருக்கமுடியும் .

ஆனால் என் கண்களுக்கு
நான் அடிமையில்லையே
அவர்களின் முன்
கண்ணீரக் கொட்ட

என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என்தலை
குனிந்து போனதாய்க்
கனவு கண்டனர் .

ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன் .


3. எமது விடுதலை

நாங்கள் எதைப் பெறுவோம்
தோழர்களே
நாங்கள் எதைப் பெறுவோம்?
இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும்
சுமந்து வந்தோம்
நாங்கள் எதைப் பெறுவோம்?

விடுதலை என்றீர்
சுதந்திரம் என்றீர்
எம் இனம் என்றீர்
எம் மண் என்றீர்

தேசங்கள் பலதிலும்
விடுதலை வந்தது இன்று
சுதந்திரம் கிடைத்தது
எனினும்
தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப் பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சைப் பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை?

நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்;
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!

தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை.


4. வையகத்தை வெற்றி கொள்ள

என் இனிய தோழிகளே
இன்னுமா தலைவார
கண்ணாடி தேடுகிறீர்?
சேலைகளைச் சரிப்படுத்தியே
வேளைகள் வீணாகின்றன.
வேண்டாம் தோழிகளே
வேண்டாம்.

காதலும் கானமும்
எங்கள் தங்கையர் பெறுவதற்காய்
எங்கள் கண்மையையும்
இதழ்பூச்சையும்
சிறிதுகாலம் தள்ளிவைப்போம்.
எங்கள் இளம் தோள்களில்
கடமையின் சுமையினை
ஏற்றிக் கொள்வோம்.

ஆடையின் மடிப்புகள்
அழகாக இல்லை என்பதற்காக
கண்ணீர் விட்ட நாட்களை
மறப்போம்.
வெட்கம் கெட்ட
அந்த நாட்களை
மறந்தே விடுவோம்.

எங்கள் தோழிகள் பலரும்
உலகில் இன்று
கண்மையையும் இதழ்பூச்சையும்
மறது போயினர்.
ஆனால்
தமது மணிக்கரத்தைப்
பிணைத்த விலங்கை
அறுத்தனர்.

வாருங்கள் தோழிகளே
நாங்களும் வழிசெய்வோம்.
மண்ணால் கோலமிட்டு
அழித்தது போதும்.
எங்கள் செந்நீரில் கோலமிட்டு
வாழ்க்கைக் கோலத்தை
மாற்றி வரைவோம்
வாருங்கள் தோழிகளே.

சரிகைச் சேலைக்கும்
கண்ணிறைந்த காதலர்க்கும்
காத்திருந்த காலங்கள்!
அந்த வெட்கம் கெட்ட
காலத்தின் சுவடுகளை
அழித்து விடுவோம்.

புதிய வாழ்வின்
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்
வாருங்கள் தோழிகளே.


5. யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்

….நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை
இல்லா தொழித்தது.

எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங்கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போனார்கள்….

எங்கள் குழந்தைகள்
திடாரென்று
வளர்ந்தவர்களாகி விடுகிறார்கள்


6. எழுதிய ஆண்டு: 1983

நன்றி: எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்

புத்திசாலித்தனமான
கடைசி மனிதனும்
இறந்து கொண்டிருக்கின்றான்…
கேள்வி கேட்பதற்கான
எல்லா வாசலும் அறையப்பட்ட பின்னர்
இருட்டின் உறுதியாக்கலில்
உங்கள் குழந்தைகளை விட்டுச் செல்லுங்கள்
அவர்களுக்கு பின்னால் எதுவுமே இல்லை
சேலை கட்டிக் காப்பாற்றிய
சில நாகரீகங்களைத் தவிர…

வினாக்களுக்குரிய விடைகள் யாவும் அச்சடிக்கப்ட்டுள்ளன
முடிவுகளின் அடிப்படையில்
வெற்றி பெற்றவர் வரிசையில்
யாரை இங்கே நிறுத்துதல் வேண்டும்?
தேசத்தின் புத்திசாலிகள் யாவரும்
சந்திக்குச் சந்தி
தெருக்களில் காத்துள்ளனர்

வினாக்களும் விடைகளும் முடிவுகளும்
யாவருக்கும் முக்கியமற்றுப் போனது
“மனிதர் பற்றிய மனிதத்தின் அடிப்படையளில்
வாழ்வதை மறந்தோம்” என்பது
இன்றைய எமது
கடைசிப் பிரகடனமாயுள்ளது.

கவிதை வெறிமுட்டி
நான்
கவிஞன் ஆகவில்லை
என்னை வெறிமூட்ட
இங்கு
ஓராயிரம் சம்பவங்கள்
அன்று நான்
கவிதைகள் வரையவில்லை
என்னிடம் இருந்தது
கறுப்பு மையே
இன்றோ சிவப்பு மையால்
வரைகின்றேன்
என் உள்ளத்தை
உன் உள்ளத்தை
தோல்வியுறா தர்மத்தின்
இறுதித் தீர்ப்புகளை

நானொரு பிறவிக்
கவிஞன் அல்ல
என்னை வெறிமூட்ட
இங்கு
ஓராயிரம் சம்பவங்கள்
நானோ
இருபதாம் நூற்றாண்டின்
வசந்தத் தென்றல் அல்ல.

ஓரு சிறிய குருவினுடையதைப் போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஓவ்வொரு குருதி தோய்நத
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்.


7. எனது பரம்பரையம் நானும்

ஒவ்வொருத்தனும்
தனக்குரிய சவப்பெட்டியை சுமந்தபடியே
தனது ஒவ்வொருவேளை
உணவையும் உண்கிறான்

தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும்
தீர்க்கதரிசிகளுக்கும் உரிய
இடமும் காலமும் போதனையும்கூட
இல்லாதொழிக்கப்பட்டு விட்டது

கூனல் விழுந்த எம்
பொழுதுகளை
நிமிர்த்ததக்க
மகிழ்ச்சி எதுவும்
எவரிடமும் இல்லை

எல்லாவற்றையும்
சகஜமாக்கிக் கொள்ளும்
அசாதாரண முயற்சியில்
தூங்கிக் கொண்டும் இறந்து கொண்டும்
இருப்பவர்களிடையே

நான்
எனது நம்பிக்கைகளை
தோற்றுக் கொண்டிருக்கிறேன்.


8. எனக்கு உண்மைகள் தெரியவில்லை
பொய்களை கண்டுபிடிப்பதும்
இந்த இருட்டில்
இலகுவான காரியமில்லை…
தெருவில் அவலமும் பதற்றமுமாய்
நாய்கள் குலைக்கும் போது
பூட்டப்பட்ட கதவுகளை
மீண்டும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு
எல்லோரும் தூங்கப்போகும் நேரத்தில்
நான்
நாளைக்கு தோன்றுகின்ற சூரியன் பற்றி
எண்ண முடியாது
இரவு எனக்கு முக்கியமானது
நேற்றுப் போல்
மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய
இந்த இருட்டு
எனக்கு மிகவும் பெறுமதியானது.

பத்துப் பாட்டு

In Movies, Tamilnadu on ஓகஸ்ட் 28, 2009 at 2:51 முப

தமிழ் சினிமாவில் எழுதப்படும் திரைப்பாடல்கள் எத்தனை வகைப்படும்?

  1. கிராமிய, நாட்டுப்புற, தெம்மாங்குப் பாடல்
  2. கொச்சை மொழி, கிளுகிளுப்பு, பேரரசு வகையறா, குத்தாட்டப் பாடல்
  3. ஆங்கிலப் பாடல்களின் தமிழாக்கம்; ஆங்கில வரிகள் அப்படியே வரும் ராப்
  4. பட்டியல் பாடல்கள்; பெயர்ச்சொல்லும் அதற்கு உரித்தான வினைகளும் என்று pattern பாட்டு
  5. அதீத கற்பனை; உயர்வு நவிற்சி கவிதை
  6. நாயக பாவம்; பரணி; ஹீரோ அறிமுகப் பாடல்; இசையமைப்பாளர் துதி; ஸ்தோத்திர வகை.
  7. புரியாத சொற்றொடர்கள்; அன்னிய மொழிப் பதங்களை மீண்டும் மீண்டும் ஒலிக்கவிடும் வரிகள் கொண்ட விளங்காப் பாடல்
  8. ரீ-மிக்ஸ்; புகழ் பெற்ற பழைய பாடல்கள தேய்ந்த vinylல் கொடுக்கும் மறு-வாந்திப் பாடல்
  9. Ctrl+C; அராபிய, ஸ்பானிஷ், உருது, உலக இசையை அப்படியே பிரதியெடுக்கும் இசைப் பாட்டு
  10. இதெல்லாம் இல்லாத பாக்கி பாடல்கள்: சாஸ்திரீய கச்சேரி; சாமி பாட்டு; கானா.

Twitter Venpa: Rhythmic Rhyming 4 line Limerick Poems

In Blogs, Literature, Misc on ஜூன் 20, 2009 at 3:05 முப

பெனாத்தல் சுரேஷ்

1. வெண்பாம் போட்டெடுக்க வேளைகூடவில்லையெனும்
நண்பா கொத்தனாரே கேளு – முன்பே
போட்ட சிறுப்பாவை பொட்டியிலிருந்தெடுத்து
நாட்டு உன்கொடியை நீ

2. நாலை முடிச்சிருக்கே அப்படிநான் சொன்னா,
நாளையே முடிச்சதா ஆளைவிடச் சொல்வே!
மேலும் ஆறுபோடணும் நீ –
ஆறு கொத்தா ஆறு

3. ஃபாலோ பண்ணலியே மீனாக்ஸை – பாடுறேன்
சோலோவா இங்கே நான். ஆளாரும்
மீனாக்ஸின் ஐடியைக் கொடுத்தால் அடுத்தநொடி
தானாக இணைவேனே நான்

4. சொத்தா போகுது சோம்பேறியாய் இருக்காதே
கொத்தா கேளு எழுந்துரு- முத்தாய்
சந்தக்கவி எழுது சாகாவரம் பெறு
சொந்தப்பணி அப்பாலெ பார்

5. இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் –
அன்னிக்கே சொன்னார் பத்மஸ்ரீ –
திண்ணை வெண்ணைன்னு திரிசமம் பேசினா
மன்னிக்க மாட்டோம் வா

6. காதல்தோல்வியினால் புதுக்கவிதை
பலவிளையும்; மோதல்தோல்வியால் வெண்பாமா?
ஆதல் பெண்ணாலே – ஆமாம் இன்னோர்முறை
இல்லறத்தியல் படி கொத்தா!

7. ஒத்திப்போ்டுவதால் ஓராயிரம் வெண்பாமை
ஒட்டுப்போட்டு கொண்டுவர யத்தனிக்கும்
கொத்தனாரே, சித்தநேரம் தூக்கக் கலக்கத்தை
பாரா குத்திக் காட்டுறார்

8. கண்ணாடி காட்டிடும் தழும்பின் காரணங்கள்
வெண்பா மட்டுமா கூறு – அந்நாளில் செய்திட்ட
அநியாயம் ஏராளம் – இல்லாளோர்
நியாயம் எய்திட்ட அம்பு

9. தவியாய் தவிக்கிறாள் தமிழன்னை ட்விட்டரில்
கவியாய்ப் போடுறார் வெண்பாம்-பாவிகள்
மனித வெடிகுண்டாய் படுத்தறாரே மாதாவை
புனிதம் எதிவுமில்லை காண்!
https://twitter.com/penathal/status/2234064395

10. வெள்ளிவிடுமுறை வேலைகள் அதிகம்
தள்ளிப்போயே ஆகணும் – தள்ளாட்டா
சொல்லிப்பார்ப்பதில் ஆரம்பம் – கேக்காட்டா
killஇப் பார்ப்பதில் முடிவு!
https://twitter.com/penathal/status/2234098156

11. குறுக்கெழுத்தாய் வார்த்தை குதறிச்சிதைத்து
சுருக்காய் போடுறோம் தமிழுக்கு-மறுபக்கம்
எறும்பேறியா யானை மடிந்திடும்
குறும்புதான் செய்தேன் நான்!
https://twitter.com/penathal/status/2234199568

12. ஷாப்பிங் ஷாப்பிங் சகட்டுமேனி ஷாப்பிங்
ஆப்பு வாங்கும் பர்ஸினால் – மாப்பு
கேட்டுக்கறேன் தோழர்களே நாளைக்கு நிச்சயம்
போட்டுத்தரேன் வெண்பாம்
https://twitter.com/penathal/status/2241769385

13. வெங்கட்டின் மாற்றம் பாராமல் இருப்போமோ
சங்கம் அமைத்துச் சாதிப்போம்-எங்கள்
கொத்தனும் சொக்கனும் பினாத்தும் ஸ்ரீதரும்
சத்தியா் குமாரும் கூடி
http://twitter.com/penathal/status/2248005938

14. களைப்பான நேரத்தில் கால்நீட்டி உட்கார்ந்து
விளையாட ஓர்வழியா வெண்பாமைத் தேர்ந்தெடுத்தா
தலைபோறா மாதிரி தடங்கல் செய்றாங்கோ
தளைதேடும் மக்களேதான்
http://twitter.com/penathal/status/2248533175

15. இறங்கற வெய்யிலுக்கே இவ்ளோ பில்டப்பா –
இரங்காமல் எரிதழலைக் கொட்டுறான் சூரியன்
கிறங்கிப் போறோமே கிழியறது கிட்ணகிரியில்ல
பரங்கிப்பேட்டை துபாய்!
http://twitter.com/penathal/status/2248284636


இலவசக்கொத்தனார்

1. தந்திபோல் செய்தியை முந்தியே நீர்தந்தீர்
மந்தியா கம்பெடுத்து நான்சுத்த – சிந்திப்பீர்
சேதி தெரிந்தபின் சீந்துவார் இல்லை
பேதிஎடுத்தார்ப் போல்பறந்தனரே காண்
https://twitter.com/elavasam/status/2248524360

2. பேரரசு எண்ணத்தை போக்கிரிதான் வந்திங்கு
வேரறுத்த கதைசொன்ன பாராவே – பேரிருக்கு
என்றெண்ணி பேயாட்டம் ஆடாதே அடங்கியிரு
என்றென்றும் என்பதே நீதி.
https://twitter.com/elavasam/status/2248433982

3. ஐபோனில் ஏது தமிழெழுத பாண்டு
மைபோட்ட பேனாவை நம்பு
https://twitter.com/elavasam/status/2248279090

4. ஜாவாஸ்க்ரிப்ட் தந்திடும் வைரஸ் போலவே
மாவாவும் தருமே புற்று
https://twitter.com/elavasam/status/2247829198

5. தளிகை செய்யாமல் இருந்ததன் காரணம்
மளிகைக் கடை காதல் என்றாயின்
குளிகை ஒன்று இருந்தால் மட்டுமே
வளைகை பிடித்திடும் கரண்டி.

மளிகைக் கடை காதல் என்பது பாரா எழுதும் கால் கிலோ காதல் அரை கிலோ கனவு என்பதனை அறிக!
https://twitter.com/elavasam/status/2247674687

6. வெண்பாம் எழுதாரை வையோம் கலங்கேல்
நண்பா எழுதிடவே வைத்திடுவோம் என்போமே
நன்பா எழுதவே நல்லொழுக்கம் தேவை
வம்பாய் எழுதிடவே வா.
https://twitter.com/elavasam/status/2243717675

7. வெண்பாமைப் பாவென்று வேண்டாத பேச்சினை
நண்பாநீ பேசாதே என்பேன் – அன்பாய்
சொல்லும் போதே நீஅடங்கு இல்லையேல்
பல்லும் பறந்திடும் பார்.

8. பத்துபா எழுதவே சொன்னாரே பாரா
ஒத்துபா என்றாலும் ஒதுங்கவில்லை – செத்துப்
பிழைத்தேன் என்றாலும் சொன்னபடி செய்தேன்
மலைத்தேன் அவரோட மகிமை

9. கொடியைப் பிடியென்று கொஞ்சிடும் அண்ணனே
பொடி வைத்துப் பேசுவதுமேன் – அடிஒன்று
போட்டு எழுதவே சொன்னாய் நானும்
காட்டிடும் கருத்தையே பிடி

10. சொக்கர் வருவார் என்றுநான் காத்திருந்தேன்
மக்கர் செய்கிறார் மனுசர் – டக்கர்
வெண்பாம் தந்திடவே அழைக்கின்றேன் இப்போது
நண்பா வந்திடல் சிறப்பு

11. ஆடத் தெரியாத கூத்தாடி சொன்னாளாம்
மாடத் தெருவே சரியில்லை – போட
இடமில்லை ட்விட்டரில் வெண்பாமே பாரா
மடத்தையே தேடுறாரு பாரு.

12. ஒத்து ஊதும் பெனாத்தல் உமக்கு
வெத்து வேலை எதுக்கு – பத்து
வெண்பாம் டார்கெட் இருக்கு எண்ணிநீ
கன்பர்ம் பண்ணு கணக்கு.

13. படுக்கவே விடாமல் படுத்தரார் பாரா
மிடுக்காப் போடறார் வெண்பாம் – கெடுக்கவா
நானும் அவரோட மூடை நல்லா
வேணும் எனக்கு என்றழுவாரே

14. உண்மையச் சொன்ன வுடமாட்டே நீயி
வெண்ணநீ வெளங்கவே மாட்டே – திண்ண
காலியான உக்கார க்யூ இருக்கு
ஜாலியா உம்பொழப்ப பார்

15. தூக்கம் வராது தவிக்கும் வேளையில்
ஆக்கம் செய்திடுவேன்வெண்பாமே – ஏக்கம்
இனிமேலும் உனக்கேன் வேண்டாமே இன்றுபோல்
தனியாள் நீஇல்லை இனி

14. தூங்காத விழியென்று சொல்லவும் வழியில்லை
தாங்காமல் வருதே உறக்கம் – ஏங்காதே
நான் வருவேன் நாளை இரவினிலே
பாங்காகத் தருவேன் வெண்பாம்.

15. வெண்பாமில் இன்னமும் வெள்ளெனவே நானிருந்தால்
கண்ணாடி காட்டுமே தழும்பு


பா ராகவன்

1. புனிதமா புதிரா இரண்டுமிலை நண்பா
கணிதமிது கற்பதில் நமக்கென்ன – அணியணியாய்
சொல்சேர்த்துக் கூட்டி சூடாயொரு பார்சல்
வில்வித்தை போல இது
https://twitter.com/writerpara/status/2234140956

2. வேலை தடுக்கும் வேறுபணி வந்துநிற்கும்
மாலைப்பனி மயக்கத்தி லாழ்த்தும் – ஜாலியென
பாம்போட முடிவெடுத்துப் பாக்களத்தில் குதித்துவிடு
பாம்பாய்நான் பின்வருவேன் பார்
https://twitter.com/writerpara/status/2247414577

3. மடியிலொரு கனிஉறங்க மடிக்கணியை எதிர்வைத்து
பிடிமகனே வெண்பாவை விரைந்து.
https://twitter.com/writerpara/status/2247515990

4. சொக்கனை நானும் அழைத்தேன் அதிகாலை
அப்படியும் ஆளில்லை இங்கே எப்படியும்
இன்றைக்குள் வந்திடுவான் இடைவேளை கிடைத்ததூஉம்
கொன்றுத்தான் தீர்ப்பான் கவி.
https://twitter.com/writerpara/status/2234038790

5. கூத்தாடி தப்பில்லை கூடவரும் கோஷ்டியில்
காத்தாடி விடத்தெரியா கூட்டம் ஒன்றுண்டு
ஆத்தாடி உனக்கு இதுபுரிய வில்லையெனில்
கொத்தாநீ கொடியைப் பிடி
https://twitter.com/writerpara/status/2233941503

6. எனிமா எனக்கில்லை ஏற்கெனவே அவர்வாங்கி
தனிமை வளையினிலேதவிக்கின்றார் – மினிமம்
நாலைந்துபேர்சொல்ல நான்கேள்விப்படுகின்றேன்
காலையிலே கெட்டசேதி காண்.
http://twitter.com/writerpara/status/2248407750

7. வேட்டைக்காரனுக்கு அப்புறம் நானென்று
கோட்டைக் கனவில் குடியிருந்தார் பேரரசு
ஆட்டையிலே நீயில்லை அப்படியே போவென்று
போட்டுடைத்தார் போக்கிரி இன்று

இன்றைய செய்தி. விஜயின் 50வது படத்தை பேரரசு இயக்கவில்லை. அதிக சம்பளம் கேட்டார் என்று அவரை விட்டுவிட்டு அயன் கேவி ஆனந்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாகக் கேள்விப்படுகிறேன். செய்தியை பாம் ஆக்க ஒரு சிறு முயற்சி;-)
http://twitter.com/writerpara/status/2248349037

8. கனடாகுளிர்பத்தி வெங்கட்டு அண்ணாச்சி பலநாள்
சொன்னகத கேட்டிருக்கேன் -கனவாத்தான்
போச்சேய்யா இங்க பொழப்பக் கெடுக்குதுபார்
டார்ச்சர் தாங்கலையே தல
http://twitter.com/writerpara/status/2248265138

9. எழுந்ததுமே கொளுத்துதுபார் வெய்யில் இன்னிக்கி
கிழிஞ்சிதுபோ கிருஷ்ண கிரி
http://twitter.com/writerpara/status/2248236835

10. பொங்கல் வடைக்குப் போயிருக்கா ரொருநண்பர்
திங்கஇது நேரமென் றுணர்.
http://twitter.com/writerpara/status/2247984928

11. ஆனியன் இன்னிக்கி அடித்து ஆடுதுபார்
வானிலை மாற்றம் கவனி.
http://twitter.com/writerpara/status/2247945347

12. புற்றுக்கு பயந்து புகலிடம் பலதேடி
சுற்றித் திரியுமோ பாம்பு?
http://twitter.com/writerpara/status/2247896110

13. சூப்பரய்யா சுவைகூட்ட வந்துநின்றீர்
பாப்புனைய எத்தனைபேர் பார்!
http://twitter.com/writerpara/status/2247827258

14. மாவாவின் மகத்துவம் நீயறிய மாட்டாயோ
ஜாவாஸ்க்ரிப்ட் போல அது.
http://twitter.com/writerpara/status/2247790439

15. கேஸ்போட வள்ளுவன் திரும்பி வரமாட்டான்
லூஸ்லவிடு குறள்வெண்பாம் நூறு.
http://twitter.com/writerpara/status/2247707040

16. வெண்பொங்கல் தின்றாலும் வெறும்கஞ்சி யென்றாலும்
வெண்பாம் போட செரிக்கும்.
http://twitter.com/writerpara/status/2248445058

17. செய்திதான் நான் சொன்னேன் சரியாப் புரியலியா
கய்தே கஸ்மாலம் கத்தாதே – மெய்தான்னு
டெய்லிதந்தி பாத்து தெரிஞ்சிக்கோ
ஒயிலாக நாளை வரும்.
http://twitter.com/writerpara/status/2248484752

18. அடடே மீனாக்சும் ஆட்டத்தில் இங்குண்டா
தடையில்லை வாமகனே தமிழ்கைமா செய்திடவே
இருகை குறைகிறது இருக்கிறாய் நீயென்றால்
ஒருகை பார்த்திடுவோம் நாம்
https://twitter.com/writerpara/status/2233760880

19. வெத்துச்சண்டைகள் வேண்டாம் சோதரனே
பத்துபாம்போட்டுவிட்டுப் போகப்பார்
அத்தனையும்/முத்தென்பதல்ல முழித்திருத்தலேமுக்யம்
விட்டுவா வெத்துறக்கம்வீண்
https://twitter.com/writerpara/status/2233724729

20. தூக்கம் எனச்சொல்லி தப்பித்தார் கொத்தனார்
பாக்கிப் பணியென்று பாய்ந்தார் பெனாத்தல்
வெண்பாம் விளையாட்டில் இத்தனை உள்குத்தா
நண்பா நல்லால்லை பார்
https://twitter.com/writerpara/status/2233628395

21. சொக்கா எங்கேநீ சோர்ந்தோடிப் போகாதே
பக்காத் திருடர்கள் இங்கென்னை -அக்கக்காய்
கழட்டிப் போட்டு கவிநாசம் செய்விக்க
அழைத்து வந்ததினைப் பார்
https://twitter.com/writerpara/status/2233469912

22. முப்பது செக்கண்டில் முத்தெடுக்க யார்வருவார்
இப்போது மணிபத்து என்னகத்தில் – தப்பில்லை
தளையற்றுப் போனாலும் களைமிக்கதானாலும்
விலையற்ற வெண்பாமை வை.
https://twitter.com/writerpara/status/2233395204


வெங்கட்

1. அய்யா சொல்றீங்க அப்பால இன்னுமென்ன
கையில் அடிச்சிருந்த ஆப்பைப் புடுங்கிட்டு
எளுதுறேன் கூடவே கொத்தும் பெனாத்தலும்
நளுவாம சொக்கனும் வா
https://twitter.com/donion/status/2247683876

2. நடால் தபால் இவைகூட தபால்
படால் விடாய் கிடாய் – அடுக்கியே
அடாசு பாடலாம் ஆனால் பயனேது
கடாசு கச்சடா இதை
https://twitter.com/donion/status/2247483335

3. பாராவும் கூப்பிட்டார் பாவெழுத ட்விட்டருக்கு
வாராய் வெங்கிட்டா நீயென-வெளிக்கிட்டு
காப்பு எழுதநான் குந்தினால் கைபிடித்து
ஆப்புஅடிக்கிறதே வேலை
https://twitter.com/donion/status/2247312202

4. மாகாளி மாதா கெடாவெட்டு பிடாரி
வாகாக குந்தும் அய்யனார் – நீலி
சூலி மாரியாயி சப்ஜாடா எல்லாரும்
காலி வெண்பாம் கேட்டு
https://twitter.com/donion/status/2248368879

5. மாவா என்றே மடிச்சுக் கொடுத்தார்
காமா சோமா எனக்குந்த ஆவல
டக்கர் அடித்து தலைசுற்றி எல்லாம்
மக்கர் ஆவுதே மாமு
https://twitter.com/donion/status/2248162269

6. வெள்ளி விளக்கு வைத்தால் தவறாது
சொல்லி வைத்தாற்போல் சோப்பு – டிவியில்
கள்ளி உனக்கேதும் காதில் விழுமோடி
கிள்ளி இழுக்கனுமோ சொல்
https://twitter.com/donion/status/2248046596

7. சிந்தியில் வெண்பா கிடையாது சத்தியா
பந்தியில் பால்கோவா போட்டாலும் மார்வாடி
முந்தி விலைகேட்பார் காண்
https://twitter.com/donion/status/2247893420

8. கரண்டி பிடிப்பதில் கஷ்டமில்லை நண்பா
முரண்டு பிடிப்பதில்லை நம்சமையல் – கரண்டடுப்பில்
திரண்டு வரும்பாலை இறக்காது விட்டு
சுரண்டித் தேய்த்தல் சுமை
https://twitter.com/donion/status/2247822349


சத்யராஜ்குமார்

1. வெண்பாம் எழுதாரை வெறுப்பாவே பார்த்தொதுக்கும்
விபரீதம் தாங்குமா ட்விட்டர்? ஒரு பாவும்
அறியாத படுபாவி என் போன்றோர்
இனி தேடுவார் ஜண்டு பாம்
https://twitter.com/ksrk/status/2243649123

2. கத்தி கம்பு வீச்சருவா குண்டுமழை பொழிஞ்சதுல
எங்க பாரு நிலமெல்லாம் ரத்தம்.
அதை எழுதினவர் மறந்தா நீருமா
மறப்பீரு? பாம் போட்டா கிடைக்குமே உதை.
https://twitter.com/ksrk/status/2244997385


சத்யா

1. என்முறை எங்கென ஓடோடி வந்திடின் ,
வன்முறை வீசுவார் பாங்காய் -ஆங்கவன் ,
சிந்தினிலே சந்தம் சிதறாமல் கோர்த்தெடுத்து,
சிந்தையிலே மகிழந்தாலது பா.
https://twitter.com/msathia/status/2239856536

2. பண்போடு நடந்துகொள பாசமாய் அழைத்திட்டார்
நண்பரே எனவழைத்து நயமாயப் பாவடிக்க
பல்லைப் பறக்கடிக்க பகன்றார் இன்னொருவர்
வெள்ளியன்று பிடித்ததோ சனி.
https://twitter.com/msathia/status/2241408591

3. பொதுவிடத்தில் நைட்டியோ டுலாவும் முதுமகளிர்,
அதுகண்டு புலம்பும்நீ அருவருப்பாய் கைலிபனியன்
வேஷத்தில் போய்வரின் வீம்பாய் இரண்டுமே ,
பேஷனாய் மாறும் பார்
https://twitter.com/msathia/status/2245577919

4. வெண்பா வெழுதவே வெட்டிடும் டிவிட்டர்
வெண்பாம் எழுதிடின் பண்பாய் பார்க்கும்
திண்ணமாய் பகர்வேன் நான்.
https://twitter.com/msathia/status/2247766326

5. பாட்டெல்லாம் நாமெழுத பாபாவோ
டேக்காக டிவிட்டரினில் சுட்டெடுத்து மேலாக
போட்டரே சூப்பர் பதிவு.
https://twitter.com/msathia/status/2248296745

6. மாவான்னு தேடினா மாறாம பிங்(bing)னிலே
பாராவின் பேர்வருது பார்.
https://twitter.com/msathia/status/2248071365


ஸ்ரீதர் நாராயணா

1. வெண்பாம் என்னும் வடிவம் ஏற்பானதா
எண்பாம் என்று சொன்னால் தீவிரவாதியா
உண்டாம் சிறை தண்டனை இது
தேவையா காண்டாம் சிலருக்கு காண்
https://twitter.com/SridharNarayana/status/2233957906

2. பத்து பா எழுதி பாக்கனுமா
சொல்றார் கத்து வா என்று
கூப்பிட்டு அனுப்பினாலும் செத்து போ
என்று திட்டிவிட்டு தத்து தா மூளை
https://twitter.com/SridharNarayana/status/2233990248

3. சுள்ளி பொறுக்க போன சுப்பம்மாள்
கள்ளிக் காட்டில் உள்ளே கர்ப்பமானாள்
எள்ளி நகைக்காமல் நீயில்லை என்று
கிள்ளி சத்தியம் செய்
https://twitter.com/SridharNarayana/status/2234031800

4. நடால் போட்டால் ஆடும் கூட்டம்
மூட்டால் முடங்கி விட்டால் பெடரரை
பெட்டால் பெரிதாக்கி விட்டால் இன்று
போட்டி இட்டால் இவனே வெற்றி
https://twitter.com/SridharNarayana/status/2242598940

5. பாலா பெரியவர் பாராட்டி சொன்னார்
கோலா குடித்து குஷாலா உலாவி
கூலாக சொன்னார் கூடாது ஆங்கிலம்
நாலாம் வரியில் சொன்னேன் நன்றி
https://twitter.com/SridharNarayana/status/2244556491


மீனாக்ஸ்

1. தூக்கம் வராமல் வெண்பாம் இயற்றினால்
காக்கும் கடவுளுக்கும் பொறுக்காதே – வீக்கம்
வரும்படி தர்மஅடி வாங்குகின்ற‌ அள‌வுக்கு
விருப்ப‌ம் இல்லையே என‌க்கு
https://twitter.com/m_meenaks/status/2233842007

2. சாத்தானைப் போலொருவன் வந்துநிண்ணு தந்தானே
…தா எனத்துவங்கும் வசை
https://twitter.com/m_meenaks/status/2248300995

3. எலைட்என்று எமைச்சொல்லி இன்புற்று மகிழ்வதில்
டிலைட் என்ன உமக்கு நண்பரே தளைதட்டும்
வெண்பா ஒன்றிரண்டு எழுதுகிறேன் பரிவோடு
பண்பாக நடந்து கொள்ளும்
https://twitter.com/m_meenaks/status/2240474047

4. வருகவென பிரியாவை சிரம்தாழ்த்தி வரவேற்று
த‌ருக உம்வெண்பாமை என்றேன் – உருகாதா
ப‌டிப்பவ‌ர்கள் ம‌ன‌மெல்லாம் உம்க‌வியைக் க‌ண்டு
இடிம‌ழையாய் க‌விதை பொழி
https://twitter.com/m_meenaks/status/2240204183

5. ரெடியா ஆட்டத்துக்கு என்றழைக்கும் நண்பா
படிதாண்டி அலுவலகம் வந்தபின்னே
துடியாக‌ அதிலேதான் என்கவனம் என்செய்ய
வாழ்வதற்கு நிதியளிப்பது அதுவல்லவோ!
https://twitter.com/m_meenaks/status/2239941441

6. உருவத்தில் குண்டு என்றுதான் இதுவரை
பருவத்தில் என்னைப் பலர்சொல்வார் – புருவத்தை
உயர்த்தி வெடிகுண்டா, நானா என்று
அயர்ந்து போனேன் நான்
https://twitter.com/m_meenaks/status/2234108522

7. மீனாட்சி வந்தபின்பு சொக்கரும் வருவாரே 😉
தானாக நடக்கும் எல்லாம் – நானாக‌
அழைக்கவா, அல்லது பார்த்துவிட்டுப் போகட்டும்
பிழைப்பை எனவிட வா
https://twitter.com/m_meenaks/status/2234004848

8. நாலுவரியில் வெண்பாம் எழுதும் நால்வருமே
காலுமேல் காலுபோட்டு உட்கார்ந்து வாலுண்டு
எனக்காட்டித் துள்ளுகிறோம் போலும் இதற்காக‌
மெனக்கெட்டு கண்விழித்து நான்!
https://twitter.com/m_meenaks/status/2233975817

9. விதிவலியது என்றுநான் கண்டடைந்தேன் இன்று
மதியினால் வெல்லவா முடியும்
சதிகார‌ சகட்வீட்டர் வெண்பாம் விளையாடும்
வெளியில் முகம்காட்ட வந்தது தவறு
https://twitter.com/m_meenaks/status/2233917239

10. டீலா அல்லது நோ-டீலா எனக்கேட்கும்
பீலா நிகழ்ச்சியைப் பாரீர் – லாலா
கடையல்வா வைப்போல் அரைமில்லியன் டால‌ர்கள்
கிடைத்தவன் அள்ளிச்சென் றான்!
https://twitter.com/m_meenaks/status/2233709946

11. தளையெல்லாம் வேண்டாமே தடைசெய்ய மனுச்செய்வோம்
சுளைசுளையாய் எழுதுக‌வெண் பாம்
https://twitter.com/m_meenaks/status/2248344911

நாஞ்சில் நாடன் படித்ததிலே: பிடித்த தலை 10

In Books, Literature, Tamilnadu on ஏப்ரல் 7, 2009 at 2:31 பிப

  1. அப்பர் – தேவாரம்
  2. கம்பர் – இராமாயணம்
  3. திருமந்திரம்
  4. குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்
  5. முத்தொள்ளாயிரம்
  6. நகுலன் கவிதைகள்
  7. பிரமிள் கவிதைகள்
  8. சுந்தர ராமசாமி சிறுகதைகள்
  9. அசோகமித்திரன் சிறுகதைகள்
  10. அ மாதவன் கதைகள்

எ.பி.க. 10 – சுஜாதா (கற்றதும் பெற்றதும்)

In Literature, Magazines on பிப்ரவரி 21, 2009 at 6:13 முப

1. sujatha-katrathum-petrathum-tamil-kavithai-poems-litமுன்னாள் :: முகுந்த் நாகராஜ்

தினம் சமைக்கும்போது
இந்தத் தண்ணீரில்தான்
நீந்திச் சாதனைகள் செய்தோம்
என்று நினைத்ததுண்டா
என்ற கேள்விக்கு சிரித்தாள்
குடும்பத் தலைவி ஆகி
கொஞ்சம் குண்டாகவும் ஆகிவிட்ட
அந்த முன்னாள் நீச்சல் வீராங்கனை!

~oOo~

2. ச.முகுந்தன்

‘வேட்டுக் கோதினைப் போல நிறத்தவள்
வெட்கத்தில் ‘பரா’ லைற்றாய் ஒளிர்பவள்
றோட்டுச் சோதனைச் சாவடி போலவென்
இரவுத் தூக்கப் பயணம் தடுப்பவள்
காட்டிக் காட்டி முகத்தை மறைப்பதில்
கண்ட தீர்வுப் பொதியினைப் போன்றவள்
வீட்டைத் தேடிப் பிடித்து என்னிலை
எஃகுக் கம்பியே சொல்லிவா சீக்கிரம்.’

‘20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்’ :: இலங்கை பூபாலசிங்கம் புத்தக சாலையின் வெளியீடு

வேட்டுக் கோது & உபயோகமற்றுப்போன துப்பாக்கி ரவை; ‘பரா’ லைற்றாய் & எதிரிகளைத் தேடத் தற்காலிகமாக விண்ணில் ஏவப்படும் பிரகாசமான விளக்கு போல; தீர்வுப் பொதி & இருவருக்கு இடையிலான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ஒரு ஒப்பந்தம் அல்லது ஏற்பாடு

~oOo~

3. பூமா ஈஸ்வரமூர்த்தி

ஒருதரம் காதல்
என்னை மீட்டுத் தந்தது
ஒருதரம் புல்லாங்குழல்
என்னை மீட்டுத் தந்தது
ஒரு வண்ணத்துப்பூச்சியும்
என்னை மீட்டுத் தந்தது
நான்தான் அடிக்கடி
தொலைந்துவிடுகிறேன்!

~oOo~

4. ‘என் வீடு’ (தொகுப்பு: ‘யாருமற்ற நிழல்’) :: தேவதச்சன்

என் வீடு மிகச் சிறிய வீடு
ஆனாலும்,
வீடு திரும்ப விரும்புகிறேன்!

***

ஒவ்வொரு வீடும் நிரந்தரச்
சூரியனை
ஜன்னல் வழியே அழைக்கிறது
அதை கைக்குழந்தையைப் போல்
படுக்கவைத்துக் கொள்கிறது
தினமும் படியில் ஏறியதும்
பயங்கள் மறையும்
என் சிறிய வீட்டின் பின்கதவைத் திறந்து
பார்க்கிறேன்
வீட்டிற்கு அப்பால்
வேறு எதுவும் இல்லை!

~oOo~

5. ‘நதிக் காட்சி’ (தொகுப்பு: ‘பூமியை வாசிக்கும் சிறுமி’) :: சுகுமாரன்

கரையதுக்கிக்
கட்டப்பட்ட
அசையும் தோணிக்குள்
மிஞ்சிய மழை நீர்
அதில்
சிலிர்த்துக்கொண்டு
இருக்கிறது
நிலவு
பூமிக்கு ஒளி பொழிந்த
கருணையில்!

~oOo~

6. மார்கன்

பிளாட்பாரத்தில்
பலூன் விற்பவனுடன்
ஒட்டிக்கொண்டு
பாடப் புத்தகம்
படிக்கும் சிறுமி!

~oOo~

7. ‘அமர் – நிகழ்ச்சி நிரல்’ :: விக்ரமாதித்யன்

கையில் காசு இருந்தால்
டாஸ்மாக் போவான்
இல்லையென்றால் செய்யது பீடி
பிடித்துக்கொண்டிருப்பான்
தோன்றினால் மட்டும்
கவிதை எழுதுவான்!

~oOo~

8. வில்லக விரலினார் (குறுந்தொகை 370) – வில்லும் விரலும்

பொய்கை ஆம்பல் அணிநிறக் கொழுமுகை
வண்டு வாய்திறக்கும் தண்துறை ஊரனோடு
இருப்பின் இருமருங்கினமே கிடப்பின்
வில்லக விரலின் பொருந்தி அவன்
நல்லகம் சேரின் ஒருமருங்கினமே

(பொய்கையில் ஆம்பல் மலர்மொட்டுகளை வண்டுகள் திறக்கும் துறையூர்க்காரனோடு உட்கார்ந்திருக்கும்போது இருவராக இருப்போம். படுத்துக்கொண்டால் வில்லைப் பிடித்த விரல்களைப் போல அவன் உடலைக் கட்டிக்கொண்டு ஒருவராவோம்.)

~oOo~

9. ஒற்றைச் சாட்சி (தொகுப்பு: அவளை மொழிபெயர்த்தல்) :: சுகிர்தராணி

சொல்லாமல் விடப்பட்ட காதலை
மரக்கன்று ஒன்றை நடுவதன் மூலம்
சொல்லிவிட முடியாதுதான் என்றாலும்
இதுநாள் வரை நீருற்றிக் காத்துவந்த
வாகைமரம் பூத்து உதிர்க்கும்
வெளிறிய பூக்களின் நெடி
உன்னை நோக்கி நீள
ஏதாவது விருட்சத்தின் அடியில்
நீயும் நின்றிருக்கலாம்
நிராகரிப்பின் ஒற்றை சாட்சியாய்!