Posts Tagged ‘கதை’
Authors, ஆக்கம், ஆசிரியர், இணையம், இலக்கியம், எடிட்டர், எழுத்தாளர், கதை, சிறு பத்திரிகை, சிறுகதை, படைப்பு, பட்டியல், புனைவு, வலை, Editor, Internet, Lit, Literature, little magazines, Magazines, Net, Online, Read, Small Magz, smallzines, Web, write, Writers
In Literature, Magazines, Tamilnadu on நவம்பர் 8, 2020 at 4:08 முப
அட்டைப்படம், கதை, சஞ்சிகை, சிறுகதை, சிறுபத்திரிகை, சிறுபத்திரிகைகள், நாவல், பத்திரிக்கை, மாற்றுவெளி, முகப்பு, Maatruveli
In Literature, Magazines, Tamilnadu on ஜூலை 11, 2014 at 2:28 பிப
ஃபேஸ்புக்கில் போகன் எழுதியது:
மாற்றுவெளி கோலின் மக்கன்சியைப் பற்றிய ஒரு சிறப்பிதழைக் கொண்டு வந்துள்ளது. மிக விஷய பூர்வமான கட்டுரைகளைத் தாங்கிய இதழ். ராணுவ அதிகாரியாக பணிபுரிந்துகொண்டே காலின் மக்கன்சி பக்கவாட்டில் செய்த காரியங்கள் மிக முக்கியமானவை. அழிந்து போகும் நிலையிலிருந்த ஓலைச் சுவடிகளைச் சேகரித்தார். வம்ச வரலாறுகளைப் பதிவு செய்தார்.கல்வெட்டுகளைப் படி எடுத்தார். வாய்மொழிக் கதைகளை பதிவு செய்தார். அவை மட்டுமல்ல கோவில்களை மனிதர்களை என்று அந்தக் காலத்தை ஓவியங்களில் பதிவு செய்ய முயன்றார். இன்றைக்கும் அவரது சேகரம் முழுக்க ஆராயப்படாமல் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் தேங்கிக் கிடக்கிறது
கால்டுவெல்லுக்கு முன்பே தென்னிந்திய அல்லது திராவிட வரலாறு வட இந்திய வரலாற்றிலிருந்து தனித்துவம் மிக்கது சுயேச்சையானது தமிழ் மொழி சமஸ்கிருதத்தில் இருந்து முளைத்ததல்ல என்ற கருத்தியலுக்கு அழுத்தமான துவக்கத்தை இவரும் எல்லிசும் தான் விதைத்தார்கள்.
Anadha Vikadan, Authors, AV, ஆனந்த விகடன், இலக்கியம், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள், கதை, கவிஞர்கள், சிந்தனையாளர்கள், நட்சத்திரங்கள், நாஞ்சில் நாடன், நாவல், புகழ், புனைவு, விகடன், Columnists, Faces, Famous, Fiction, Names, Nanjil Nadan, People, Poets, Shorts, Stars, Tamil, Vikatan, Writers
In Books, Literature, Tamilnadu on ஜூன் 6, 2014 at 7:39 பிப
”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?”
இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன்.
- சயந்தன்
- தமிழ்நதி
- இளங்கோ
- குமாரசெல்வா
- வா.மு.கோமு
- மு.ஹரிகிருஷ்ணன்
- ஜே.பி.சாணக்யா
- கே.என்.செந்தில்
- எஸ்.செந்தில்குமார்
- பா.திருச்செந்தாழை
- என்.ஸ்ரீராம்
- தூரன் குணா
- சந்திரா
- இளஞ்சேரல்
- அ.வெண்ணிலா
- லக்ஷ்மி சரவணக்குமார்
- கட்டுரைகள் — மீனா
- தி.பரமேசுவரி,
- ச.விசயலட்சுமி
- கவிஞர்களில் உமா மகேஸ்வரி
- குட்டி ரேவதி
- லீனா மணிமேகலை
- சுகிர்தராணி
- சக்தி ஜோதி
- சாம்ராஜ்
- லிபி ஆரண்யா
- இசை
- இளங்கோ கிருஷ்ணன்

இரா முருகன், இராமு, எஸ் ராமகிருஷ்ணன், கதை, கநாசு, சிறந்த, சிவசங்கரி, நாவல், நூலகம், படிப்பு, பட்டியல், பா ராகவன், பாரா, Best, Collections, Ess Ramakrishnan, EssRaa, Fiction, Library, Lists, Read, SRaa, Story
In Books, Business on ஜனவரி 7, 2014 at 4:14 முப
1. பட்டியல் போடுவதில் தமிழுக்கு ஓரளவு நல்ல பாரம்பரியம் இருக்கிறது. க.நா.சு. தொடங்கி வைத்தார். சமீப காலத்திற்கேற்ப அதை இரா. முருகன் மாற்றினார். இந்தப் பட்டியல்களில் உள்ள எழுத்தாளர்களை வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் கதைகளை ஆங்காங்கே மாற்றிக் கொள்ளுங்கள். இது முதல் படி.
2. அடுத்த படியில் உங்கள் நண்பர்களை உள்ளேக் கொணர வேண்டும். அப்பொழுதுதான் “உங்களின் சிறந்த கதை”க்கு தனித்துவம் கிடைக்கும். உதாரணத்திற்கு அருண் எழுதிய வக்ர துண்டம் மகா காயம் போன்ற அதிகம் படிக்காத ஆனால் நம்பிக்கையூட்டும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை சேர்க்க வேண்டும்.
3. ஆம்னிபஸ், அழியாச் சுடர்கள் போன்ற புத்தகமும் புனைவும் சார்ந்த இடங்களை படிக்க வேண்டாம். அவர்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பெயர்களை மட்டும் உருவினால் போதுமானது. இப்பொழுது உங்கள் பட்டியல் கிட்டத்தட்ட தயார்.
4. பட்டியல் மட்டும் இருந்தால் போதாது. அதற்கு விளம்பரம் வேண்டும். அராத்து முறையில் எதிர்மறை சந்தையாக்கத்தில் விருப்பம் என்றால் லக்கிலுக்கை தொடர்பு கொள்ளலாம். இல்லையென்றால் டிஸ்கவரி பேலஸ் வேடியப்பனைக் கேட்கலாம்.
5. நான் கணினியில் நிரலி எழுதுபவன். நான் எழுதும் நிரலியை மைக்ரோசாஃப்ட் கொடுக்கும் எடுத்துக்காட்டுகளின் மூலமாகவோ, ஸ்டாக் ஓவர்ஃப்ளோ போன்ற விடையளிக்கும் வலையகங்கள் மூலமாகவோ கண்ட்ரோல்+சி, கண்ட்ரோல்+வி வகையில் எழுதுவேன். அதே போல் நீங்களும் இப்பொழுது உங்கள் தேர்வுகளை எடுத்தாளவும்.
6. ஒழுங்காக பக்கம் பிரித்து, தலைப்பாகத்தில் உங்கள் பெயரும், வால் பாகத்தில் உங்களின் பதிவு முகவரியும், நடுநடுவே காப்புரிமைக் கையெழுத்தும் போடுங்கள். ஆங்காங்கே, உங்கள் ரசனைக்கேற்ப படங்களை கூகுள் படத்தேடல் மூலமாகவோ, ஃப்ளிக்கர் மூலமாகவோ திருடிப் போடுங்கள். இப்பொழுது, இதை பிடிஎஃப் ஆக்கி விடலாம்.
7. நான் கணினில் நிரலி எழுதினாலும், அதை சந்தையில் சரி பார்த்து விற்பவர் வேறொருவர். அது போல் பதிப்பகம் மூலமாக உங்கள் தொகுப்பைக் கொணரலாம். சொந்தமாக அச்சிடுவது ஒரு வழி. அது ஆபத்தானது. இணையத்தில் வேறு உலாவுபவர் என்பதால் கூகுள்+/ஃபேஸ்புக் போன்ற சமூகக் கூட்டங்களில் தலையைக் காட்ட முடியாது. இதுவோ, வாசகரே தயாரித்த புத்தகம். எனவே, மூன்றாம் மனிதர் மூலமே பதிப்பிக்கவும்.
8. இப்பொழுது சர்ச்சை உண்டாக்கும் தருணம். நூறு கதைகளில் இடம்பெறாதவை ஏன் என்று பதிவிடலாம். அசல் கதை எழுதியவர்களுக்கு கார்டு கூட போடமல் இராயல்டி வழங்காமல் “நெஞ்சில் நிற்கும் நெடுங்கதைகள்” வெளியாகின்றன என்னும் உண்மையை உலவ விடலாம். ரஜினி இதில் இருந்து குட்டிக்கதையை துக்ளக் மீட்டிங்கில் சொல்லப் போகிறார் எனலாம்.
9. ஆங்கிலத்தில் வருடாவருடம் இந்த மாதிரி தொகுப்புகள் வருகின்றன. வெளியான பத்திரிகையில் அனுமதி பெறுகிறார்கள். எழுதியவரிடம் காசு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக இளரத்தங்களை, அதிகம் அறிமுகமாகாத ஆனால் உருப்படியாக எழுதுபவர்களை அறிமுகம் செய்கிறார்கள். அப்படி எல்லாம் உருப்படியாக செய்து விட வேண்டாம். பரபரப்பு கிடைக்காது.
Advices, arts, அட்வைஸ், அதர்வா, ஆலோசனை, கதை, கோடம்பாக்கம், சினிமா, தன்ஷிகா, திரைக்கதை, திரைப்படம், பரதேசி, பாலா, வசனம், விமர்சனம், வேதிகா, Bala, Cinema, Creative, Fiction, Films, Imagination, Logic, Movies, Paradesi, Questions, Reviewers, reviews, Story, Suggestions
In Movies, Tamilnadu on மார்ச் 23, 2013 at 4:02 முப
பரதேசி திரைப்படம் எடுத்த இயக்குநர் பாலா, இப்படி செய்திருக்க வேண்டும், அப்படி உருவாக்கியிருக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளும் ஆலோசனைகளும் இணையத்தில் வெளியாகிறது. நானும் உள்ளேன் அய்யா…
- இடைவேளைக்குப் பிந்திய இரண்டாவது பகுதியில் குத்தாட்டம் இல்லாதது மிகப் பெரிய குறை. ’காளை’ படத்தில் குட்டிப் பிசாசே என்று குத்தாட்டம் போட்ட மாதிரி அதர்வா கதாபாத்திரத்தின் கற்பனையோடு வேதிகாவின் கிளப் டான்ஸ் வைத்திருக்க வேண்டும்.
- தன்னுடைய நிறுவனத்திற்கு ‘B Studios’ என்று ஆங்கிலத்தில் வைத்ததற்கு பதிலாக ‘பா கலைக்கூடம்’ என தமிழ்ப்பறோடு பெயர் சூட்டியிருக்க வேண்டும்.
- இரு பெண்களுக்கு நடுவில் சண்டை வருவது போல் காட்சி அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதுவும் தேய்வழக்காக மணப்பெண்ணின் அம்மாவிற்கும் மாப்பிள்ளையின் பாட்டிக்கும் பிணக்கு வருமாறு அமைத்திருப்பதற்கு பதில் ஆங்கிலேயரை அடித்துத் துவைப்பது போல் காட்சி வைத்து, பார்வையாளருக்கு திருப்தி கொடுத்திருக்க வேண்டும்.
- தமிழகத்தில் 1939ல் ரொட்டி இருந்திருக்க வாய்ப்பேயில்லை. பொறையும் பன்னும் மட்டுமே கிடைக்கும் நாயர் கடை அமைத்திருக்க வேண்டும்.
- தெலுங்குப் படத்தில் இரண்டு ஹீரோயின் சர்வ சகஜம். அது போல் தன்ஷிகாவையும் அதர்வா உடன் சேர்த்து நினைக்க வைத்திருக்க வேண்டும்.
- படத்தின் துவக்கத்தில் டைட்டில் வருகிறது. இப்பொழுதெல்லாம் சடாரென்று படத்தை ஆரம்பிப்பதுதானே வழக்கம்?! கட்டாங்கடைசியில் மட்டுமே தலைப்பும் இன்ன பிற எழுத்துகளும் வந்திருக்க வேண்டும்.
- முன் பின்னாக காட்சியைக் கலைத்துப் போட்டு திரைக்கதை பின்னுவது இன்றைய சினிமா ஃபேஷன். அதன்படி, கொஞ்சம் தேயிலைத் தோட்டம், கொஞ்சம் மூங்கில் தோட்டம், கொஞ்சம் மாந்தோப்பு எல்லாம் அறுவடை செய்திருக்க வேண்டும்.
- தேயிலையை விட காபி இன்னும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. காபியை விட புகையிலை இன்னும் நோய் தரக் கூடியது. புகையிலையை விட கஞ்சா இன்னும் அடிமையாக்கி அழிக்கும் ஆபத்து நிறைந்தது. எனவே, அவற்றின் அட்டை போல் உறிஞ்சும் தன்மைகளைத்தான் திரைக்கதை ஆக்கியிருக்க வேண்டும்.
- ஓட்டுச் சுவடிகளில் எழுத்தே தெரியாமல் காட்சியாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன். அந்தக் கால எழுத்தாணிகளைக் கொண்டு ஓலைச்சுவடி எழுத்துகளைத் தெளிவாக திரையில் காண்பித்திருக்க வேண்டும்.
- இந்தியில் ஷாரூக் கான் நடித்த படமான ‘பர்தேஸ்’ படம் என்று தமிழரை ஏமாற்றும் விதமான தலைப்பை மாற்ற வேண்டும்.
நிறைவேற்றுவதற்கு பெட்டிஷன் போட்டிருக்கிறேன்.
arts, Authors, ஆக்கம், இலக்கியம், இலங்கை, ஈழம், எழுத்தாளர், கண்ணன், கதை, கன்னியாகுமரி, காலச்சுவடு, சிறுகதை, சுரா, தமிழ், தமிழ்நாடு, நாகர்கோவில், படைப்பாளி, பட்டியல், புத்தகம், புனைவு, Fiction, India, Kaalachuvadu, Kalachuvadu, Lit, Magazines, Magz, Media, MSM, Pop, Popular, Shorts, Southern, Sri Lanka, Story, Tamil, Tamil Nadu, Tamil people, Uyirmmai, Writers
In Books, Literature, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 7, 2012 at 8:48 பிப
கடந்த ஆறு ஆண்டுகளில் (2007 துவக்கம் முதல்) காலச்சுவடு பத்திரிகையில் சிறுகதை எழுதியவர்கள் யார்?
குறிப்புகள்:
- ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
- பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது
தொடர்புள்ள பதிவு: 2012 Anandha Vikadan Short Story Writers: Tamil Fiction Authors List
- அ. முரளி
- அ.முத்துலிங்கம்
- அசோகமித்திரன்
- அரவிந்தன்
- இ. ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன்
- இடலாக்குடி ஹஸன்
- இராம. முத்துகணேசன்
- எம். கே. குமார்
- எம். கோபாலகிருஷ்ணன்
- எஸ். செந்தில்குமார்
- குமாரசெல்வா
- குலசேகரன்
- கே.என். செந்தில்
- கோகுலக்கண்ணன்
- சச்சிதானந்தன் சுகிர்தராஜா
- சசி
- சந்திரா
- சந்ரு
- சிறீநான். மணிகண்டன்
- சுந்தர ராமசாமி
- சுரேஷ்குமார இந்திரஜித்
- தமிழில்: அரவிந்தன் — க்லேர் மார்கன்
- தமிழில்: ஆனந்தராஜ் — ஃப்ராங்க் பாவ்லாஃப்
- தமிழில்: எம். ரிஷான் ஷெரீப் — அஸீஸ் நேஸின்
- தமிழில்: குளச்சல் மு. யூசுப் — மலையாள மூலம்: மதுபால்
- தமிழில்: கே. நர்மதா — ஓரான் பாமுக்
- தமிழில்: கே. முரளிதரன் — சினுவா அச்சிபி
- தமிழில்: சுகுமாரன் — அய்ஃபர் டுன்ஷ்
- தமிழில்: சுகுமாரன் — காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
- தமிழில்: சுகுமாரன் — சி. அய்யப்பன்
- தமிழில்: சுகுமாரன் — டேவிட் அல்பாஹரி
- தமிழில்: சுகுமாரன் — மிரோஸ்லாவ் பென்கோவ்
- தமிழில்: சொ. பிரபாகரன் — சொஹராப் ஹுசேன்
- தமிழில்: நஞ்சுண்டன் — கன்னட மூலம்: சுமங்கலா
- தமிழில்: புவனா நடராஜன் — விபூதிபூஷண் பந்தோபாத்யாய
- தமிழில்: ஜி. குப்புசாமி — ரேமண்ட் கார்வர்
- தி. மயூரன்
- தூரன் குணா
- தேவிபாரதி
- ந. முத்துசாமி
- நாகரத்தினம் கிருஷ்ணா
- பா. திருச்செந்தாழை
- பா. வெங்கடேசன்
- பெருமாள்முருகன்
- மண்குதிரை
- மாதங்கி
- யுவன் சந்திரசேகர்
- ரஞ்சகுமார்
- லதா
- வாஸந்தி
- வைக்கம் முகம்மது பஷீர் – –தமிழில்: குளச்சல் மு. யூசுப்
- வைக்கம் முகம்மது பஷீர் — தமிழில்: சுகுமாரன்
- ஜே.பி. சாணக்யா
- ஸ்ரீரஞ்சனி
Anandha Vikatan, Authors, ஆக்கம், ஆனந்த விகடன், ஆவி, எழுத்தாளர், கதை, சிறுகதை, தமிழ், படைப்பாளி, பட்டியல், புத்தகம், புனைவு, விகடன், Fiction, India, Shorts, Sri Lanka, Story, Tamil, Tamil Nadu, Tamil people, Vikadan, Writers
In Literature, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 7, 2012 at 8:06 பிப
கடந்த ஒரு வருடத்தில் ஆனந்த விகடனில் சிறுகதை எழுதியவர்கள் யார்?
குறிப்புகள்:
- நான் விகடன் சந்தாதாரர் இல்லை. எனவே, சில விடுபடல் இருக்கலாம்
- ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
- பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது
- அ.முத்துலிங்கம்
- அசோகமித்திரன்
- இமையம்
- இரா.சரவணன்
- எஸ் ராமகிருஷ்ணன்
- க.சீ.சிவகுமார்
- கவிதா சொர்ணவல்லி
- கவிதாபாரதி
- கவின் மலர்
- கி ராஜநாராயணன்
- கிருஷ்ணா டாவின்சி
- சதத் ஹசன் மண்டோ
- சுகா
- சுகுணா திவாகர்
- சுதேசமித்திரன்
- சொக்கன்
- தமிழ்மகன்
- தமிழருவி மணியன்
- தமயந்தி
- பட்டுக் கோட்டை பிரபாகர்
- பாவண்ணன்
- பாஸ்கர்சக்தி
- பிரபஞ்சன்
- பெருமாள் முருகன்
- மேலாண்மை பொன்னுசாமி
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- வாமு கோமு
- ஷங்கர் பாபு
வீட்டுப்பாடம்:
- தவறவிட்டவர்களை சுட்டவும்
- மொழிபெயர்த்தவர்களை சொல்லவும்
- யார் யார், எவர் எவருக்கு நண்பர்கள் என்றும் குறிக்கலாம்
- விகடன் சிறுகதை லிஸ்டில் இல்லாதவர்களில் ஒரு டஜன்
- ஜெயமோகன்
- அழகிய பெரியவன்
- கோணங்கி
- பா ராகவன்
- கீரனூர் ஜாகிர் ராஜா
- விமலாதித்த மாமல்லன்
- மனுஷ்யபுத்திரன்
- ஆபிதின்
- கண்மணி குணசேகரன்
- பிரான்சிஸ் கிருபா
- நாஞ்சில் நாடன்
- இரா முருகன்
Academy, Authors, அகாதெமி, இலக்கியம், எழுத்தாளர், கதை, கவிஞர், சாகித்திய அகாடெமி, சாஹித்ய அகாடமி, தமிழ், நாவல், பிரபலம், புகழ், புனைவு, புலவர், வரலாறு, வாழ்க்கை, Books, Famous, Fiction, Icons, India, Life, Notable, Novels, Poets, Publications, Sahitya Akademi, Tamil language, Tamil Nadu, Tamils, Writers
In Lists, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 17, 2012 at 8:27 பிப
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறைந்த இலக்கிய அறிஞர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை வெளியிட்டுள்ளோம்.
- வாணிதாசன்
- முடியரசன்
- ஜெகசிற்பியன்
- தமிழவேள் உமாமகேசுவரனார்
- கா. அப்துல்கபூர்
- தி.கோ.சீனிவாசன்
- கா. சுப்பிரமணிய பிள்ளை
- கெ.என். சிவராஜ பிள்ளை
- உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை
- ஆனந்தரங்கப்பிள்ளை
- புலவர் குழந்தை
- பா. வே. மாணிக்க நாயக்கர்
- ஆர். சண்முகசுந்தரம்
- சி. இலக்குவனார்
- கா. அப்பாத்துரை
- மா. இராசமாணிக்கனார்
- அ.சிதம்பரநாதச் செட்டியார்
- வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்
- டி.எஸ். சொக்கலிங்கம்
- சதாசிவ பண்டாரத்தார்
- சே.ப.நரசிம்மலு நாயுடு
- வ.சுப. மாணிக்கம் (தமிழ் அறிஞர்)
- த.நா. குமாரஸ்வாமி (தமிழ் கதாசிரியர்)
- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
- ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
- பி.ஸ்ரீ. ஆச்சார்யா (பி.ஸ்ரீ) (தமிழ் அறிஞர்)
- கி.வா. ஜகந்நாதன் (தமிழ் கதாசிரியர்)
- வெ. சாமிநாத சர்மா (தமிழ் கதாசிரியர்)
- தொல்காப்பியர்
- ஒளவையார்
- கம்பன் (தமிழ் மகாகவி)
- மாணிக்கவாசகர் (தமிழ் சைவ கவிஞானி)
- பெரியாழ்வார் (ஆழ்வார்களில் ஒருவர்)
- புதுமைப்பித்தன் (சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
- ரசிகமணி டி.கே. சிதம்பநாத முதலியார் (சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்)
- வேதநாயகம் பிள்ளை
- கு.பா. ராஜகோபாலன் (தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
- ஆண்டாள் (பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்)
- மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
- மறைமலை அடிகள்
- திரு.வி.க. (தமிழ் அறிஞர்)
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தமிழ் பாடலாசிரியர்)
- அ. மாதவையா
- ச.து.சு. யோகியார் (தமிழ்க் கவிஞர்)
- நாவலர் சோமசுந்தர பாரதியார் (தமிழ் ஆராய்ச்சியாளர்)
- நா. பார்த்தசாரதி (தமிழ்க் கதாசிரியர்)
- க.நா. சுப்ரமண்யம் (நாவலாசிரியர்.)
- ம.ப. பெரியசாமித் தூரன்
- அகிலன் (சிறந்த நாவலாசிரியர்)
- வ.வே. சு. ஐயர் (தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி)
- நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (காந்தியக் கவிஞர்)
- பாரதியார்
- தமிழ்த் தாத்தா (உ.வே. சாமிநாதஐயர்)
- அறிஞர் அண்ணா
- கல்கி
- மு.வ. (மு.வரதராசனார்) ( தமிழ்ப் பேரறிஞர்)
- விந்தன்
- நா.வானமாமலை
- சோமலெ
- உமறுப்புலவர் (இஸ்லாமியக் கம்பர் எனப் புகழப்படுவர்.)
- செய்குத் தம்பிப் பாவலர்
- வை.மு.கோதைநாயகி அம்மாள்
- தேவநேயப் பாவாணர்
- ந. பிச்சமூர்த்தி
- ஜீவ நாரண துரைக்கண்ணன்
- உடுமலை நாராயண கவி
- கோபாலகிருஷ்ண பாரதி
- குலசேகராழ்வார்
- தி. ஜானகிராமன்
- திரிகூடராசப்பக்கவிராயர்
- வ.உ. சிதம்பரனார்
- மா.பொ.சிவஞானம்
- பி. எஸ்.ராமையா
- பெரியார் ஈ.வெ.ரா
- பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
- திருஞானசம்பந்தர்
- பரஞ்சோதி முனிவர்
- கு.அழகிரிசாமி
- க. அயோத்திதாச பண்டிதர்
- அழ. வள்ளியப்பா
- அருணகிரிநாதர்
- குமரகுருபரர்
- குன்றக்குடி அடிகளார்
- தேசிக விநாயகம் பிள்ளை
- காரைக்காலம்மையார்
Authors, இலக்கியம், எழுத்தாளர், கதை, காமெடி, சாதனை, ஜோக், நகைச்சுவை, நக்கல், நாவல், பகிடி, பட்டியல், பத்தி, பத்திரிகை, பரிசு, புகழ், புனைவு, பெயர், விருது, Columnists, Famous, Icons, Lit, Literature, Magazines, Magz, People, Tamils, Writers
In Lists, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 10, 2012 at 6:50 பிப
பல இலக்கியங்களை நாம் அறிந்திருக்கிறோம். நாடகத்திற்கு ஷேக்ஸ்பியர், இராமாயணத்திற்கு கம்பர், சிலேடைக்கு காளமேகப் புலவர், எழுத்திற்காக வின்ஸ்டன் சர்ச்சில் என்று அடுக்கலாம்.
அப்படி சமகாலத் தமிழில் பட்டயம் தர சிலர் கிளம்பி கொடுத்த பட்டியல் இது.
உரிமை துறப்பு: இந்தப் பட்டங்கள் அனைத்துமே நான் கொடுத்து அல்ல! சிலரால் பலருக்கு அறிவிக்கப்பட்டது என்றறிக!!
1. டூரிஸ்ட் இலக்கியவாதி – தமிழ்நதி
2. அரசியல் இலக்கியவாதி – இரவிக்குமார்
3. நோபல் இலக்கியவாதி – வைரமுத்து
4. மடல் இலக்கியவாதி – கருணாநிதி
5. நடிகர் இலக்கியவாதி – பா விஜய்
6. கவிஞர் இலக்கியவாதி – கமல்ஹாசன்
7. இ.ஆ.ப. இலக்கியவாதி – வெ. இறையன்பு
8. இ.கா.ப. இலக்கியவாதி – ஜி. திலகவதி
9. ஆயிரம் பக்க இலக்கியவாதி – சு. வெங்கடேசன்
10. அன்னியநிதி இலக்கியவாதி – எஸ்.வி.ராஜதுரை
11. பிரமிள் இலக்கியவாதி – விமலாதித்த மாமல்லன்
12. சுந்தர ராமசாமி இலக்கியவாதி – கண்ணன்
13. சுஜாதா இலக்கியவாதி – இரா முருகன்
14. திராவிட இலக்கியவாதி – தமிழ்மகன்
15. வைணவ இலக்கியவாதி – இந்திரா பார்த்தசாரதி
16. பேட்டி இலக்கியவாதி – அசோகமித்திரன்
17. ஆன்மிக இலக்கியவாதி – பாலகுமாரன்
18. டவுன்லோட் இலக்கியவாதி – சாரு நிவேதிதா
19. இந்தியா இலக்கியவாதி – எஸ் ராமகிருஷ்ணன்
20. இந்துத்துவ இலக்கியவாதி – ஜெயமோகன்
21. அரட்டை இலக்கியவாதி – மனுஷ்யபுத்திரன்
அகாதெமி, அரவான், இலக்கியம், எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கதை, கற்பனை, கள்ளர், கள்வன், கள்வர், காவல், காவல் கோட்டம், கோணங்கி, சரித்திரம், சாகித்திய அகாடெமி, சாஹித்ய அகாடமி, சு. வெங்கடேசன், தமிழ், தமிழ்செல்வன், தமிழ்ச்செல்வன், திருடர், திருட்டு, நாயக்கர், நாவல், மதுரை, ராமகிருஷ்ணன், வரலாறு, விமர்சனம், வெங்கடேசன், வேல.ராமமூர்த்தி, EssRaa, Fiction, History, Kaaval Kottam, Kallar, Madurai, Naicker, Nayakker, Novels, Ramakrishnan, Ramkrishnan, SRaa, Su Venkatesan, Venkateshan
In Books, Literature on ஜூலை 5, 2012 at 9:18 பிப
நன்றி: காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் | பகுதி இரண்டு
1. வாசிப்பு சுவாரசியமோ கதைக்குள் புகவோ முடியாத நாவல்.
2. வெறும் ஒப்பனை மட்டுமே நிறைந்துள்ள புனைவு. கதாபாத்திரங்களுக்கு அழுத்தம் தந்து குணச்சித்திரங்கள் மனதில் நிலைக்குமாறு வடிவமைக்கவில்லை.
3. ஒரே புத்தகமாக இருந்தாலும் முதல் பகுதிக்கும், இரண்டாம் பகுதிக்கும் எந்தத் தொடர்ச்சியும் கிடைக்கவில்லை. கூடு விட்டு கூடு பாய்கிறது.
4. டாக்டர் ஆனந்த் பாண்டியன் என்ற தமிழகத்தை சேர்ந்த மானுடவியல் பேராசிரியர். கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். கள்ளர் பற்றிய ஆய்வினை தொடர்ந்து பல காலமாக மேற்கொண்டு வருகிறார். Securing the Rural Citizen: The Anti-Kallar Movement of 1896, “An Ode to an Engineer” in Waterlines: The Penguin Anthology of River Writing in India. Race, Nature, and the Politics of Difference போன்றவை கள்ளர் வாழ்வியல் ஆய்வில் மிக முக்கியமானவை.
வெங்கடேசனின் கள்ளர் விவரணைகளில் ஆனந்த் பாண்டியனின் பல ஆண்டுகால உழைப்பும் தனித்த பார்வைகளும் எவ்விதமாக நன்றி தெரிவித்தலும் இன்றி இந்த நாவலில் பல இடங்களில் அப்படியே பயன்படுத்தபட்டிருக்கிறது.
5. லூயிஸ் டுமாண்ட் என்ற பிரெஞ்சு மானுடவியல் ஆய்வாளர் (Louis Dumont – A south Indian subcaste, Social organization and religion of the Pramalai Kallar 1986:OUP) பிரன்மலை கள்ளர்களை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து எழுதிய நூலில் இருந்தும் பல தகவல்களை நாவலுக்காக எடுத்திருக்கிறார். அதற்கும் சிறு நன்றி கூட கிடையாது.
6. புத்தம்புதுசும் இல்லை; முதல் படைப்பு என்னும் புதிய பார்வையும் இல்லை: குற்றப்பரம்பரை எனப்படும் கள்ளர் பற்றி முதன்முதலாக எழுதப்பட்டதா என்றால் அதுவும் கிடையாது. கோணங்கி, தமிழ்செல்வன், வேல.ராமமூர்த்தி, எஸ் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் எழுதிய கதைக் களம்.
7. மாலிக் கபூர் போன்ற பள்ளிக்கூட புத்தக நாயகர்களுக்கு தேவையான கற்பனை விவரிப்பும் கொடுக்கவில்லை; பள்ளியின் பாடப் புத்தக சித்தரிப்பை எள்ளளவும் தாண்டியும் செல்லவில்லை. ஒன்று வரலாற்று பாடப் புத்தகத்தில் சொன்னதை அப்படியே வழிமொழிந்தால், அதில் வாசகரை ஒன்றச் செய்யும் விலாவாரியான ரசனை மிகுந்த பரபரப்பான காட்சிப்புலம் கண் முன்னே தோன்ற வைக்க வேண்டும்.
இல்லை… நம்மால் சுருக்கமாகத்தான் கற்பனை செய்ய இயலும் என்றால், அன்றைய வரலாற்று நாயகர்களின் துணை இயக்குநர்களையும், இணை கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து, சரித்திரத்தின் நிர்ப்பந்தங்களை வெளிச்சத்திற்கு வரவழைக்க வேண்டும்.
கற்பனையும் கிட்டவில்லை; உள்ளொளியும் கொடுக்கவில்லை.
8. பாளையப்பட்டு வம்சாவழி வரலாறு என்று கீழைத்தேய சுவடி வெளியீடுகளின் இரண்டு நூல்கள் உள்ளன. அந்த நூலில் உள்ள தகவல்கள் மற்றும் பத்திகள் அத்தியாயத்திற்கு ஏற்றார் போல இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
9.
அ) Edgar Thurston, ” The castes and Tribes of south India ,
ஆ) The Madura Country -A manual – J..H..Nelson .Asian Educational Services New Delhi, Madras.
இ) History Of The Nayaks Of Madura- R Sathianathaier,
உ) The History of Tinnevelly by Rev R Caldwell,
ஊ) History of Military transactions – R Orme
இந்த ஐந்திலும் உள்ள தகவல்கள் அப்படி அப்படியே காவல் கோட்டம் நாவலில் பிரதியெடுக்கபட்டிருக்கின்றன.
கொசுறு:
கோணங்கியின் மதுரைக்கு வந்த ஒப்பனைகாரன் சிறுகதையிலும் மதுரகவி பாஸ்கர தாஸ் நாட்குறிப்பிலும் மதுரையை பற்றிய எத்தனையோ செய்திகள் உள்ளன. சிங்காரமும், நாகராஜனும் கூட மதுரையின் தொல் நினைவுகளை சரியான இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தொ.பரமசிவத்தின் அழகர் கோவில் ஒரு ஆய்வு வெளிப்படுத்திய கடந்த காலச்சித்திரத்திற்கு இணையாக இதில் ஒருபக்கம் கூட இல்லை.
10. இவ்வளவு புத்தகங்களில் இருந்து சுடப்பட்டிருக்கிறதே… எதோ ஆய்வாளர், கியூரேட்டர் போல் தகவல் தொகுப்பாளராக செயல்பட்டிருக்கிறாரா?
அதுவும் இல்லை. திருமலை நாயக்கர் மகாலை கட்டினவன் இத்தாலியன் என்று ஒற்றை வரியில் நாயக்கர் வரலாறு முடிகிறது. ஏன், எதற்கு, எப்படி எல்லாம் ஸ்வாஹா.