Snapjudge

Posts Tagged ‘எஸ் ராமகிருஷ்ணன்’

எஸ்.ரா. போல் நீங்களும் தொகுப்பாசியராக 9 வழிகள்!

In Books, Business on ஜனவரி 7, 2014 at 4:14 முப

1. பட்டியல் போடுவதில் தமிழுக்கு ஓரளவு நல்ல பாரம்பரியம் இருக்கிறது. க.நா.சு. தொடங்கி வைத்தார். சமீப காலத்திற்கேற்ப அதை இரா. முருகன் மாற்றினார். இந்தப் பட்டியல்களில் உள்ள எழுத்தாளர்களை வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் கதைகளை ஆங்காங்கே மாற்றிக் கொள்ளுங்கள். இது முதல் படி.

2. அடுத்த படியில் உங்கள் நண்பர்களை உள்ளேக் கொணர வேண்டும். அப்பொழுதுதான் “உங்களின் சிறந்த கதை”க்கு தனித்துவம் கிடைக்கும். உதாரணத்திற்கு அருண் எழுதிய வக்ர துண்டம் மகா காயம் போன்ற அதிகம் படிக்காத ஆனால் நம்பிக்கையூட்டும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை சேர்க்க வேண்டும்.

3. ஆம்னிபஸ்அழியாச் சுடர்கள் போன்ற புத்தகமும் புனைவும் சார்ந்த இடங்களை படிக்க வேண்டாம். அவர்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பெயர்களை மட்டும் உருவினால் போதுமானது. இப்பொழுது உங்கள் பட்டியல் கிட்டத்தட்ட தயார்.

4. பட்டியல் மட்டும் இருந்தால் போதாது. அதற்கு விளம்பரம் வேண்டும். அராத்து முறையில் எதிர்மறை சந்தையாக்கத்தில் விருப்பம் என்றால் லக்கிலுக்கை தொடர்பு கொள்ளலாம். இல்லையென்றால் டிஸ்கவரி பேலஸ் வேடியப்பனைக் கேட்கலாம்.

5. நான் கணினியில் நிரலி எழுதுபவன். நான் எழுதும் நிரலியை மைக்ரோசாஃப்ட் கொடுக்கும் எடுத்துக்காட்டுகளின் மூலமாகவோ, ஸ்டாக் ஓவர்ஃப்ளோ போன்ற விடையளிக்கும் வலையகங்கள் மூலமாகவோ கண்ட்ரோல்+சி, கண்ட்ரோல்+வி வகையில் எழுதுவேன். அதே போல் நீங்களும் இப்பொழுது உங்கள் தேர்வுகளை எடுத்தாளவும்.

6. ஒழுங்காக பக்கம் பிரித்து, தலைப்பாகத்தில் உங்கள் பெயரும், வால் பாகத்தில் உங்களின் பதிவு முகவரியும், நடுநடுவே காப்புரிமைக் கையெழுத்தும் போடுங்கள். ஆங்காங்கே, உங்கள் ரசனைக்கேற்ப படங்களை கூகுள் படத்தேடல் மூலமாகவோ, ஃப்ளிக்கர் மூலமாகவோ திருடிப் போடுங்கள். இப்பொழுது, இதை பிடிஎஃப் ஆக்கி விடலாம்.

7. நான் கணினில் நிரலி எழுதினாலும், அதை சந்தையில் சரி பார்த்து விற்பவர் வேறொருவர். அது போல் பதிப்பகம் மூலமாக உங்கள் தொகுப்பைக் கொணரலாம். சொந்தமாக அச்சிடுவது ஒரு வழி. அது ஆபத்தானது. இணையத்தில் வேறு உலாவுபவர் என்பதால் கூகுள்+/ஃபேஸ்புக் போன்ற சமூகக் கூட்டங்களில் தலையைக் காட்ட முடியாது. இதுவோ, வாசகரே தயாரித்த புத்தகம். எனவே, மூன்றாம் மனிதர் மூலமே பதிப்பிக்கவும்.

8. இப்பொழுது சர்ச்சை உண்டாக்கும் தருணம். நூறு கதைகளில் இடம்பெறாதவை ஏன் என்று பதிவிடலாம். அசல் கதை எழுதியவர்களுக்கு கார்டு கூட போடமல் இராயல்டி வழங்காமல் “நெஞ்சில் நிற்கும் நெடுங்கதைகள்” வெளியாகின்றன என்னும் உண்மையை உலவ விடலாம். ரஜினி இதில் இருந்து குட்டிக்கதையை துக்ளக் மீட்டிங்கில் சொல்லப் போகிறார் எனலாம்.

9. ஆங்கிலத்தில் வருடாவருடம் இந்த மாதிரி தொகுப்புகள் வருகின்றன. வெளியான பத்திரிகையில் அனுமதி பெறுகிறார்கள். எழுதியவரிடம் காசு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக இளரத்தங்களை, அதிகம் அறிமுகமாகாத ஆனால் உருப்படியாக எழுதுபவர்களை அறிமுகம் செய்கிறார்கள். அப்படி எல்லாம் உருப்படியாக செய்து விட வேண்டாம். பரபரப்பு கிடைக்காது.

Writer Jeyamohan on Author S Ramakrishnan

In Books, Literature on ஜூலை 6, 2012 at 7:39 பிப

1. விழித்திருப்பவனின் இரவு: உலக இலக்கியச்சிமிழ்

தமிழில் ஒரு சராசரி வாசகன் உலக இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் அறிவதற்கான சாளரமாக அவரது கட்டுரைகள் இருந்து வருகின்றன. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் அவர் எடுத்துப் பேசியிருக்கும் ஆசிரியர்களின், நூல்களின் பெயர்ப் பட்டியலே வியப்பூட்டுவதாக உள்ளது. இன்றைய தமிழ்ச்சூழலில் இத்தகைய பல குரல்கள் எழுந்தாக வேண்டியிருக்கிறது. நமக்கு இன்றைய இன்றியமையாத தேவை இலக்கிய இதழியல். அதற்கான மிகச்சிறந்த முன்மாதிரிகள் எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரைகள்.

2.

3. இதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்

அற்பமான, அன்றாட வாழ்வு சார்ந்த புற யதார்த்தங்களை ‘அப்படியே’ பதிவு செய்வதிலேயே திருப்தி காண்கிற இலக்கியப் போக்கிலிருந்து விலகி இலக்கிய ஆக்கம் குறித்தான மகத்தான கனவுடன் ஆக்கப்பட்ட உண்மையான தீவிரமுயற்சி இப்படைப்பு. ஒரு நாவல் உருவாக்குவது ஒரு புனைவு வெளியைத்தான் என்ற நவீனப்பிரக்ஞை இதில் உள்ளது. இதனுடன் பலவகையிலும் ஒப்பிடத்தக்க நவீன இலக்கிய ஆக்கம் என இடாலோ கால்வினோவின் ‘புலப்படா நகரங்கள்’ நாவலைச் சொல்லலாம்.

4. பாரதி மகாகவியே: விவாதம்- ஒரு கடிதம்

பாரதியைக் கொண்டாடுபவர்களில் இரு வகையினர் உண்டு. திரிலோகசீதாராம் போன்றவர்கள் பாரதியின் வேதாந்தநோக்கை முக்கியமாகக் கருதுபவர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அவன் நவீன ஜனநாயக சமூகத்தின் உருவாக்கத்துக்கு ஆற்றிய பங்களிப்பைப் பெரிதாக எண்ணுபவர்கள். அவை இரு தனி மரபுகளாக வளர்ந்தன

எஸ்.ராமகிருஷ்ணன் மரபே ஜீவானந்தம் முதல் இடதுசாரி ஜெயகாந்தன் வரை பாரதி பக்தர்களை உருவாக்கியது. கைலாசபதி முதல் ரகுநாதன் வரை இடதுசாரி பாரதி ஆய்வாளர்களை உருவாக்கியது.

5. இருவகை எழுத்து

எஸ்.ராமகிருஷ்ணன் வணிக எழுத்துக்கு மாற்றாக சிற்றிதழ்சார் இலக்கிய உலகம் உருவாக்கிய வகைமாதிரிக்குள் நிற்பவர். தன்னை வாசகன் என உணரும் ஒருவன் கவனித்துப் பொறுக்கிக்கொள்ளும் மொழிநுட்பங்களும், சித்தரிப்புநுட்பங்களும் நிறைந்தது அது. வாச்கானை உள்ளே ஈடுபடுத்தாதது. அந்நுட்பங்களின் எல்லையை வாசகன் கண்டுபிடிக்கும் வரை அவன் ஆர்வத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும்.

6. யாமம் : எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு

7. காமத்துக்கு ஆயிரம் உடைகள் : எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’

8. ஜெய்? மோகன்?

ஜேம்ஸ்பாண்டு உடையில் தோன்றி ஜெய்சங்கர் பரிமளிக்கும் படங்களை பார்க்கும் இவர் என்னய்யா நம்ம ஜெயமோகன் மாதிரியே நடிக்கிறதும், சாடி குதிக்கிறதும், நகத்தை கடிக்கிறதும். உணர்ச்சிவசப்படுறதும், எதுக்குனு தெரியாம சண்டை போடுறதுமா செய்றாரே என்று பல முறை சிரிப்பை அடக்க முடியாமல் திணறியிருக்கிறேன். உண்மையில் இப்போது தான் அவருக்கு ஜெய் என்ற பெயர் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.

& எஸ்ரா : ஆளுமை, நகைச்சுவை & பகிடி

எங்களூரின் ராமகிருஷ்ணனுக்கு வாசகர்கள் அதிகம். எங்கள் அக்கவுண்ட் கிளார்க் என்னிடம் ”சார் உங்களுக்கு நெஜம்மாவே ராமகிருஷ்ணனை தெரியுமா சார்?” என்றார்.

”தெரியுமே”

”உங்ககூட பேசுவாரா?”

”அப்பப்ப பேசுவார். சில சமயம் சிரிக்கக்கூட செய்வார்”

”பெரிய ரைட்டர் சார். பாத்து பேசணும். யூ ஆர் லக்கி” என்றார் ”அவரு ஒரு தேசாந்தரி சார்”

அந்த வார்த்தை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது போல. ”அந்தக்காலத்திலே ராணி வாராந்தரீண்ணு ஒண்ணு வந்ததே ”என்றேன்.

9. எஸ்ராவுடன் ஒரு உரையாடல் – கெ.பி.வினோத்

10. http://www.jeyamohan.in/?s=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&searchsubmit&paged=3

’கரிசலில் பிறப்பவர்கள் இயல்பிலே வெக்கை குடித்தவர்கள். வாழ்க்கை இவர்களுக்கு எவ்விதமான சுகபோகத்தையும் தந்துவிடவில்லை. தினப்பாடுகளைக் கடந்து போவதற்கே சமர் செய்து பழகிய மனிதர்கள். குறிப்பாக இங்குள்ள விவசாயிகள் வானத்தோடு பேசிப் பழகிப்போனவர்கள். மழையைக் கொண்டு செல்லும் மேகம் வேறு ஊரை நோக்கிப் போகிறதே என்று ஆத்திரப்பட்டு மேகங்களை விரட்டி மடக்கி இழுத்துவரப் பின் தொடர்பவர்கள்’ என எஸ்.ராமகிருஷ்ணன் கரிசலை ஒரு கட்டுரையில் விவரிக்கிறார்.

கொலையுண்ணப்பட்ட வயோதிகரின் திரேகத்தின் மீது அலையும் வஸ்திரத்தில் காற்றின் விரல்கள் அலைவு கொள்வதாக தெரிகிறது என்பதனால் கொலைவெளியில் மிதந்து கொண்டிருக்கும் பறவையின் மூன்றாவது கண்களின் அபூர்வ ஷணங்கள் காரணமாக அமையலாம் என தலைமறைவாக இருக்கும் அன்னியஸ்தனான கிழவர் சொல்லியிருக்கிறார் . [கொலை ஏற்கனவே கோயில்பட்டியை சேர்ந்த பெரிய ஒச்சாத்தேவர் என்பவரால் – — துரத்தித் துரத்தி, கதறக் கதற —செய்யப்பட்டு விட்டது . நாமெல்லாம் போஸ்ட்மார்ட்டம்தான் செய்யமுடியும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் ]

– எஸ்.ராமகிருஷ்ணன், விருதுநகர்

காவல் கோட்டம்: எஸ் ராமகிருஷ்ணன் விமர்சனப் பத்து

In Books, Literature on ஜூலை 5, 2012 at 9:18 பிப

நன்றி: காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் | பகுதி இரண்டு

1. வாசிப்பு சுவாரசியமோ கதைக்குள் புகவோ முடியாத நாவல்.

2. வெறும் ஒப்பனை மட்டுமே நிறைந்துள்ள புனைவு. கதாபாத்திரங்களுக்கு அழுத்தம் தந்து குணச்சித்திரங்கள் மனதில் நிலைக்குமாறு வடிவமைக்கவில்லை.

3. ஒரே புத்தகமாக இருந்தாலும் முதல் பகுதிக்கும், இரண்டாம் பகுதிக்கும் எந்தத் தொடர்ச்சியும் கிடைக்கவில்லை. கூடு விட்டு கூடு பாய்கிறது.

4. டாக்டர் ஆனந்த் பாண்டியன் என்ற தமிழகத்தை சேர்ந்த மானுடவியல் பேராசிரியர். கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். கள்ளர் பற்றிய ஆய்வினை தொடர்ந்து பல காலமாக மேற்கொண்டு வருகிறார். Securing the Rural Citizen: The Anti-Kallar Movement of 1896, “An Ode to an Engineer” in Waterlines: The Penguin Anthology of River Writing in India. Race, Nature, and the Politics of Difference போன்றவை கள்ளர் வாழ்வியல் ஆய்வில் மிக முக்கியமானவை.

வெங்கடேசனின் கள்ளர் விவரணைகளில் ஆனந்த் பாண்டியனின் பல ஆண்டுகால உழைப்பும் தனித்த பார்வைகளும் எவ்விதமாக நன்றி தெரிவித்தலும் இன்றி இந்த நாவலில் பல இடங்களில் அப்படியே பயன்படுத்தபட்டிருக்கிறது.

5. லூயிஸ் டுமாண்ட் என்ற பிரெஞ்சு மானுடவியல் ஆய்வாளர் (Louis Dumont – A south Indian subcaste, Social organization and religion of the Pramalai Kallar 1986:OUP) பிரன்மலை கள்ளர்களை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து எழுதிய நூலில் இருந்தும் பல தகவல்களை நாவலுக்காக எடுத்திருக்கிறார். அதற்கும் சிறு நன்றி கூட கிடையாது.

6. புத்தம்புதுசும் இல்லை; முதல் படைப்பு என்னும் புதிய பார்வையும் இல்லை: குற்றப்பரம்பரை எனப்படும் கள்ளர் பற்றி முதன்முதலாக எழுதப்பட்டதா என்றால் அதுவும் கிடையாது. கோணங்கி, தமிழ்செல்வன், வேல.ராமமூர்த்தி, எஸ் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் எழுதிய கதைக் களம்.

7. மாலிக் கபூர் போன்ற பள்ளிக்கூட புத்தக நாயகர்களுக்கு தேவையான கற்பனை விவரிப்பும் கொடுக்கவில்லை; பள்ளியின் பாடப் புத்தக சித்தரிப்பை எள்ளளவும் தாண்டியும் செல்லவில்லை. ஒன்று வரலாற்று பாடப் புத்தகத்தில் சொன்னதை அப்படியே வழிமொழிந்தால், அதில் வாசகரை ஒன்றச் செய்யும் விலாவாரியான ரசனை மிகுந்த பரபரப்பான காட்சிப்புலம் கண் முன்னே தோன்ற வைக்க வேண்டும்.

இல்லை… நம்மால் சுருக்கமாகத்தான் கற்பனை செய்ய இயலும் என்றால், அன்றைய வரலாற்று நாயகர்களின் துணை இயக்குநர்களையும், இணை கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து, சரித்திரத்தின் நிர்ப்பந்தங்களை வெளிச்சத்திற்கு வரவழைக்க வேண்டும்.

கற்பனையும் கிட்டவில்லை; உள்ளொளியும் கொடுக்கவில்லை.

8. பாளையப்பட்டு வம்சாவழி வரலாறு என்று கீழைத்தேய சுவடி வெளியீடுகளின் இரண்டு நூல்கள் உள்ளன. அந்த நூலில் உள்ள தகவல்கள் மற்றும் பத்திகள் அத்தியாயத்திற்கு ஏற்றார் போல இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

9.
அ) Edgar Thurston, ” The castes and Tribes of south India ,
ஆ) The Madura Country -A manual – J..H..Nelson .Asian Educational Services New Delhi, Madras.
இ) History Of The Nayaks Of Madura- R Sathianathaier,
உ) The History of Tinnevelly by Rev R Caldwell,
ஊ) History of Military transactions – R Orme

இந்த ஐந்திலும் உள்ள தகவல்கள் அப்படி அப்படியே காவல் கோட்டம் நாவலில் பிரதியெடுக்கபட்டிருக்கின்றன.

கொசுறு:
கோணங்கியின் மதுரைக்கு வந்த ஒப்பனைகாரன் சிறுகதையிலும் மதுரகவி பாஸ்கர தாஸ் நாட்குறிப்பிலும் மதுரையை பற்றிய எத்தனையோ செய்திகள் உள்ளன. சிங்காரமும், நாகராஜனும் கூட மதுரையின் தொல் நினைவுகளை சரியான இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தொ.பரமசிவத்தின் அழகர் கோவில் ஒரு ஆய்வு வெளிப்படுத்திய கடந்த காலச்சித்திரத்திற்கு இணையாக இதில் ஒருபக்கம் கூட இல்லை.

10. இவ்வளவு புத்தகங்களில் இருந்து சுடப்பட்டிருக்கிறதே… எதோ ஆய்வாளர், கியூரேட்டர் போல் தகவல் தொகுப்பாளராக செயல்பட்டிருக்கிறாரா?

அதுவும் இல்லை. திருமலை நாயக்கர் மகாலை கட்டினவன் இத்தாலியன் என்று ஒற்றை வரியில் நாயக்கர் வரலாறு முடிகிறது. ஏன், எதற்கு, எப்படி எல்லாம் ஸ்வாஹா.

Writer S Ramakrishnan: 20 Links

In Lists, Literature, Tamilnadu on ஜூன் 26, 2012 at 6:29 பிப

1. Webulagam நேர்காணல்எஸ். ராமகிருஷ்ணன்

சன் டி.வி-யில் செய்திப் பிரிவில் வேலை செய்து வந்த இவர், எழுத்தில் கவனம் செலுத்த இயலாத காரணத்தால், வேலையை ராஜினாமா செய்தார்.

`கவிதைக்கும் இதுவரை இருக்கும் சிறுகதை வடிவங்களுக்கும் இடையே நான் ஒரு `கதைசொல்லல்’ முறையை – ஒரு `Fable’ போன்ற வடிவத்தைக் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறேன்’

`விஷ்ணுபுரம்’ நாவல் குறித்த உங்கள் `contention’ என்ன?

2. கால் முளைத்த கதைகள் – எஸ். ராமகிஷ்ணன்உயிர்மை பதிப்பகம்

நெல் எப்படி உருவானது?

நாய் ஏன் வாலை ஆட்டுகிறது?

பெண்களுக்கு ஏன் தாடி வளர்வதில்லை?

என்கிற ஒரு நைஜீரியா கதை உள்ளிட்ட 80 கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார்

3. எஸ்.ராமகிருஷ்ணன்: ‘கோடுகள் இல்லாத வரை படம்’ தொடர்

வாஸ்கோட காமா, மார்க்கோ போலோ, இபின் பதூதா (Ibn Battuta), அல்பெரூனி (Alberuni) – உள்ளிட்ட பயணிகளின் திரைகடலோடிய அநுபவங்களைப் பற்றிய சுவையான தொடர் இது.

4. Anandha Vikadan Interview with Noted Writer S Ramakrishnan on Eelam, Jeyamohan, Tamil Cinema

” ‘சண்டக்கோழி’ விவகாரத்துக்குப் பிறகு, உங்களுக்கும் பெண்ணியவாதி களுக்குமான உறவில் விழுந்த விரிசலை நீங்கள் உணர்கிறீர்களா?”

”ஏன் எல்லாம் தெரிந்தவர்கள்போல தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறீர்கள்? ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா?”

”சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்… யாருக்கு ரசிகர்கள் அதிகம்?”

5. உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தும் நூல்: செகாவின் மீது பனிபெய்கிறது

சிறுவயதில் சாலையில் கைவிடப்பட்ட குதிரை ஒன்று பனியில் நனைந்தபடி நிற்பதை பார்த்து தானும் பனியில் நிற்கிறார். நீண்ட இரவில் பனி கொட்டி அவரை நடுகங்கச் செய்கிறது. செகாவ் ஒரு நோயாளி. ஆனாலும் அவர் தன்னை வாட்டும் குளிரில் நிற்கிறார். குதிரை இவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. மனித வேதனைகளில் முக்கியமானது கைவிடப்படுதலும் நிராகரிப்புமே முக்கியமானது என்பதைத் தனது கதைகளில் உணர்த்துகிறார்.

6. மாற்று மருத்துவம்கால்களால் சிந்திக்கிறேன்

ஒட்டகம் மட்டுமே நடக்கும்போது வாயசைத்துக் கொண்டேயிருக்கும். அதுபோல நமது மனது எதையோ அசைபோட்டபடியே தானிருக்கிறது என்கிறார் தோரூ. ஒரு முறை வோர்ட்ஸ்வொர்த் வீட்டிற்கு சென்ற ஒரு வாசகர், கவிஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது பணிப் பெண்ணிடம் கேட்டார். அந்த பெண் கவிஞர் வீட்டு நூலகத்தினுள் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் ஜன்னலுக்கு வெளியில் உள்ள உலகை படித்துக் கொண்டிருக்கிறார் என்றாராம். நடைப்பயிற்சி அப்படியான ஒரு அனுபவத்தையே தரக்கூடியது. கண்களால் உலகை வாசிப்பதன் பெயரே நடைபயிற்சி.

7. வைரமுத்து, ரஜினிகாந்த் பேச்சுக்களும் விழியங்களும்: S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

8. ‘நெடுங்குருதிகுறித்து எஸ். ராமகிருஷ்ணன்

ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடும்போது அது விளைந்த மண்ணின், நீரின் ருசியையும் சேர்த்துதான் சாப்பிடுகிறோம். ஆனால், அதை தனித்து அறிவதில்லை. எனில் ஒரு ஊர் அங்கிருக்கும் காய்களில், கனிகளில், வீடுகளில், கனவுகளில் தன் ருசியை உருவாக்கிவிடுகிறது என்பது உண்மைதானே.

‘ஆரோக்ய நிகேதனம்’, ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ போன்ற சிறந்த இந்திய நாவல்கள் எழுப்பிய கனவைப் போல இந்த நாவலும் ஒரு சிதறடிக்கப்பட்ட கனவைக் கொண்டிருக்கிறது.

9. Tamil Writer S Ramakrishnan Interview in Thendral by Arvind Swaminathan: Literary Icons Series

வெகுஜன வாசகர்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்ததில் முக்கியமானவர். வாசகனை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் தனித்துவமான மொழிக்குச் சொந்தக்காரர். இலக்கியச் சிந்தனை விருது, இயல் விருது, விஸ்டம் விருது, கண்ணதாசன் விருது, நல்லி-திசையெட்டும் விருது, இலக்கியச் சுடர் விருது, தாகூர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர். உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் என உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர். இன்றும் தனது பல சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் வழியாக அப்பணியைத் தீவிரமாகச் செய்து கொண்டிருப்பவர். சமீபத்தில், ரஷ்ய கலாச்சார மையத்தில் உலக இலக்கியம் பற்றி இவர் ஆற்றியுள்ள சொற்பொழிவு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. இவருடைய நூல்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து பலர் எம்ஃபில், பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். இலக்கியம், பத்திரிக்கை, சினிமா, குறும்படம், நாடகம், ஆய்வு, பயிலரங்குகள், இணையம் என்று மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவரை தென்றலுக்காகச் சந்தித்தோம்.

10. பா.மு. ராமகிருஷ்ணனும் பா.பி. ராமகிருஷ்ணனும் :: அ. மார்க்ஸ் – அநிச்ச, நவம்பர் 2005

“நமக்கு மண்ட்டோ போன்ற பிறமொழி எழுத்தாளர்கள் ‘மாடல்’களாக இருக்க வேண்டியதில்லை. வீடு திரும்புதல்தான் இன்றைய எழுத்துக்களின் லட்சியமாக இருக்கிறது. லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் சாட்சி. பிரிவினைக் கலவரங்கள் பற்றி மண்ட்டோ எழுதியது உண்மைதான். ஆனால் பிரிவினைக் கலவரங்கள் நடந்து கொண்டிருந்தபோது அவர் நடிகை வீட்டில் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார். வேசிகளின் வீடுகளில் இருந்தார்”

11. சிறுகதை: உபதேசியார்: எஸ் ராமகிருஷ்ணன் – தி சன்டே இந்தியன்

12. Acceptance speech by EssRaa at Canada: Tamil Literary Garden Iyal Virudhu: Award Meeting for S Ramakrishnan

தன் சீடர் கூட்டத்துடன் இரவு தங்குவதற்கு இடம் தேடி ஜென் துறவி சத்திரத்திற்கு வருகிறார். அந்த இடத்தின் காப்பாளனோ, இவர்களைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை நிறைய பாலுடன் வருகிறான். அதைப் பார்த்த சன்னியாசி, சிரித்துவிட்டு, அந்த பாலின் மீது ஒரு இலையைப் போடுகிறார். இதைப் பார்த்து சத்திரத்து இன் சார்ஜ் இடம் கொடுத்து விடுகிறார்.

என்ன நடந்தது அங்கே?

13. Short Films based on S Ramakrishnan Stories: எஸ் ராமகிருஷ்ணன் குறும்படங்கள்

14. Interview of S Ramakrishnan: Question and Answer with Tamil Writers and Notable Thinkers

15. S Ramakrishnan Speech Snippets: நீயா நானா முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை

16. Tamil Author S Ramakrishnan on why we write Essays in Magazines and Fiction Novels?

தான் எதற்கு எழுதுகிறோம் என்றே தெரியாமலிருப்பவர்கள் தமிழில் ஏராளம். அது போன்ற ஒரு கேள்விளை சந்திக்கும் போது தான் இப்படியொரு கேள்வி இருப்பதே அவர்களுக்கு தெரியவரும். வாசகர்களை போலவே எழுத்தாளரும் பதிலை தேடிக்கொண்டே தானிருக்கிறார்கள்.

17. Kumudham Theeranadhy Interview with Writer Ess Ramakrishnan by Thalavaai Sundharam

ஒரு நேரத்தில் ஒரேயொரு பொருளை மட்டுமே யாவரும் வாங்க வேண்டும் என்று கட்டயாப்படுத்துவதற்கு தமிழ் இலக்கியம் என்ன ரேஷன் கடையா? மேலை இலக்கியங்களை படித்து விட்டு காப்பியடிக்கிறார்கள் என்று சொல்பவர் யார்.? அவர்கள் என்ன வாசித்திருக்கிறார்கள்.? வம்பு பேச்சுகளும் அவதுôறுகளும் தொடாத துறையிருக்கிறதா என்ன.? இல்லை என்றால் யதார்த்தவாத கதைகள் இவ்வளவு நாட்களுக்குள் எழுதி முடிக்கபட்டுவிடும் என்று ஏதாவது ரிடயர்ட்மண்ட் தேதி ஏதாவது இருக்கிறதா என்ன ?

18. வரல் ஆற்றின் திட்டுகள்

19. நள் எனும் சொல்

20. உலகசினிமா, நனையாத எனது மழைநாட்கள் & காணிக்காரர்கள்

More… இன்னும் வரலாம்

21. Kalachuvadu – காலச்சுவடு இதழ்களில்

22. Uyirmmai – உயிர்மை சஞ்சிகையில்

23. Atcharam – அட்சரம் எழுத்துகள் தொகுப்பு

 

100 Best Translations from World Literature in Tamil

In Books, India, Literature on ஜூலை 10, 2009 at 6:47 பிப

Source: நூறு சிறந்த மொழிபெயர்ப்பு நாவல்கள் :: எஸ் ராமகிருஷ்ணன்

1) அன்னா கரீனனா – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா

2) போரும்வாழ்வும் – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா

3) புத்துயிர்ப்பு – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா

4) கசாக்குகள் – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா

5) குற்றமும் தண்டனையும் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா

6) சூதாடி – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா

7) மரணவீட்டின் குறிப்புகள் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா

8) யாமா -குப்ரின் ரஷ்யா

9) அர்தமனேவ் – கார்க்கி – ரஷ்யா

10) நம் காலத்து நாயகன் -லெர்மன்தேவ் – ரஷ்யா

11) தந்தையும் தனையர்களும் -துர்கனேவ் – ரஷ்யா

12) மண்கட்டியை காற்று அடித்து போகாது – பாஸி அசியோவா – ரஷ்யா

13) தாரஸ்புல்பா- கோகல் – ரஷ்யா

14) டான் நதி அமைதியாக ஒடிக்கொண்டிருக்கிறது- ஷேலகோவ் –ரஷ்யா

15) சக்ரவர்த்தி பீட்டர் -அலெக்ஸி தல்ஸ்தோய்.- ரஷ்யா

16) குல்சாரி – சிங்கிஸ் ஐத்மேதவ் – ரஷ்யா

17) அன்னைவயல் – சிங்கிஸ் ஐத்மேதவ் – ரஷ்யா

18) ஜமீலா – சிங்கிஸ் ஐத்மேதவ் ரஷ்யா

19) கண்தெரியாத இசைஞன் -கொரலன்கோ ரஷ்யா

20) தேவமலர் -செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்

21) தாசியும் தபசியும் -அனதோலியா பிரான்ஸ் – பிரான்சு

22) திமிங்கல வேட்டை- ஹெர்மன் மெல்வில் அமெரிக்கா

23) சித்தார்த்தா – ஹெர்மன் ஹெஸ்ஸே – ஜெர்மனி

24) யூஜினி – பால்சாக் – பிரான்சு

25) மாறியதலைகள் – நட் ஹாம்சன் நார்வே

26) நிலவளம் – நட் ஹாம்சன் நார்வே

27) மங்கையர்கூடம் – பியர்ள் எஸ் பக் –அமெரிக்கா

28) கடற்புறா – ரிச்சர்ட் பாஷ் அமெரிக்கா

29) மதகுரு- செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்

30) இரட்டை மனிதன் -ஆர்.எல். ஸ்டீவன்சன் ஸ்காட்லாந்து

31) ஏழைபடும்பாடு – விக்டர் க்யூகோ – பிரான்சு

32) இரு நகரங்களின் கதை – சார்லஸ் டிக்கன்ஸ் இங்கிலாந்து

33) போரே நீ போ – ஹெமிங்வே அமெரிக்கா

34) கடலும் கிழவனும் – ஹெமிங்வே அமெரிக்கா

35) யாருக்காக மணி ஒலிக்கிறது – ஹெமிங்வே அமெரிக்கா

36) டிராகுலா – பிராம் ஸ்டாக்டர் – அயர்லாந்து

37) அன்புவழி – பெர் லாகர்குவிஸ்ட் ஸ்வீடன்

38) மந்திரமலை – தாமஸ்மான் ஜெர்மனி

39) கடல்முத்து – ஸ்டீன்பெக் அமெரிக்கா

40) துன்பக்கேணி – எரிக் மரியா ரிமார்க் ஜெர்மனி

41) பசி – நட்ஹாம்சன் ஜெர்மனி

42) பிரேத மனிதன் -மேரி ஷெல்லி இங்கிலாந்து

43) பிளாடெரோவும் நானும் – ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் ஸ்பானிஷ்

44) குறுகிய வழி – ஆந்த்ரே ழீடு – பிரெஞ்சு

45) குட்டி இளவசரன் -அந்துவாந்த் சந்த் எக்ஸ்பரி – பிராஞ்சு

46) அந்நியன் – ஆல்பெர் காம்யூ பிரான்சு

47) கொள்ளை நோய் – ஆல்பெர் காம்யூ – பிரான்ஸ்

48) விசாரணை -காப்கா ஜெர்மனி

49) வீழ்ச்சி – சினுவா அச்சுபி – தென்னாப்ரிக்கா

50) பீட்டர்ஸ்பெர்க் நாயகன் கூட்ஸி – தென்னாப்ரிக்கா

51) புலப்படாத நகரங்கள் -இதாலோ கால்வினோ – இத்தாலி

52) ஒன்றுகலந்திடும் விதிகளின் கோட்டை -இதாலோ கால்வினோ இத்தாலி

53) தூங்கும் அழகிகளின் இல்லம் -யாசுனாரி கவாபடா – ஜப்பான்

54) தாத்தாவும் பேரனும் – ராபர்ட் டி ரூவாக் அமெரிக்கா

55) நாநா – எமிலி ஜோலா –பிரான்சு

56) டாம் ஷாயர் – மார்க் ட்வெயின் அமெரிக்கா

57) ஆலீஸின் அற்புத உலகம் – லூயிகரோல் இங்கிலாந்து

58) காதலின் துயரம் கதே – ஜெர்மன்.

59) அவமான சின்னம் -நதானியேல் ஹதார்ன் – அமெரிக்கா

60) கானகத்தின் குரல் – ஜாக் லண்டன் அமெரிக்கா

61) சிலுவையில் தொங்கும் சாத்தான் – நுகூகி – கென்யா.

62) அபாயம் -ஜோஷ் வண்டேலு – பிளமிஷ்.

63) கால இயந்திரம் – வெல்ஸ் இங்கிலாந்து

64) விலங்குபண்ணை – ஜார்ஜ் ஆர்வெல் இங்கிலாந்து

65) ரசவாதி – பாவ்லோகொய்லோ பிரேசில்.

66) கோதானம் – பிரேம்சந்த் – ஹிந்தி

67) சமஸ்காரா – யூ. ஆர். அனந்த மூர்த்தி – கன்னடம்

68) நமக்கு நாமே அந்நியர்கள- அக்நேயா – ஹிந்தி

69) செம்மீன- தகழிசிவங்கரன் பிள்ளை – மலையாளம்

70) கயிறு – தகழி சிவங்கரன் பிள்ளை – மலையாளம்

71) அழிந்தபிறகு – சிவராமகாரந்த் –கன்னடம்

72) மண்ணும் மனிதர்களும் – சிவராம கராந்த் கன்னடம்

73) நீலகண்ட பறவையை தேடி – அதின்பந்தோபாத்யாயா வங்காளம்

74) அக்னிநதி – குல்அதுல்துன் ஹைதர் உருது

75) ஆரோக்கிய நி்கேதனம் -தாராசங்கர் பானர்ஜி – வங்காளம்

76) கரையான் – சீர்சேந்து முங்கோபாத்யாய- வங்காளம்

77) பதேர்பாஞ்சாலி – விபூதி பூஷஐ பந்தோபாத்யாய வங்காளம்

78) பொம்மலாட்டம் மாணிக்பந்தோபாத்யாய வங்காளம்

79) பொலிவு இழந்த போர்வை ராஜேந்தர்சிங் பேதி – ராஜஸ்தான்

80) இரண்டாம் இடம் எம்.டி. வாசுதேவன் நாயர் மலையாளம்

81) பாண்டவபுரம் சேது – மலையாளம்

82) தமஸ் பீஷ்ம சஹானி – உருது

83) பர்வா – எஸ்.எல். பைரப்பா கன்னடம்

84) நிழல்கோடுகள் – அமிதாவ் கோஸ் ஆங்கிலம்

85) சிப்பியின் வயிற்றில் முத்து – போதி சத்வ மைத்ரேயா வங்காளம்

86) எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது – வைக்கம் முகமது பஷீர்- மலையாளம்

87) பாத்துமாவுடைய ஆடு – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்

88) சப்தங்கள் – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்

89) மதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்

90) விடியுமா – சதுர்நாத் பாதுரி – ஹிந்தி

91) மய்யழிகரையோரம் – முகுந்தன் மலையாளம்

92) பன்கர்வாடி – வெங்கடேஷ் மால்கூட்கர்.- மராத்தி

93) சோரட் உனது பெருகும் வெள்ளம் – ஐவேர்சந்த் மேகானீ. ராஜஸ்தான்.

94) தர்பாரி ராகம் – ஸ்ரீராம் சுக்லா – ஹிந்தி

95) இலட்சிய ஹிந்து ஹோட்டல் – விபூதி பூஷன் பந்தோபாத்யாய வங்காளம்

96) கங்கை பருந்தின் சிறகுகள் – லட்சுமி நந்தன் போரா – ஹிந்தி

97) அவன் காட்டை வென்றான் – கேசவரெட்டி – தெலுங்கு

98) அரைநாழிகை நேரம் – பாறபுறத்து மலையாளம்.

99) சிக்கவீர ராஜேந்திரா – மாஸ்தி – கன்னடம்

100) எரியும் பனிக்காடு – டேனியல் ஆங்கிலம்

Ess Ramakrishnan: Top 100 Short Stories in Tamil

In Books, Literature, Tamilnadu on ஜூலை 7, 2009 at 9:45 பிப

Source: நூறு சிறந்த சிறுகதைகள்

Related: 258 Top Shorts: Fiction picks by Jeyamohan & S Ramakrishnan: 100 Best Books in Tamil Literature: Must Read Stuff

1. காஞ்சனை – புதுமைபித்தன்

2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்

3. செல்லம்மாள் – புதுமைபித்தன்

4. அழியாச்சுடர் –மௌனி

5. பிரபஞ்ச கானம் – மௌனி

6. விடியுமா – கு.ப.ரா

7. கனகாம்பரம் -கு.ப.ரா

8. நட்சத்திர குழந்தைகள் –பி. எஸ். ராமையா

9. ஞானப்பால் – பிச்சமூர்த்தி

10. பஞ்சத்து ஆண்டி – தி.ஜானகிராமன்

11. பாயசம் – தி.ஜானகிராமன்

12. ராஜா வந்திருக்கிறார் – கு. அழகிரிசாமி

13. அன்பளிப்பு – கு. அழகிரிசாமி

14. இருவர் கண்ட ஒரே கனவு – கு. அழகிரிசாமி

15. கோமதி – கி. ராஜநாராயணன்

16. கன்னிமை – கி.ராஜநாராயணன்

17. கதவு. கி.ராஜநாராயணன்

18. பிரசாதம் –சுந்தர ராமசாமி

19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி

20. விகாசம் – சுந்தர ராமசாமி

21. பச்சை கனவு –லா.ச.ராமாமிருதம்

22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்

23. ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன்

24. புலிக்கலைஞன் –அசோகமித்ரன்

25. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்ரன்

26. பிரயாணம் – அசோகமித்ரன்

27. குருபீடம் – ஜெயகாந்தன்

28. முன்நிலவும் பின்பனியும் – ஜெயகாந்தன்

29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்

30. தாலியில் பூச்சூடியவர்கள் – பா.ஜெயபிரகாசம்

31. காடன் கண்டது – பிரமீள்

32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் – ஆதவன்

33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் – ஆதவன்

34. பைத்தியக்கார பிள்ளை – எம்.வி. வெங்கட்ராம்

35. மகாராஜாவின் ரயில்வண்டி – அ. முத்துலிங்கம்

36. நீர்மை – ந.முத்துசாமி

37. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை

38. காட்டிலே ஒரு மான் -அம்பை

39. எஸ்தர் – வண்ணநிலவன்

40. மிருகம் – வண்ணநிலவன்

41. பலாப்பழம் – வண்ணநிலவன்

42. சாமியார் ஜூவிற்கு போகிறார் – சம்பத்

43. புற்றில் உறையும் பாம்புகள் – ராஜேந்திரசோழன்

44. தனுமை – வண்ணதாசன்

45. நிலை – வண்ணதாசன்

46. நாயனம் – ஆ.மாதவன்

47. நகரம் –சுஜாதா

48. பிலிமோஸ்தவ் -சுஜாதா

49. தக்கையின் மீது நான்கு கண்கள் – சா.கந்தசாமி

50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் – ஜி. நாகராஜன்

51. ஒடிய கால்கள் – ஜி.நாகராஜன்

52. தங்க ஒரு – கிருஷ்ணன் நம்பி

53. மருமகள்வாக்கு – கிருஷ்ணன் நம்பி

54. ரீதி – பூமணி

55. இந்நாட்டு மன்னர் – நாஞ்சில் நாடன்

56. அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன்

57. மரி எனும் ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்

58. சோகவனம்- சோ.தர்மன்

59. இறகுகளும் பாறைகளும் –மாலன்

60. ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி

61. முங்கில் குருத்து – திலீப்குமார்

62. கடிதம் – திலீப்குமார்

63. மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார இந்திரஜித்

64. சாசனம் – கந்தர்வன்

65. மேபல் –தஞ்சை பிரகாஷ்

66. அரசனின் வருகை – உமா வரதராஜன்

67. நுகம் – எக்பர்ட் சச்சிதானந்தம்

68. முள் – சாரு நிவேதிதா

69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதி மணியன்

70. வனம்மாள் –அழகிய பெரியவன்

71. கனவுக்கதை – சார்வாகன்

72. ஆண்மை – எஸ்பொ.

73. நீக்கல்கள் – சாந்தன்

74. மூன்று நகரங்களின் கதை –கலாமோகன்

75. அந்நியர்கள் – சூடாமணி

76. சித்தி – மா. அரங்கநாதன்.

77. புயல் – கோபி கிருஷ்ணன்

78. மதினிமார்கள் கதை – கோணங்கி

79. கறுப்பு ரயில் – கோணங்கி

80. வெயிலோடு போயி – தமிழ்செல்வன்

81. பத்மவியூகம் – ஜெயமோகன்

82. பாடலிபுத்திரம் – ஜெயமோகன்

83. ராஜன் மகள் – பா.வெங்கடேசன்

84. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன்

85. புலிக்கட்டம் – எஸ்.ராமகிருஷ்ணன்

86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் – வேல.ராமமூர்த்தி

87. ஒரு திருணையின் பூர்வீகம் –சுயம்புலிங்கம்

88. விளிம்பின் காலம் – பாவண்ணன்.

89. காசி – பாதசாரி

90. சிறுமி கொண்டு வந்த மலர் – விமாலதித்த மாமல்லன்

91. மூன்று பெர்நார்கள் – பிரேம் ரமேஷ்

92. மரப்பாச்சி – உமா மகேஸ்வரி

93. வேட்டை – யூமா வாசுகி

94. நீர்விளையாட்டு – பெருமாள் முருகன்

95. அழகர்சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி

96. கண்ணியத்தின் காவலர்கள் – திசேரா

97. ஹார்மோனியம் – செழியன்

98. தம்பி – கௌதம சித்தார்த்தன்

99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா

100. பூனைகள் இல்லாத வீடு – சந்திரா

S Ramakrishnan: 100 Best Books in Tamil Literature: Must Read Stuff

In Books, Literature, Tamilnadu on ஜூலை 7, 2009 at 9:35 பிப

Source: நூறு சிறந்த புத்தகங்கள்

1) அபிதாம சிந்தாமணி சிங்காரவேலு முதலியார்

2) மகாபாரதம் கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள்

3) தேவாரம் – திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு

4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும்

5) கம்பராமாயணம் மர்ரே ராஜம் பதிப்பு

6) திருக்குறள் மூலமும் உரையும்

7) திருஅருட்பா மூலமும் உரையும்.

8) சிலப்பதிகாரம் – உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு

9) மணிமேகலை மூலமும் உரையும்

10) சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள்

11) யாழ்நூல் – விபுலானந்த அடிகள்

12) தமிழக வரலாறு தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்

13) பாரதியார் – கவிதைகள் கட்டுரைகள் முழுதொகுப்பு

14) பாரதிதாசன் கவிதைகள்.

15) ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு 12 தொகுதிகள்

16) பெரியார் சிந்தனைகள் ஆனைமுத்து தொகுத்தவை.

17) திருப்பாவை மூலமும் உரையும்

18) திருக்குற்றாலகுறவஞ்சி – மூலமும் உரையும்

19) சித்தர் பாடல்கள் மூலமும் உரையும்

20) தனிப்பாடல் திரட்டு.

21) பௌத்தமும் தமிழும் மயிலை சீனி வெங்கடசாமி

22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு

23) கு.அழகர்சாமி சிறுகதைகள் முழுதொகுப்பு

24) மௌனி கதைகள்

25) சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுதொகுப்பு

26) ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு

27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள் முழுதொகுப்பு

28) வண்ணநிலவன் சிறுகதைகள் முழுதொகுப்பு

29) வண்ணதாசன் சிறுகதைகள் முழுதொகுப்பு

30) பிரபஞ்சன் சிறுகதைகள் முழுதொகுப்பு

31) அசோகமித்ரன் சிறுகதைகள் முழுதொகுப்பு

32) ஆதவன் சிறுகதைகள் முழுதொகுப்பு

33) லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் முழுதொகுப்பு

34) தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுதொகுப்பு

35) ஆ.மாதவன் சிறுகதைகள் முழுதொகுதி

36) விடியுமா குப.ராஜகோபாலன் சிறுகதைகள்

37) ராஜேந்திரசோழன் சிறுகதைகள்

38) நீர்மை ந.முத்துசாமி சிறுகதைகள்

39) சிறகுகள் முறியும் அம்பை சிறுகதைகள்

40) பாவண்ணன் சிறுகதைகள் முழுதொகுப்பு

41) சுஜாதா சிறுகதைகள் முழுதொகுப்பு

42) பிச்சமூர்த்தி சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்

43) முத்துலிங்கம் சிறுகதைகள் முழுதொகுப்பு

44) கந்தர்வன் சிறுகதைகள் முழுதொகுப்பு

45) சுயம்புலிங்கம் சிறுகதைகள்

46) மதினிமார்கள் கதை கோணங்கி

47) வெயிலோடு போயி தமிழ்செல்வன்

48) இரவுகள் உடையும் பா.செயப்பிரகாசம்

49) கடவு திலீப்குமார் சிறுகதைகள்

50) நாஞ்சில்நாடன் சிறுகதைகள் முழுதொகுப்பு

51) புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம்

52) புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி

53) கரைந்த நிழல்கள் அசோகமித்ரன்

54) மோகமுள் தி.ஜானகிராமன்

55) பிறகு .பூமணி

56) நாய்கள் நகுலன்

57) நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம்

58) இடைவெளி – சம்பத்

59) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஜெயகாந்தன்

60) வாசவேஸ்வரம் – கிருத்திகா

61) பசித்த மானுடம் கரிச்சான்குஞ்சு

62) கோபல்லகிராமம் – கி.ராஜநாராயணன்

63) தலைமுறைகள் – நீல பத்மநாபன்

64) பொன்னியின் செல்வன் கல்கி

65) கடல்புரத்தில் வண்ணநிலவன்

66) நாளை மற்றும் ஒரு நாளே – ஜீ.நாகராஜன்

67) சாயாவனம் சா.கந்தசாமி

68) கிருஷ்ணபருந்து ஆ.மாதவன்

69) காகித மலர்கள் ஆதவன்

70) புத்தம்வீடு. ஹெப்சிபா யேசுநாதன்

71) வாடிவாசல் –சி.சு.செல்லப்பா

72) விஷ்ணுபுரம் ஜெயமோகன்

73) உபபாண்டவம் எஸ்.ராமகிருஷ்ணன்

74) கூகை சோ.தர்மன்

75) ஆழிசூழ்உலகு ஜோசப் டி குரூஸ்

76) ம் ஷோபாசக்தி

77) கூளமாதாரி பெருமாள் முருகன்

78) சமகால உலகக் கவிதைகள் தொகுப்பு பிரம்மராஜன்

79) ஆத்மநாம் கவிதைகள் முழுதொகுப்பு

80) பிரமிள் கவிதைகள் முழுதொகுப்பு

81) கலாப்ரியா கவிதைகள் முழுதொகுப்பு

82) கல்யாண்ஜி கவிதைகள்

83) விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு

84) நகுலன் கவிதைகள் முழுதொகுப்பு

85) ஞானகூத்தன் கவிதைகள் முழுதொகுப்பு

86) தேவதச்சன் கவிதைகள் முழுதொகுப்பு

87) தேவதேவன் கவிதைகள் முழுதொகுப்பு

88) ஆனந்த் கவிதைகள் முழுதொகுப்பு

89) பழமலய் கவிதைகள் முழுதொகுப்பு

90) சமயவேல் கவிதைகள் முழுதொகுப்பு

91) கோடைகால குறிப்புகள் சுகுமாரன்

92) என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் மனுஷ்யபுத்திரன்

93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு –சேரன் கவிதைகள்

94) ரத்த உறவு. யூமா வாசுகி

95) மரணத்துள் வாழ்வோம் கவிதை தொகுப்பு

96) சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா.

97) தமிழக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு. கி.ராஜநாராயணன்

98) தமிழக நாட்டுபுறபாடலகள் நா.வானமாமலை

99) பண்பாட்டு அசைவுகள் தொ.பரமசிவம் கட்டுரைகள்

100) கண்மணி கமலாவிற்கு புதுமைபித்தன் கடிதங்கள்