Snapjudge

Posts Tagged ‘இராமு’

எஸ்.ரா. போல் நீங்களும் தொகுப்பாசியராக 9 வழிகள்!

In Books, Business on ஜனவரி 7, 2014 at 4:14 முப

1. பட்டியல் போடுவதில் தமிழுக்கு ஓரளவு நல்ல பாரம்பரியம் இருக்கிறது. க.நா.சு. தொடங்கி வைத்தார். சமீப காலத்திற்கேற்ப அதை இரா. முருகன் மாற்றினார். இந்தப் பட்டியல்களில் உள்ள எழுத்தாளர்களை வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் கதைகளை ஆங்காங்கே மாற்றிக் கொள்ளுங்கள். இது முதல் படி.

2. அடுத்த படியில் உங்கள் நண்பர்களை உள்ளேக் கொணர வேண்டும். அப்பொழுதுதான் “உங்களின் சிறந்த கதை”க்கு தனித்துவம் கிடைக்கும். உதாரணத்திற்கு அருண் எழுதிய வக்ர துண்டம் மகா காயம் போன்ற அதிகம் படிக்காத ஆனால் நம்பிக்கையூட்டும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை சேர்க்க வேண்டும்.

3. ஆம்னிபஸ்அழியாச் சுடர்கள் போன்ற புத்தகமும் புனைவும் சார்ந்த இடங்களை படிக்க வேண்டாம். அவர்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பெயர்களை மட்டும் உருவினால் போதுமானது. இப்பொழுது உங்கள் பட்டியல் கிட்டத்தட்ட தயார்.

4. பட்டியல் மட்டும் இருந்தால் போதாது. அதற்கு விளம்பரம் வேண்டும். அராத்து முறையில் எதிர்மறை சந்தையாக்கத்தில் விருப்பம் என்றால் லக்கிலுக்கை தொடர்பு கொள்ளலாம். இல்லையென்றால் டிஸ்கவரி பேலஸ் வேடியப்பனைக் கேட்கலாம்.

5. நான் கணினியில் நிரலி எழுதுபவன். நான் எழுதும் நிரலியை மைக்ரோசாஃப்ட் கொடுக்கும் எடுத்துக்காட்டுகளின் மூலமாகவோ, ஸ்டாக் ஓவர்ஃப்ளோ போன்ற விடையளிக்கும் வலையகங்கள் மூலமாகவோ கண்ட்ரோல்+சி, கண்ட்ரோல்+வி வகையில் எழுதுவேன். அதே போல் நீங்களும் இப்பொழுது உங்கள் தேர்வுகளை எடுத்தாளவும்.

6. ஒழுங்காக பக்கம் பிரித்து, தலைப்பாகத்தில் உங்கள் பெயரும், வால் பாகத்தில் உங்களின் பதிவு முகவரியும், நடுநடுவே காப்புரிமைக் கையெழுத்தும் போடுங்கள். ஆங்காங்கே, உங்கள் ரசனைக்கேற்ப படங்களை கூகுள் படத்தேடல் மூலமாகவோ, ஃப்ளிக்கர் மூலமாகவோ திருடிப் போடுங்கள். இப்பொழுது, இதை பிடிஎஃப் ஆக்கி விடலாம்.

7. நான் கணினில் நிரலி எழுதினாலும், அதை சந்தையில் சரி பார்த்து விற்பவர் வேறொருவர். அது போல் பதிப்பகம் மூலமாக உங்கள் தொகுப்பைக் கொணரலாம். சொந்தமாக அச்சிடுவது ஒரு வழி. அது ஆபத்தானது. இணையத்தில் வேறு உலாவுபவர் என்பதால் கூகுள்+/ஃபேஸ்புக் போன்ற சமூகக் கூட்டங்களில் தலையைக் காட்ட முடியாது. இதுவோ, வாசகரே தயாரித்த புத்தகம். எனவே, மூன்றாம் மனிதர் மூலமே பதிப்பிக்கவும்.

8. இப்பொழுது சர்ச்சை உண்டாக்கும் தருணம். நூறு கதைகளில் இடம்பெறாதவை ஏன் என்று பதிவிடலாம். அசல் கதை எழுதியவர்களுக்கு கார்டு கூட போடமல் இராயல்டி வழங்காமல் “நெஞ்சில் நிற்கும் நெடுங்கதைகள்” வெளியாகின்றன என்னும் உண்மையை உலவ விடலாம். ரஜினி இதில் இருந்து குட்டிக்கதையை துக்ளக் மீட்டிங்கில் சொல்லப் போகிறார் எனலாம்.

9. ஆங்கிலத்தில் வருடாவருடம் இந்த மாதிரி தொகுப்புகள் வருகின்றன. வெளியான பத்திரிகையில் அனுமதி பெறுகிறார்கள். எழுதியவரிடம் காசு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக இளரத்தங்களை, அதிகம் அறிமுகமாகாத ஆனால் உருப்படியாக எழுதுபவர்களை அறிமுகம் செய்கிறார்கள். அப்படி எல்லாம் உருப்படியாக செய்து விட வேண்டாம். பரபரப்பு கிடைக்காது.

Era Murugan picks his Top 81 works in Tamil: Authors & Writers – Fiction & Poems

In Books, Literature, Tamilnadu on ஜூலை 8, 2009 at 6:53 பிப

Source: இரா முருகன் – அகத்தியர் யாஹு குழுமம் (ஜூலை 2001)

Related: S Ramakrishnan: 100 Best Books in Tamil Literature: Must Read Stuff « 10 Hot & Jeyamohan picks Top Tamil Novels: Best of Fiction Writing « 10 Hot

1.கு.ப.ராவின் ‘விடியுமா’,

2.அண்ணாவின் ‘ஓர் யிரவு’,

3.புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’,

4.தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’,

5.சுந்தரராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’,

6.விந்தனின்’பாலும் பாவையும்’,

7.கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கார்’,

8.கிருஷ்ணன் நம்பியின் ‘மாமியார் வாக்கு’,

9.ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’,

10.கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’,

11.க.நா.சுவின் ‘பொய்த்தேவு’,

12.கல்கியின் ‘தியாகபூமி’,

13.பா.ஜெயப்பிரகாசத்தின் ‘யின்னொரு ஜெருசலேம்’,

14.ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’,

15.நீல.பத்மனாமனின் ‘பள்ளி கொண்டபுரம்’,

16. மாதவனின் ‘சாலைக்கடைத் தெருக் கதைகள்’,

17.பொன்னீலனின் ‘உறவுகள்’,

18.கு.சின்னப்பபாரதியின் ‘தாகம்’,

19.சுஜாதாவின் ‘ஊஞ்சல்’,

20.சோ.தர்மனின் ‘நசுக்கம்’,

21. இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’,

22.பா.செல்வராஜின் ‘தேனீர்’,

23.பாமாவின் ‘கருக்கு’,

24.ராஜம் கிருஷ்ணனின் ‘அமுதமாகி வருக’,

25.கிருத்திகாவின் ‘வாசவேச்வரம்’,

26.அம்பையின் ‘சிறகுகள் முறியும்’,

27.பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’,

28.தோப்பில் முகம்மது மீரானின் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’,

29.சே.யோகநாதனின் ‘மீண்டும் வந்த சோளகம்’,

30.பெ.கருணாகரமூர்த்தியின் ‘அகதி உருவாகும் நேரம்’,

31.நகுலனின் ‘நிழல்கள்’,

32.அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக் கோடு’,

33. இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப் புனல்’,

34.ஜெயமோகனின் ‘ரப்பர்’,

35.மா.அரங்கநாதனின் ‘காடன் மலை’,

36.பாவண்ணனின் ‘பாய்மரக் கப்பல்’,

37.வண்ண நிலவனின் ‘எஸ்தர்’,

38.வண்ணதாசனின் ‘தனுமை’,

39.திலீப் குமாரின் ‘மூங்கில் குருத்து’,

40.எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’,

41.தஞ்சை பிரகாஷின் ‘கள்ளம்’,

42.குமார செல்வாவின் ‘உக்கிலு’,

43.பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’,

44.நரசய்யாவின் ‘கடலோடி’,

45.தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள்’,

46.லா.ச.ராவின் ‘அபிதா’,

47.சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’,.

48.நாகூர் ரூமியின் ‘குட்டியாப்பா’,

49.சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும்’,

50.பா.விசாலத்தின் ‘மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்’,

51.பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’,

52.ஜெயந்தனின் ‘நினைக்கப்படும்’,

53.கோமல் சாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’,

54.எஸ்.பொவின் ‘நனவிடைத் தோய்தல்’,

55.வல்லிக்கண்ணனின் ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’,

56.ந.பிச்சமூர்த்தியின் ‘காட்டு வாத்து’,

57.சி.மணியின் ‘வரும்,போகும்’,

58.கலாப்ரியாவின் ‘எட்டயபுரம்’,

59.ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை’,

60.மனுஷ்யபுத்திரனின் ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’,

61.மீராவின் ‘ஊசிகள்’,

62.சுதேசமித்திரனின் ‘அப்பா’,

63.யுகபாரதியின் ‘மனப்பத்தாயம்’,

64.சோ.வைத்தீசுவரனின் ‘நகரத்துச் சுவர்கள்’,

65.பிரம்மராஜனின் ‘கடல் பற்றிய கவிதைகள்’,

66.மஹாகவியின் ‘குறும்பா’,

67.மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள்’,

68.காமராசனின் கறுப்பு மலர்கள்’,

69.அ.சீனிவாசராகவனின் (’நாணல்’) ‘வெள்ளைப் பறவை’,

70.சுகுமாரனின் ‘பயணத்தின் சங்கீதம்’,

71.அப்துல் ரகுமானின் ‘பால்வீதி’,

72.அபியின் ‘மவுனத்தின் நாவுகள்’,

73.கல்யாண்ஜியின் ‘புலரி’,

74.பழமலயின் ‘சனங்களின் கதை’,

75.கலாந்தி கைலாசபதியின் ‘ஒப்பியல் யிலக்கியம்’,

76.எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கற்பின் கனலி’,

77.ஆர்.கே.கண்ணனின் ‘புதுயுகம் காட்டிய பாரதி’,

78. ஜானகிராமனின் ‘நடந்தாய் வாழி காவேரி’,

79.காஞ்சனா தாமோதரனின் ‘வரம்’,

80.கீல் கண்ணனின் சிறுகதைத் தொகுப்பு

81. சிட்டி