அறிந்தும் அறியாமலும் :: ஞாநி
சில கேள்விகளுக்குப் பதில்களை எழுதிப் பார்த்துக் கொள்ளுங்கள்.
1. நினைவு தெரிந்து, என் முதல் அழுகை எப்போது?
2. அப்போது எதற்காக அழுதேன்?
3. இப்போதும் அதே காரணங்களுக்கு அழுவேனா?
4. மாட்டேன் என்றால், வேறு என்ன செய்வேன்?
5. இப்போதும் அழுவேன் என்றால், ஏன் அப்படி?
6. கடைசியாக நான் அழுதது எப்போது? எதற்காக?
7. நான் அழ விரும்பி, அழாமல் அடக்கிக் கொண்டது எப்போது?
8. இனி அழ நேரும் சந்தர்ப்பங்களில், நான் என்ன செய்ய விரும்புகிறேன்?
9. அழுகிற ஒருவரைப் பார்த்தால், நான் என்ன செய்கிறேன்? என்ன செய்ய விரும்புவேன்?
10. யாருடைய அழுகை என்னை பயப்படுத்துகிறது?
நன்றி: ஆனந்தவிகடன்