தமிழ்ப் படத்தில் வந்த உயிர்ப்பலிகளில் எது உடனே நினைவிற்கு வருகிறது? அது காண்பிக்கப்பட்ட கொலையாக இருக்கலாம். அல்லது கொல்லுவதற்கான திட்டமிடலாக இருக்கலாம். காட்சியமைப்பாக இருக்கலாம். எதனாலோ, நினைவில் நின்று பாதித்த பலிகளின் பட்டியல்:
- வாராய் நீ வாராய் – மந்திரி குமாரி படத்தில் பாடலின் முடிவில் (மு. கருணாநிதி)
- நூறாவது நாள் – மொட்டை சத்யராஜ் (மணிவண்ணன்)
- விடியும் வரை காத்திரு – க்ளைமாக்ஸ் நோக்கிய பயணம் (பாக்யராஜ்)
- முதல் மரியாதை – ராதா (பாரதிராஜா)
- ஒரு கைதியின் டைரி – பாரதிராஜா + பாக்கியராஜ்
- கல்லூரி (தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம்) – பாலாஜி சக்திவேல்
- தளபதி – நடு ரோட்டில் எரியூட்டும் சம்பவம் – ரஜினி + மணி ரத்னம்
- ஜெண்டில்மேன் – துவக்கத்தில் வரும் சகட்டுமேனியான கொலைகள் – ஷங்கர்
- நந்தா (பாடல் கூட நன்றாக இருக்கும் – ஓராயிரம் யானை கொன்றால்… பரணி) – இயக்குனர் பாலா
- நான் சிகப்பு மனிதன் – ரஜினி + எஸ்.ஏ. சந்திரசேகர்
கொசுறு:
அ) நாயகன் படத்தின் கொலைகளைப் பற்றிப் பேசாமல் இந்தப் பதிவு முழுமையாகாது
ஆ) அன்னியன் படமும் தொடர்கொலைகள், வித விதமாக அரங்கேறும் சித்திரைவதை பலிகள்.
இ) கடைசியாக, சமீபத்திய சுப்பிரமணியபுரம் (சசிகுமார்)
ஈ) மூன்று முடிச்சு – பாலச்சந்தரும் ரஜினிகாந்த்தும் கமலைக் காப்பாற்றாமல் கைவிடுவது கொலையா?
உ) யார்
ஊ) சிகப்பு ரோஜாக்கள் – பாரதிராஜா + பாக்யராஜ்
எ) விடிஞ்சா கல்யாணம் – மணிவண்ணன்
ஏ) பூவிழி வாசலிலே – ஃபாசில்
ஐ) மௌனம் சம்மதம் (மம்முட்டி + அமலா)
ஒ) கலைஞன் – கமல்
ஓ) சாவி
ஔ) ஆயிரத்தில் ஒருவன்: ஒருவரை “அரவான்’ போல பட்டினி நிமித்தமோ/ போரின் நிமித்தமோ பலியிடுவதாக ஒரு காட்சி இத்திரைப்படத்தில் இருக்கும். பலியிடல்கள்.
ஃ) மதுரை வீரன்: மாறுகால் மாறுகை என்று என் மாணவ பருவத்தில் பார்த்த படம். மனம் பதைபதைத்து போய்விடும்.