Snapjudge

எழுத்தாளர்களை நேரில் சந்திக்க ஏழு காரணங்கள்

In Blogs, Life, Literature on பிப்ரவரி 26, 2014 at 1:32 முப

எழுத்தாளர்களை நான் ஏன் பார்க்கப் போகிறோம்?

மாநாட்டிற்கு சென்றால் பேச்சைக் கேட்கலாம். புத்தகத்தை வாங்கினால் எண்ணத்தைப் படிக்கலாம். படத்தைப் பார்த்தால் ஆவணமாகப் பார்க்கலாம். ஆனால், எழுத்தாளரை எதற்குப் பார்க்கப் போகிறோம்?

நான் பார்க்கப் போவதற்கான காரணங்கள் இவை

1. வம்பு: எழுத்தில் எழுதாத விஷயத்தை நேரில் சொல்வார் என்னும் நம்பிக்கை. இதைத் தகவலறிதல் என்றும் சொல்லலாம்.

2. கேள்வி: இது வம்பின் அடுத்தகட்டம். வம்பு என்பது பொதுவெளி. இது தனிமனித அத்துமீறல். “அந்தக் கதை நிஜமா! இதில் நீங்கள் சொல்பவர் எங்கே கிடைப்பார்?” என்று திட்டவட்டமாக நெருக்கி விளக்கம் அறியும் அவா.

3. சோம்பேறித்தனம்: புத்தகத்தைப் படிக்க நேரம் ஒதுக்காமல், அவர் வாயாலேயே, அவரின் கருத்துக்களை சொற்பொழிவாகக் கேட்டல்.

4. கம்பெனி: மதுவருந்த, புகை பிடிக்க நண்பர்களை அழைத்துச் செல்லுவது போல், அரட்டை அடிக்க சகா தேடுவது.

5. படேல் மதிப்பு: பாரீசுக்குப் போனால் ஈஃபில் கோபுரத்துடன் படம் எடுத்துக் கொள்வது போல், எழுத்தாளரின் புத்தகத்தை வாங்கினால், அவரின் கையெழுத்தைப் போட்டு வாங்கிக் கொள்வதில் விருப்பம். இதை நடிகர் சந்திப்பாகவும் கொள்ளலாம்.

6. சாதனை: அந்த எழுத்தாளரைப் போல் எழுதத்தான் முடிவதில்லை. அவரைப் பார்த்துப் பழகி விடுவதாலேயே அவருக்கு சரிநிகர் சமானமாகி விடுவது. விளையாட்டில் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது கிடைக்கும் நிறைவுணர்ச்சியை வாழ்க்கையில் கொணரும் முயற்சி.

7. தொடர்பு: எழுத்தாளரின் அறிமுகம் கிடைப்பதால் வேறு எங்காவது வாய்ப்பு ஏற்படலாம். இதை இப்பொழுது “நெட்வொர்கிங்” என்கிறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: