1. ”புரியாதவை எல்லாம் அகத்தில் எத்தனை பெரிதாகின்றன என்று அவர் அறிந்தார். தன்னை அறிந்துகொள்ளமுடியாதவனின் தனிமையை தெய்வங்களும் நீக்கமுடியாதென்று உணர்ந்தார்.”
2. சின்னக் குழந்தையாக செய்த தவறுகளை கண்டும் காணாமல் இருப்பதற்காக ஆணி மாண்டவ்யர் கதை வரப் போகிறதோ என அந்த யாகம் செய்வதற்கான முஸ்தீபுகள் தோன்றவைத்தன.
3. கிறித்துவத்தில் “பாவ மன்னிப்பு” இருக்கிறது. இந்து மதத்தில் பரிகாரம் இருந்தாலும் முழு விமோசனம் கிடைப்பதில்லை. சாபம் பெற்றாலோ, ஒரு சின்ன தவறு இழைத்தாலோ நிச்சயம் நரகத்தில் உழல்வீர்கள். அறியாத வயதில் என்றாலும் விதிவிலக்கு கிடையாது. செய்த தவறை நினைத்து உழன்றாலும் தப்பிக்க முடியாது. ஒரு முறை ஜெயிலுக்குச் சென்றால், அதன் பிறகு எப்பொழுதும் திருட்டுப் பட்டம் தொடர்வது போல், என்றென்றும் அந்த அழுக்கு உங்களைப் பின் தொடரும்.
4. முழு மஹாபாரதம் பதிவு நடத்தும் அருளின் எண்ணங்கள்
5. ” கண்ணீர்த்துளிகள்போல, குருதித்திவலைகள் போல, விந்துச்சொட்டுகள் போல அவை நெருப்பில் விழுந்தபோது அரங்கெங்கும் நெடுமூச்சுகள் எழுந்தன.”
6. வீடு வாங்கினால் ஹோமம்; கல்யாணத்திற்கு ஹோமம்; கருவுற்றால் ஹோமம்; குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் ஆயுஷ்ய ஹோமம்; காலன் நெருங்காமல் இருக்க மிருத்யுஞ்சய ஹோமம் என்று வாழ்நாள் முழுக்க யாகமும் ஆகுதியும் தானமும் அதன் தாத்பர்யங்களும் பார்த்தவர்களுக்குக் கூட இந்தப் பகுதி எழுச்சியும் புது தரிசனங்களும் தருமாறு அமைந்திருக்கின்றன. ஏன் யாகம் செய்கிறோம்? எதை அதில் போட வேண்டும்? எப்படி இட வேண்டும்? வேதமந்திரங்களின் அர்த்தம் புத்திக்கு உறைக்கலாம்.
8. ”அத்தனை பாம்புகளும் வேள்விநெருப்பில் மறைந்ததும் அப்பகுதியெங்கும் எரிதலற்ற ஒளி நிறைந்திருப்பதை அவர்கள் கண்டனர். ஓவியப்பரப்பு போல அவர்களனைவரும் ஒன்றாகிவிட்டதாக உணர்ந்தனர்.”
9. அந்தக் காலத்தில் இருந்தே மேலாளர்கள் திருப்தி பெறாத, வேண்டுவதைக் கொணரும் வரை அடங்கா வேட்கையுடன் செயல்பட்டதை அறியமுடிகிறது 🙂 தனக்குத் தேவையான மிக மிக இறுதியான முக்கிய டெலிவரி வராவிட்டால், பிராஜெக்ட் மேனேஜர் ஆக முடியாது!
சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 4
[…] முந்தைய பகுதி […]