நன்றி: எஸ் ராமகிருஷ்ணன்
1. அஜயன்பாலா – சினிமா இலக்கியம் என்று தொடர்ந்து எழுதிவருபவர்
2. திருச்செந்தாழை – கவனத்துக்குரிய சிறுகதையாசிரியர். புதிய படைப்பாளி
3. வாமுகோமு – சிறுகதை நாவல் என்று தொடர்ந்து எழுதி வரும் கவனத்துகுரிய படைப்பாளி
4. சுந்தர புத்தன் – ஒவியம் சிற்பம் என்று நுண்கலை குறித்த தேடுதல் கொண்ட கட்டுரையாளர் பத்திரிக்கையாளர்.
5. லதா – சிங்கப்பூரில் வசிப்பவர். நவீன சிறுகதைகள், கவிதைகள் எழுதி வரும் இளம் படைபாளி.
6. தமிழ்மகன் – சிறுகதையாசிரியர், பாப்புலர் சினிமா பற்றி எழுதிவரக்கூடியவர். பத்திரிக்கையாளர்.
7. பாலமுருகன் – மலேசியாவில் வசிப்பவர். நவீன சிறுகதையாசிரியர். மலேசியாவில் நடைபெற்ற நாவல் போட்டியில் முதல்பரிசு பெற்றவர். நம்பிக்கை உரிய இளம்படைப்பாளி.
8. மலர்செல்வன் – கவனத்துக்குரிய ஈழத்து படைப்பாளி. பெரிய எழுத்து என்ற சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. மறுகா என்ற சிற்றிதழ் ஆசிரியர்.
9. திசேரா – புதிய சிறுகதையாசிரியர். ஈழத்து படைப்பாளி. சிறுகதை வடிவம் மற்றும் கதை சொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கிவருபவர்.
10. பஹீமாஜஹான்– நவீன பெண் கவிஞர். நம்பிக்கைக்கு உரிய ஈழத்து படைப்பாளி.