பொதுவாழ்வில் பல தலைவர்களுக்குப் பட்டம் அளிப்பதும், அந்தப் பட்டங்களின் வாயிலாய் அவருக்குப் பின், தொண்டரும், மற்றோரும் விளிப்பதும், சில பொழுதுகளில் இயற்பெயரே மறைந்து போய், இது போன்ற விளிப் பெயர்கள் நிலைப்பதும் இந்திய நாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள பழக்கம்.
இவற்றில் சில பட்டப் பெயர்கள்; சில வழக்குப் பெயர்கள். ஆனால் எல்லாமே இப்பொழுது விளிப் பெயர்கள். தமிழர் வரலாற்றில் இது போல விளிப் பெயர்கள் அமைத்துக் கூப்பிடுவது நெடுநாளையப் பழக்கம் தான். நூற்றுக் கணக்கில் காட்டுக்களைக் கொடுக்க முடியும். இந்த விளிகளை வைத்துத் தான், நாம் அந்தந்த மாந்தர்களை விதப்பாக நினைவிற்குக் கொண்டு வருகிறோம். பெற்றோர் இட்ட பெயர்களை வைத்து மற்றோர் அழைப்பது பொதுவாகத் தமிழர் வாழ்வில் அருகிய பழக்கம்.
– இராம.கி.
- நிலந்தரு திருவிற் பாண்டியர்
- தொல்காப்பியர்
- வள்ளுவர்
- புத்தர்
- மகாவீரர்
- மற்கலி கோசலர்
- இளங்கோ
- அப்பர்
- நம்மாழ்வார்
- கலிகன்றி
- மாமல்லர்
- கங்கை கொண்ட சோழர்
- கம்பர்
- அநபாயர்
- சேக்கிழார்
- கூரத்தாழ்வார்
- நச்சினார்க்கு இனியர்
- பேராசிரியர் (இவர் வேறு ஒருவர் – உரையாசிரியர்)
- பெரியவாச்சான் பிள்ளை
- ஊமைத்துரை
- தமிழ்த்தாத்தா
- பாரதி
- மகாத்மா
- பாவேந்தர்
- காயிதே ஆசாம்
- பங்கபந்து